About Me

My photo
I am an IT professional, Nowadays our Lifestyle is changed a lot and of course we are chasing money. In India More than 7 crore people affected by Diabetes, High Cholesterol and infertility due to their Poor Food Habits &amp Lifestyle. This Blog is very useful for youngsters to lead good Lifestyle and be healthy and students to choose career courses.Work hard, but make time for your love, family and friends. Nobody remembers Powerpoint presentations on your Final Day.I believe Life is ours and we only Live our Life.... Thanks for visiting and welcome you to visit again. WHO LOVES GOD ARE SEARCHING GOD, WHO LOVES PEOPLE ARE LIVING AS GOD - SK ( Reach me @ +91 9791139942 to lead Healthy Family Life )

Tuesday 21 August 2012

Natural tips to Cure Headache

கண் திறந்து பார்க்க முடியாத அளவிற்கு சில நேரங்களில் தலைவலி உயிர் போகும். தலைவலிக்கான காரணத்தை கண்டறிவது என்பது அப்போதைக்கு இயலாத காரியம். உடனடியாக என்ன நிவாரணம் கிடைக்கும் என்பதையே மனது தேடும். தலைவலிக்கு தேன் சிறந்த நிவாரணம் தரும் மருந்து என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களின் மூலமும் எளிதில் தலைவலியை போக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தலைவலிக்கு தேன் மிகச்சிறந்த நிவாரணம் தரும் மருந்து. சீன மருத்துவத்தில் தலைவலிக்கு சிகிச்சை அளிக்கும் போது தேன் அதிகம் பயன்படுத்துகின்றனர். வெது வெதுப்பான நீரில் தேன் கலந்து கொடுப்பது சீன மருத்துவர்களின் வழக்கம். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கிறதாம்.
இங்கிலாந்தில் வேதியியல் பிரிவு அறிவியலாளர்கள் ஜான் எம்ஸ்லே என்ற அறிஞர் தலைமையில் தேன் பற்றி சில ஆய்வுகள் மேற்கொண்டனர். அதில் தேனில் பிரக்டோஸ் என்ற வேதிபொருள் உள்ளது. இது குடிபோதையில் உள்ளோருக்கு ஏற்படும் தலைவலி, மூச்சு திணறல் மற்றும் வாந்தி வருதல் போன்ற சிக்கல்களில் இருந்து விடுவிக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். ஆல்கஹால் உட்கொள்வோர் உடலில் அசிட்டால்டிஹைடு என்ற வேதிபொருள் உற்பத்தி ஆகிறது. இதுதான் தலைவலி ஏற்படுவதற்கு காரணமாகிறது. இதனை தேனில் உள்ள பிரக்டோஸ் என்ற வேதிபொருள் அசிட்டிக் அமிலமாக மாற்றுகிறது. பின்னர் அது கார்பன் டை ஆக்சைடாக மாறி சுவாசத்தின் போது எளிதாக வெளியேறுகிறது. அதனால் குடிபோதையால் தலைவலி என முணுமுணுப்பவர்கள் நேரடியாக தேனை எடுத்து கொள்ளலாம்.
ஆல்கஹால் அளவு அதிகமாக காணப்படும் ஜின் போன்றவற்றை உட்கொண்டால் தூங்க செல்வதற்கு முன் ஒரு கப் பால் குடித்தால் நன்மை கிடைக்கும். பொதுவாக ஆல்கஹால் உடலிலுள்ள நீரின் அளவை குறைத்து விடும் இயல்புடையது. அதனால் தூங்க செல்வதற்கு முன் ஒரு கப் நீர் அருந்திவிட்டு படுக்க செல்வதும் நலம் தரும் என கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
தேன் தவிர எலுமிச்சை, புதினா, போன்ற பொருட்களும் தலைவலிக்கு நிவாரணம் தரும் மருந்தாக செயல்படுகின்றன. எலுமிச்சையும், தேனும் கலந்து தண்ணீர் சேர்த்து ஜூஸ் சாப்பிடுவது தலைவலிக்கு சிறந்த மருந்தாக அமையும். எலுமிச்சையை பிழிந்து தலையில் பற்று போட்டால் தலைவலி சிறிதுநேரத்தில் குணமடையும். புதினா சிறந்த இயற்கை மருந்தாக செயல்படுகிறது. புதினா இலையை டீ போட்டு குடித்தால் தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.
வயிறு காலியாக இருந்தாலும் தலைவலி வரும் எனவே சரியான நேரத்திற்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுங்கள். வயிறு நிரம்பினால் தலைவலி சரியாகிவிடும். எதிர்மறை எண்ணங்களும், மன அழுத்தமும் தலைவலியை ஏற்படுத்தும். எனவே நேர்மறையாக எண்ணுங்கள் தலைவலி குணமடையும். அதிகமாக தலைவலித்தால் வெதுவெதுப்பான நீரில் பருத்தி துணியை நனைத்து தலைக்கு ஒத்தடம் கொடுப்பதன் மூலம் தலைவலி குணமடையும்.
தலைவலிக்கு சிறந்த தீர்வு ஓய்வுதான். எதைப்பற்றியும் கவலைப்படாமல் கண்களை மூடி ரிலாக்ஸ் ஆக ஓய்வு எடுங்கள். கட்டை விரலால் தலையை அழுத்தி பிடித்துக் கொண்டிருப்பதன் மூலம் தலைவலி குணமடையும். கழுத்து, தலை என மெதுவாக மசாஜ் செய்வதன் மூலம் தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும்

