About Me

My photo
I am an IT professional, Nowadays our Lifestyle is changed a lot and of course we are chasing money. In India More than 7 crore people affected by Diabetes, High Cholesterol and infertility due to their Poor Food Habits &amp Lifestyle. This Blog is very useful for youngsters to lead good Lifestyle and be healthy and students to choose career courses.Work hard, but make time for your love, family and friends. Nobody remembers Powerpoint presentations on your Final Day.I believe Life is ours and we only Live our Life.... Thanks for visiting and welcome you to visit again. WHO LOVES GOD ARE SEARCHING GOD, WHO LOVES PEOPLE ARE LIVING AS GOD - SK ( Reach me @ +91 9791139942 to lead Healthy Family Life )

Monday 23 July 2012

Pregnancy behaviour tips

ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை அடைவது என்பது ஒரு வரப்பிரசாதம். அவ்வாறு கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு பாதிப்பும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். அந்த பாதிப்புகள் தாயின் உடலில் ஏற்பட்டாலும் சரி, மனதில் ஏற்பட்டாலும் சரி. அவ்வாறு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் போது, அந்த பாதிப்புகள் குழந்தை பிறந்த பின் 2 அல்லது 3 மாதங்கள்/வருடங்கள் ஆன பின்பு கூட ஏற்படும். ஆகவே கருவுற்ற பெண்கள் குழந்தை நன்கு வளர சில நடைமுறைகளை கடைபிடித்து நடக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி, அவற்றை பட்டியலிட்டுள்ளனர்.
1. முதலில் கருவுற்ற பெண்கள் எப்போதும் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. அதிலும் தலைக்குக் குளித்தால், நீண்ட நேரம் ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
2. உண்ணும் உணவில் அதிக காரம் அல்லது புளிப்பு உள்ள உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். மேலும் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளையே உண்ண வேண்டும். அதிலும் சரியான நேரத்திற்கு உண்ண வேண்டும். உண்ட உடனே தூங்கக் கூடாது, வேண்டுமென்றால் சற்று நேரம் ஓய்வு எடுக்கலாம்.
3. மதிய உணவில் ஏதேனும் ஒரு கீரையை சேர்க்க வேண்டும். அதிக சூடு அல்லது அதிக குளிர்ச்சி தரும் பழங்களை தவிர்த்து, மற்ற பழங்களை சாப்பிடலாம்.
4. தண்ணீரை நன்கு காய்ச்சியே குடிக்க வேண்டும். அதிக அளவு தண்ணீரானது குடிக்க வேண்டும். அதற்காக ஒரே நேரத்தில் அதிகமாக தண்ணீர் குடிக்கக் கூடாது. இடைவெளி விட்டு குடிக்க வேண்டும்.
5. இடி, மழை, மின்னல் போன்றவை ஏற்படும் போது வெளியே செல்ல கூடாது. அதே போல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது. மேலும் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்லக் கூடாது.
6. கர்ப்பக்காலத்தில் வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படுவதால் சிலர் சாப்பிடுவதை தவிர்ப்பர். ஆனால் அப்படி சாப்பிடாமல் இருக்க கூடாது. அவ்வாறு சாப்பிடாமல் இருந்தால் குழந்தைக்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போகும்.
7. அதிக சப்தம் போட்டு பேசுதல், மனதை பாதிக்கும் காட்சிகளை பார்த்தல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறெல்லாம் இருந்தால் குழந்தையானது எந்த ஒரு குறையும் இல்லாமல் நன்கு ஆரோக்கியமாக பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் மிதமான வேலை, மிதமான உடற்பயிற்சி, மிதமான நடை, அமைதியான மனநிலையே ஆரோக்கிய குழந்தைக்கு முதல் படி என்றும் கூறுகின்றனர்.

Home remedies for Strep throat

குழந்தைகளுக்கு தொண்டை கரகரப்பு, எச்சில் விழுங்குவதில் சிரமம் இருந்தால் அதை உடனே கவனிக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தொண்டை பாதிப்பை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால் அது தொண்டை வீக்க நோய்க்கு காரணமாக அமைந்து விடும் என்பதும் மருத்துவர்களின் எச்சரிக்கையாகும்.
பாக்டீரியா நோய் தொற்று
தொண்டை வீக்க நோய் என்பது பாக்டீரியா தொற்றினால் உண்டாகிறது. இதனுடைய முக்கிய அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் தொண்டை எரிச்சல் ஆகும்.
தொண்டை வீக்க நோய் 4 முதல் 8 வயது குழந்தைகளுக்கு மிகவும் சாதாரணமாகவும், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அபூர்வமாகவும் ஏற்படும். ஸ்ட்ரெப்டோகோக்கஸ் மூலம் உண்டாகும் ஒரு வகை தொண்டை வீக்க நோய் உடலின் மற்ற பாகங்களிலும் சிக்கலை உண்டாக்கும். கிருமியின் தாக்கம் குறைவாக இருந்தால் நோய் குணமாகிவிடும். இல்லையெனில் கண்டிப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லவேண்டும். உரிய சிகிச்சைக்கு பின்னரே நோய் குணமாகும். சுய மருத்துவம் செய்யக்கூடாது என்கின்றனர் மருத்துவர்கள்.
தொண்டை நோயை ஆரம்பத்திலேயே கவனித்து உரிய சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் வேறு சில சிக்கல்களும் உண்டாகலாம். அப்படிப்பட்ட ஒரு சிக்கல் வாதக்காய்ச்சலாகும். இதனால் தோல், மூட்டுகள், இதயம் மற்றும் மூளையும் பாதிக்கப்படலாம். மூட்டு வீக்கம் மற்றும் சிறுநீரக வீக்கம் ஆகியவையும் ஏற்படும். மற்ற வகை தொண்டை வீக்க நோய்கள் இந்த சிக்கல்களை உண்டாக்காது.
புற்றுநோய் அபாயம்
அதே போல் தொண்டைப்புண் ஏற்பட்டு நீண்ட காலம் கவனிக்காமல் இருந்தால் அது புற்று நோயாக மாறக்கூடிய வாய்ப்பும் உள்ளது என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். குழந்தைகளுக்கு தொண்டை வலியினால் ஏற்படும் காய்ச்சலை கண்காணிக்க வேண்டும். ஆண்டிபயாடிக்ஸ் மருந்து கொடுக்க வேண்டும். மருந்து கொடுக்க ஆரம்பித்த 3 நாட்களுக்குள் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி குறைய ஆரம்பிக்கும். நோய் திரும்பவும் வராதிருக்கவும், ஆண்டிபயாடிக் எதிர்ப்பு சக்தியை இழக்காமலிருக்கவும், நோயின் சிக்கல்களை தவிர்ப்பதற்காகவும் ஆண்டிபயாடிக் மருந்துகள் முழுவதையும் உபயோகிப்பது முக்கியம் என்கின்றனர் நிபுணர்கள்.
கொதிக்கவைத்த நீர்
வீட்டில் தினசரி குடிக்கும் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். கேன் வாட்டர்களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றது என தெரிய வருவதால் அந்த நீரையும் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். கடைகளில் வாங்கப்படும் குளிர் பானங்கள், ஐஸ்கிரீம், மோர் போன்றவைகளை தவிர்ப்பது நல்லது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெயிலுக்கு இதமான பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். கைகளை நன்றாக சுத்தம் செய்யவேண்டும்.
குடிக்கும் டம்ளர் அல்லது உணவு உண்ணும் பாத்திரங்களை உங்கள் நண்பர்களுடன் அல்லது சக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உணவு உண்ணும் பாத்திரங்கள் மற்றும் குடிக்கும் டம்ளர்களை சூடான சோப்பு நீரில் கழுவ வேண்டும். சாலையோரங்களில் சுகாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படும் குளிர் பானங்கள், தர்பூசணி, பப்பாளி போன்ற பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
இதமான உணவுகள்
தொண்டை வீக்க நோயுள்ளவர்களுக்கு உணவு உண்பது மற்றும் பானங்கள் குடிப்பது வேதனையை கொடுக்கலாம். தொண்டை எரிச்சல், காய்ச்சல் காரணமாக குழந்தைகள் உணவு உண்ணவோ அல்லது பானங்களை குடிக்கவோ மறுக்கலாம். ஏனென்றால் குழந்தைக்கு உணவுகளை விழுங்குவதில் கஷ்டம் இருக்கும். குழந்தைகள் உணவு விழுங்குவதற்கு கஷ்டப்பட்டால் விழுங்குவதற்கு எளிதான சூப், ஐஸ்கிரீம் போன்ற மென்மையான உணவுகளை கொடுக்கலாம். அதிகளவு நீராகாரங்கள் கொடுக்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
உள்நாக்கு பெரியதாகி சிவந்திருக்கும். சில குழந்தைகளுக்கு தலைவலி, குமட்டல், வாந்தி, அடி வயிற்றில் வலி மற்றும் தசை வலி போன்ற வேறு அறிகுறிகளும் இருக்கலாம். அதுமாதிரியான நேரங்களில் மென்மையான உணவுகள் மற்றும் நீராகார உணவுகளைக் கொடுக்கலாம்.
1 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொண்டையை இதமாக்குவதற்கும் மற்றும் இருமலை குறைப்பதற்கும் சுத்தமான தேன் 1 முதல் 2 தேக்கரண்டி (5 முதல் 10 மில்லி) கொடுக்கலாம். வளர்ந்த குழந்தைகளை சூடான உப்பு நீரால் வாயைக் கொப்பளிக்கலாம். இதனால் தொண்டையில் ஏற்பட்ட புண்கள் வலிநீங்கி படிப்படியாக குணமாகும்.
ஐஸ் கட்டிகள் மற்றும் தொண்டைக்கு இதமளிக்கும் இனிப்பு வகைகள் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொஞ்சம் நிவாரணமளிக்கலாம். ஆனால் சிறு குழந்தைகளுக்கு அவற்றைக் கொடுக்க வேண்டாம். ஏனென்றால் அவை அவர்களின் தொண்டையில் சிக்கக்கூடும் ஆபத்துள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்.

