About Me

My photo
I am an IT professional, Nowadays our Lifestyle is changed a lot and of course we are chasing money. In India More than 7 crore people affected by Diabetes, High Cholesterol and infertility due to their Poor Food Habits &amp Lifestyle. This Blog is very useful for youngsters to lead good Lifestyle and be healthy and students to choose career courses.Work hard, but make time for your love, family and friends. Nobody remembers Powerpoint presentations on your Final Day.I believe Life is ours and we only Live our Life.... Thanks for visiting and welcome you to visit again. WHO LOVES GOD ARE SEARCHING GOD, WHO LOVES PEOPLE ARE LIVING AS GOD - SK ( Reach me @ +91 9791139942 to lead Healthy Family Life )

Friday 29 September 2017

மனித உடலின் மகத்தான எந்திரம்... இதயம்!

மனித உடலின் மகத்தான எந்திரம்... இதயம்! #WorldHeartDay


தயம்... மனித உடலின் மகத்தான எந்திரம்... ஆனால் அந்த எந்திரத்தின் மீது நாம் எந்த அளவுக்குக் கவனம் காட்டுகிறோம் என்பது தான் கேள்விக்குறி. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி, அதிக இதய நோயாளிகள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் உலகத்தில் இதயநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதயம் குறித்து விழிப்புணர்வு உருவாக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ம் தேதி 'உலக இதய தினம்'-ஆகக் கடைபிடிக்கப்படுகிறது. 'சக்தியைப் பரப்புவோம்' ('Share the power') என்ற கருத்தின் அடிப்படையில் உலக இதயக் கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டு இந்த நாளைக் கொண்டாடவிருக்கின்றன.
இதயம்
இந்த உலக இதய நாளில், நம் உயிர் வாழ ஆதாரமாக இருக்கும் இதயத்தை பாதுகாப்பது குறித்தும், இதய நோய்கள் குறித்தும்,  முதலுதவி, சிகிச்சை முறைகள் குறித்தும் விளக்குகிறார் இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் வி.சொக்கலிங்கம்.

இதயம் நம் கைகளில்!
இதயத்தின் அளவென்பது, நம்முடைய மூடிய கைகளின் அளவு தான். 400 கிராம் எடை கொண்டது. நாம் கருவிலிருக்கும்போதே இதயம் துடிக்க துவங்கும்.  ஒரு நிமிடத்துக்கு, சராசரியாக  72 முறையும், ஒரு நாளுக்கு ஒரு லட்சம் முறையும் துடிக்கும். 'Myocardium' என்னும் இதயத் தசைகளால் ஆன இதயம், நான்கு அறைகள், நான்கு வால்வுகள் உடையது.  உடலில் உள்ள அனைத்து அசுத்த ரத்தத்தையும் சுத்திகரித்து மீண்டும் உடலுக்குச் செலுத்துவதே இதயத்தின் பிரதான பணியாகும். 

ஓய்வின்றி இயங்கும் இதயம்!
நம் உடலில் தொடர்ந்து இயங்கும் இதயத்தின் துடிப்பு நின்றுபோனால் அசுத்த ரத்தம் இதயத்துக்குள்ளேயே தேங்கிவிடும். உடலில் உள்ள திசுக்களுக்குத் எனர்ஜியைத் தரும் குளூக்கோஸ், தாது உப்புகள் போன்றவை தேவையான அளவு கிடைக்காதுபோகும். திசுக்கள் பாதிப்புக்குள்ளாகும்.  புதுப்பிக்க முடியாத நிலை உண்டாகும். இறுதியில், உடல் செயலிழந்து போகும். இறுதியில் உயிரிழப்பு நேரிடும். 

இதய நோய்கள் எவை...
கரோனரி தமனி நோய், மாரடைப்பு, இதயச் செயலிழப்பு, சீரற்ற இதயத்துடிப்பு, பிறப்பிலேயே இதயம் சிறிதாக இருப்பது, இதய வால்வு பிரச்னை, இதயத் தசை நோய், மூச்சுத் திணறல், புற தமனி நோய், உயர் ரத்த அழுத்தம், நுரையீரல் வீக்கம், தலை சுற்றல், இதய சுற்றுப்பை அழற்சி, கணைய சுரப்புக் குறைபாடு, நுரையீரல் உயர் ரத்த அழுத்தம் போன்றவை இதயம் சார்ந்த நோய்களாகும். 

எதனால் இதய நோய் ?
* இதய ரத்தக் குழாய்களின் மூலம் ஆக்சிஜன் கலந்த ரத்தம் இதயத்துக்குச் செலுத்தப்படும். இவ்வாறு செலுத்தப்படும் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனின் அளவு குறைவாக இருந்தாலும், ஆக்சிஜன் இல்லாமல் போனாலும் மாரடைப்பு ஏற்படும். 
* நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பானது ரத்தக் குழாய்களின் ஓரங்களில் ஒட்டிக்கொண்டு, ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும். 
* அதிக அளவு உணர்ச்சிவசப்படுதல், மனஅழுத்தம் இது போன்ற நிலைகளில் இதய ரத்தக் குழாய்கள் சில விநாடிகளில் முழுமையாகச் சுருங்கும். இதனாலும் மாரடைப்பு உண்டாகும். 
* புகைப்பழக்கம், மது அருந்துபவர்கள் போன்றவர்களின் கல்லீரலில் அதிகமாக உருவாகும் கெட்ட கொலஸ்ட்ரால், ரத்தத்தில் கலந்து இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பை உண்டாக்கும். இதன் காரணமாகவும் மாரடைப்பு ஏற்படும். 
* எதிர்மறையான எண்ணங்கள் கார்டிசால் மற்றும் அட்ரீனல் ஹார்மோன்களின் சுரப்பை ரத்தத்தில் கலக்கச் செய்யும். இது உடலின் எந்தப் பகுதியில் உள்ள ரத்தக்குழாய்களிலும் அடைப்பை உண்டாக்கும். 
* பெரும்பாலும் இதய நோய் வருவதற்கு முதல் முக்கிய காரணம் ரத்தக்குழாய் அடைப்பேயாகும்.
இதயம்

ரத்தக் குழாய் அடைப்புக்கு காரணங்கள்...
* உடலுக்குத் தேவையான அளவைவிட அதிக அளவு உணவைச் சாப்பிடுதல்.
* தினசரி உடற்பயிற்சி செய்யாதது 
* அதிக அளவு கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்வது.

இதய நோய்க்கான அறிகுறிகள்
* இடது புற மார்பு மற்றும் தோள்ப்பட்டைப் பகுதியில் வலி
* தாடைப் பகுதியில் வலி
* மார்பு இறுக்கம்
* மூச்சு விடுவதில் சிரமம்
* படபடப்பு, மயக்கம், தசை வலி, உடலில் எனர்ஜி இல்லாது போவது போன்ற பொதுவான அறிகுறிகளும் இதில் அடங்கும். 

இதய நோய்க்கு வழிவகுப்பவை... 
* அதிக ரத்த அழுத்தம்
* அதிக கொலஸ்ட்ரால் மற்றும் குளுக்கோஸ் 
* புகைப்பழக்கம் 
* முறையற்ற உணவுப்பழக்கம்
* உடல் பருமன்

இதய நோய்களுக்கான பரிசோதனைகள்...
30 வயதைக் கடந்தவர்களுக்கு ரத்தச் சர்க்கரை அளவு, ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு, ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு பரிசோதனை, ஈசிஜி, மார்பு எக்ஸ்ரே பரிசோதனை போன்ற பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். 
ரத்தத்தில் - சி.பி.கே - எம்.பி (CPK-MB) என்ற பரிசோதனையையும்,  இதயத்தில் - எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனை, டிரெட்மில் பரிசோதனை, ஆஞ்சியோகிராம், நியூக்ளியர் ஸ்கேன் பரிசோதனைகளையும் செய்ய வேண்டும். 

இதய நோய் யாருக்கு வரலாம்...
* மனஅழுத்தம், மனஉளைச்சல் உள்ளவர்களுக்கு
* புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு
* 140/90 mm Hgக்கு அதிகமாக உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு
* ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு
* உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு
* நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு

ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன்...
பெண்களுக்கு மட்டும் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்பு பெண்களை இதய நோயிலிருந்து காக்கும். அதேநேரத்தில் இதய நோய்க்கு வழி வகுப்பதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள்தான் காரணம். மனஅழுத்தத்தினால் நிகழும் ஹார்மோன்களின் எதிர்மறையான சுரப்பு இதய நோயை ஏற்படுத்தும்.

இதய நோயாளிகள் செய்ய வேண்டியவை?
* ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வீதம், வாரத்தில் ஐந்துநாள்களாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
* இரவில் எட்டு மணி நேரமும், மதிய வேளையில் உணவு சாப்பிட்ட பின்னர் ஒரு மணி நேரம் தூங்க வேண்டும். 
* சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருப்பின் அவற்றைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
* உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் அதிக அளவுச் சேர்த்துக்கொள்ளலாம். 
செய்யக் கூடாதவை?
* அதிக எடையுள்ள கனமான பொருள்களைத் தூக்கக் கூடாது. 
* கைகளை மூடியபடி, குனிந்தபடி செய்யவேண்டிய வேலைகளை முடிந்த அளவு தவிர்க்கலாம். உதாரணமாக, வாளிகளில் தண்ணீர் கொண்டு செல்லுதல், துணி துவைத்தல், பைக் ஓட்டுதல் போன்றவை. இவை இதயத்துக்குச் சுமையை அதிகரிக்கச் செய்யும். 
இதய நோய்க்கான சிகிச்சைகள்

இதய நோய்க்கு செய்யப்படும் சிகிச்சைகள்...
ஆஞ்ஜியோ பிளாஸ்டி: அடைப்புள்ள ரத்தக் குழாய்க்குள் ஸ்டென்டை உள்செலுத்தி ஸ்டென்டில் உள்ள பலூனை விரிக்கச் செய்வதன் மூலம் ரத்தக் குழாயில் உள்ள அடைப்பை சரிசெய்யலாம்.
பைபாஸ் சர்ஜரி: இதயத்தில் ஓட்டை, வால்வு பழுது, வால்வு சுருக்கம், ரத்தக் குழாய் வீக்கம் போன்றவற்றால் ஏற்படும் சீரற்ற ரத்த ஓட்டத்தைச் சரிசெய்து சீராக்கும்.
பேஸ்மேக்கர்: பேஸ் மேக்கர் கருவி மூலம் செயற்கை இதயத் துடிப்புக்கு வழிவகுக்கும்.
ஹார்ட் அசிஸ்ட் டிவைஸ்: அசுத்த ரத்தத்தை சுத்திகரித்து சுத்த ரத்தத்தை உடலுக்குச் செலுத்தும் செயலின் தன்மையை இதயம் இழக்கும்போது ஹார்ட் அசிஸ்ட் டிவைஸ் பொருத்தப்படுகிறது. இது இதயத்துக்குள் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். உடலின் உள்ளுறுப்புகளுக்குத் தேவையான ரத்தத்தைப் பரவச் செய்யும். 
எக்மோ: ரத்த அழுத்தக் குறைவு, மாரடைப்பு போன்றவற்றால் இதயம் முழுவதுமாக செயலிழந்துபோகும்போது 'எக்மோ' என்னும் கருவி பொருத்தப்படும். இது இதயம் மற்றும் நுரையீரலின் பணிகளைச் செய்யும். செயற்கை இயந்திரம் மூலம் இதயத்தின் பணியை செய்யும்.