Tips to Cure Dry Itchy Scalp

தற்போது அனைவருக்கும் இருக்கும் பிரச்சனைகளில் கூந்தல் பற்றிய பிரச்சனைகள் தான் அதிகம் இருக்கிறது. அதிலும் சருமத்தில் ஏற்படும் வறட்சி தான் பெரும் காரணம். இதனால் கூந்தல் உதிர்ந்து, நாளடைவில் வழுக்கையாகிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், இத்தகைய வறட்சி குளிரான நேரத்தில் தான் அதிகம் ஏற்படுகிறது. மேலும் ஏசியில் அதிகம் இருந்தாலும் வறட்சி ஏற்படும். இத்தகைய வறட்சியை போக்க ஒருசில ஈஸியான வழிகள் இருக்கின்றன. அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
* முடியின் மயிர் கால்களை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் மற்றும் அழுக்குகள் அதிகமாக இருந்தாலும், தலையில் அரிப்பு ஏற்படும். ஆகவே அத்தகைய அரிப்புள்ள தலைக்கு pH-யின் அளவு 4.5-5.5-விற்கு இடையில் கலந்திருக்கும் ஷாம்புகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். இதனால் ஸ்கால்ப் வறட்சியடையாமல் இருக்கும்.தலைக்கு ஹேர் டை மற்றும் மற்ற கெமிக்கல்களை பயன்படுத்தினாலும், அரிப்புகள் ஏற்படும். ஆகவே அதனை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
* ஸ்கால்ப் மற்றும் கூந்தல் வறண்டு காணப்படுபவர்கள் எப்போதும் சூடான நீரில் தலையை அலச கூடாது. அதுமட்டுமல்லாமல் ஹேர் ட்ரையரை பயன்படுத்தினாலும், ஸ்கால்ப் வறண்டுவிடும். மேலும் கூந்தலின் முனையில் வெடிப்புகளும் ஏற்படும்.
* வெளியே வெயிலில் செல்லும் போது கூந்தலை துணியால் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டும். சூரிய வெப்பம் தலையில் படுவதால், தலையில் இருக்கும் எண்ணெய் வறண்டுவிடும். ஆகவே துணியால் சுற்றிக் கொண்டு சென்றால், எந்த ஒரு அழுக்கும் தலையை எட்டிக்கூட பார்க்காது.
* பட்டர் ஒரு சிறந்த எண்ணெய் பசை நிறைந்துள்ள பொருள். ஆகவே இத்தகைய பட்டரை தலையில் தடவினால் வறண்ட சருமம் சுத்தமாக போய்விடும். ஆகவே அந்த பட்டரை ஆலிவ் ஆயிலுடன் கலந்து கூந்தலுக்கு தடவினால், ஆரோக்கியமான கூந்தலோடு, வறட்சியற்ற கூந்தலையும் காணலாம்.பொடுகு இருப்பதும் தலையில் அரிப்பு ஏற்படுவதற்கு ஒரு காரணம். ஆகவே அதனை நீக்க வேப்பிலை அல்லது எலுமிச்சை சாற்றை தலையில் பொடுகு உள்ள இடத்தில் தடவி, குளித்தால், பொடுகு போய்விடும்.
* தலையில் பேன்கள் இருந்தால் கூட, அரிப்புகள் ஏற்படும். அத்தகையவற்றை நீக்க புளித்த தயிரை தலைக்கு தடவி ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளித்தால், பேன் போவதோடு, பொடுகும் போய்விடும். பொடுகு போய்விட்டால், பின் அரிப்பு ஏற்படாது.
* வேப்ப எண்ணெயை லாவண்டர் மற்றும் ரோஸ் மேரி எண்ணெயுடன் கலந்து தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்தால், வறட்சி குறைந்து, அரிப்பு நீங்கிவிடும்.
ஆகவே மேற்கூறிய வழிகளில் தலை முடியை பராமரித்து வந்தால், கூந்தல் ஆரோக்கியமாக உதிராமல் வளரும்.

Neck Care Tips

முகம் அழகாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கழுத்து அழகாக இருப்பதும் அவசியம். சிலரது முகம் பளபளப்பாய் டாலடிக்கும். ஆனால் கழுத்தைச் சுற்றி இருக்கும் கருமை மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்திவிடும். கழுத்தின் கருமையைப் போக்க வீட்டிலேயே மருந்திருக்கு என்கின்றனர் நிபுணர்கள். சங்குக் கழுத்தழகை பெற நிபுணர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.
எலுமிச்சையானது இயற்கை பிளீச் ஆக செயல்படுகிறது தினசரி குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக கழுத்தின் கருமை பகுதிகளில் எலுமிச்சை சாற்றினை தடவி ஊறவைக்கவும். பின்னர் குளிக்க கழுத்தின் கருமை படிப்படியாக மறையும்.
முகத்தையும்,கழுத்தையும் அழகாக பளிச் தோற்றத்துடன் மாற்றும் சக்தி பால்பவுடருக்கு உண்டு. ஒரு டீஸ்பூன் பால் பவுடர், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு. அரை டீ ஸ்பூன் பாதம் எண்ணெய் கலந்து கலந்து பசை போல கலக்கவும். இந்த கலவையை முகம், கழுத்து பகுதிகளில் அப்ளை செய்யவும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். வாரம் ஒருமுறை இதுபோல் பேக் போட முகமும், கழுத்தும் பளிச் ஆகும்.
அதேபோல் ஓட்ஸ், யோகர்டு, தக்காளி ஜூஸ் கலந்து பேக் போடவும் இது கழுத்து கருமைக்கு நல்ல பலனை தரும்.
கழுத்து கருமையை போக்குவதில் மஞ்சள்தூள் சிறந்த நிவாரணி. சிறிதளவு மஞ்சள்தூள், சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கழுத்து கருமை பகுதியில் அப்ளை செய்யவும். கழுத்துக் கருமை போகும்.
கழுத்தின் கருமையை போக்குவதில் உருளைக்கிழங்கு சிறந்த பிளீச் ஆக செயல்படுகிறது. உருளைக்கிழங்களை தோல் நீக்கி சீவி எடுத்துக்கொள்ளவும். அதை கழுத்துக் கருமை உள்ள பகுதிகளில் தேய்க்கலாம். பின்னர் அரை மணிநேரம் கழித்து குளிக்க கருமை படிப்படியாய் மறையும். அதேபோல் தக்காளியை நன்றாக மசித்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கழுத்து கருமை பகுதிகளில் அப்ளை செய்யவும். எளிமையான இந்த வைத்தியத்தை தினசரி செய்து வர சில வாரங்களில் கழுத்துக் கருமை சரியாகும்.
ஆரஞ்சு சுளையை எடுத்து அதனுடன் பன்னீர் அல்லது பால் கலந்து அப்ளை செய்யவும். 15 முதல் 20 நிமிடம் ஊறவைத்து கழுவினால் கழுத்துப்பகுதி பளிச் என்று மாறும். இனி கழுத்து கருப்பா இருக்கேன்னு இனி கவலைப்படாதீங்க! நிபுணர்கள் கூறிய இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்க கருப்பு போயே போயிடும்.