Natural remedies Muscular Dystrophy

ஆண் குழந்தைகளை மட்டுமே தாக்கக் கூடிய அபூர்வ நோய் ‘மஸ்குலர் டிஸ்ட்ரஃபி' எனப்படும் தசைத்திறன் குறைவு நோய். இது குழந்தையின் உடலை படிப்படியாக ஊனமாக்கி, உயிரைக் குடிக்கும். இந்தக் கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், 20 முதல் 30 வயதுக்குள் பெரும்பாலும் உயிரிழக்க நேரிடுகிறது. இந்த நோயின் வீரியத்தை குறைந்தது 5 வயதுக்கு மேல்தான் உணரமுடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஆண்குழந்தைகளை மட்டுமே தாக்கி வந்த இந்த நோய் அபூர்வமாக பெண் குழந்தைகளைத் தாக்குகிறது. நமது நாட்டில் ஒவ்வொரு 2000 குழந்தைகளுக்கும், ஒரு ஆண் குழந்தை இந்நோயால் பாதிக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை, அடிக்கடி கீழே விழும். படிகளில் ஏறும்போது, பிடிப்பின்றி ஏற இயலாமல் போகும். 2 வயது முதல் 5 வயதுக்கு உள்பட்ட காலத்தில், நோய் தாக்கப்பட்ட குழந்தையின் நடை, ஓட்டம் வித்தியாசப்படும்.
கால்களை நேராக வைக்க முடியாமல் வளைந்து வைக்கலாம். வெளிப்பார்வைக்கு, எந்தவித ஊனமோ, குறைபாடோ வெளியில் தெரிவதில்லை, குழந்தை நன்றாகவே தோற்றமளிக்கும். கருவில் உருவான இந்நோய், படிப்படியாக தீவிரமடைந்து, 10-12 வயதில் முழுவதும் நடக்கவோ, நிற்கவோ, நீண்ட நேரம் அமரவோ முடியாத நிலை ஏற்படும். சுயமாக, ஒரு டம்ளர் தண்ணீரைக் கூட தூக்க முடியாது. 12-18 வயதில் உடலின் மற்ற உறுப்புகளில், நோயின் தாக்கம் தீவிரமடையத் தொடங்கும். சுவாசம், ஜீரணம் தொடர்பான பிரச்னைகள் அடிக்கடி ஏற்படும். 18 வயதுக்கு மேல் படுத்த படுக்கையாகவும், 20-30 வயதுக்குள் உயிரிழப்பும் நேரிடலாம். எனவே நோய் பாதித்தவர்கள் 24 மணி நேரமும் ஒருவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும். இந்த நோயினை மருத்துவப் பரிசோதனைகள் மூலம்தான், அறியமுடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோயின் தீவிரத்தை உணர்ந்த மேலைநாட்டு மருத்துவர்களும் மரபணு ஆராய்ச்சியாளர்களும் நோய்க்கான மருந்தைக் கண்டறியும் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வைட்டமின் பி, டி
தசை திறன்குறைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான உணவுகளை கொடுத்தால் அவர்களின் மரணத்தை தள்ளிப்போட முடியும் என்கின்றனர் நிபுணர்கள். வைட்டமின் பி, ஆன்டி ஆக்ஸிடென்ஸ் நிறைந்த உணவுகளை கொடுப்பதனால் இந்தநோயின் பாதிப்பு ஓரளவிற்கு கட்டுப்படும். அதே போல் வைட்டமின் டி உணவுகளை உண்ணக்கொடுக்கவேண்டும். சூரியஒளியில் வைட்டமின் டி அதிகம் கிடைக்கிறது எனவே தசைத்திறன் நோயினால் பாதித்த குழந்தைகளை தினசரி சிறிதுநேரம் சூரியஒளி படுமாறு நடக்கச் செய்யலாம்.

செலினியம் நிறைந்த உணவுகள்
பார்லி, அரிசி, முளைவிட்ட கோதுமை, கோதுமை பிரட், கைக்குத்தல் அரிசி, டர்னிப் கீரை, வெள்ளைப்பூண்டு, ஆரஞ்சு சாறு, இந்த ஏழு உணவுகளும் இளமை காக்கும் உணவுகளாகும். இந்த ஏழு உணவுகளிலும் செலினியம் என்ற அரிய தாது உப்பு போதுமான அளவு இருக்கிறது. வைட்டமின் ‘இ' யுடன் சேர்ந்து ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டாக செலினியம் உப்பும் செயல்படுகிறது. இந்த வைட்டமினும் தாது உப்பும் சேர்ந்து உயிரணுக்களில் உள்ள மெல்லிய தோல்களையும், திசுக்களையும் நோய் எதுவும் தாக்காமல் பாதுகாக்கின்றன. எனவே வைட்டமின் இ சத்து நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கவேண்டும்.

Tips to improve Digestion

இன்றைய காலத்தில் உணவில் கட்டுப்பாடு இல்லாமல், அளவுக்கு அதிகமாக உணவு உண்டு, பின் செரிமானம் ஆகாமல் நிறைய பேர் அவஸ்தைப்படுகிறார்கள். அப்படி செரிமானம் ஆகவில்லை என்பதற்காக மாத்திரைகளை சாப்பிட்டால் உடல் தான் கெடும். ஆனால் அதைவிட ஈஸியான சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்தாலே செரிமானம் ஆகிவிடும். அது என்னென்ன ஈஸியான உடற்பயிற்சின்னு படிச்சு பாருங்களேன்...
1. அதிகமாக சாப்பிட்டப்பின், சிறிது தூரம் நடக்கவும். ஏனென்றால் அதிகமாக உண்டபின் நடந்தால் செரிமானத் தன்மை அதிகரிக்கும். மேலும் உண்டபின் நடப்பதால், உணவில் உள்ள கொழுப்பு உடலில் தங்காமல், உடல் எடை போடாமலும் இருக்கும்.
2. பிறகு குனிந்து நிமிர்வது, இடுப்பு தசைகளை முறுக்கும் (Twisting) பயிற்சிகள், மற்றும் குனிந்து விரல்களால் பாதங்களை தொடுவது போன்ற பயிற்சிகளை செய்யும்போது தசைகளுக்கு வலிவும், பொலிவும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
3. செரிமானத்தில் மூச்சுப் பயிற்சியும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. முதலில் நேராக உட்கார்ந்து, மனதிற்குள் 5 வரை எண்ணிக் கொண்டு, மூச்சை 2-3 நிமிடம் உள் இழுக்கவும். பின் அதேபோல் மனதிற்குள் 5 வரை எண்ணிக் கொண்டு, மூச்சை வெளிவிடவும். இவ்வாறு செய்தால் செரிமானமாவதோடு, மனதும் ரிலாக்ஸ் ஆகும்.
4. அடுத்ததாக தரையில் உட்கார்ந்து, கால்கள் இரண்டையும் நீட்டி, பின் அவற்றில் வலது காலை மடக்கி, பின் இரண்டு கைகளாலும் இடது காலின் பாதத்தை தொடவும். அப்போது நன்கு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடவும். இதை அப்படியே தலைகீழாக செய்யவும்.
உடற்பயிற்சியைத் தவிர நினைவில் கொள்ள வேண்டியவை :
1. செரிமானம் ஆகவில்லை என்றால் குளிரிச்சியானவற்றை குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் அதை குடித்தால் செரிமானத்தன்மை குறைந்துவிடும். செரிமானம் உடல் வெப்பத்தைப் பொறுத்தே நடைபெறும்.
2. இயற்கை பானமும் செரிமானத் தன்மையை அதிகரிக்கும். ஃபுரூட் ஜூஸோடு சிறிது ஆப்பிள் பழச்சாற்றினாலான ஒரு வகை சாஸை விட்டு வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நல்லது.
3. நெல்லிக்காய் சாப்பிட்டால் செரிமானக் கோளாறு அகலும். ஏனென்றால் நெல்லிக்காயில் அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால் இது எளிதாக உணவுப் பொருட்களை செரித்துவிடும். மேலும் நெல்லிக்காயை கறுப்பு உப்புடன் தொட்டு சாப்பிட்டு, சிறிது சுடு தண்ணீரை சாப்பிட்டால் நல்லது.
4. தினமும் யோகாசனம் செய்வது ஒரு நல்ல, உடலுக்கு ஆரோக்கியமான, செரிமானத்திற்கு சிறந்த பயிற்சி. அதிலும் ப்ராணயானம் செய்தால் மிகவும் நல்லது.