சைலன்ட் அட்டாக்!
பெரும்பாலும் மதுப்பழக்கம் உடையவர்களுக்கும், 70 - 80 வயதைக் கடந்தவர்களுக்கும் சைலன்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காலை 5 மணி முதல் 8 மணி வரை சைலன்ட் அட்டாக் வரும். நீண்ட நேரம் இரவில் விழித்திருத்தல், அடுத்தடுத்த பணிகளால் உண்டாகும் மனஅழுத்தம் போன்ற காரணங்களால் சைலன்ட் அட்டாக் வரலாம். 

திடீரென மாரடைப்பு ஏற்பட்டால்...
வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டால் சில முதலுதவிகளின் மூலம் அவர்களின் உயிரைக் காக்கலாம்.
மயக்கம் அடைந்தவரை சமதளத்தில் படுக்க வைக்க வேண்டும். இறுக்கமான உடைகளைத் தளர்த்தி காற்றோட்டமான சூழ்நிலையை உண்டாக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் முகத்தில் தண்ணீர் தெளிக்கக் கூடாது. இதயத் துடிப்பு உள்ளதா என பரிசோதிக்க வேண்டும். இதயத்துடிப்பு நின்றுவிட்ட பட்சத்தில், இடது மார்புப் பகுதியில் நமது கைகளை வைத்து லேசாக அழுத்த வேண்டும். மிகவும் வேகமாக அழுத்தக் கூடாது அது மார்புப்பகுதியில் உள்ள எலும்புகளைப் பாதிக்கும். அவற்றால் இதயத்துக்கு பாதிப்பு நேரலாம். மயக்கம் அடைந்தவர் சுவாசம் இல்லாது இருக்கும்போது வாயோடு வாய்வைத்து வேகமாக ஊத வேண்டும். பிறகு, மீண்டும் மார்புப் பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
உடனடியாக மருத்துவரின் உதவியைப் பெறுவது நல்லது. நெஞ்சுவலி ஏற்பட்டவர்களுக்கு 350 மி.கிராம் ஆஸ்பரின் மாத்திரையைக் கொடுக்கலாம். இது அதிக பட்சம் 4 மணி நேரத்துக்குள் மருத்துவ உதவியை நாடுவது நல்லது. 

Wednesday 17 May 2017

thyroid

முகப்பேர் ஏரி பூங்காவில் ஐந்தாவது சுற்றை முடித்துவிட்டு, கொஞ்ச நேரம் மூங்கில் காற்றைச் சுவாசிக்கலாம் என சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தேன். பக்கத்து பெஞ்சில் அந்தத் தாய்க்கும் மகளுக்கும் நடந்த சத்தமான உரையாடல் எட்டிப் பார்க்கவைத்தது. குண்டாக வியர்த்துப் போய் அமர்ந்திருந்தவளுக்கு அதிகபட்சம் 20-ல் இருந்து 21 வயது இருக்கலாம். இளங்காலையில் ஓடிவிட்டு, வேகமாக நடந்துவிட்டு உட்கார்ந்தால் கிடைக்கும் ஒரு பளிச் முகம் அந்தப் பெண்ணுக்கு இருந்தது. கையில் செல்போனுடன் இடுப்பில் வீட்டுச் சாவியைச் சொருகிக்கொண்டு பென்குவின்போல நடந்து வந்து அவள் அருகில் அமர்ந்தவர் அநேகமாக அவள் அம்மாவாக இருக்கக்கூடும். ``அந்தா பாரு... பின்னாடி, 8 போட்டுருக்காங்க. போய் அதுல பத்து சுத்து சுத்திட்டு வா... வெயிட் குறையும்; இடுப்பு தசை குறையும்; தைராய்டுக்கும் நல்லதாம். குரூப்ல ஷேர் பண்ணியிருந்தாங்க’’ என்ற அம்மாவுக்கு, மகளிடமிருந்து ஒரு முறைப்பு பதிலாக வந்தது. ``எனக்கு வாட்ஸ்அப்பில் உன்னைப்போல பெருசுங்க 11 போடச் சொல்லி வந்திருக்கு; நீ இந்தப் பக்கம் - அந்தப் பக்கம் திங்கு திங்குனு 11 போட்டுக் குதிக்கிறியா? வெயிட் குறையும்; மூட்டுவலியும் குறையும்’’ எனக் கோபமும் நக்கலுமாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். 

அந்தப் பெண்ணின் கோபமான பேச்சில், ``இது தைராய்டைத் துரத்தும் ஓட்டம்’’ என்பது மட்டும் எனக்குப் புரிந்தது. காலை நடைப்பயிற்சி செய்கையில் நம்மில் பலர் இப்படி அழகான, கொஞ்சம் குண்டான, கூடவே முகத்தில் சிறிது பூனை மீசையுடன் ஓடிக்கொண்டிருப்போரைக் கடக்க முடியும். அவர்களில் ஒரு சிலரை கொஞ்சம் உற்றுப் பார்க்கையில், முகத்தோடு கண்களும் வியர்த்திருப்பதைக் காண முடியும். ஆம்! அந்தக் கண்ணீரின் பின்னணியில், `என்று ஒழியும் இந்த தைராய்டு சுரப்புக் குறைவு?’ எனும் கோபமும் கொப்பளிக்கும்.
``எதுக்கு தைராய்டுக்கு மாத்திரை?’’

``கொஞ்சம் சுரப்பு குறைவு. உங்க TSH (Thyroid-Stimulating Hormone) அளவு கூடுதலாயிருக்கிறது. கருத்தரிக்க இந்தச் சுரப்பு ரொம்ப ரொம்ப அவசியம். நீங்க கண்டிப்பாக இந்த மாத்திரை எடுத்தாகணும்.’’ 
 
மேற்கூறிய இந்த உரையாடல்கள் இன்றைய கருத்தரிப்புக்கான மெனக்கெடலில் அதிகமாக மருத்துவருக்கும் கருத்தரிப்புத் தாமதமாகும் பெண்ணுக்கும் இடையே நடக்கும். 

``டாக்டர்! ஒண்ணு, `எனக்கு இன்னைக்கு உடம்புக்கு முடியலை’ங்கிறா. இல்லைன்னா, `இன்னைக்கு வேண்டாமே!’ங்கிறா. ஒருவேளை அவளுக்கு என்னைப் பிடிக்கலையோன்னு தோணுது’’ எனச் சொல்லும்போது, அநேகமாக இருவரின் முகமும் கவிழ்ந்துதான் இருக்கும். `ஆணுக்குத் தேவைப்படும்போதெல்லாம், விருப்பமும்  பிடிப்பும் கொஞ்சமும் இல்லாமல்கூட, புருஷன் என்பதால் உடலுறவுகொண்டு, வியர்த்துப் பழக்கப்பட்ட ஆணாதிக்க உலகில் இப்படியாகச் சொல்லி விலகி இருக்கவும் வாய்ப்புண்டா என்ன?’ என ஆச்சர்யமாயிருக்கலாம். ஆனால், இப்படியான விலகல் இன்று பெருகிவரும் நிதர்சனம். அவனைப் பிடிக்காதது அதற்குக் காரணம் அல்ல. அந்தச் சமயத்தில் மூளைக்குள் காதல் பூக்க மறுக்கும், தைராய்டு சுரப்பின் சீரற்ற அபஸ்வரங்களால்! 

 ``இப்படியே தள்ளிப் போனேன்னா பின்னே எப்படி புள்ளை பிறக்கும்?’’ எனக் கோபத்தோடு குமுறும் ஆணுக்கும், ``இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே ஜாலியா?’’ எனக் குதறும் சமூகத்துக்காகவும் அந்த `இருட்டுப் பொறியியல் தொழில்நுட்பத்தில்’,  உணர்வின்றி, உடன்படுகையில் பிறப்புறுப்பில் வலியும் இறுக்கமும் உயிரைப் பிடுங்கும். அந்த வலிக்கு Dyspareunia என்று பெயர். அந்த நேரத்தில் ஏற்படும் பிறப்புறுப்புத் தசைகளின் இறுக்கத்துக்கு vaginismus என்று பெயர். இரண்டுமே கருத்தரிப்புக்குத் தடையாக இருக்கும். 

உதட்டைக் கடித்துக்கொண்டும், அழுகையை அடக்கிக்கொண்டும் அம்மாவிடம் மட்டும் அந்த வலியை விசும்பிச் சொல்கையில், அவள் ``அதெப்படி இன்னமும்... மூணு வருஷம் ஆச்சு... அதெல்லாம் வலிக்காது. உனக்கு மனப்பயம். மாப்பிள்ளை எவ்ளோ தங்கமான குணம். கோபமா பேசும்போதே வலிக்காது. அது எப்படி?’’ எனப் பதிலளித்து நகரும்போது இன்னும் கூடுதலாக வலிக்கும். இந்த வலிக்கும், பிறப்புறுப்பின் அந்த நேர இறுக்கத்துக்கும் தைராய்டு கோளச் சுரப்புக் குறைவுக்கும் மிக முக்கியக் காரணம் என்பது நம்மில் நிறைய பேருக்குத் தெரியாது. அன்பால், ஆசையால் நெருங்கும் கணவனை `அதற்கு மட்டும் வேண்டாம்’ என விலக்குவதற்கு, பாசமோ நேசமோ குறைவதாக இருக்காது; தைராய்டு சுரப்புக் குறைவுகூட காரணமாயிருக்கக் கூடும். இருபாலருக்கும் அந்த உறவின் நாட்டத்தை அதிகரித்து மகிழ்வைக் கூட்டுவதில் மிக முக்கியப் பங்கு வகிப்பது தைராய்டு சுரப்புதான். உடலுறவின்போது, நிகழவேண்டிய பெண்ணுறுப்பின் சுரப்பு, சரியாகச் சுரக்காமல் போவதற்கும் இந்த தைராய்டு சுரப்புக் குறைவு காரணமாக இருக்கலாம். இந்தச் சுரப்பு குறைகையில், இருவருக்குமே வரும் வலி, இந்த நிகழ்வில் காமத்தின் உச்சத்தை நோக்கி நகராமல், பாதியில் உயிர்த்தொழில் தடைபடும். இத்தனைக்கும் காரணமான தைராய்டு குறைவைச் சீராக்குவது, `குவா... குவா’ அவாவின் முதல் மைல்கல்.