Healthy foods to get pregnancy

இன்றைய சூழ்நிலையில் ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து உணர்ந்து இணைவது என்பது அவசரகதியில்தான் நிகழ்கிறது. தம்பரியரிடையேயான தாம்பத்ய உறவும் கூட வெறும் சடங்காகிப் போய்கொண்டிருக்கின்றது. ஆணும் பெண்ணும் இணைவது இனப்பெருக்கத்திற்காக மட்டுமல்ல அதையும் தாண்டி மன ரீதியான மகிழ்ச்சிக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் நிரூபித்துள்ளன. ஆனால் இன்றைக்கு பாலியல் ஆர்வம் என்பது படிப்படியாக குறைந்து வருகிறது. உண்ணும் உணவு, மனஅழுத்தம், உடல்ரீதியாக ஏற்படும் நோய் போன்றவைகளும் பாலியல் உணர்வுகளை பாதிக்கும் காரணிகளாக அமைகின்றன. எந்தெந்த உணவுகளை உட்கொண்டால் மனிதர்களின் பாலியல் உணர்வுகள் அதிகரிக்கும், குறையும் என்று நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.
துத்தநாகம்
பாலியல் உணர்வின் ஹீரோ எனப்படுவது துத்தநாகச் சத்துதான். இந்த சத்துள்ள உணவுகளை உட்கொண்டால் பெண்களுக்கு தாம்பத்ய ஆர்வம் அதிகரிக்கும். ஆண்களுக்கு உயிரணுக்கள் வலிமையாகும். உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும். கடல் சிப்பியில் அதிக அளவு துத்தநாகச் சத்து உள்ளது. இதை உண்ண பிடிக்காதவர்கள் சம்பா அரிசி, பச்சை நிற கீரைகள், முழுக் கோதுமை பிரெட் இவற்றை உட்கொள்ளலாம். இவற்றிலெல்லாம் அதிக அளவு துத்தநாகச் சத்து காணப்படுகிறது.
வைட்டமின்கள்
வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் பாலியல் உணர்வுகள் அதிகரிக்குமாம். ஆட்டு ஈரல், முட்டை, பால் பொருட்கள், கேரட் போன்றவைகளை அளவோடு உட்கொள்ளவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
நாம் உண்ணும் உணவில் தினமும் 500 முதல் 1,000 மில்லி கிராம் வரை வைட்டமின்-சி சத்து உடலில் சேரவேண்டும். இதனால் உயிரணுக்கள் வலிமையடையும். ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெரி, சிட்ரஸ் நிரம்பியுள்ள எலுமிச்சை போன்ற பழங்கள் வைட்டமின்-சி நிறைந்தவை. அவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
செலீனியம் சத்து
உடம்பில் மாங்கனீஸ் குறைந்தால், குழந்தை பெறும் வாய்ப்பும் குறையத் துவங்கும். மாங்கனீஸ் சத்து, உடலின் ஈஸ்ட்ரோஜன் சுரப்புக்கு நல்லது. குறிப்பாக, பெண்களின் தாய்மைபேற்றினை இது ஊக்குவிக்கும். கீரை, முழு கோதுமை, அன்னாசிப் பழம், பீன்ஸ், பட்டாணி, முந்திரி... இவற்றிலெல்லாம் மாங்கனீஸ் சத்து உண்டு அவற்றை உட்கொள்வதன் மூலம் பெண்களின் காதல் உணர்வுகளை அதிகரிக்கச் செய்யலாம்.
‘சொலீனியம்' சத்து பெண்களின் கரு முட்டை வளர்ச்சிக்கும், ஆண்களின் உயிரணு வளர்ச்சிக்கும் நல்லது. அதிக கொழுப்பற்ற இறைச்சி, சம்பா அரிசி, ஓட்ஸ், முட்டை, வால்நட், முழு கோதுமை இவற்றிலெல்லாம் இந்த சொலீனியம் உண்டு.
ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ்
ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் உணவில் அதிக அளவு இருந்தால், தாம்பத்ய வாழ்வின் திருப்தி நிலைக்கு பயன்படும். பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் இவை அதிக அளவில் உண்டு. வெங்காயம், பூண்டு, கேரட், இஞ்சி, காய்ந்த முந்திரி போன்றவை உணவில் இருந்தால் தாம்பத்ய வாழ்க்கை சுகமாகும்.
ஆண்களின் உயிர் அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள், லினோலிக் ஆசிட் நிரம்பிய உணவுகளைச் சாப்பிட்டால் பலன் கிடைக்கும். முந்திரி, சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் ஆயில், சோயா ஆயில் போன்றவற்றில் இது அதிக அளவில் இருக்கிறது.
காபி அதிகம் குடிக்காதீங்க
காலையில் எழுந்து காபி குடிக்காவிட்டால் சிலருக்கு வேலையே ஓடாது. அந்த அளவிற்கு காபிக்கு அடிமையாக கிடப்பார்கள். ஆனால் அதிகம் காபி குடிப்பதால் தாம்பத்ய ஆர்வம் பாதிப்பிற்கு உள்ளாகும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காஃபின் எனப்படும் ரசாயனம் செக்ஸ் ஹார்மோன்களின் சுரப்பினை குறைத்து செக்ஸ் மீதான ஆர்வத்தை காலி செய்து விடுகிறது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். எனவே இளம் தலைமுறையினர் அதிக அளவில் காபி குடிப்பதையும், காஃபின் நிறைந்த பொருட்களை உட்கொள்வதை தவிர்க்கவேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்