Home Remedies for Baldness

வழுக்கைத் தலை பிரச்சினை இன்றைய இளைஞர்களுக்கு அதிகமாக இருக்கிறது. வழுக்கை வந்துவிட்டால் அந்த இடத்தில் மறுபடியும் கூந்தல் வளராது என்று நினைப்பது தவறு. தலையில் வழுக்கை ஏற்படுவதற்கு காரணமே போதிய இரத்த ஓட்டம் இல்லாததே ஆகும். கூந்தல் பெரும்பாலும் உதிர்வதற்கு புரதச் சத்து குறைவு, சரியான பராமரிப்பு இல்லாததும் முக்கிய காரணங்களாகும். கூந்தலானது படிப்படியாக உதிர்ந்து நாளடைவில் தலையானது வழுக்கை ஆகிறது. இதற்கு வழுக்கை ஏற்பட்ட இடத்தில் இயற்கை முறையிலான மருந்துகளை தடவினாலே கூந்தலானது வளரும் என்கின்றனர் நிபுணர்கள் அவர்களின் ஆலோசனையை படியுங்களேன்.
வலுக்கையை போக்க...
எலுமிச்சை-மிளகு விதைகள் : இது வழுக்கை ஏற்பட்ட இடத்தில் முடி வளர்வதற்கு ஏற்ற ஒரு சிறந்த இயற்கை மருத்துவம். அதற்கு முதலில் எலுமிச்சை விதைகளையும், மிளகு விதைகளையும் நன்கு அரைத்து, நீரில் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் அதனை வழுக்கை ஏற்பட்ட இடத்தில் தடவ வேண்டும். அப்போது சற்று எரிச்சலாகத் தான் இருக்கும். ஆனால் அது வழுக்கை உள்ள இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, அங்கு கூந்தலை வளரச் செய்யும். இதனை வாரத்தில் இரண்டு நாட்கள் செய்ய வேண்டும். இதனால் கூந்தலானது வழுக்கை ஏற்பட்ட இடத்தில் வளரும்.
அதிமதுரம் : அதிமதுரத்தை நன்கு அரைத்து, அதோடு பால் மற்றும் குங்குமப்பூவைக் கலந்து வழுக்கை ஏற்பட்ட இடத்தில் தடவ வேண்டும். அதனை இரவில் படுக்கும் முன் தடவிக் கொண்டு படுக்க வேண்டும். பிறகு காலையில் எழுந்து அதனை குளிர்ந்த தண்ணீரில் அலசி விடலாம்.
வெங்காயம் : வெங்காயமும் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதனை வழுக்கை ஏற்பட்ட இடத்தில் காலை மற்றும் மாலையில் சிவப்பு நிறத்தில் ஆகும் வரை தேய்க்க வேண்டும். பிறகு அந்த இடத்தில் தேனைத் தொட்டு தேய்க்க வேண்டும்.
துவரை : துவரம் பருப்பை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து தினமும் வழுக்கை ஏற்பட்ட இடத்தில் தடவி ஊறவைத்து குளிக்கலாம். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
ஆரோக்கியமாக கூந்தல் வளர...
1. தேங்காய் எண்ணெயை எலுமிச்சை சாற்றில் கலந்து, கூந்தலுக்கு தடவி குளித்து வந்தால், கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம். மேலும் கூந்தலும் நன்கு வளரும்.
2. உளுந்து மற்றும் வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து பேஸ்ட் போல செய்து தலைக்கு தடவி ஊறவைத்து குளிக்கலாம். இதனால் கூந்தலானது நீளமாக வளரும்.
3. ஆமணக்கெண்ணெயை தினமும் கூந்தலுக்கு தடவ வேண்டும். இதனால் கூந்தலானது அழகாக, அடர்த்தியாக வளரும்.

அழகுக்கு ஆதாரமாக திகழ்பவை கூந்தல் என்பது பலரது எண்ணம். இன்றைய சூழலில் இளைய தலைமுறையினர் கூட தலைமுடி கொட்டி வழுக்கையினால் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு காரணம் கடையில் ரசாயனங்கள் அடங்கிய ஷாம்பு, சோப்பு உள்ளிட்டவைகளை கூந்தலுக்குப் போடுவதுதான் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். தலை முடி கொட்டிவிட்டாலே பாதி அழகு போய்விட்டது என்ற வருத்தத்திலேயே எண்ணற்றோர் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுகின்றனர்.

உடலில் அதிக உஷ்ணம், மன அமைதியின்மை போன்றவற்றாலும் வழுக்கை ஏற்படுவது உண்டு. சிலருக்கு பரம்பரை காரணமாகவும் வழுக்கை ஏற்படுவது உண்டு. மேலும் இரும்புச் சத்து குறைபாடினால் ஏற்படும் ரத்த சோகை, தைராய்டு பிரச்சினை, பூஞ்சைத் தாக்குதல், மனஅழுத்தம், மருந்துப் பொருட்கள் போன்றவை தலையில் வழுக்கை விழ காரணங்களாக அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

வழுக்கை விழ ஆரம்பித்ததும் உடனேயே அதனை சரிப்படுத்து வதற்கான வழிகளைக் கையாள வேண்டும். இல்லாவிடில் அதனைக் குணப்படுத்துவது கடினம். எனவே இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தேங்காய் எண்ணெய், வெந்தயம்

உடல் உஷ்ணத்தினால் வழுக்கை ஏற்படுவதை தவிர்க்க தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெயில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு அன்றாடம் உபயோகிக்கலாம். இதனால் முடி உதிர்வது தவிர்க்கப்படும்.

புழுவெட்டு சரியாகும்

வழுக்கை விழுவதற்கான காரணங்களில் புழுவெட்டும் ஒன்று. இதற்கு சோற்றுக் கற்றாழையை எடுத்து அதனுள் இருக்கும் வழு வழுப்பான 'ஜெல்' போன்ற திரவத்தை எடுத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கை விழுவதை தடுக்கலாம்.

சிறிய வெங்காயத்தை அரைத்து மயிர்க்கால்களில் நன்கு அழுத்தி தடவி ஊற வைத்து தலையை அலசினால் புழுவெட்டினால் ஏற்படும் வழுக்கைக்கு நல்ல பலன் கிடைக் கும். அதிமதுரத்தை எருமைப்பாலில் அரைத்து வாரத்திற்கு மூன்று முறை தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

முடி வளர்க்கும் மருந்துகள்

பூண்டை உலர்த்திப் பொடி செய்து அதைத் தேனில் கலந்து வழுக்கையின் மீது பூசி வந் தால் முடி வளரும். இலந்தை இலையை அரைத்து அதன் சாற்றை வழுக்கை உள்ள இடத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அரளிச் செடியினை கீறி பால் எடுத்து தடவி வர புழுவெட்டினால் ஏற்படும் வழுக்கைக்கு நல்ல பயன் கிட்டும்.

மன அழுத்தம் தவிர்க்கவும்

மன அழுத்தமானது முடி உதிர காரணமாக கருதப்படுகிறது. எனவே அமைதியான சூழலில் முடி அமர்ந்து தியானம் மேற்கொள்வது மன அழுத்தம் போக்கும். இதனால் முடி உதிர்வதும் தவிர்க்கப்படும். முடி கொட்டத் தொடங்கினாலே ரசாயன பொருட்களை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இயற்கை மூலிகைப் பொருட்களையும், உடலுக்கு குளுமை தரும் பொருட்களையும் பயன்படுத்தவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Natural Remedies to cure White Hair

வயதானது முதிவடையும் போது கறுத்த முடி வெளுப்படைவது இயல்பான ஒன்று. ஆனால் இன்று 20 வயதான இளைஞர்களுக்கு தலைமுடியானது வெளுத்து முதுமையான தோற்றத்தை தருகிறது. அதற்கு காரணம் சத்தான உணவு இல்லாமை, உண்ணமை, முறையான கூந்தல் பராமரிப்பின்மை மற்றும் மனக்கவலை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் உடலில் ஏற்படும் நாட்பட்ட நோய்களாலும் இளநரை ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக அனீமியா, மூக்கடைப்பு, நீண்ட நாள் மலச்சிக்கல் போன்றவை ஏற்பட்டாலும் இளநரையானது ஏற்படும் என்றும் கூறுகின்றனர். இத்தகைய இளநரையை வீட்டிலிருந்தே போக்க எளிதான வழிகள் இருக்கின்றன.
1. நெல்லிக்காயை தினமும் ஒன்று என்று சாப்பிட்டு வர, நமது உடலில் நோய் எதிர்ப்பு பெருகும். மேலும் அதிலுள்ள வைட்டமின் "சி" முடியை கருமையடையச் செய்யும்.
2. மருதாணி இலையை அரைத்து எண்ணெயில் போட்டு காய்ச்சி பூசி வந்தால், இளநரையானது விரைவில் நீங்கும்.
3. கறிவேப்பிலையை சமைக்கம் உணவில் அதிகம் சேர்த்து, அதனை சாப்பிட்டால் உடலில் இரும்புச்சத்து அதிகமாகி கூந்தலானது கருமையாக வளரும்.
4. நான்கு ஸ்பூன் மருதாணிப் பொடி, இரண்டு ஸ்பூன் காபி அல்லது டீ டிகாஷன், ஒரு முட்டை, அரை ஸ்பூன் விளக்கெண்ணெய் ஆகியவற்றை கலந்து, தலையில் நன்றாக தேய்த்து, ஒரு மணிநேரம் ஊற வைத்துப் பின் கூந்தலை குளிர்ந்த நீரில் அலசினால் இளநரையானது படிப்படியாக குறையும்.
5. கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி, கூந்தலுக்கு தடவி வந்தால் இளநரையானது வராமல் இருக்கும்.
6. வெள்ளைப் பூவான கரிசாலையை நன்கு காய வைத்து, அரைத்து பொடி செய்து, ஒரு மாதம் இளநீரிலும், ஒரு மாதம் தேனிலும் கலந்து உண்ண வேண்டும். இதனால் இளநரை மாறும்.
7. தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து தலைக்கு பூசி நன்கு மசாஜ் செய்து, குளித்து வந்தால், இளநரையானது போகும்.
ஆகவே மேற்கூறிய இயற்கையான உணவினாலும், சரியான பராமரிப்பாலும் இளநரையை வராமலும், வந்த இளநரையை போகவும் செய்யலாம்.