தைராய்டு சுரப்புக் குறைவுக்கான மருத்துவத்தில் மிக அதிகமாகப் பேசப்படும் சொல், அயோடின். `அயோடின் பற்றாக் குறையால்தான் தைராய்டு சுரப்புக் குறைபாடு ஏற்படுகிறது’ எனச் சொல்லித்தான் தேசிய அயோடின் கொள்கையே அரசால் வகுக்கப் பட்டது. அயோடினைத் தண்ணீரில் கலந்துத் தரலாமா... பாலில் கலக்கலாமா? எனப் பலகட்ட ஆய்வில் கடைசியாக உப்புதான் சரியான ஊடகம் என முடிவு செய்யப்பட்டது. `உப்பு... உப்பேய்...’  என அது வரை வீதியில் வந்து விற்று, நாழியில் அளந்து தந்து, கௌரவமாக வணிகம் செய்த பல்லாயிரம் பேரை யூனிஃபார்ம் மாட்டி, உப்பு கம்பெனி வாசலில் காவலாளியாக்கினர். பத்து பதினைந்து கம்பெனிகள் மட்டும் இன்று பல ஆயிரம் கோடி உப்பு வணிகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். `அயோடைஸ்டு உப்பு மூலமா அயோடின் உடம்புக்கு வந்தா நல்லதுதானே?’ என்போரை உணவரசியலும் உலக அரசியலும் தெரியாத அம்மாஞ்சிகள் எனலாம். ``இன்று நாம் வாங்குவது உப்பு அல்ல. `அயோடைஸ்டு சோடியம் குளோரைடு’ எனும் ரசாயனம்; இரண்டும் வேற வேற’’ என குய்யோ முய்யோ எனப் பல முறை கதறினாலும், இதுவரைக்கும் நம் நாட்டில் 10,000 கோடிக்கும் மேலான இந்த உப்பு ரசாயன வணிகத்தில் இருந்து பின்வாங்க யாரும் தயாராக இல்லை. உள்நாட்டு குருமார்கள் கம்பெனி, நாட்டு உப்பு விற்று காசுபார்க்க வரும்போது வேண்டுமானால், நம் ராஷ்ட்ரிய குருவுக்கு இந்த உப்புத் தப்புத் தாளங்கள் தெரிய வரக்கூடும். அது வரை நாம் யோகா, தவமெல்லாம் செய்வோம்.

``என்றைக்கு தைராய்டைக் கட்டுப்படுத்த அயோடின் உப்பு வந்ததோ, அதற்குப் பின்னர்தான் தைராய்டு கோள பிரச்னை இன்னும் அதிகமாகக் கும்மியடித்து கோலோச்சுகிறது’’ என்கிறார்கள் அறம்சார் சிந்தனையில் இன்னும் உள்ள பல மூத்த மருத்துவர்கள். ``அதுதான் கிடைக்க மாட்டேங்குதே... அயோடின் இல்லாத உப்புக்கு எங்கே போறது?’’ என்போருக்கு ஒரு சுளுவான ஐடியா. ஒரு தாம்பாளத்தில் நீங்கள் வாங்கிய அயோடின் சால்ட்டை விரவிவைத்து ஆறு மணி நேரம் வெயிலில்வைத்து எடுங்கள். அதிகபட்ச அயோடின், ஆவியாகிக் காணாமல் போய்விடும். இப்படி எளிய ஓர் உத்தியை சமீபத்தில் பகிர்ந்துகொண்டது, இந்த பிரச்னையை நெடுங்காலம் பேசிக்கொண்டிருக்கும் சென்னையின் மூத்த எண்டோகிரைனாலஜிஸ்ட் மருத்துவப் பேராசிரியர் சந்திரசேகர். ``இந்த அயோடின் கலந்த உப்பு சந்தைக்கு வந்த பிறகுதான், அதிக அளவில் தைராய்டு சுரப்புக் குறைவு நோயும், உடல் எடை அதிகரிப்பும், அதனால் பெருகும் கருத்தரிப்புத் தாமதமும், ஒன்றிலிருந்து ஒன்றாகக் கிளைக்கிறது’’ என்கிறார் அவர்.

``அய்யோ... அப்படீன்னா எல்லாமே டுபாக்கூரா?’’ என உடனே இதுவரை சாப்பிட்டு வந்த தைராக்சின் மாத்திரையைத் தூக்கி எறிந்துவிட வேண்டாம். உங்கள் மருத்துவரோடு பேசி, படிப்படியாகக் குறைக்க வேண்டும். நானோகிராம் துளியில் சுரக்கும் மிக நுட்பமான சுரப்புகள், சினைமுட்டையைக் காலத்தே கனியவைக்க, உடலுறவில் ஈடுபாடு வர, மிகமிக அவசியம். தைராய்டு சுரப்பு குறைந்திருக்கும் பட்சத்தில், சினைப்பைக்குள் சரியாக 14-ம் நாளில் சினைமுட்டை வெடிக்கும் நிகழ்வு நடக்காமல் போகக்கூடும். மாதவிடாய் வருவது மூன்று, நான்கு மாதத்துக்கு ஒரு முறை எனத் தாமதம் ஆகக்கூடும். 

தைராய்டு சுரப்பு, தமிழ் மருத்துவப் புரிதலில், `தீ தீ தித்திக்கும் தீ’யாக்கும். ஆம் `தீ’ எனும் தமிழ்ச்சொல்லுக்கு இன்னொரு பெயர் பித்தம். வாதம், பித்தம், கபம் எனும் மூன்று உயிர்த் தாதுக்களில் பித்தம் சீராக இருந்தால்தான் கருத்தரிப்பின் மொத்தமும் சரியாக நடக்கும். உடலுறவின் மகிழ்வுக்கும், சினைமுட்டை வெடிப்புக்கும், உயிரணுக்கள் ஓவ்வொன்றும் உசேன் போல்ட்டாக ஓடுவதற்கும், காதலில் காத்திருக்கும் பெண்ணின் பசலைக்கும், அரியரில் மூழ்கிய, `ஞே’ பேர்வழியும்கூட, அடுத்த சீனில் ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் டிஸ்டிங்‌ஷன் வாங்கி பாகுபலியாவதற்கும், உடலின் பித்தம் தனிச் சிறப்போடு இருக்க வேண்டும். கொஞ்சம் அது ஓவராகப் போகும்போது, `அவனுக்குப் பித்தம் தலைக்கேறிடுச்சு’ எனும் வழக்குச் சொல்லாடல், இன்றும் நம் ஊரில் நடமாடுவது உண்டு. அன்று தமிழன் சொன்னவை அர்த்தமுள்ளவை.
இப்படித் தொன்மை சொன்ன பித்தம் சரியாக இருக்கவும், நவீனத்தின் தைராய்டு சுரப்பு சரியாக இருக்க வேண்டும். அதற்கு அதிகாலை மாத்திரை மட்டுமே போதாது. தொடர்ச்சியான நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, சூரிய நமஸ்காரம், விபரீதகரணி முதலான சில யோகப் பயிற்சிகளை, காலையில் எழுந்தவுடன் பல் விளக்குவதற்கு முன்னதாக, வாட்ஸ்அப் விளக்கும் வழக்கத்தை நிறுத்திவிட்டு, செய்து வர வேண்டும். வேக நடையும், விபரீதகரணி ஆசனமும் வீதன (தைராய்டு) கோளத்தைத் தூண்டி சுரப்பைச் சீராக்கும் எனப் பல ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. கொஞ்சம் சுரப்புக் குறைவு உள்ளவர்கள் உணவைச் சமைத்து தாளிக்கையில், கடுகைப் போடக் கூடாது. கடுகுக் குடும்ப அட்டை உறுப்பினர்களான முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் சமாசாரங்களையும் கொஞ்சம் விலக்கி வைக்க வேண்டும். கடுகு குடும்பம், சுரந்த தைராக்சினைச் சிதைக்கும்.

தைராய்டு சுரப்புக் குறைவில், இன்னொரு தலையாய பிரச்னை அதில் வரும் குண்டு உடம்பை இளைக்க வைப்பது. இன்று ``சுரப்பு அளவு ரத்தத்தில் சரியாக வந்துடுச்சு. 

ஆனா, பருத்த உடம்பு குறையலையே...’’ என ஏக்கம்கொள்வோர் பலர். குண்டாக இருக்கும் அநேகம் பேர் உளவியல்ரீதியாக சிக்கலில் இருக்கிறார்களாம் அல்லது உளவியல்ரீதியாக சிக்கல் உள்ளவர்களில் அதிகம் பேர் குண்டாக இருக்கிறார்களாம். அதுவும் தைராய்டு நோயில் கொஞ்சம் மாதவிடாய் சீர்கெட்டு இருக்கும் மகளிருக்கு, குண்டு பிரச்னையும் தாழ்வு மனப்பான்மையும் ஒன்றாக ஒட்டியே இருக்கிறது. முதலில் குண்டாக இருப்பதைக் கொலைக் குற்றமாகப் பார்க்கும் மனோபாவத்திலிருந்து வெளியே வாருங்கள். குதூகலமாக இருக்கும் குண்டுப் பெண்களுக்குக் குழந்தைப்பேறில் அதிகமாகச் சிக்கல் வருவதில்லை.
கூனிக்குறுகி, குமுறி அழும் குண்டுப் பெண்களுக்குத்தான் ஹார்மோன் வதையும் பின்னி எடுக்கிறது.