Tips to Lose Weight

சமையலுக்கு கடுகு எண்ணெயை பயன்படுத்தினால், அந்த சமையல் நன்கு மணத்தோடு இருப்பதுடன், உடல் எடையும் குறையும். ஏனெனில் இதில் மற்ற எண்ணெயை விட குறைந்த அளவில் கொழுப்புகள் உள்ளன. மேலும் இதில் ஃபேட்டி ஆசிட் (fatty acid), இரூசிக் ஆசிட் (erucic acid) மற்றும் லினோலிக் ஆசிட் (linoleic acid) போன்றவை இருப்பதோடு, இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கலோரிகளை கரைத்து உடல் எடையை குறைத்துவிடும்.அதுமட்டுமல்லாமல் இந்த எண்ணெயை வைத்து, உடலுக்கு மசாஜ் செய்தால் உடல் வலி குறைந்துவிடும். இது உடலில் இருக்கும் கொழுப்புகளை அகற்றுவதால், இதயம் ஆரோக்கியத்துடன் இருக்கும். இந்த எண்ணெயை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்பது இல்லை, சமையலில் தாளிக்க பயன்படுத்தும் கடுகை கூட சாப்பிடலாம். இந்த கடுகிலும் குறைந்த கார்போஹைட்ரேட், நார்ச்சத்துக்கள், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்றவையும் உள்ளன. ஆகவே கடுகும் உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது.
அனைத்து சமையலிலும் தாளிக்க பயன்படும் கறிவேப்பிலை, மிகவும் சிறந்த மருத்துவகுணம் வாய்ந்த உடல் பருமனை குறைக்கும் ஒரு மூலிகை எனலாம். ஆனால் இந்த இலையை உண்ணும் போது மட்டும் அனைவரும், தூக்கிப் போட்டு விடுவார்கள். ஆனால் அந்த இலை உடல் எடையை மட்டும் குறைப்பதோடு, உடலில் செரிமானத்தை சரியாக நடத்தி, உடலை நன்கு சுத்தம் செய்யும். இவ்வாறு சுத்தம் செய்யும் போது, உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளும் அகன்றுவிடும்.வேண்டுமென்றால் இதனை மோருடன் கிள்ளிப் போட்டு குடித்தால் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் அதிக எடை இருப்பவர்கள், தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலையை வெறும் வாயில் உண்டால் நல்லது. இல்லையென்றால், அதனை அரைத்து தண்ணீரில் கரைத்து குடிக்க வேண்டும். ஆகவே இத்தகைய சிறப்புகளை வைத்துள்ள கறிவேப்பிலையை இனிமேல் தூக்கிப்போடாமல், சாப்பிடத் தொடங்குங்கள், உடல் எடை விரைவில் குறைந்துவிடும்

Active Sex Life Keeps you Young and Slim

ஓய்வற்ற பணிச்சூழல், அடிக்கடி வெளியூர் பயணம் செல்வது என தம்பதியரிடையேயான பிஸியான சூழ்நிலை அவர்களின் தாம்பத்ய வாழ்க்கையில் இடைவெளியை ஏற்படுத்திவிடும். சில தின இடைவெளி என்றால் பராவாயில்லை. அதுவே வாரக்கணக்கில், ஏன் மாதக்கணக்கில் கூட சில தம்பதியர் இணையாமல் இருப்பார்கள். இதனால் அவர்களுக்கு இடையே பிணைப்புகள் இன்றி இடைவெளிகள் அதிகரிக்கத் தொடங்கிவிடும். இடைவெளியை குறைத்து இணக்கத்தை அதிகரிக்க என்ன செய்யவேண்டும் என்பதை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.
வேலை வேலை என்று அலைந்து விட்டு உங்களவர் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா? அவரை வசத்திற்கு கொண்டுவரவேண்டுமா? சில டிரிக்குகளை செய்துதான் ஆகவேண்டும். அறைக்குள் உங்களவர் இருக்கும் நேரம் பார்த்து உடை மாற்றுங்களேன். அந்த சந்தர்ப்பம் அனைவருக்கும் வாய்க்காது. உங்களின் நளினமான உடல் அமைப்பை பார்த்து உங்களவருக்கு கிளர்ச்சி அதிகரிக்கும்.

வாசனையும் மயங்கலாம்
மனதை மயக்கும் வாசனையான பெர்ப்யூம் உபயோகியுங்களேன். பெர்ப்யூம் பிடிக்காதவர்கள் மல்லிகைப்பூவை சூடி உங்களவரின் முன் அப்படியும், இப்படியும் நடக்கலாம். இந்த வாசனைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆணோ, பெண்ணோ மனதிற்கு இதம் தரும் வாசனைக்கு மயங்கித்தான் ஆகவேண்டும்.