உடம்பில் அதிக அளவில் பித்தம் கூடினால் தலை நரைக்கும் என்று முன்னோர்கள் கூறுவார்கள். இன்றைக்கு மாறிவரும் சூழ்நிலையால் 15 வயது முதலே தலை நரைக்கத் தொடங்கிவிடுகிறது. சமச்சீரற்ற உணவுமுறை, எண்ணெய் வைக்காமல் தலை சீவுவது, ரசாயனப்பொருட்கள் அடங்கிய ஷாம்பு, சோப்பு உபயோகிப்பது போன்றவைகளினாலும் தலைமுடி வெள்ளையாகிறது. இளநரையை போக்க நம் வீட்டிலேயே மருந்திருக்கு என்கின்றனர் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனையை படியுங்களேன்.
இன்றைக்கு 15 வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களும்தான். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தும் அன்றாடம் தலைக்கு எண்ணெய் வைப்பதும் வாடிக்கையாக இருந்தது. ஆனால் இன்றைக்கு யாரும் இதனை பின்பற்றுவதில்லை.
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். அதை சுத்தமான தேனுடன் சேர்த்து ஊறவைத்து தினசரி காலையில் அதை சாப்பிட்டு வர பித்தம் தணியும் இளநரை தானாகவே மாறும்.
தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு கலந்து மசாஜ் செய்யவும். இதனால் இளநரை தானாகவே மாறும். கூந்தல் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாறும்.
பசு மோர் இளநரையை போக்கும் அருமருந்து. வாரம் இருமுறை மோர் தலைக்கு தேய்த்து குளிக்கலாம் உஷ்ணம் நீங்கும்.
தேங்காய் எண்ணெயை காய்ச்சி அதில் கறிவேப்பிலை போட்டு வேகவைக்கவும். இந்த எண்ணெயை தினசரி தலைக்கு தேய்த்து வரை கூந்தல் இயற்கை நிறத்திற்கு மாறும். முடி உதிர்வது கட்டுப்படும்.
உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும் இது பித்தத்தை குறைக்கும். அதேபோல் முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.
2 ஸ்பூன் ஹென்னா பவுடர், 1 ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் வெந்தையப் பொடி, 3 ஸ்பூன் காபி, 2 ஸ்பூன் துளசி இலை சாறு, 3 ஸ்பூன் புதினா இலைச் சாறு கலந்து பேஸ்ட் போல கலக்கவும். அதை தலையில் அப்ளை செய்து மூன்று மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் மைல்டு ஷாம்பு போட்டு அலசவும். இதனால் இளநரை படிப்படியாக நிறம் மாறும். தலையும் குளிர்ச்சியடையும்.
ஒரு ஸ்பூன் உப்பு, ஒரு கப் ப்ளாக் டீ கலந்து தலைக்கு தேய்த்து மசாஜ் செய்யவும். ஒரு மணிநேரம் ஊறவைத்து பின்னர் தலைக்கு குளிக்கவும். இதனால் இளநரை மாறி தலைமுடி படிப்படியாக கருமையாகும்.
இளநரையை போக்குவதில் வெங்காயம் சிறந்த மருந்தாகும். இது உதிர்ந்த இடங்களில் கூந்தலை நன்கு வளரச்செய்யும். ஒரு கிராம் கருப்பு மிளகு அரைக் கப் தயிர், சிறிதளவு லெமன் சாறு கலந்து தலைக்கு அப்ளை செய்யவும். இது இளநரையை மறையச்செய்யும்.
நெல்லிக்காய் பேஸ்ட், நெல்லிக்காய் எண்ணெயை தலைக்கு பூசி வர இளநரை மறைவதோடு கூந்தல் திக்காக வளரும். மருதாணி இலையை நன்கு காயவைத்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தலைக்கு பூசிவர கூந்தல் கருமையாகும்.
எலுமிச்சையானது கூந்தலை இயற்கை நிறத்திற்கு மாற்றும் சக்தி படைத்தது. எனவே எலுமிச்சை சாற்றை கூந்தலில் ஊறவைத்து பின்னர் நன்கு அலசினால் கூந்தல் படிப்படியாக கருமையாகும். நெல்லிக்காய் சாறு, பாதம் எண்ணெய், எலுமிச்சை சாறு மூன்றையும் நன்றாக கலந்து தலைக்கு பூசி ஊறவைத்து குளிக்க கூந்தல் கருமையாவதோடு பளபளப்பாகவும், அழகாகவும் மாறும்.

Health Benefits of Mutton

ஆடு, கோழி, மீன், போன்ற மாமிச உணவுகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவகையான சத்துக்கள் காணப்படுகின்றன. கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளை சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆட்டு மாமிசம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. ஆட்டுக்கறியில் புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. ஆட்டின் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொருவிதமான பலனை தருவதாக உள்ளது.

இதயத்திற்கு பலம்

ஒரு சிலருக்கு தலைக்கறி மிகவும் விருப்பமாக இருக்கும். தேங்காய் பாலில் சமைத்து சாப்பிடுவார்கள். இந்த தலைக்கறியை சாப்பிட்டால் இதயநோய் தீரும் என்கின்றனர் மருத்துவர்கள். தலை தொடர்பான நோய் இருந்தால் அறவே அற்றுப்போகுமாம். குடலுக்கு பலம் கிடைக்கும். ஆட்டின் கண் சாப்பிட்டால் பார்வை கோளாறு உள்ளவர்களுக்கு பலம் கிடைக்கும். கண் கோளாறுகள் சரியாகும். ஆட்டின் நாக்கு உடல் சூட்டை அகற்றும். சருமத்திற்கு இளமை தரும் பளபளப்பை தரும்.

ஆண்மை பெருகும்

ஒரு சிலர் ஆட்டின் மூளையை தனியாக வறுத்து சாப்பிடுவார்கள். இதன் சுவையே அலாதியானது. இது மனித மூளைக்கு அதிக சக்தியை கொடுக்கும். கண்கள் குளிர்ச்சி பெறும். புத்தி தெளிவடையும், நினைவாற்றல் அதிகரிக்கும். விந்தணு குறைபாடு உடைய ஆண்கள் இதை சாப்பிட தாது விருத்தி உண்டாகும். இதேபோல் ஆட்டின் குண்டிக்காய் சமைத்து சாப்பிட இடுப்புக்கும் குண்டிக் காய்க்கும் பலம் தரும். இடுப்பு நோய் அகற்றும். தாது விருத்தியாகும். ஆண் குறி பருக்கும்.

கபநோய் நீங்கும்

கப நோய் பாதிப்புள்ளவர்கள் ஆட்டின் மார்பு பகுதியில் உள்ள கறியை சாப்பிட்டலாம். நெஞ்சு எலும்பு கறியை சமைத்து உண்பதால் மார்புக்கு பலம் கிடைக்கும். மார்பு பகுதியில் உள்ள புண்கள் ஆறும். ஆட்டு இதயம் சாப்பிட்டால் நமது இதயத்திற்கு பலம் கிடைக்கும். மன ஆற்றல் பெருகும்.

உடலுக்கு குளிர்ச்சி

ஆட்டின் நுரையீரல் சாப்பிட்டால் உடல் வெப்பம் தணியும், நுரையீரலுக்கு வலு கிடைக்கும். அதேபோல் ஆட்டின் கொழுப்பு இதயத்திற்கு நல்ல பலத்தை தரும். வயிற்றில் உள்ள எந்தவித புண்களையும் ஆற்றும் சக்தி இதற்கு உண்டு. கால், மூட்டு நோவு உள்ளவர்கள் ஆட்டுக்கால் சூப் வைத்து குடிக்கலாம். இதனால் கால்களுக்கு வலிவு கிடைக்கும்.