எடைக் குறைப்பை மகிழ்வாகச் செய்ய எத்தனிக்கும் பெண்களுக்கு, அதை ஒட்டிய ஹார்மோனும் ஒரே சமயத்தில் சீராகும்.  `டொக்... டொக்... டொக்... பருவமே புதிய பாடல் பாடு... இளமையின்...’’ எனக் காலை இளங்குளிரில் கூடவே வழிந்து வழிந்து ஓடிவர, காதலன் வேண்டுமானால் வரக்கூடும். கணவர்கள் கண்டிப்பாக வருவதில்லை. எப்போதுமே எதிர்த் திசை எண்ணத்தில் பயணிக்கும் அவரை எழுப்பி, பழைய ட்ராக் ஷூட்டை உதறி மாட்டிவிட்டு, எரிச்சலோடு கிளப்பிவிட வேண்டாம். ஒவ்வொரு ரவுண்டிலும் வீட்டு இஎம்ஐ-யில் ஆரம்பித்து, வீட்டிலுள்ள அவர் அம்மாவுக்கு நீங்கள் டிக்‌காஷன் குறைவாகக் கலந்து தந்த காபியையும் கொலைக்குற்றமாகப் பேசிக்கொண்டே வரும் அவர்களோடு நடப்பதைவிட, தனியே மௌனமாக நடப்பது உடல் பாரத்தையும் மன பாரத்தையும் சேர்த்துக் குறைக்கும்.

``தைராய்டுக்கு நீங்க என்ன மாத்திரை சாப்பிடுறீங்க?’’ எனக் கேட்கும்போது, பலரும் பர்ஸில் மடித்துவைத்திருக்கும் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் எழுதிய பழைய நைந்துபோன பிரிஸ்கிரிப்ஷனை உதறிக் காட்டுவார்கள். அநேகமாக அந்தப் பனை ஓலையைப் படிக்க, கீழடி கமிஷனரைப் போய்ப் பார்க்கவேண்டி வரும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை சோதித்து, சரியான தேவைக்கு ஏற்றாற்போல் மருந்தை உட்கொள்வது மிகமிக அவசியம். இதன் தேவை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது.

தைராய்டு சுரப்புக் குறைவாக உள்ள குழந்தைகள் கணக்குப் பரீட்சையில் ரொம்ப வீக்காயிருப்பார்களாம். அதேபோல் இந்தச் சுரப்பு குறைவாக உள்ள தம்பதியர் காதல் கணக்கிலும் அசமந்தமாயிருப்பார்கள். பரீட்சையிலோ படுக்கையிலோ கொஞ்சம் அசமந்தமாயிருந்தால், தைராய்டு சுரப்பை சீர்படுத்தியே ஆக வேண்டும்... கொஞ்சம் மாத்திரைகளோடு, நிறைய பயிற்சிகளோடு, நிரம்பி வழியும் காதலோடு!

- பிறப்போம்...

poison cure herbal

போகர் தனது `ஜெனன சாகரம்' என்ற நூலில் எழுதியிருக்கும் பாடல் ஒன்றில், `நாமென்ற சிரியாநங்கை வேரைத்தின்றால் நல்லதொரு விஷமெல்லாம் நாடாதோடும், வாமென்ற சடைச்சி வேரரைத்துத்தின்ன வல்லதொரு விஷங்களெல்லாம் வாங்கும்வாங்கும்' என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, சிறியா நங்கை வேரைத் தின்றாலும், சடைச்சி வேரை அரைத்துத் தின்றாலும் சீந்தில் தண்டின் பாலை உண்டாலும் விஷங்கள் நீங்கும் என்பதே அதன் பொருளாகும்.
சிறியா நங்கை
நோய்களில் இருந்து நமக்கு விடுதலை பெற்றுத்தருவது மட்டுமல்லாமல் மனிதனின் உயிரைப் பறிக்கும் பாம்பிடமிருந்தும் நம்மைக் காப்பாற்றும் வல்லமை படைத்தது சிறியா நங்கை. அதுமட்டுமல்ல... பாம்புக்கும் கீரிக்கும் சண்டை நடக்கும்போது பாம்பிடம் கடிபடும் கீரிப்பிள்ளை தன் உடம்பில் ஏற்பட்ட விஷத்துடன் கூடிய ரத்தக்காயத்தைப்போக்க சிறியா நங்கைச் செடியின்மீது புரண்டு எழுந்து நிவாரணம் பெறுமாம்.
சிறியா நங்கையைப்போல பெரியா நங்கை, முள்ளா நங்கை, மலை நங்கை, வைங்க நங்கை, கரு நங்கை, வெண்ணங்கை, வசியா நங்கை, செந்நங்கை எனப் பல நங்கைகள் இருந்தாலும் சிறியா நங்கையும் பெரியா நங்கையும் மட்டுமே மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், சிறியா நங்கையை நிலவேம்பு, மிளகாய் நங்கை, குருந்து, கொடிக்குருந்து என்ற வேறு பெயர்களிலும் அழைக்கிறார்கள். வேப்பிலை, மிளகாய்ச்செடி போன்று காணப்படும் இது கடுமையான கசப்புத்தன்மை கொண்டது. இலை முதல் வேர்ப்பகுதி வரை அனைத்துமே மருத்துவக்குணம் கொண்டது. அந்தக்காலத்தில் வேட்டைக்குச் செல்பவர்கள் நிலவேம்புச் (சிறியா நங்கை) செடியின் வடக்கத்திய வேரை காப்பு கட்டி கடை வாயில் வைத்துக் கடித்தபடி செல்வார்கள். அப்போது எந்த விஷப்பூச்சி கடித்தாலும் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாதாம். மேலும் பொதுவாக விஷப்பூச்சிகள் எதுவும் கடித்துவிட்டால் ஒரு கைப்பிடி நிலவேம்பு இலைகளுடன் சிறிது மிளகு சேர்த்துச் சாப்பிட்டால் விஷம் இறங்கிவிடும்.
நிலவேம்பு
பொதுவாக நிலவேம்பின் முழுச் செடியையும் நிழலில் காய வைத்து பிறகு வெயிலில் காய வைத்து இடித்துச் சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் கால் ஸ்பூன் அளவு காலை மற்றும் மாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும். இதை 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பாம்போ, தேளோ எந்தவித விஷப்பூச்சிகளும் நம்மைக் கடித்தால் அவை இறந்துவிடும். அந்த அளவுக்கு விஷ எதிர்ப்புத்தன்மை நம் உடம்பில் ஊறிப்போயிருக்கும். பொதுவாகவே,நிலவேம்புச் செடியின் இலையைப் பறிப்பவர்கள் எவ்வளவுதான் கையைக் கழுவினாலும் அதன் கசப்புத்தன்மை விலகாது. இலையைப் பறித்தவர்கள் சாப்பாட்டைத் தொட்டால் அது வாயில் வைக்க முடியாத அளவுக்குக் கசப்புத்தன்மையுடன் இருக்கும்.
சர்க்கரை நோயாளிகள் மற்றும் ஒவ்வாமையால் (அலர்ஜி) பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலைவேளையில் உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் நிலவேம்பு இலையைச் சாப்பிட்டு வந்தால் கைமேல் பலன் கிடைக்கும். இதன் இலைப்பொடியுடன் நெல்லி முள்ளி (காய்ந்த நெல்லிக்காய்) பொடி, வெந்தயப் பொடி, சிறு குறிஞ்சான் இலைப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மாலை என அருந்திவந்தால் சர்க்கரை நோயின் தீவிரம் வெகுவாகக் குறையும்.
நங்கை
கல்லீரல் நோய் மற்றும் மஞ்சள்காமாலை, சைனஸ், மலேரியா போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கும் சிறியாநங்கை நல்ல மருந்தாகும். காய்ச்சல், சைனஸ், சளித்தொல்லைக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.இதன் இலைகளை எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து வீக்கங்களின் மேல் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் குறையும். ரத்தம் சுத்திகரிக்க மருந்தாகப் பயன்படுகிறது.

kindney stones cure treatment

சிறுபீளை! இதை சிறுகண்பீளை, கற்பேதி, கண்பீளை, சிறுபீளை, கண்ணுப்பூளை, பொங்கல்பூ ஆகிய பெயர்களாலும் அழைப்பார்கள். இதன் பூக்கள் வெண்மை நிறத்தில் காணப்படுவதால் சிலர் தேங்காய்ப்பூ என்றும் சொல்வார்கள். இது, நீர்நிலைகளையொட்டிய பகுதிகளிலும் தரிசு நிலங்களிலும் வளரக் கூடியது.
சிறுபீளை
பொங்கல் போன்ற விழா நாள்களில் காப்பு கட்டவும் தோரணம் கட்டவும் இதைப் பயன்படுத்துவார்கள். இதன் நோக்கமே ஆபத்தான நேரங்களில் நம்மைப் பாதுகாக்க நாம் வெளியில் மருந்தைத் தேடி அலையக் கூடாது என்பதற்காகத்தான். அப்படி இதிலென்ன மருத்துவக் குணம் இருக்கிறது என்பது பற்றி சித்த மருத்துவர் இரா.கணபதியிடம் கேட்டோம். அதற்கு அவர் அளித்த தகவல்களின் தொகுப்பு இது.
சிறுபீளையின் வேர், இலை, பூ, தண்டு என அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் நிறைந்தவை. சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள 99 வகை மலர்களில் சிறுபீளைப் பூவும் ஒன்று. இது கைப்புச்சுவை மற்றும் வெண்மைத் தன்மை கொண்டது. இது நம் உடலின் கழிவுப் பொருள்களை வெளியேற்றும் உறுப்பான சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளுக்கு அருமருந்தாக இருக்கிறது. சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களைக் கரைக்கக் கூடியது. மேலும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்ப் பிரச்னைகளையும் போக்கக் கூடியது.
சிறுநீரகக் கல்
சிறுநீரகக் கல்...
இன்றைக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை சிறுநீரகக் கல் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய பிரச்னையிலிருந்து  விடுபட வேண்டுமானால், ஒரு லிட்டர் நீரில் 50 கிராம் சிறுபீளைத் தாவரத்தைப் போட்டு, அது கால் லிட்டராகும் வரை சுண்டக்காய்ச்ச வேண்டும். காய்ச்சிய நீரில் சுமார் 50 மில்லி அளவு காலை, மாலை வேளைகளில் குடித்து வந்தால் சிறுநீரகக் கல் கரைந்துவிடும். அதுமட்டுமல்ல, ஹைட்ரோ நெஃப்ரோசிஸ் எனப்படும் சிறுநீரக வீக்கமும் குறையும். மேலும் கற்கள் ஏற்படுத்தும் வலியையும் போக்கும். சிறுநீர் கழிக்கும்போது ஏற்படக்கூடிய எரிச்சலைப் போக்குவதோடு, சிறுநீரோடு ரத்தம் போவதையும் சரி செய்யக்கூடியது.
மாதவிலக்குக் கோளாறு...
சிறுபீளையின் முழுத்தாவரத்தையும் அரைத்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த நீரை வடிகட்டி அதனுடன் காய்ச்சிய பால் சேர்த்துக் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்துவர மாதவிலக்கு நாள்களில் ஏற்படக்கூடிய வலி குறையும். அதிக ரத்தப்போக்கும் கட்டுக்குள் வரும். மேலும் அப்போது ஏற்படக்கூடிய உடல்சோர்வைத் தவிர்த்து புத்துணர்ச்சி தரும்.
மாதவிலக்குக் கோளாறுகள்
சிறுபீளையால் வேறு நன்மைகள்...
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரவல்லது.
காயங்களால் ஏற்படும் வடுக்களைப் போக்கக்கூடியது.
கொழுப்பைக் கரைத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கும்..
ஈரலில் ஏற்படும் பிரச்னைகளைப் போக்கக் கூடியது.
உள் உறுப்புகளில் உண்டாகும் அலர்ஜியைச் சரிசெய்யும்.
கண்ணெரிச்சலைப் போக்கும்.
சிறுகண்பீளை
ரத்தக் கழிச்சலை சரிப்படுத்தும்.
தேகம் வெளிறலைத் தடுக்கும்.
பித்த வாதத்தைச் சரிசெய்யும்.
சிறுபீளைச்செடியின் வேர் பாம்புக்கடி மற்றும் வெறி நாய்க்கடிக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய தளர்ச்சியைப் போக்கி உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும்.
சிறுநீரகக் கல்