கவர்ச்சிக்கு மாறுங்கள்
காலை நேரத்திலும், வீட்டுச் சூழ்நிலையிலும் இழுத்து போர்த்திய உடையுடன் இருக்கும் நீங்கள் உங்கள் படுக்கை அறையிலாவது கொஞ்சம் உடைகளுக்கு விடை கொடுக்கலாம். இருவருமே கவர்ச்சிகரமான உடைக்கு மாறுங்கள். அதுவே உங்கள் இருவரின் இடைவெளியை குறைக்கும் மிகப்பெரிய ஆயுதம். கவர்ச்சிகரமான படங்களையும், வீடியோக்களையும், அனைவரின் முன்னிலையில் பார்க்க முடியாது. ஆனால் அந்தரங்கத்தில் அதை பார்த்து ரசிக்கலாம். அதன் மூலம் உங்களின் உணர்வுகள் தூண்டப்படலாம்.

செக்ஸ்..வெறும் காமப் பசிக்கான தீனி மட்டுமல்ல, நமது ஒட்டுமொத்த உடலையும், மனதையும் ஆரோக்கியமாக, வைத்திருக்க உதவும் ஒரு மருந்துமாகும். ஆரோக்கியமான முறையில், சீரான செக்ஸ் உறவு வைத்திருப்போரை அவ்வளவு சீக்கிரம் மனப் பிரச்சினை, மன அழுத்தம், நோய்கள் அண்டாது என்கிறார்கள் டாக்டர்கள்.
மேலும் செக்ஸில் ஆர்வத்துடன், தொடர்ச்சியாக ஈடுபடுவோருக்கு தோல் வியாதிகள் அவ்வளவு சீக்கிரம் வராதாம், மாறாக தோல் பளபளவென்று மின்னும் என்கிறார்கள்.
செக்ஸ் நமது உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியமானது. நமது உடலைப் பொலிவோடு வைத்திருக்க மட்டும் உதவாமல், இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ளவும் செக்ஸ் கை கொடுக்கிறது. ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கையைக் கொண்டவர்களுக்கு என்னென்ன நன்மைகள் நடக்கிறது என்பது குறித்த ஒரு சின்ன ரவுண்டப்...இதயத் துடிப்பை சீராக வைத்திருக்கிறதாம் செக்ஸ் உறவு. ரத்த ஓட்டம் சீராக இருக்குமாம். இதயத்திற்குப் போகும் ரத்தமும் சீராக இருக்குமாம். மேலும் இதய நோய்களை விரட்டவும் செக்ஸ் உதவுகிறதாம். காதல் வயப்படுகிறவர்களுக்கும், காமத்தை ஆரோக்கியமாக மேற்கொள்கிறவர்களுக்கும் இதயநோய்கள் அண்டாது என்று அடித்துக் கூறுகிறார்கள் டாக்டர்கள்.
30 முதல் 50 வயது வரை கொண்டவர்கள் ரெகுலராக உடலுறவு வைத்து வந்தால் இதய நோய்களைத் தள்ளிப் போட முடியுமாம்.
-  உடலுறவு குறைபாட்டையும் தீர்த்து வைக்கும் அருமருந்தாக செக்ஸ் உள்ளது. வாரத்திற்கு குறைந்தது 2 முறையாவது உறவு வைத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டால், எழுச்சிக் குறைபாட்டை விரட்டி விடலாமாம். சிலர் இதற்கு மேற்பட்ட நாட்களும் கூட உறவு வைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அவர்க்ளுக்கு எழுச்சிக் குறைபாடே இல்லாமல், எப்போதும் எழுச்சியுடன் இருக்க உதவுகிறதாம் செக்ஸ்.
- மன அழுத்தம், ஓவராக வாட்டுகிறதா... எதையாவது நினைத்துக் குழப்பிக் கொள்கிறீர்களா, எப்போது பார்த்தாலும் சோர்வாக இருக்கிறதா... பேசாமல் உடல் உறவுக்குப் போய் விடுங்கள், அதுதான் ஒரே நிவாரணம் என்பது நிபுணர்களின் வாதமாகும். நமது உடலை கிட்டத்தட்ட புரட்டிப் போட்டு புத்துணர்ச்சியுடன் திகழ வைக்கிறதாம் செக்ஸ் உறவு. மன அழுத்தம், மனக் குழப்பம் உள்ளிட்டவற்றை தூக்கி வெளியே போட்டு நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்கிறதாம் செக்ஸ்.
- கலோரிகளைக் காலி செய்யவும் செக்ஸ் உறவு உதவுகிறது. தினசரி நாம் செய்யும் செக்ஸ் வேலைகளால், நமது உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகள் காலியாகி விடுகின்றன. தினசரி அரை மணி நேரம் செக்ஸில் ஈடுபட்டாலே அது நல்ல உடற்பயிற்சியாக இருக்கிறதாம்.
- உடல் எடை கூடி விடாமல் ஸ்லிம்மாக இருக்கவும் செக்ஸ் உதவுகிறது. உடம்பில் எடை கூடி விட்டது, நிறம் சற்று மங்கலாகி விட்டதாக உணர்ந்தால் அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதை தொடங்குங்கள். இதன் மூலம் உடல் எடை குறைவதோடு, தோலிலும் ஒரு விதி மினுமினுப்பபைப் பார்க்க முடியுமாம்.
- என்றும் இளமை என்ற பெருமையையும் நமக்கு செக்ஸ் தேடித் தருகிறது. செக்ஸ் உணர்வுகள் எப்போதெல்லாம் நமது உடலில் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் நமக்குள் இளமை உணர்வுகளும் கூடவே தோன்றுகின்றன. விரும்பிய முறையில் செக்ஸ் உறவை வைத்துக் கொண்டால் என்றும் இளமையாக, இளமைத் துள்ளலுடன் திகழ முடியுமாம்.
மொத்தத்தில் செக்ஸ் வெறும் காம இச்சைக்கான விஷயம் மட்டுமல்ல, அதையும் தாண்டிப் புனிதமானதும் கூட....!