Passcimothana Yoga Benefits

யோகாசனம் மூலம் மன அழுத்தம் குறைகிறது. எந்த வித நோய் ஏற்பட்டாலும் அதை யோகாசனம் மூலம் கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது. நோய்கள் வந்த பின் அவற்றை கட்டுப்படுத்த போராடுவதை வித நோய் வரும்முன் தடுப்பதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அந்த வகையில் பஸ்சிமோத்தாசனம் நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுப்பதாக ஆசனங்களை கற்பிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் 5 ல் மூன்று பேருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மாறிவரும் வாழ்க்கை முறையால் இன்னும் பல லட்சம் பேர் நீரிழிவு நோய் தாக்குதலுக்கு ஆளாகும் சூழ்நிலையில் உள்ளனர். நீரிழிவினை நோய் என்பதை விட குறைபாடு என்றுதான் கூறவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே யோகாசனங்கள் மூலம் நீரிழிவு ஏற்படாமல் தடுக்கமுடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீரிழிவு தடுக்கப்படும்

பஸ்சிமோத்தாசனம் நீரிழிவை தடுப்பதோடு ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தருகிறது. உட்கார்ந்த நிலையிலான ஆசனங்களில் நீரிழிவுக்கு மிகவும் பயன்தரக்கூடிய ஒரு ஆசனம் இது என்றும் யோகாசன வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பஸ்சிமோத்தனம் செய்யும் போது, குடல்கள், பித்தப்பை, இரைப்பை முதலியன நன்றாக அமுக்கப்படுகின்றன. உடலின் உயிராற்றலை வலுப்படுத்தும் முதுகெழும்பு, முதுகு நரம்பு வளைத்து இழுக்கப்படுகிறது. இதனால் நீரிழிவு குறைபாடு உண்டாவது தடுக்கப்படுகிறது. வயிற்று வலி, தலைவலி, மூலக்கடுப்பு, இடுப்பு வலி, முதுகுவலி, பலவீனம் முதலியவை நீங்குகிறது.

மலட்டுத்தனம் நீங்கும்

இந்த ஆசனத்தின் மூலம் ஆண்மை அதிகரிக்கிறது. மலட்டுத் தனம் நீங்குகிறது. பெண்களிடத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் மாதவிடாய் கோளாறுகள் பூரணமாக குணமாகி விடும். இடுப்பு வலுவடையும். இளம்பெண்கள் திருமணத்திற்கு முன் இந்த ஆசனத்தை செய்து வருவதால் இடுப்பு சார்ந்த இனப்பெருக்க உறுப்புகள் வலுவடைந்து திருமணத்திற்கு பின் எளிதான சுகப்பிரசவம் உண்டாக வழி வகை ஏற்படும். மனதை ஒருமுகப்படுத்த இந்த ஆசனம் மிகவும் உதவுகிறது எனபது குறிப்பிடத்தக்கது.

அறுவைச் சிகிச்சை

இந்த ஆசனத்தை வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் செய்ய கூடாது. அறுவை சிகிச்சை நடந்து குறிப்பிட்ட காலங்கள் ஆகி இருந்தால் சிறந்த ஆசன நிபுணர்களுடன் ஆலோசனை பெற்று ஆசனத்தை செய்யலாம். வழக்கமாக ஆசனத்தை செய்து வரும் கர்ப்பிணிகள் ஆசனத்தை முழுமையாக செய்யாமல் உட்கார்ந்த நிலையில் காதுகளை ஒட்டி கைகளை நிமிர்த்திய நிலையில் ஆசனத்தை முடித்துக் கொள்ள வேண்டும். முன்பக்கம் குனிந்து முழங்காலை தொடும் நிலைக்கு போகக் கூடாது. ஆசனங்களை பழக்கமில்லாத புதிய கர்ப்பிணிகள் இந்த ஆசனத்தை எக்காரணம் கொண்டு செய்யக் கூடாது.

வலிகள் சரியாகும்

இந்த ஆசனத்தை செய்வதும் எளிது. மூன்று நிலைகளைக் கொண்ட இந்த ஆசனத்தை செய்வதில் முதலில் சிரமங்கள் ஏற்படலாம். நாளடைவில் முறையான பயிற்சி செய்தால் எளிதாக வந்து விடும். சிலருக்கோ, கைகளை மேலே காதுகளை ஒட்டினாற் போல் வைத்துக் கொண்டு எழுந்திருக்க முடியாது. கைகளை முன்னுக்கு வீசி பேலன்ஸ் செய்து எழுந்திருந்தால் தான் எழுந்திருக்க முடியும். இதுவும் நாளடைவில் சரியாகி விடும்.

சிலருக்கு கால் விரல்களை கைகளால் தொட முடியாது. பொதுவாகவே முதுகெழும்பு கட்டை பாய்ந்து விட்டிருப்பதால் தான் இப்படி முன்னோக்கி குனிய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் பழக பழக கால் விரல்களை கைகளால் பிடித்து விடலாம். சிலருக்கு கால் விரல்களை பிடிக்க முயலும் போது முழங்கால் தூக்கிக் கொள்ளும். ஆனால் முழங்கால் மடிக்காமலேயே கூடுமான வரை குனிந்து தொட முயற்சிக்க வேண்டும். இப்படி பழகி வரும் போது தொடையில் உள்ள தசைகளும், நரம்புகளிலும் வலி ஏற்படுவதுண்டு. ஆனால் சில நாட்களில் சரியாகி விடும். சிலருக்கு முழங்காலில் முகத்தை கொண்டு வைக்க முடியாது. இதுவும் விடா முயற்சியுடன் பழகும் போது சரியாகி விடும்.

Too Much Television watching can make Diabetics

அதிக அளவில் தொலைக்காட்சி முன்பு நேரத்தை செலவழிப்பவரா? அது உங்களின் ஆரோக்கியத்திற்கு வேட்டுவைக்கும் வெடிகுண்டு என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள். டிவி முன்பு பழியாக கிடப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு, இதயநோய்கள், திடீர் மரணங்கள் போன்றவை ஏற்படும் என்றும் அவர்கள் அச்சுறுத்துகின்றனர்.
ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் ஆய்வாளர்கள் இது தொடர்பான ஆய்வு ஒள்றை மேற்கொண்டனர். 1970 முதல் 2011 வரை அவர்கள் அமெரிக்காவில் மேற்கொண்ட ஆய்வில் மனிதர்கள் தொலைக்காட்சி பார்ப்பதற்கும் அவர்களுக்கு டைப் 2 நீரிழிவு, இதயநோய், திடீர்மரணங்கள் ஏற்படுவதற்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். தினசரி அதிகபட்சம் மூன்று மணிநேரத்திற்கு மேல் தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு குறைந்த வயதிலேயே திடீர் மரணங்கள் சம்பவிக்கும் வாய்ப்பு ஏற்படுவது நிச்சயம் என்கின்றனர் நிபுணர்கள்.
இன்றைய வாழ்க்கை சூழலில் தொலைக்காட்சி பார்ப்பது என்பது அத்தியாவசியமான ஒன்றாகியிருக்கிறது. அதற்காக டிவி முன்பே பழியாகக் கிடக்காமல் அவ்வப்போது இடைவெளி விடுவது நீரிழிவு, இதயநோய்கள் ஏற்படாமல் தடுக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இந்த ஆய்வு முடிவுகள் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேசன் மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது.
நம் ஊரில் காலையில் நல்லநேரம் கேட்பது தொடங்கி இரவு அழுகை சீரியல்கள் வரை அனைவரும் டிவியே கதியாக கிடக்கின்றனர். அவர்கள் தொலைக்காட்சி பார்ப்பதை குறைத்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.

தற்போதுள்ள உலகில் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும் இதய நோயானது மற்றவர்களுக்கு வருவதை விட இருமடங்கு அதிகமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் வருகிறது என்று தற்போதைய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் நீரிழிவு இருந்தால் இதயத்தில் இருக்கும் தமனிகள் மிகவும் வேகமாக கடினமடையும். இதனால் உடலில் கொலஸ்ட்ராலின் அளவானது அதிகமடையும். மேலும் நமது உடலில் இரு வகையான கொலஸ்ட்ரால்கள் இருக்கின்றன. அது எச்.டி.எல் மற்றும் எல்.டி.எல். இவை இரண்டும் லிப்போ புரோட்டீன்கள். இவைகள் கொலஸ்ட்ராலை உடலின் சுழற்சிக்கு சுமந்து செல்பவை. இவற்றில் எச்.டி.எல் உடலில் இருந்து கொலஸ்ட்ராலை நீக்கவும், எல்.டி.எல் கொலஸ்ட்ராலை இரத்த நாளங்களில் சேமிக்கவும் செய்கின்றன.
அந்த சுழற்சியின் போது உடலில் அளவுக்கு அதிகமாக கொலஸ்ட்ரால்கள் இருந்தால், எல்.டி.எல் இரத்த நாளங்களில் அளவுக்கு அதிகமாக சேமிக்கத் தொடங்கும். அவ்வாறு இருந்தால் எச்.டி.எல் அந்த கொலஸ்ட்ராலை முழுவதையும் நீக்க முடியாமல், அவை இரத்த நாளங்களில் அப்படியே தங்கி, நாளங்களின் இடைவெளியானது குறைந்து, இரத்த ஓட்டமானது தடைபடும். இதனால் இரத்தக்கட்டிகள், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படக்கூடும்.
மேலும் நீரிழிவு இருப்பவர்கள், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவையும், கொலஸ்ட்ராலின் அளவையும் அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால் உடனே அதற்கேற்ற மருந்தையும் மருத்துவரிடம் சென்று கேட்டு வாங்கி போட வேண்டும் என்றும் கூறுகின்றனர். மேலும் அவர்கள் சில ஆரோக்கியமாக வழிகளையும் கூறுகின்றனர்.
உடலில் கொலஸ்ட்ராலை குறைக்க சில டிப்ஸ்...
1. கொழுப்பு அதிகம் அடங்கியுள்ள எண்ணெய் வகைகளான தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் ஆயில்களை தவிர்க்க வேண்டும். மேலும் எந்த ஒரு கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.
2. அதிகமான அளவு தானிய வகைகளை உண்ண வேண்டும். கொழுப்புகள் குறைவாக இருக்கும் பால் பொருட்களை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
3. குறைந்த அளவு ஆட்டுக்கறியையும், அதிக அளவு மீன்களையும் உண்ண வேண்டும். அதுமட்டுமல்லாமல் அதிக அளவு புரோட்டீன் நிறைந்த உணவுகளான காய்கறிகள் உண்ண வேண்டும். பழங்களையும் அதிக அளவு உட்கொள்ளலாம்.
4. தினமும் 30 நிமிடம் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
5. புகைப்பிடித்தலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். முக்கியமாக மருத்துவரிடம் தவறாமல் செல்ல வேண்டும்.
நீரிழிவு உள்ளவருக்கு இதய நோய் இருப்பதற்கான அறிகுறிகள்...
மனஅழுத்தம் அதிகமாதல், நெஞ்சில் அடிக்கடி வலி மற்றும் கைகள், கால்கள், வயிறு போன்றவற்றில் ஏதேனும் கோளாறு, மூச்சு விடுவதில் கஷ்டம் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