Monday 10 April 2017

Paleo diet Introduction

டயட் டூர் - வயிறு நிரம்பும் வரை!

ந.ஆசிபா பாத்திமா பாவா
பேலியோ டயட்டில் மாவுச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடக் கூடாது, பழங்கள் சாப்பிடக் கூடாது என்கிறீர்களே... அப்படியானால், என்னதான் சாப்பிட முடியும் என்கிற கேள்விக்கு முழு நீள உணவுப்பட்டியலே அளிக்கிறார் டாக்டர் மரியானோ ஆன்டோ ப்ரூனோ மஸ்கரணாஸ்.
என்னென்ன சாப்பிடலாம்?

* மாவுச்சத்து இல்லாத காய்கறிகள்
* பாதாம், பிஸ்தா, வால்நட்ஸ்
* மஞ்சள் கருவுடன் முட்டை
* கொழுப்புடன் கூடிய இறைச்சி
* கடல் உணவுகள்
* பால், நெய், வெண்ணெய், சீஸ், பனீர், தயிர், மோர் போன்ற அனைத்துப் பால் பொருள்கள்
தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் (செக்கில் ஆட்டியது என்றால் மிகவும் நல்லது)
* அனைத்துவகை கீரைகள்

எவ்வளவு சாப்பிடலாம்?

* இந்த உணவுகளை இவ்வளவுதான் சாப்பிட வேண்டும் என்ற குறிப்பிட்ட அளவு ஏதும் கிடையாது. வயிறு நிரம்பும்வரை உண்ணலாம். பசி அடங்கியபின் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். இது மிகவும் முக்கியம். 

* முழு முட்டை, இறைச்சிகளில் கொழுப்பு அதிகம் உள்ள இறைச்சியே நல்லது. 

* கொழுப்புச்சத்து குறைவான கருவாடு, சிக்கன் போன்றவற்றைக் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

* பேலியோவில் கொழுப்பே நம் உடலுக்குத் தேவையான எரிபொருள். மாவுச்சத்து உள்ள உணவுகளை நாம் சாப்பிடவில்லை என்பதால், கொழுப்பு மட்டுமே நமக்குத் தேவையான ஆற்றலை தருகிறது. அதனால்,  அதிக அளவு கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

சாப்பிடுவதால் என்ன ஆகும்?

இப்படி நாம் நேரடியாகச் சாப்பிடும் கொழுப்பு, கொழுப்பாகச் சேராமல் அது நம் உடலின் அன்றாட இயக்கத்துக்குத் தேவையான ஆற்றலாக மாறி, எரிக்கப்பட்டுவிடுகிறது. இதன்மூலம், உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புக் கரைக்கப்பட்டு, உடல் எடைக் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. இதுதான் ‘பேலியோ டயட்’டின் அடிப்படைக் கொள்கை.

சரி... ‘பேலியோ டயட்’ தொடங்கப்போறீங்களா? கொஞ்சம் பொறுங்கள். முதலில் சில பரிசோதனைகளை நீங்கள் செய்ய வேண்டும்.