Medicinal Benefits of Sathavari (Thanneer vittan)

ஹார்மோன் பிரச்சினைகளினால் பெண்களுக்கு உடல்பருமன், மாதவிலக்கில் சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சினைகளை தீர்க்கும் அருமருந்தாக திகழ்கிறது சதாவரி எனப்படும் தண்ணீர் விட்டான் செடி. இதனை உட்கொண்டால் பெண்களின் கருப்பையை பலமாக்குகிறது. கர்ப்பகாலத்தில் பெண்களின் ஹார்மோன்களை சரியான அளவில் சுரக்கச் செய்கின்றது என்கின்றனர் சித்த மருத்துவர்கள். தண்ணீர் விட்டான் செடியின் மருத்துவ குணங்களையும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
தண்ணீர் விட்டான் எனப்படும் மூலிகை செடியானது சதாவரி, சல்லகட்டா, சதாவல்லி, சதாவேரி, சதாமூலம், சதமுலை, நீர்வாளி, நாராயணி, சீக்குவை என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இயற்கையான சூழ்நிலையில் காடுகளில் கொடிகளாக வளரும் இது அடர்த்தியான பச்சை நிறத்தில் இருக்கும்இதன் வேர்கள் கிழங்குகள் போன்று சதைப்பற்றும் நீர்த்தன்மையும் கொண்டு இருக்கும். உலர்ந்த நிலையில் தண்ணீர்விட்டான் வேர் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இதன் இலைகள் மற்றும் வேர்கள் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன.
ஆண்மை அதிகரிக்கும்
குளிர்ச்சித் தன்மையும் இனிப்புச் சுவையும்கொண்ட தண்ணீர்விட்டான் வேர்கள், உடலைப் பலமாக்கவும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யவும் உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றவும் அருமருந்தாகவும் பயன்படுகிறது.
பசுமையான தண்ணீர்விட்டான் வேர்களை நீரில் நன்றாக அலசிச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். சுத்தம் செய்த வேர்களை நீர்த்தன்மை போக வெயிலில் உலர்த்தி எடுத்து நன்கு இடித்துத் தூளாக்கிக்கொள்ள வேண்டும். தண்ணீர் விட்டான் வேர்த் தூள் ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதனைப் பசுவின் நெய்யோடு சேர்த்து நாள் ஒன்றுக்கு காலை, மாலை என இரு வேளைகள் உட்கொண்டு வரவேண்டும். இதனால், சோர்வு நீங்கி உடல் நன்கு பலம் பெறும்.
சுத்தம் செய்து உலர்த்தி இடித்துப் பொடித்த தண்ணீர்விட்டான் வேர்த் தூளை தினமும் காலை, மாலை இரு வேளை ஒரு ஸ்பூன் அளவு உட்கொண்டு ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பால் குடிக்க வேண்டும். 30 நாட்கள் வரை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். இதனால், இளமை மிடுக்கு உண்டாவதோடு ஆண்மை பெருகும்.
உடலுக்கு குளிர்ச்சி தரும்
கால்களில் உண்டாகும் எரிச்சலைக் கட்டுப்படுத்த தண்ணீர்விட்டான் வேர்ச்சாறு எடுத்து தினமும் காலையிலும், இரவில் படுக்கைக்குப் போகும் முன்பும், கால்களிலும் பாதங்களிலும் நன்கு பூச வேண்டும். தொடர்ந்து பூசிவந்தால் கால் எரிச்சல் கட்டுப்படும்.
பெண்களுக்கு மருந்து
தண்ணீர் விட்டான் வேரின் சாறு நான்கு ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் இரண்டு ஸ்பூன் சர்க்கரை கலந்து உட்கொள்ள வேண்டும். இதனை நாள் ஒன்றுக்கு காலை, மதியம், மாலை என மூன்று வேளைகள் ஐந்து நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும். இதனால் பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் அதிகமான ரத்தப்போக்குக் கட்டுப்படும். தாய்மையடைவதில் சிக்கல்கள் ஏற்பட்டாலும் அது கட்டுப்படுத்தப்படும். மெனோபாஸ் பருவத்தில் ஈஸ்டோரோஜன் குறைவாக சுரப்பதால் அதிக அளவில் மன அழுத்தம், டென்சன் போன்றவை ஏற்படும். இதனை தவிர்க்க தண்ணீர் விட்டான் வேரை சாறு எடுத்து 5 நாட்களுக்கு மூன்று வேளை உட்கொண்டால் ஈஸ்ட்ரோஜன் அளவு சரியாக சுரக்கும்