some skin care tips

வெளியில் தலைகாட்ட முடியாத அளவிற்கு தகிக்கிறது வெப்பம். கோடை தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சருமத்தை பாதுகாக்க சீரகத்தை காய்ச்சி குடிக்கலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் அழகியல் நிபுணர்கள். இதனால் சருமம் மங்காமல் செழுமையடையும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சருமப் பளபளப்பு

கோடை காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சருமம்தான். எனவே சருமத்தை பாதுகாக்க பழச்சாறு, காய்கறிச் சாறு, சூப் மற்றும் தண்ணீர் அதிகம் பருகவேண்டும். இதனால் தோல் வறட்சி தடுக்கப்படுவதோடு
உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் சருமம் பளபளப்பாக மாறும். கோடை காலத்தில் வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்வது சரும நலனை பாதுகாக்கும். தயிர் சாப்பிடுவதை விட மோராக சாப்பிடுவது நல்லது.

கரும்புள்ளிகள் மறைய

கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளி பழச்சாறை முகத்தில் தடவவும்.எண்ணை பசை சருமத்தினரை முகப் பருக்கள் பாடாய் படுத்தும். எனவே எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும். மேலும் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.

அடிக்கடி முகம் கழுவுங்க

ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கபடுவதோடு சருமத்தில் படியும் அழுக்குகள் அகற்றபடும். குறிப்பாக இரவு படுக்க போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.

காரமா சாப்பிட வேண்டாம்

வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும். உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகமாக குடிக்கலாம்.

பெண்களை வாட்டும் வெயில்

கோடை காலத்தில் பெண்களுக்கு அதிகமான பாதிப்பு ஏற்படும். பெரும்பாலும் உடம்பில் வெயில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தலைக்கு குடையும், கண்ணுக்கு கண்ணாடியும், காலுக்கு செருப்பும் அவசியமாகும்.

கழுத்தின் முன்பாகம், அக்குள், தொடை இடுக்கு பகுதிகள், இடுப்பு, மார்பின் அடிப்பாகம், முதுகுபகுதி போன்ற இடங்களில் பெண்களுக்கு அதிகம் வியர்த்து, வேர்க்குரு தோன்றும். இதற்கு சாதம் வடித்த தண்ணீரை அந்த இடங்களில் தடவினால் கொஞ்சம் கொஞ்சமாக மறையும். பாத வெடிப்பு அதிகமாக ஏற்படுவதை தடுக்க வெங்காயத்தை வதக்கி, பின்னர் அதை விழுதுவாக அரைத்து பாதங்களில் தடவி வந்தால் பாத வெடிப்பு படிபடியாக மறையும்.

அதிகமான அளவு வியர்வை வெளியேறுவதைத் தடுத்தால் வேர்க்குருவைக் கட்டுபடுத்தலாம். அதிகமாக வியர்க்கும்போது குளித்தால் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. வியர்வை நின்ற பிறகே குளிக்க வேண்டும். அதிகமாக வியர்க்கும்போது பவுடர் பூச வேண்டாம். நன்றாக கழுவி துடைத்த பிறகே பவுடரை பூச வேண்டும்.

வறண்ட சருமத்தினருக்கு

வறண்ட சருமத்தினர் கோடை காலத்தை எண்ணி அதிகம் கவலை கொள்ள வேண்டாம். ஏனென்றால் கோடை காலத்தில் அதிகம் வியர்க்கும். இதனால் வறண்ட சருமத்தைக் கொண்டவர்களுக்கு நன்மையே தவிர, தீமை இல்லை. ஆனால் வியர்க்கும்போது உடலில் அசுத்தமான துகள்கள் ஒட்டினால் தோல் அலர்ஜி ஏற்படும். அடிக்கடி உடம்பை அடிக்கடி கழுவவேண்டும். பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்பை உடலில் தேய்த்துக் குளிக்க வேண்டும். அதிகமாக உணர்ச்சி வசப்பட வேண்டாம். எக்காரணம் கொண்டும் சிறுநீரை அடக்க வேண்டாம்.

வாழைத்தண்டு உணவு

கோடை காலத்தில் எல்லோருக்குமே உடலில் வியர்வை நாற்றம் ஏற்படும். அதற்கு நிறைய தண்ணீர் குடிக்கலாம். கீரைகள், ஆரஞ்சு பழம், அன்னாசி பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். இவற்றிலுள்ள நார்ச்சத்து திரவ உற்பத்தியைக் குறைக்கும். எரிச்சல் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத்தண்டு, கீரை போன்றவற்றை உண்ணுவது உடம்புக்கு நல்லது.

Health Benefits of Sesame oil

தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்தப்படும் நல்லெண்ணெய், உணவுப்பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. நல்லெண்ணெயில் உள்ள லெசித்தின் எ‌ன்ற பொரு‌ள் ரத்தத்தில் இரு‌க்கு‌ம் அ‌திக‌ப்படியான கொழு‌ப்பை‌க் குறைக்கிறது.இதில் உள்ள லினோலிக் அமிலம்; ரத்தத்தில் இரு‌க்க வே‌ண்டிய நல்ல கொழு‌ப்பை அதிகரிக்கிறது. ந‌‌ல்லெ‌ண்ணெ‌ய் கு‌ளி‌ர்‌ச்‌சியை‌த் தருவதோடு ‌கிரு‌மி நா‌சி‌னியாகவு‌ம் உடலு‌க்கு‌ப் பய‌ன்படு‌கிறது. வெறு‌ம் வ‌யி‌ற்‌‌றி‌ல் ‌சி‌றிது ந‌ல்லெ‌ண்ணெ‌ய் குடி‌ப்பது குடலு‌க்கு‌ ந‌ல்லது. நல்லெண்ணெயை இயற்கை நமக்கு அளித்த கொடை என்று கூறலாம். இதற்கு அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே காரணம்.

வைட்டமின் மற்றும் தாது உப்புகள்

நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. இது உடலில் கொழுப்பு சத்தை குறைத்து உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதை குறைக்கிறது.
நல்லெண்ணெயில் உள்ள துத்தநாகம், எலும்புகளை பலப்படுத்துகிறது. தாமிரம், கால்சியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் உடல் நலத்திற்கு பயன்படுகிறது. மன அழுத்தத்தையும் போக்குகிறது.

இனிப்பு, கசப்பு, காரம்

நல்லெண்ணெய் சற்று கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக்கூடியது. ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு நோய்களைப் போக்க நல்லெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. நல்லெண்ணெய் சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும். நல்லெண்ணெய் புத்திக்கு தெளிவு, கண்ணுக்கு குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றை தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றை தணிக்கிறது.

கண்நோய்கள் நீங்கும்

நல்லெண்ணெயை தினமும் 2 இல்லது 3 தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் நல்லெண்ணெய் கலந்து பருக்களின் மேல் பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும். நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால், கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல் மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்

ஆயுள் புல்லிங்

உடலை மசாஜ் செய்வதில் நல்லெண்ணெயின் பங்கு முக்கியமானது. உடலுக்கு குளிர்ச்சியும் உள்ளத்திற்கு புத்துணர்வும் தருவதில் நல்லெண்ணெய்க்கு ஈடு இணையில்லை. சூரிய ஒளிக்கதிரினால் ஏற்படும் கொப்புளங்களைப் போக்குவதில் நல்லெண்ணெய் மருந்தாக செயல்படுகிறது. பாக்டீரியாகொல்லி, நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. பாதங்களில் ஏற்படும் பூஞ்சை நோய்களை போக்க வெண்ணீரில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி பாதத்தை கழுவினால் நோய் தீரும்.