Monday 27 March 2017

சர்க்கரை நோயாளிகள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய குறிப்புகள்! #HealthTips இது ஒரு நோயல்ல... குறைபாடு. கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும்போது ரத்தத்தில் சேரும் குளூக்கோஸின் அளவு கூடும். இதைத்தான் `டயாபடீஸ்’ என ஆங்கிலத்திலும் `சர்க்கரைநோய்’ எனத் தமிழிலும் சொல்கிறோம். மற்ற நாடுகளில் 55 வயதிலும், இந்தியாவில் 40 வயதிலும் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்’ என்கின்றன ஆய்வுகள். சர்க்கரைநோய், உடலுக்குப் பலவிதமான நோய்களைக் கொண்டுவந்து சேர்க்கும் நுழைவாயில். இதயநோய், சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம்... என ஒரு பெரும் பட்டியலே உண்டு. சரி... சர்க்கரைநோயை முற்றிலுமாகப் போக்க முடியுமா? முடியாது. ஆனால், கட்டுக்குள் வைத்திருக்கலாம். அதன் மூலம் ஆரோக்கியத்தைப் பராமரிக்கலாம். சர்க்கரைநோய் என்றால் என்ன, ஏற்பட என்ன காரணம், தவிர்க்கவேண்டிய உணவுகள், பின்பற்றவேண்டிய வழிமுறைகள்... அனைத்தையும் பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகள் வகைகள் டைப் 1 சர்க்கரைநோய்: சிறு வயதிலேயே ஏற்படும் இவ்வகையில், கணையத்தால் இன்சுலினைச் சுரக்க முடிவதில்லை. எனவே, உடலுக்குத் தேவையான இன்சுலினை வெளியே இருந்து உடலுக்குள் செலுத்தவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால் மாத்திரைகளுடன் ஊசி மருந்தும் கட்டாயமாக்கப்படும். இவ்வகை சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குறைவான எடையுள்ளவர்களாக இருப்பார்கள். டைப் 2 சர்க்கரைநோய்: பெரியவர்களுக்கு ஏற்படும் இந்த வகையில் இன்சுலின் சுரப்பு இருந்தாலும், மிக மெதுவாகத்தான் தன் பணியைச் செய்யும். எனவேதான் மாத்திரைகளுடன் உடற்பயிற்சி செய்யவேண்டியிருக்கும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவைப்படும். இந்த வகை டயபடீஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக உடல் எடையுடன் இருப்பார்கள். காரணங்கள் அக்யூட் ஸ்ட்ரெஸ் (Acute stress): மனஅழுத்தம் ஹார்மோன் சமநிலையைப் பாதிப்பதால், இன்சுலின் பணி மந்தமடையும். உணவு: உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகளை அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கும், உடல்பருமன் அதிகரித்து அதை கவனத்தில்கொள்ளாமல் இருப்பவர்களுக்கும் சர்க்கரைநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பரம்பரை: பரம்பரையில் யாருக்காவது சர்க்கரைநோய் இருந்தால், தலைமுறைப் பண்புகளைக் கொண்டு செல்லும் ஜீன்கள் டைப்-2 டயாபடீஸை உருவாக்கும். அதிகக் குழந்தைகளைப் பெற்ற பெண்கள், அவர்களின் வயதான காலத்தில் டைப்-2 டயாபடீஸால் பாதிக்கப்படுவார்கள். தொற்று: சில சமயங்களில் காயங்களாலோ, அறுவைசிகிச்சையின்போதோ ஏற்படும் தொற்றுகள் ஹார்மோன்களைப் பாதிப்பதால், சுரப்பிகளின் பணி நின்றுபோகும். டைப் 1 சர்க்கரைநோயை ஏற்படுத்தும் இந்த வைரஸ்கள், நோய் எதிர்ப்புச் சக்தியை பாதித்து, இன்சுலினைச் சுரக்கும் கணையத்தின் (பான்கிரியாஸ்) செல்களை அழிக்கக்கூடியவை. வயது: பொதுவாக நடுவயதினரை இது தாக்கும். அதீதக் கொழுப்பு: உடல்பருமனால் இடுப்பைச் சுற்றிச் சேரும் அதிகக் கொழுப்பு, இன்சுலினின் பணியை முடக்கும். கர்ப்பகாலம்: இந்தச் சமயத்தில் பிளசென்ட்டாவின் ஹார்மோன்களால் இன்சுலின் அளவு கூடும். இதனால் டயாபடீஸ் ஏற்படும். அறிகுறிகள்... * அதிக தாகம் * அதிகப் பசி * அடிக்கடி சிறுநீர் கழித்தல் * மங்கும் பார்வைத்திறன் * எடை கூடுதல் அல்லது குறைதல் * புண்கள் ஆறும் தன்மை குறைதல் * தோல் அரிப்பு * சிறுநீர்த் தொற்று * நீர்ச் சமநிலைக் குறைபாடு இந்த அறிகுறிகளுக்குப் பின்னரும் சர்க்கரைநோய்க்கான சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால், கோமாவோ உயிரிழப்போகூட ஏற்படலாம். சர்க்கரை நோய் அறிகுறி மற்றும் கண்டறியும் முறைகள் கண்டறியும் முறைகள்... சிறுநீரகப் பரிசோதனை: வெறும் வயிற்றிலும் சாப்பிட்ட பின்னரும் இரண்டு மணி நேரம் கழித்து சிறுநீர் சாம்பிள் எடுக்கப்பட்டு டெஸ்ட் செய்யப்படும். இது நோயின் தாக்கத்தைப் பொறுத்து `+’ முதல் `+ + + +’ வரை என குறிப்பிடப்படும். ரத்தப் பரிசோதனை: இதன் சாம்பிளும் வெறும் வயிற்றிலும், காலை உணவுக்குப் பின்னரும் இரண்டு மணி நேரம் கழித்து எடுக்கப்பட்டு டெஸ்ட் செய்யப்படும். இதில் கணக்கிடப்படும் அளவு 110 mg/dl - 180 mg/dl-க்கு அதிகமாக இருந்தால் `டயாபடீஸ்’ என்கிறார்கள். HbA1C டெஸ்ட்: இதுவும் ஒரு ரத்தப் பரிசோதனைதான். இதன் மதிப்பு 7 அல்லது 7-க்கு கீழே இருந்தால் நார்மல். உடலின் சுகர் கட்டுப்பாட்டு திறனை அறிய உதவுகிறது. சிகிச்சை முறைகள்... சிகிச்சையின் முக்கிய அம்சங்களில் * உணவு * உடற்பயிற்சி * இன்சுலின் ஊசி மருந்துடன் மாத்திரைகள் * டயாபடீஸைக் குறித்த விழிப்புணர்வு ஆகியவை அடங்கும். சர்க்கரை நோயாளிகள் சேர்த்துக்கொள்ளவேண்டிய உணவு நட்ஸ் சேர்த்துக்கொள்ளவேண்டிய உணவுகள்... * கீரைகள் * சூப் வகைகள் * எலுமிச்சை * வெங்காயம் * புதினா * வெண்ணெய் எடுக்கப்பட்ட மோர் * நட்ஸ் * நறுமணமூட்டிகள் (Spices). தவிர்க்கவேண்டிய உணவுகள்... * தேன் * சர்க்கரை * ஸ்வீட்ஸ் * டிரை ஃப்ரூட்ஸ் * குளூகோஸ் * சாக்லேட், மிட்டாய் போன்ற நேரடி இனிப்புகள் * கேக், பேஸ்ட்ரீஸ் * பொரித்த உணவுகள் * இனிப்பான குளிர் பானங்கள் * மது * ஜூஸ் வகைகள் தேன் சாப்பிடவேண்டிய மாதிரி மெனு... காலை எழுந்தவுடன்… வெதுவெதுப்பான நீர், ஒரு கிளாஸ் லெமன் டீ (அல்லது) ஆடை நீக்கப்பட்ட ஒரு டம்ளர் பால். காலை உணவு இட்லி-2, தோசை-1, சாம்பார் - 1 கிண்ணம், மீடியம் சைஸ் ஆப்பிள் (அல்லது) சப்பாத்தி-2, சென்னா மசாலா - 1/2 கிண்ணம், கொய்யா-1 (அல்லது) கோதுமை பிரெட், முட்டை வெள்ளைக்கரு ஆம்லெட், ஆப்பிள்-1. காலை இடை உணவு தயிருடன் கலந்த வெள்ளரி சாலட் (அல்லது) ஏதாவது ஒரு சூப் - 1 கப். மதிய உணவு சாதம் - 100 கிராம், பருப்பு - 20 கிராம் (அல்லது) சாம்பார் - 1/2 கப், அரைக்கீரை அல்லது பொன்னாங்கண்ணி பொரியல் - 100 கிராம், கத்திரிக்காய் புளி கொத்சு - 100 கிராம், மோர் - 1 டம்ளர். (அல்லது) சிக்கன் சூப் - 1 கப், ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் - 20கி, ஃப்ரைடு ரைஸ் - 100 கி (வீட்டில் தயாரிக்கப்பட்டவை), வறுத்த கோழி - 2 லெக் பீஸ், ஆலோவேரா டிரிங்க் - 1 கிளாஸ். மாலை 2 - 3 பாதாம் பருப்புகள், லெமன் ஜூஸ் - 1கிளாஸ் (அல்லது) பாசிப் பயறு சுண்டல் (50கி), ஆடை நீக்கப்பட்ட பால் - 1 கிளாஸ். இரவு உணவு ஃபுல்கா சப்பாத்தி (2), சென்னா மசாலா, பருப்பு, பயறு – அரை கப், தயிர் பச்சடி - 30 கிராம் (அல்லது) சோள சிறுதானிய தோசை (2-3), புதினா சட்னி – அரை கப். (அல்லது) வெஜிடபிள் சாண்ட்விச் - 2. படுப்பதற்கு முன்னர்... ஆப்பிள், கொய்யா, திராட்சை கலந்த சாலட் (அல்லது) ஏதாவது ஒரு பழம், ஆடை நீக்கப்பட்ட பால் - 1 கிளாஸ். பழங்கள் சர்க்கரைநோயாளிகளுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் சில உணவுகள்... * வெஜிடபிள் சாலட் * ஃப்ரூட் சாலட் * ஆவியில் வேகவைத்த உணவுகள் (இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை) * வேகவைத்த மீன் * முட்டை வெள்ளைக்கரு ஆம்லெட் * பருப்பு, பயறு, சுண்டல் வகைகள் * கீரைப் பொரியல் * இனிப்பு இல்லாத காபி, டீ * இனிப்பு இல்லாத இஞ்சி டீ, பிளாக் டீ * எல்லா வகையான சூப் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் பின்பற்றவேண்டிய சில விஷயங்கள்... * மேலே குறிப்பிடப்பட்டுள்ள உணவு முறையை பின்பற்றவேண்டியது அவசியம். * பசியைத் தாங்கக்கூடிய, ஆனால் கட்டுப்பாடான உணவுமுறை அவசியம். கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்பதற்காக பசியோடு இருக்கக் கூடாது. * குறைந்த எண்ணெயிலும் உப்பு இல்லாமலும் சமைப்பது நல்லது. பொரித்த உணவுகள், கொழுப்பு உணவுகளைத் தவிர்க்கவும். * அடிக்கடி தண்ணீர் குடிக்கவும். உணவுக்கு முன்னர் அருந்தும் ஒரு டம்ளர் நீர், உணவின் அளவைக் குறைக்கும். * அதிகமாக வேகவைக்கப்படும் காய்களிலிருந்து சத்துகள் வெளியேறி வீணாகும். உணவை அளவோடு வேகவைத்தால், சத்துகள் முழுவதுமாகக் கிடைக்கும். * ஒவ்வொரு மூன்று மாதத்துக்கும் ஒரு முறை உடலில் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். * கட்டுப்பாடான உணவும் உடற்பயிற்சியும் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். * சாப்பிட்ட உணவின் கலோரிகளைப் பயன்படுத்தும் அளவுக்கு சுறுசுறுப்பாக இருக்கவும் வேலை செய்யவும் வேண்டும். * டயட்டீஷியனின் ஆலோசனையின்போது, நமக்குள்ள அசௌகரியங்களைக் குறிப்பிட்டு ஆலோசனை பெற வேண்டும். * ஆறு மாதத்துக்கு ஒரு முறை உடல் பரிசோதனையும், மாதத்துக்கு ஒரு முறை எடை பரிசோதனையும் செய்துகொள்ள வேண்டும். * உங்கள் மருத்துவர் அல்லது உணவு ஆலோசனை நிபுணர் பரிந்துரைத்த சத்தான உணவு வகைகளை உட்கொள்ளவும். * மருத்துவரின் அறிவுரைப்படி சிறந்த உடற்பயிற்சிகளை, குறைந்தது 30 நிமிடங்களுக்குச் செய்ய வேண்டும். * பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகளைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். * கால் பாதங்களில் வெட்டுகள், கொப்புளம், புண், வீக்கம் அல்லது காயங்கள் இருக்கின்றனவா என்று தினமும் பரிசோதிப்பது நல்லது. வெளியில் சென்று வந்தவுடன் கால்களை நன்கு கழுவவும், இந்தப் பழக்கம் பாதங்களைப் பாதுகாக்க உதவும். * தினசரி இரண்டு முறை பல் தேய்த்து வாய் கொப்பளிப்பது நல்லது. * ரத்த அழுத்தத்தையும் கொலஸ்ட்ராலையும் உணவு உண்ணும் முறையால் கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்ளவும். ரத்த சக்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் சிறப்பு உணவுகள்... பாகற்காய் தினமும் உணவில் பாகற்காய் சேர்த்துக்கொண்டால், டயாபடீஸ் வராமல் தடுக்கும். இதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பாகற்காயில் இருக்கும் சாரன்டின் (Charantin) ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும். இதிலுள்ள லெக்டின் (Lectin) பசியைக் கட்டுப்படுத்தி, உடலில் சேர்ந்திருக்கும் குளூக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். பாகற்காய் வெந்தயம் வெந்தயத்தில் அதிக அளவில் எளிதாகக் கரையும் நார்ச்சத்து உள்ளது. இது, ஜீரணத்தின் வேகத்தைக் குறைத்து கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ணும் அளவையும் குறைக்கும். எனவே, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். வெந்தயம் நெல்லி இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கக்கூடியது. இதில் பாலிபீனால் (Polyphenol) சத்து நிறைந்து இருக்கிறது. இது, இன்சுலின் உறிஞ்சப்படுவதற்கு உதவி செய்கிறது. இதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். தினமும் 2 நெல்லிக்காய் உட்கொண்டுவந்தால், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம்.' நெல்லி கறிவேப்பிலை இது இன்சுலின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும். தினசரி 10 முழு கறிவேப்பிலை இலைகளைத் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் உண்டுவந்தால், பரம்பரை சர்க்கரைநோயையும், உடல்பருமனால் ஏற்படும் சர்க்கரைநோயையும் முழுவதுமாகத் தடுக்கலாம். கறிவேப்பிலை கொய்யா கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. இது மலச்சிக்கலை தடுத்து, டைப் - 2 சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும். கொய்யா இலைகளும் சத்து மிகுந்தவை. கொய்யா இலைகளைக் காயவைத்து, பொடியாக்கி, நீரில் கொதிக்கவைத்து குடித்துவர, சர்க்கரைநோய் வருவதைத் தடுக்கலாம். கொய்யா முருங்கை இலை முருங்கை இலையில் அஸ்கார்பிக் ஆசிட் (Ascorbic acid) நிறைந்துள்ளது. இது, இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். உடலில் குளூக்கோஸ் அளவைச் சீராக்கி, இயற்கையான வழியில் டயாபடீஸை கட்டுப்படுத்தும். பட்டை தினசரி 1-6 கிராம் பட்டைப் பொடியை 40 நாட்களுக்கு உட்கொண்டால், ரத்த சர்க்கரை அளவு 18-29 சதவிகிதம் குறையும். ஒவ்வாமை இருப்பவர்கள் மட்டும் இதைத் தவிர்க்கவும். பட்டை உடற்பயிற்சி சரியான, முறையான உணவோடு உடற்பயிற்சி செய்வது சர்க்கரைநோயைக் கட்டுப்பாடாக வைத்திருக்க உதவும். உடற்பயிற்சி, இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி, ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். தினமும் உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகோ (உடலில் சர்க்கரை அதிகமாகும் நேரம்) அல்லது காலை வெறும் வயிற்றிலோ உடற்பயிற்சி செய்யலாம். சில நேரங்களில் உடற்பயிற்சிக்கு பின்னர் ஹைபோகிளைசீமியாவின் (Hypoglycemia) அறிகுறிகளான சர்க்கரைக் குறைபாடு ஏற்படலாம். இந்த நேரங்களில் குறைந்த சர்க்கரை அளவை ஈடுகட்ட, சக்கரைக்கட்டி அல்லது மிட்டாய் சாப்பிடலாம். உடற்பயிற்சி சர்க்கரைநோயாளிகளுக்கான ஸ்பெஷல் சர்க்கரை(!) ரெசிப்பி டியாபெடிக் பூசணிக்காய் அல்வா தேவையானவை: துருவிய பூசணிக்காய் - 1 கப், பால் - 1 கப், குங்குமப்பூ – சிறிதளவு, ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன், சுகர் ஃப்ரீ ஸ்வீட்னர் - 1 டீஸ்பூன், நெய் - 1 டீஸ்பூன், பாதாம் (துருவியது) – தேவைக்கேற்ப. செய்முறை வாணலியில் நெய் ஊற்றி, சூடானவுடன், துருவிய பூசணிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் பால் சேர்த்து, சுண்டும் வரை கிளறவும். பிறகு, சுகர் ஃப்ரீ, ஏலக்காய் தூள், குங்குமப் பூ சேர்த்துக்கொள்ளவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, ஓரங்களில் ஒட்டாமல் சுருண்டு வரும் வரை கிளறவும். பின்னர் ஒரு கிண்ணத்தில் வைத்து பாதாமால் அலங்கரித்துப் பரிமாறவும்.