Athi Fruits (Fig Fruits) helps to prevent Breast Cancer

அத்திப்பழம் ஆரோக்கியமான அழகை தரக்கூடிய ஊட்டச்சத்து மிக்க பழம் என்று உணவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்திப்பழத்தைத் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு மெனோபாஸ் பருவத்தில் பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பழத்தில் உள்ள பென்சால்டைஹைடு என்ற இரசாயனப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களுக்கு எதிராகப் பணிபுரியக்கூடியது.
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடல்பருமனை கட்டுப்படுத்துகிறது. அத்திப்பழத்தில் வைட்டமின் பி, கே ஆகியவை அடங்கியுள்ளன. இது ஆன்டி ஆக்ஸிடென்ட் அடங்கியுள்ளது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு போன்றவை காணப்படுகின்றன
அத்திப்பழம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது இதற்குக் காரணம் அதில் உள்ள பொட்டாசிய சத்துதான். பரபரப்பான இன்றைய சூழ்நிலையில் சமைத்து உண்பதை விட ரெடி மேட் உணவு வாழ்க்கைக்கு பெரும்பாலேனோர் மாறிவருகின்றனர். டின்களில் பதப்படுத்தப்பட்ட பொருட்கள், வறுத்த பொரித்த உணவுகள், துரித உணவுகள் இவற்றை அதிகம் உண்ண தொடங்கிவிட்டனர். இதில் அதிக அளவில் சோடியம் அடங்கியுள்ளது. இதுவே உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே அத்திப்பழத்தை உட்கொள்வதன் மூலம் உயர் ரத்த அழுத்த நோயை கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
இதில் உள்ள இரும்புச்சத்து, இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. அதேபோல் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் எலும்புத் தேய்மானத்தையும் தடுக்கிறது. இப்பழத்தில் காணப்படும் பொட்டாசியம், சிறுநீரில் ஏற்படக்கூடிய கால்சிய இழப்பைக் குறைக்க உதவுகிறது. எனவே எலும்புகளை வலுவாக்க இருவிதங்களில் செயல் புரிகிறது அத்திப்பழம்.
இதில் உள்ள ஆக்ஸலேட் ரசாயனம் சிறுநீரக கல் ஏற்படாமல் தடுக்கிறது. அத்தி மர இலைகளைச் சாப்பிட்டு வந்தால் இன்சுலின் சுரப்பு சரியாவதோடு நீரிழிவு நோயில் இருந்து விடுபடலாம். இதயநோய் ஏற்படாமல் தடுக்கிறது மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. நீரில் கரையக்கூடிய மற்றும் கரையாது நார்ப்பொருள் அத்தியில் காணப்படுவதால் மலச்சிக்கல் பிரச்னைக்கும் தீர்வாக உள்ளது.

Home Remedies for Baby's Cough

மழைக்காலம் வந்தாலே சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, காய்ச்சல் தொந்தரவு ஏற்படும். திடீரென்று ஏற்படும் பருவநிலை மாற்றத்தினால் குழந்தைகள்தான் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மூக்கில் தண்ணீர் வடிவதால் முகமெல்லாம் சிவந்து எரிச்சலடைவார்கள். இந்த தொந்தரவுகளை நீக்குவதற்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே மருந்துகளை கொடுக்கலாம் என்கின்றனர் குழந்தைநல நிபுணர்கள்.
சளி தொந்தரவு ஏற்பட்டாலே குழந்தைகளுக்கு மூக்கு அடைத்துக் கொள்ளும். ஒரு துண்டு சுக்கு எடுத்து தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலையிலும், மாலையிலும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் மூக்கடைப்பு விரைவில் நீங்கும். துளசிச்சாறு, இஞ்சி, தேன் சம அளவு கலந்து குடிக்கத் தரலாம் ஜலதோஷம் நீங்கும். அதேபோல் மூலிகை டீ குடிக்கக் கொடுக்கலாம்.
டீ போடும்போது இஞ்சியைத் தூளாக்கி போட்டுக் கொதிக்க வைத்து குடித்தால் ஜலதோசம் சரியாகும்.

பட்டை, கிராம்பு, பெரிய ஏலக்காய், இஞ்சி, வெற்றிலை ஆகியவற்றை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதில் பனங்கற்கண்டு கலந்து குடிக்கத் தரலாம். கலந்தோ குடித்தால் சளித்தொல்லை நீங்கும்.
குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டிக்கொண்டு இருமல் வந்தால் ஓமவள்ளி, வெற்றிலை, துளசி, இஞ்சி இவற்றின் சாறு எடுத்து தேன் கலந்து குடிக்கத் தரலாம். இதனால் மார்பில் கட்டி இருக்கும் சளி பிரிந்து வெளிவரும். குழந்தைகளுக்கு நெஞ்சுச்சளி அதிகம் இருந்தால் தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

ஒரு சில குழந்தைகள் இரவு நேரங்களில் வறட்டு இருமல் இருமி தூங்காமல் முழித்துக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு கற்பூரவல்லி இலையை அரைத்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு குடிக்கத் தரலாம் நல்ல பலன் உண்டாகும். மேலும் காசநோய், வாதக் கடுப்பு போன்ற நோய்களுக்கும் இதன் சாறு மிகவும் நல்லதாகும்.
வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும். வெந்தயக் கீரையை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொண்டால் சளி சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். இரும்புச் சத்து இதில் ஏராளமாக உள்ளது.