ஆயுர்வேதத்தில் ஆயுல்புல்லிங் எனப்படும் மருத்துவமுறை உடலை உற்சாகமாக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரு கரண்டி எண்ணெயை சிறிதளவு வாயில் ஊற்றி நன்றாக நுரை வர கொப்பளித்து துப்பினால் பற்களும் ஈறும் பலப்படும். உடலுக்கும் புத்துணர்ச்சி தரும்.

Some skin care tips for Summer/Hot

வெளியில் தலைகாட்ட முடியாத அளவிற்கு தகிக்கிறது வெப்பம். கோடை தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சருமத்தை பாதுகாக்க சீரகத்தை காய்ச்சி குடிக்கலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் அழகியல் நிபுணர்கள். இதனால் சருமம் மங்காமல் செழுமையடையும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சருமப் பளபளப்பு

கோடை காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சருமம்தான். எனவே சருமத்தை பாதுகாக்க பழச்சாறு, காய்கறிச் சாறு, சூப் மற்றும் தண்ணீர் அதிகம் பருகவேண்டும். இதனால் தோல் வறட்சி தடுக்கப்படுவதோடு
உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் சருமம் பளபளப்பாக மாறும். கோடை காலத்தில் வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்வது சரும நலனை பாதுகாக்கும். தயிர் சாப்பிடுவதை விட மோராக சாப்பிடுவது நல்லது.

கரும்புள்ளிகள் மறைய

கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளி பழச்சாறை முகத்தில் தடவவும்.எண்ணை பசை சருமத்தினரை முகப் பருக்கள் பாடாய் படுத்தும். எனவே எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும். மேலும் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.

அடிக்கடி முகம் கழுவுங்க

ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கபடுவதோடு சருமத்தில் படியும் அழுக்குகள் அகற்றபடும். குறிப்பாக இரவு படுக்க போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.

காரமா சாப்பிட வேண்டாம்

வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும். உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகமாக குடிக்கலாம்.

பெண்களை வாட்டும் வெயில்

கோடை காலத்தில் பெண்களுக்கு அதிகமான பாதிப்பு ஏற்படும். பெரும்பாலும் உடம்பில் வெயில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தலைக்கு குடையும், கண்ணுக்கு கண்ணாடியும், காலுக்கு செருப்பும் அவசியமாகும்.

கழுத்தின் முன்பாகம், அக்குள், தொடை இடுக்கு பகுதிகள், இடுப்பு, மார்பின் அடிப்பாகம், முதுகுபகுதி போன்ற இடங்களில் பெண்களுக்கு அதிகம் வியர்த்து, வேர்க்குரு தோன்றும். இதற்கு சாதம் வடித்த தண்ணீரை அந்த இடங்களில் தடவினால் கொஞ்சம் கொஞ்சமாக மறையும். பாத வெடிப்பு அதிகமாக ஏற்படுவதை தடுக்க வெங்காயத்தை வதக்கி, பின்னர் அதை விழுதுவாக அரைத்து பாதங்களில் தடவி வந்தால் பாத வெடிப்பு படிபடியாக மறையும்.

அதிகமான அளவு வியர்வை வெளியேறுவதைத் தடுத்தால் வேர்க்குருவைக் கட்டுபடுத்தலாம். அதிகமாக வியர்க்கும்போது குளித்தால் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. வியர்வை நின்ற பிறகே குளிக்க வேண்டும். அதிகமாக வியர்க்கும்போது பவுடர் பூச வேண்டாம். நன்றாக கழுவி துடைத்த பிறகே பவுடரை பூச வேண்டும்.

வறண்ட சருமத்தினருக்கு

வறண்ட சருமத்தினர் கோடை காலத்தை எண்ணி அதிகம் கவலை கொள்ள வேண்டாம். ஏனென்றால் கோடை காலத்தில் அதிகம் வியர்க்கும். இதனால் வறண்ட சருமத்தைக் கொண்டவர்களுக்கு நன்மையே தவிர, தீமை இல்லை. ஆனால் வியர்க்கும்போது உடலில் அசுத்தமான துகள்கள் ஒட்டினால் தோல் அலர்ஜி ஏற்படும். அடிக்கடி உடம்பை அடிக்கடி கழுவவேண்டும். பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்பை உடலில் தேய்த்துக் குளிக்க வேண்டும். அதிகமாக உணர்ச்சி வசப்பட வேண்டாம். எக்காரணம் கொண்டும் சிறுநீரை அடக்க வேண்டாம்.

வாழைத்தண்டு உணவு

கோடை காலத்தில் எல்லோருக்குமே உடலில் வியர்வை நாற்றம் ஏற்படும். அதற்கு நிறைய தண்ணீர் குடிக்கலாம். கீரைகள், ஆரஞ்சு பழம், அன்னாசி பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். இவற்றிலுள்ள நார்ச்சத்து திரவ உற்பத்தியைக் குறைக்கும். எரிச்சல் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத்தண்டு, கீரை போன்றவற்றை உண்ணுவது உடம்புக்கு நல்லது.

Home remedies fo Tonque Bites

நமது உடலின் மென்மையான பகுதியில் நாக்கும் ஒன்று. அந்த நாக்கை நாம் சாப்பிடும் போது, பேசும் போது அல்லது தூங்கும் போது தெரியாமல் கடித்துக் கொள்வதுண்டு. இத்தகைய நாக்கு கடி குணமடைய சிறிது நேரம் ஆகும். ஆனால் கடித்தப் பின் ஏற்படும் வலியை மட்டும் தாங்க முடியாது. சில சமயம் நாக்கு கடியால் புண் அல்லது அல்சர் கூட ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய நாக்கு கடியை நாம் வீட்டிலேயே சரிசெய்ய முடியுமென்று மருத்துவர்கள் கூறி, சில வீட்டு மருந்தையும் கூறியுள்ளனர்.
நாக்கு கடியை சரிசெய்ய...
1. நாக்கு கடி என்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது அல்ல. மற்ற உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பை பார்த்தால், இது விரைவில் குணமடைந்துவிடும். எப்படியென்றால், வாயில் சுரக்கும் எச்சிலே எளிதாக அதனை விரைவில் குணப்படுத்திவிடும்.
2. எப்போது நாக்கை கடித்துக் கொண்டு, அதனால் புண் ஏற்பட்டு, இரத்தம் வருகிறதோ, அப்போது அந்த இடத்தில் உடனே ஐஸ் வைத்தால், வலி நின்று, இரத்தம் வருதலும் நின்றுவிடும்.
3. வாயை உப்புத் தண்ணீரால் கொப்பளிக்கலாம். அப்படி வெட்டுபட்ட இடத்தில் உப்பை வைத்தால் சிறிது நேரம் எரியும். ஆனால் அது ஒரு சிறந்த மருந்து. ஏனெனில் உப்பில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் இருப்பதால், அது பாக்டீரியா மற்றும் பிற தொற்றுநோய்கள் வராமலும் தடுக்கும்.
4. உணவு உண்டப்பின், ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், தேனில் உள்ள மருத்துவ குணம் நாக்கு கடியை சரிசெய்யும்.
5. தண்ணீர் குடிக்கலாம். நாக்கு கடி மற்றும் வாய்ப்புண் ஆகியவை இருப்பவர்கள் குளிர்ந்த தண்ணீர் குடித்தால் அது சரியாகிவிடும்.
6. மேலும் நாக்கை கடித்துக் கொண்டு, அதனால் புண் ஏற்பட்டவர்கள் காரமான உணவுகளை உண்ண வேண்டாம். ஏனெனில் காரமான உணவு புண்ணை மேலும் பெரிதாக்குமே தவிர, விரைவில் குணமடைவது கூட தடைபடும்.
இந்த வீட்டு மருந்துகள் எல்லாம் நாக்குப் புண்ணை சரிசெய்யும். கடியானது சற்று ஆழமாக இருந்தால், அது சரியாக சற்று நாட்கள் ஆகும். பொதுவாக அத்தகைய நாக்கு கடி ஒன்று அல்லது இரண்டு வாரத்தில் சரியாகும் என்றும் கூறுகின்றனர் மருத்துவர்கள்.