சர்க்கரை நோயாளிகள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய குறிப்புகள்! #HealthTips

இது ஒரு நோயல்ல... குறைபாடு. கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும்போது ரத்தத்தில் சேரும் குளூக்கோஸின் அளவு கூடும். இதைத்தான் `டயாபடீஸ்’ என ஆங்கிலத்திலும் `சர்க்கரைநோய்’ எனத் தமிழிலும் சொல்கிறோம். மற்ற நாடுகளில் 55 வயதிலும், இந்தியாவில் 40 வயதிலும் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்’ என்கின்றன ஆய்வுகள். சர்க்கரைநோய், உடலுக்குப் பலவிதமான நோய்களைக் கொண்டுவந்து சேர்க்கும் நுழைவாயில். இதயநோய், சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம்... என ஒரு பெரும் பட்டியலே உண்டு. சரி... சர்க்கரைநோயை முற்றிலுமாகப் போக்க முடியுமா? முடியாது. ஆனால், கட்டுக்குள் வைத்திருக்கலாம். அதன் மூலம் ஆரோக்கியத்தைப் பராமரிக்கலாம். சர்க்கரைநோய் என்றால் என்ன, ஏற்பட என்ன காரணம், தவிர்க்கவேண்டிய உணவுகள், பின்பற்றவேண்டிய வழிமுறைகள்... அனைத்தையும் பார்க்கலாம். 
சர்க்கரை நோயாளிகள்
வகைகள் 
டைப் 1 சர்க்கரைநோய்:  சிறு வயதிலேயே ஏற்படும் இவ்வகையில், கணையத்தால் இன்சுலினைச் சுரக்க முடிவதில்லை. எனவே, உடலுக்குத் தேவையான இன்சுலினை வெளியே இருந்து உடலுக்குள் செலுத்தவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால் மாத்திரைகளுடன் ஊசி மருந்தும் கட்டாயமாக்கப்படும். இவ்வகை சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குறைவான எடையுள்ளவர்களாக இருப்பார்கள்.
டைப் 2 சர்க்கரைநோய்: பெரியவர்களுக்கு ஏற்படும் இந்த வகையில் இன்சுலின் சுரப்பு இருந்தாலும், மிக மெதுவாகத்தான் தன் பணியைச் செய்யும். எனவேதான் மாத்திரைகளுடன் உடற்பயிற்சி செய்யவேண்டியிருக்கும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவைப்படும். இந்த வகை டயபடீஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக உடல் எடையுடன் இருப்பார்கள். 
காரணங்கள் 
அக்யூட் ஸ்ட்ரெஸ் (Acute stress): மனஅழுத்தம் ஹார்மோன் சமநிலையைப் பாதிப்பதால், இன்சுலின் பணி மந்தமடையும். 
உணவு: உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகளை அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கும், உடல்பருமன் அதிகரித்து அதை கவனத்தில்கொள்ளாமல் இருப்பவர்களுக்கும் சர்க்கரைநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 
பரம்பரை: பரம்பரையில் யாருக்காவது சர்க்கரைநோய் இருந்தால், தலைமுறைப் பண்புகளைக் கொண்டு செல்லும் ஜீன்கள் டைப்-2 டயாபடீஸை உருவாக்கும். அதிகக் குழந்தைகளைப் பெற்ற பெண்கள், அவர்களின் வயதான காலத்தில் டைப்-2 டயாபடீஸால் பாதிக்கப்படுவார்கள். 
தொற்று: சில சமயங்களில் காயங்களாலோ, அறுவைசிகிச்சையின்போதோ ஏற்படும் தொற்றுகள் ஹார்மோன்களைப் பாதிப்பதால், சுரப்பிகளின் பணி நின்றுபோகும். டைப் 1 சர்க்கரைநோயை ஏற்படுத்தும் இந்த வைரஸ்கள், நோய் எதிர்ப்புச் சக்தியை பாதித்து, இன்சுலினைச் சுரக்கும் கணையத்தின் (பான்கிரியாஸ்) செல்களை அழிக்கக்கூடியவை. 
வயது: பொதுவாக நடுவயதினரை இது தாக்கும். 
அதீதக் கொழுப்பு: உடல்பருமனால் இடுப்பைச் சுற்றிச் சேரும் அதிகக் கொழுப்பு, இன்சுலினின் பணியை முடக்கும். 
கர்ப்பகாலம்: இந்தச் சமயத்தில் பிளசென்ட்டாவின் ஹார்மோன்களால் இன்சுலின் அளவு கூடும். இதனால் டயாபடீஸ் ஏற்படும். 
அறிகுறிகள்... 
* அதிக தாகம்
* அதிகப் பசி
* அடிக்கடி சிறுநீர் கழித்தல் 
* மங்கும் பார்வைத்திறன்
* எடை கூடுதல் அல்லது குறைதல்
* புண்கள் ஆறும் தன்மை குறைதல் 
* தோல் அரிப்பு
* சிறுநீர்த் தொற்று
* நீர்ச் சமநிலைக் குறைபாடு
இந்த அறிகுறிகளுக்குப் பின்னரும் சர்க்கரைநோய்க்கான சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால், கோமாவோ உயிரிழப்போகூட ஏற்படலாம்.
சர்க்கரை நோய் அறிகுறி மற்றும் கண்டறியும் முறைகள்
கண்டறியும் முறைகள்... 
சிறுநீரகப் பரிசோதனை: வெறும் வயிற்றிலும் சாப்பிட்ட பின்னரும் இரண்டு மணி நேரம் கழித்து சிறுநீர் சாம்பிள் எடுக்கப்பட்டு டெஸ்ட் செய்யப்படும். இது நோயின் தாக்கத்தைப்  பொறுத்து `+’ முதல் `+ + + +’  வரை என குறிப்பிடப்படும். 
ரத்தப் பரிசோதனை: இதன் சாம்பிளும் வெறும் வயிற்றிலும், காலை உணவுக்குப் பின்னரும் இரண்டு மணி நேரம் கழித்து எடுக்கப்பட்டு டெஸ்ட் செய்யப்படும். இதில் கணக்கிடப்படும் அளவு 110 mg/dl - 180 mg/dl-க்கு அதிகமாக இருந்தால் `டயாபடீஸ்’ என்கிறார்கள். 
HbA1C டெஸ்ட்: இதுவும் ஒரு ரத்தப் பரிசோதனைதான். இதன் மதிப்பு 7 அல்லது 7-க்கு கீழே இருந்தால் நார்மல். உடலின் சுகர் கட்டுப்பாட்டு திறனை அறிய உதவுகிறது. 
சிகிச்சை முறைகள்... 
சிகிச்சையின் முக்கிய அம்சங்களில் 
* உணவு
* உடற்பயிற்சி
* இன்சுலின் ஊசி மருந்துடன் மாத்திரைகள்
* டயாபடீஸைக் குறித்த விழிப்புணர்வு
ஆகியவை அடங்கும். 
சர்க்கரை நோயாளிகள் சேர்த்துக்கொள்ளவேண்டிய உணவு நட்ஸ்
சேர்த்துக்கொள்ளவேண்டிய உணவுகள்... 
* கீரைகள்
* சூப் வகைகள்
* எலுமிச்சை
* வெங்காயம்
* புதினா
* வெண்ணெய் எடுக்கப்பட்ட மோர்
* நட்ஸ்
* நறுமணமூட்டிகள் (Spices).
தவிர்க்கவேண்டிய உணவுகள்... 
* தேன் 
* சர்க்கரை 
* ஸ்வீட்ஸ்
* டிரை ஃப்ரூட்ஸ்
* குளூகோஸ் 
* சாக்லேட், மிட்டாய் போன்ற நேரடி இனிப்புகள்
* கேக், பேஸ்ட்ரீஸ்
* பொரித்த உணவுகள்
* இனிப்பான குளிர் பானங்கள்
* மது
* ஜூஸ் வகைகள்
தேன்  
சாப்பிடவேண்டிய மாதிரி மெனு... 
காலை எழுந்தவுடன்… 
வெதுவெதுப்பான நீர், ஒரு கிளாஸ் லெமன் டீ
(அல்லது)
ஆடை நீக்கப்பட்ட ஒரு டம்ளர் பால்.
காலை உணவு
இட்லி-2, தோசை-1, சாம்பார் - 1 கிண்ணம், மீடியம் சைஸ் ஆப்பிள் (அல்லது)
சப்பாத்தி-2, சென்னா மசாலா - 1/2 கிண்ணம், கொய்யா-1 
(அல்லது)
கோதுமை பிரெட், முட்டை வெள்ளைக்கரு ஆம்லெட், ஆப்பிள்-1.
காலை இடை உணவு
தயிருடன் கலந்த வெள்ளரி சாலட் 
(அல்லது)
ஏதாவது ஒரு சூப் - 1 கப்.
மதிய உணவு
சாதம் - 100 கிராம், பருப்பு - 20 கிராம் (அல்லது) சாம்பார் - 1/2 கப், அரைக்கீரை அல்லது பொன்னாங்கண்ணி பொரியல் - 100 கிராம், கத்திரிக்காய் புளி கொத்சு - 100 கிராம், மோர் - 1 டம்ளர். 
(அல்லது)
சிக்கன் சூப் - 1 கப், ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் - 20கி, ஃப்ரைடு ரைஸ் - 100 கி (வீட்டில் தயாரிக்கப்பட்டவை), வறுத்த கோழி - 2 லெக் பீஸ், ஆலோவேரா டிரிங்க் - 1 கிளாஸ்.
மாலை
2 - 3 பாதாம் பருப்புகள், லெமன் ஜூஸ் - 1கிளாஸ்
(அல்லது)
பாசிப் பயறு சுண்டல் (50கி), ஆடை நீக்கப்பட்ட பால் - 1 கிளாஸ்.
இரவு உணவு
ஃபுல்கா சப்பாத்தி (2), சென்னா மசாலா, பருப்பு, பயறு – அரை கப், தயிர் பச்சடி - 30 கிராம்
(அல்லது)
சோள சிறுதானிய தோசை (2-3), புதினா சட்னி – அரை கப். 
(அல்லது)
வெஜிடபிள் சாண்ட்விச் - 2.
படுப்பதற்கு முன்னர்...
ஆப்பிள், கொய்யா, திராட்சை கலந்த சாலட் (அல்லது) ஏதாவது ஒரு பழம், ஆடை நீக்கப்பட்ட பால் - 1 கிளாஸ்.
பழங்கள்
சர்க்கரைநோயாளிகளுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் சில உணவுகள்...
* வெஜிடபிள் சாலட்
* ஃப்ரூட் சாலட்
* ஆவியில் வேகவைத்த உணவுகள் (இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை)
* வேகவைத்த மீன்
* முட்டை வெள்ளைக்கரு ஆம்லெட்
* பருப்பு, பயறு, சுண்டல் வகைகள்
* கீரைப் பொரியல்
* இனிப்பு இல்லாத காபி, டீ
* இனிப்பு இல்லாத இஞ்சி டீ, பிளாக் டீ
* எல்லா வகையான சூப்
பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்
பின்பற்றவேண்டிய சில விஷயங்கள்... 
* மேலே குறிப்பிடப்பட்டுள்ள உணவு முறையை பின்பற்றவேண்டியது அவசியம்.
* பசியைத் தாங்கக்கூடிய, ஆனால் கட்டுப்பாடான உணவுமுறை அவசியம். கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்பதற்காக பசியோடு இருக்கக் கூடாது. 
* குறைந்த எண்ணெயிலும் உப்பு இல்லாமலும் சமைப்பது நல்லது. பொரித்த உணவுகள், கொழுப்பு உணவுகளைத் தவிர்க்கவும்.
* அடிக்கடி தண்ணீர் குடிக்கவும். உணவுக்கு முன்னர் அருந்தும் ஒரு டம்ளர் நீர், உணவின் அளவைக் குறைக்கும்.
* அதிகமாக வேகவைக்கப்படும் காய்களிலிருந்து சத்துகள் வெளியேறி வீணாகும். உணவை அளவோடு வேகவைத்தால், சத்துகள் முழுவதுமாகக் கிடைக்கும்.
* ஒவ்வொரு மூன்று மாதத்துக்கும் ஒரு முறை உடலில் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். 
* கட்டுப்பாடான உணவும் உடற்பயிற்சியும் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
* சாப்பிட்ட உணவின் கலோரிகளைப் பயன்படுத்தும் அளவுக்கு சுறுசுறுப்பாக இருக்கவும் வேலை செய்யவும் வேண்டும். 
* டயட்டீஷியனின் ஆலோசனையின்போது, நமக்குள்ள அசௌகரியங்களைக் குறிப்பிட்டு ஆலோசனை பெற வேண்டும்.
* ஆறு மாதத்துக்கு ஒரு முறை உடல் பரிசோதனையும், மாதத்துக்கு ஒரு முறை எடை பரிசோதனையும் செய்துகொள்ள வேண்டும். 
* உங்கள் மருத்துவர் அல்லது உணவு ஆலோசனை நிபுணர் பரிந்துரைத்த சத்தான உணவு வகைகளை உட்கொள்ளவும். 
* மருத்துவரின் அறிவுரைப்படி சிறந்த உடற்பயிற்சிகளை, குறைந்தது 30 நிமிடங்களுக்குச் செய்ய வேண்டும். 
* பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகளைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். 
* தினசரி இரண்டு முறை பல் தேய்த்து வாய் கொப்பளிப்பது நல்லது. 
* ரத்த அழுத்தத்தையும் கொலஸ்ட்ராலையும் உணவு உண்ணும் முறையால் கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்ளவும்.
ரத்த சக்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் சிறப்பு உணவுகள்...
பாகற்காய் 
தினமும் உணவில் பாகற்காய் சேர்த்துக்கொண்டால், டயாபடீஸ் வராமல் தடுக்கும். இதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பாகற்காயில் இருக்கும் சாரன்டின் (Charantin) ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும். இதிலுள்ள லெக்டின் (Lectin) பசியைக் கட்டுப்படுத்தி, உடலில் சேர்ந்திருக்கும் குளூக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். 
பாகற்காய்