Home remedies to have Healthy Delivery

கடந்த ஐந்து ஆண்டுகளை விட தற்போது சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்கிறது ஒரு புள்ளிவிபரம். இதற்குக் காரணம் சுகப்பிரசவத்தை விட சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணம் தீவிரமடைந்து வருவதே காரணம்.
பிரசவ வலி என்பது ஒவ்வொரு பெண்ணும் உணரவேண்டிய ஒன்று. இது பெண்ணிற்கு ஏற்படும் உச்சக்கட்டவலி. மாதவிடாய் காலத்தில் வலிப்பதைப் போல இல்லாமல் அதீத வலியுடன் உயிர்போய் உயிர் வரும். அதனால்தான் பிரசவத்தை மறுஜென்மம் என்கின்றனர். இந்த வலிகளை பொறுக்க முடியாமல் அஞ்சியே பெரும்பாலான பெண்கள் சிசேரியன் பிரசவத்தை பிரும்புகின்றனர்.
பிரசவவலி என்பது அதிகபட்சம் 12 மணிநேரம் தான், அதனை பொறுத்துக்கொண்டால் ஆண்டுமுழுவதும் மகிழ்ச்சியாய் நடமாடலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் வலிக்கு பயந்து சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்கள் அதற்கான பின் விளைவுகளை அனுபவிக்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.சிசேரியன் பிரசவத்தை தவிர்க்க என்ன செய்யலாம் என்று நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
கர்ப்ப காலத்தில் சிலருக்கு கை, கால் வீக்கம் வருவது இயல்புதான். இவர்கள் நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி சாப்பிடலாம். ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு எடுத்து அதை சட்டியில் வறுத்து வெடிக்கும் போது தண்ணீர் விட்டு காய்ச்சி குடிக்கலாம் இது கால் வீக்கத்தை குறைக்கும்.
கர்ப்பிணிகள் தங்கள் கர்ப்பகாலத்தில் உடலுக்கு குடைச்சல் தரும் வாய்வு உணவுப் பொருட்களை உண்ணக்கூடாது. முக்கியமாக வாழைக்காய், உருளைக்கிழங்கு, இறால்மீன் போன்றவைகளை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்
மூன்றாவது மாதம் தொடங்கி பிரசவ காலம் வரை வெந்தையக்கஞ்சி சாப்பிடுவது சுகப்பிரசவத்திற்கு வலி வகுக்கும். 5 வது மாதத்தில் இருந்து ஒரு டம்ளர் அரிசி கொதி நீர் எடுத்து அதில் சிறிதளவு வெண்ணெய் கலந்து மதியம் நேரத்தில் சாப்பிடலாம். கர்ப்பகாலம் முதல் பிரசவகாலம் வரைக்கும் சின்னவெங்காயம், சீரகம் சேர்த்து முருங்கைக் கீரை சூப் வைத்து சாப்பிடலாம் இதனால் பிரசவம் சுலபமாகும்.
பிரசவ நாள் நெருங்கும் சமயத்தில் சிலருக்கு அடிக்கடி வயிறு வலி வரும். அப்பொழுது வெற்றிலை, ஓமம், பூண்டு சேர்த்த கசாயம் வைத்து சாப்பிடலாம். சாதாரண வலி என்றால் நின்றுவிடும். அதே பிரசவ வலி என்றால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு என்கின்றனர் நிபுணர்கள்.

Home Remedies for Arthritis

வயதானவர்கள் மட்டுமல்லாது இளைய தலைமுறையினரையும் மூட்டு வலி வாட்டி வதைக்கிறது. இதற்குக் காரணம் ஓய்வற்ற பணிச்சூழல்தான். 50 வயதிற்கு மேல் வரவேண்டிய மூட்டுவலி பிரச்சினை இன்றைக்கு 30 வயதிற்கு மேலேயே எட்டிப்பார்க்கிறது. இதனை தவிர்க்க வீட்டில் உள்ள பொருட்களைக்கொண்டு நிவாரணம் பெறலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
குளிர் காலத்தில் மணிக்கட்டு, கை விரல்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. மணிக்கட்டு, விரல்களுக்கு அதிகம் வேலை கொடுப்பது, காயம் காரணமாக வலி ஏற்படலாம். சாதாரண மூட்டு பிரச்னைகூட பனிக்காலத்தில் அதிகரிக்கும். வலிகளையும் ஏற்படுத்தும். அதற்கான பாதுகாப்பு முறை மூலம் பனிக்கால மூட்டு வலியை தவிர்க்க முடியும்.
கால்களில் தசைப்பிடிப்பு, தசைகள் எலும்புகளு டன் இணையும் பகுதிகளில் தொடு வலி, தலைவலி மற்றும் இடுப்பு வலியும் ஏற்பட வாய்ப்புள்ளது மன அழுத்தம் மற்றும் உடல் அழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகளவில் வருகிறது. ஆண்களைவிட பெண்களையே அதிகம் தாக்குகிறது. இவர்கள் அதிக பதற்றத்தை விட்டு வேலைகளை நிதானமாக செய்யலாம். ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்வதை தவிர்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல் போன்ற பயிற்சிகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றலாம். வயிற்று தசைகளுக்கு அவ்வப்போது பயிற்சி கொடுக்கலாம்.
பனிக்காலத்தில் உடலின் சூடு குறைவதால் ரத்தம் உறையும் பிரச்னை இருக்கும். இதனால் மூட்டு, குதிகால் மற்றும் முதுகுத்தண்டு ஆகியவற்றில் வலி ஏற்படும். குளிரில் காலுக்கு ரத்த ஓட்டம் குறைவதாலும் குதிகால் வலி ஏற்படும். மூட்டுவலியை குறைக்க நீர்ச்சத்து அதிகம் உள்ள புடலங்காய், பீர்க்கன், சுரைக்காய் உள் ளிட்ட காய்கறிகள் சேர்த்துக் கொள்ளலாம். தினமும் கட்டாயம் ஒரு பழம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கால் பகுதியை கதகதப்பாக வைத்துக் கொண்டால் ரத்தம் உறைவதால் ஏற்படும் வலியைத் தடுக்கலாம். அடிக்கடி சிறுநீர் கழித்தாலும் தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும். தாகத்தை குறைப்பதற்கு குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்கவேண்டும் கீரை வகை கள், பேரீச்சை, பால் மற்றும் பால் பொ ருட்கள், உலர் பழங்கள், கொட்டை வகைகள், மீன் மற்றும் முழு தானியங்கள் சாப்பிடுவதன் மூலம் மூட்டுவலி பிரச்சினையை தவிர்க்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
திராட்சைப் பழத்தில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடென்டுகள் காணப்படுகின்றன. வலி ஏற்படும் போது திராட்சை ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் வலி கட்டுப்படுவதோடு நிவாரணம் கிடைக்கும்.
சித்தரத்தை, அமுக்காரா, சுக்கு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் அளவு பொடியை காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டால் மூட்டு வலி மற்றும் வாத நோய்கள் குணமாகும்.
முடக்கத்தானும், பிரண்டையும் மூட்டுவலிக்கு நிவாரணம் தரக்கூடியவை. பிரண்டைக்கீரை, முடக்கத்தான் கீரை மற்றும் சீரகம் சேர்த்து தலா 10 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாகும்.
குப்பை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அதிகப்படியான உடல் எடை குறையும். குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் மூட்டு வலிகள் குணமாகும். பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைத் தடுக்கலாம்.