Home remedies for Allergy

இன்றைய காலகட்டத்தில் அலர்ஜியானது பலருக்கு ஏற்படுகிறது. அது ஏற்படுவதற்கு நமது உடலில் உள்ள திசுக்கள் வழக்கத்திற்கு மாறாக செயல்படுவதால் ஏற்படுவதே ஆகும். அதுமட்டுமல்லாமல் உடலானது மிகவும் உணர்திறன் மிக்கதாகவும், எளிதில் கிருமிகளால் பாதிக்கக்கூடியதாகவும் மாறிவிடுகிறது. அதிலும் எந்த இடத்தில் அலர்ஜியானது ஏற்படும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு அலர்ஜியானது ஏற்படும். இவ்வாறு அலர்ஜி ஏற்படும் போது, அதனை சாராதணமாக விட கூடாது, விடவும் முடியாது. ஏனெனில் அலர்ஜியானது வந்துவிட்டால் ஒரு இடத்தில் நிம்மதியாக உட்காரக் கூட முடியாது. மேலும் இன்றைய காலத்தில் கலரும் வேலைக்காக அடிக்கடி இடமானது மாற வேண்டியிருக்கிறது. ஆகவே அத்தகைய அலர்ஜி எப்படி திடீரென்று வருகிறது, அதற்கான அறிகுறிகள் என்ன, எவ்வாறு அதிலிருந்து குணமாவது என்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
அலர்ஜி எப்படி வரும்?
பொதுவாக அலர்ஜியானது தூசி, பூச்சிக் கடி மற்றும் உணவுப் பொருட்களால் வரும். அதுமட்டுமல்லாமல் புதுமையான சூழ்நிலைகளாலும் வரும். அதிலும் உணவுகளான முட்டை, வேர்கடலை, கடல் உணவுகளான மீன், நண்டு, இறால் மற்றும் பால், சோயா பீன்ஸ், சாக்லேட், கோதுமை போன்றவற்றை உண்பதாலும், தொடர்ச்சியான மன அழுத்தம், உளவியல் ரீதியான காரணிகள், தூசிகள் அதிகம் இருக்கும் இடங்களில் இருப்பது, பூச்சிகள் கடித்து அதனை சாதாரணமாக நினைத்து இருப்பது போன்றவற்றால் அலர்ஜியானது வருகிறது.
அறிகுறிகள்...
கடுமையான தலைவலி, அதிகபடியான காய்ச்சல், மன அழுத்தம், ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி, மூச்சுத்திணறல், மூக்கு ஒழுகுதல், பதட்டம் அடைதல், கண்களைச் சுற்றி கருவளையம் வருதல், ஆங்காங்கு வீக்கங்கள், தேவையில்லாத அரிப்புகள், சருமமானது சிவப்பு நிறத்தில் இருப்பது போன்றவையெல்லாம் இருந்தால் அலர்ஜி இருப்பதற்கான காரணங்களாகும்.
அலர்ஜி போவதற்கான வீட்டு மருந்து...
1. சந்தனப்பவுடருடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு பேஸ்ட் செய்து, அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவினால், சற்று நேரத்தில் அரிப்புகள் போய்விடும். இது ஒரு சிறந்த பலனையும் தரும்.
2. பாதாம் இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து, அரிக்கும் இடங்களில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.
3. எந்த பொருளையும் அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவ விருப்பம் இல்லாதவர்கள், புதினா இலையை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து, பேஸ்ட் செய்து, சிறிது சர்க்கரை கலந்து, தினமும் இரண்டு முறை பருகினால், அரிப்புகள் போய்விடும்.
4. அலர்ஜி வந்தால் எப்போதும் அரிப்புகள் தான் அதிகம் வரும். அதற்கு பப்பாளி விதையை அரைத்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். அதனால் அரிப்புகள் எளிதில் குணமாகிவிடும்.
5. மற்றொரு இயற்கையான வழி என்னவென்று கேட்டால், எலுமிச்சை சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவ வேண்டும்.
6. கசாகசா விதைகளுடன், தண்ணீர் மற்றம் எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து பேஸ்ட் செய்து, அரிக்கும் இடங்களில் தடவினால் உடனே அரிப்புகளானது போய்விடும்.
7. அலர்ஜி போவதற்கு ஒரு எளிமையான வழி என்னவென்றால் வைட்டமின் சி நிறைந்திருக்கும் உணவுப் பொருட்களை உண்ண வேண்டும். மேலும் ஆப்பிள் சாற்றினாலான வினிகரை தண்ணீரில் கலந்து குடித்தாலும் அலர்ஜியானது போய்விடும். அதுமட்டுமல்லாமல் 5 துளிகள் ஆமணக்கெண்ணெயை ஏதேனும் ஒரு கப் பழங்களுடன் அல்லது பழச்சாற்றுடன் கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். அதிலும் சிறந்தது கேரட், பீட்ரூட் மற்றும் வெள்ளரிக்காய் போன்றவற்றை ஜூஸ் செய்து ஒன்றாக கலந்து குடித்தாலும் அலர்ஜி மற்றும் அதனால் வந்த அரிப்பும் பறந்தே போய்விடும்.

Health Benefits of Drumstick

முருங்கைக் காய் உடலுக்கு சிறந்த, ஆரோக்கியத்தைத் தரக்கூடியது. இதில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. இதன் கீரை மிகவும் சுவையாக இருக்கும். அப்படிப்பட்ட முருங்கையை பிடிக்காத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை எனலாம். இது பல மருத்துவ குணங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. இதை ஒரு மூலிகை மரம் என்றும் சொல்லலாம். இந்த முருங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு நன்மைகளை கொண்டுள்ளது. இது உடலின் பல விதமான நோய்களைக் கட்டுப்படுத்தி குணப்படுத்துகிறது.

முருங்கையின் நன்மைகள் :
1. முருங்கை இலையை பொரியல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல், கண்நோய், பித்த மயக்கம் போன்றவை வராது. மேலும் இந்த பொரியலை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும். அப்படி பொரியல் செய்யும் போது அதில் புளி, எலுமிச்சை பழச்சாறு போன்றவற்றை சேர்க்கக் கூடாது.
2. பெண்கள் முருங்கை இலையை சாறு பிழிந்து இரு வேளை குடித்து வந்தால், அடிவயிற்றில் ஏற்படும் வலியும், விலக்குதள்ளிப் போவதால் ஏற்படும் வலியும் குணமாகும்.
3. குழந்தைகளுக்கு முருங்கை இலைச் சாற்றை பிழிந்து 10 மில்லி தினமும் இரு வேளை கொடுத்தால், உடலானது ஊட்டம் பெறும்.
4. முருங்கை பிஞ்சை சமைத்து சாப்பிட்டால் எலும்புருக்கி, சளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லது.
5. மேலும் முருங்கை இலையை மட்டும் போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால், உடல் தளர்ச்சி அடைந்தாலோ, உடல் வலி இருந்தாலோ குணமடையும்.
6. குடற்புண், டைபாய்டு, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், முருங்கைப்பட்டைத் தூள், சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றை பொடி செய்து, வெந்நீரைக் காய்ச்சி, அந்த பொடியைப் போட்டு கலக்கி, மூன்று வேளையும் சாப்பிட்டால், அவை சரியாகும்.
ஆகவே முருங்கையை சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருங்க!!!

Foods that cure Woman's Hormon Problems

தற்போதைய காலத்தில் பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் ஹார்மோன் பிரச்சனை. ஏனெனில் அதிக வேலைச் சுமை, மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற லைப் ஸ்டைல் போன்றவற்றால் உடலில் சுரக்கும் ஹார்மோனின் அளவு சரியாக சுரக்காமல், உடலில் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இவ்வாறு ஹார்மோனானது சரியான அளவு சுரக்காததால் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியிலும் மற்றும் மாதவிடாயின் போதும் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனையை போக்க ஒரு சில உணவுகளை சரியாக உண்டாலே போதுமானது. அது என்னென்ன உணவுகள் என்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
ஹார்மோன் பிரச்சனையை சரிசெய்யும் உணவுகள்...
1. மாதவிடாயின் போது வலிகள் மற்றும் சுளுக்குகள் அடிக்கடி ஏற்படும். அதற்கு காரணம் உடலில் கால்சியம் அளவு குறைவாக இருப்பது. ஆகவே கால்சியம் அதிகம் இருக்கும் உணவுகளை உட்கொண்டால் வலி ஏற்படுவது பாதியாக குறையும். அதிலும் பால், தயிர் மற்றும் வெண்ணெயில் கால்சியம் அதிகமாக இருக்கும்.
2. சிலருக்கு அதிக இரத்தப்போக்கு திடீரென ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். ஆகவே அப்போது இரும்புச் சத்து அதிகமாக உள்ள உணவான சிவப்பு அரிசி, சிக்கன், முட்டை மற்றும் கீரைகளை அதிகமாக உண்டு வந்தால் அதிக இரத்தப் போக்கானது சரியாகிவிடும்.
3. பெண்களுக்கு மாதவிடாயானது முடியும் போதோ அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும் போதோ, மிகவும் சோர்ந்து, உடலானது மிகுந்த வெப்பத்துடன் இருப்பது போல் இருக்கும். அவ்வாறெல்லாம் இல்லாமல் இருக்க, நல்ல ஊட்டச்சத்து உள்ள உணவுகளை உண்ண வேண்டும். மேலும் ஆப்பிள், மாதுளை போன்றவற்றை உண்டால் உடலில் இரத்த சுத்திகரிப்பானது சரியாக நடக்கும்.
4. உருளைக்கிழங்கை அதிகம் சாப்பிட வேண்டும். ஏனெனில் மாதவிடாயினால் ஏற்படும் மனஅழுத்தத்தினால், மூளையானது அதிகமாக உற்பத்தி செய்யும் செரோடோனின் என்ற ஹார்மோனானது பலவீனமடையும். ஆகவே அதனால் உடலில் அதிகமான சோர்வு ஏற்படும். அப்போது உருளைக்கிழங்கை சாப்பிட்டால் அதில் உள்ள டிரிப்தோபன், செரோடோனின் என்ற ஹார்மோனை சரிசெய்யும்.
5. மேலும் அதிகமான காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும். மேலும் பருப்பு வகைகளை அதிகளவு சாப்பிட வேண்டும். இதனால் உடலில் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை வெளியேற்ற உதவும்.
இத்தகைய உணவுகளை சரியாக உண்டு வந்தால், உடலில் ஏற்படும் ஹார்மோன் பிரச்சனையை சரி செய்வதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

Indian foods that reduce FAT

Healthy Brown/Wholemeal Bread