வெந்தயம் 
வெந்தயத்தில் அதிக அளவில் எளிதாகக் கரையும் நார்ச்சத்து உள்ளது. இது, ஜீரணத்தின் வேகத்தைக் குறைத்து கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ணும் அளவையும் குறைக்கும். எனவே, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
வெந்தயம்

நெல்லி 
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கக்கூடியது. இதில் பாலிபீனால் (Polyphenol) சத்து நிறைந்து இருக்கிறது. இது, இன்சுலின் உறிஞ்சப்படுவதற்கு உதவி செய்கிறது. இதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். தினமும் 2 நெல்லிக்காய்  உட்கொண்டுவந்தால், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம்.'
நெல்லி
கறிவேப்பிலை 
இது இன்சுலின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும். தினசரி 10 முழு கறிவேப்பிலை இலைகளைத் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் உண்டுவந்தால், பரம்பரை சர்க்கரைநோயையும், உடல்பருமனால் ஏற்படும் சர்க்கரைநோயையும் முழுவதுமாகத் தடுக்கலாம்.
கறிவேப்பிலை
கொய்யா 
கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. இது மலச்சிக்கலை தடுத்து, டைப் - 2 சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும். கொய்யா இலைகளும் சத்து மிகுந்தவை. கொய்யா இலைகளைக் காயவைத்து, பொடியாக்கி, நீரில் கொதிக்கவைத்து குடித்துவர, சர்க்கரைநோய் வருவதைத் தடுக்கலாம். 
கொய்யா
முருங்கை இலை 
முருங்கை இலையில் அஸ்கார்பிக் ஆசிட் (Ascorbic acid) நிறைந்துள்ளது. இது, இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். உடலில் குளூக்கோஸ் அளவைச் சீராக்கி, இயற்கையான வழியில் டயாபடீஸை கட்டுப்படுத்தும்.
பட்டை 
தினசரி 1-6 கிராம் பட்டைப் பொடியை 40 நாட்களுக்கு உட்கொண்டால், ரத்த சர்க்கரை அளவு 18-29 சதவிகிதம் குறையும். ஒவ்வாமை இருப்பவர்கள் மட்டும் இதைத் தவிர்க்கவும்.
பட்டை
உடற்பயிற்சி
சரியான, முறையான உணவோடு உடற்பயிற்சி செய்வது சர்க்கரைநோயைக் கட்டுப்பாடாக வைத்திருக்க உதவும். உடற்பயிற்சி, இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி, ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். தினமும் உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகோ (உடலில் சர்க்கரை அதிகமாகும் நேரம்) அல்லது காலை வெறும் வயிற்றிலோ உடற்பயிற்சி செய்யலாம். சில நேரங்களில் உடற்பயிற்சிக்கு பின்னர் ஹைபோகிளைசீமியாவின் (Hypoglycemia) அறிகுறிகளான சர்க்கரைக் குறைபாடு ஏற்படலாம். இந்த நேரங்களில் குறைந்த சர்க்கரை அளவை ஈடுகட்ட, சக்கரைக்கட்டி அல்லது மிட்டாய் சாப்பிடலாம்.
உடற்பயிற்சி
சர்க்கரைநோயாளிகளுக்கான ஸ்பெஷல் சர்க்கரை(!) ரெசிப்பி 
டியாபெடிக் பூசணிக்காய் அல்வா
தேவையானவை: 
துருவிய பூசணிக்காய் - 1 கப், பால் - 1 கப், குங்குமப்பூ – சிறிதளவு, ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன், சுகர் ஃப்ரீ ஸ்வீட்னர் - 1 டீஸ்பூன், நெய் - 1 டீஸ்பூன், பாதாம் (துருவியது) – தேவைக்கேற்ப.
செய்முறை
வாணலியில் நெய் ஊற்றி, சூடானவுடன், துருவிய பூசணிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் பால் சேர்த்து, சுண்டும் வரை கிளறவும். பிறகு, சுகர் ஃப்ரீ, ஏலக்காய் தூள், குங்குமப் பூ சேர்த்துக்கொள்ளவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, ஓரங்களில் ஒட்டாமல் சுருண்டு வரும் வரை கிளறவும். பின்னர் ஒரு கிண்ணத்தில் வைத்து பாதாமால் அலங்கரித்துப் பரிமாறவும்.

Thanks to Vikatan