About Me

My photo
I am an IT professional, Nowadays our Lifestyle is changed a lot and of course we are chasing money. In India More than 7 crore people affected by Diabetes, High Cholesterol and infertility due to their Poor Food Habits &amp Lifestyle. This Blog is very useful for youngsters to lead good Lifestyle and be healthy and students to choose career courses.Work hard, but make time for your love, family and friends. Nobody remembers Powerpoint presentations on your Final Day.I believe Life is ours and we only Live our Life.... Thanks for visiting and welcome you to visit again. WHO LOVES GOD ARE SEARCHING GOD, WHO LOVES PEOPLE ARE LIVING AS GOD - SK ( Reach me @ +91 9791139942 to lead Healthy Family Life )

Friday 16 November 2012

Meditation helps to protect from heart disease

தினசரி இரண்டுமுறை மந்திரம் ஜெபித்து மெடிடேசன் செய்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் தடுக்கப்படுகிறது என்ற ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மந்திரத்தை உச்சரித்தபடி தியானம், மெடிடேசன் செய்வது முனிவர்கள், சித்தர்களின் நடைமுறை. இந்தமுறைப்படி மெடிடேசன் செய்தால் இதயநோய், பக்கவாதம் ஏற்படாது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
தினசரி இருவேளை இருபது நிமிடங்கள் வரை மெடிடேசன் செய்பவர்களுக்கு 48 சதவிகிதம் வரை மாரடைப்பு, பக்கவாதம் மூலம் மரணம் சம்பவிக்கும் வாய்ப்பு குறைகறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.மெடிடேசன் மூலம் அதிகம் கோபப்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் ரத்தக் கொதிப்பு, மன அழுத்தம் ஏற்படுவதும் கட்டுப்படுத்தப்படுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

59 வயதுடைய 201 நபர்கள் இருபிரிவாக பிரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் ஒரு பிரிவினரின் வாழ்க்கை முறையை மாற்றும் உடற்பயிற்சி உணவு வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு மது மற்றும் புகை பிடிப்பதை நிறுத்திவிட்டு மெடிடேசன் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர். 32 வகுப்புகளுக்குப் பின்னர் அவர்களின் பிஎம்ஐ பரிசோதிக்கப்பட்டது.இருபிரிவினரையும் பரிசோதித்ததில் உடற்பயிற்சி டயட்டில் இருந்தவர்களுக்கு உடல் எடை குறைந்திருந்தது. தினசரி மெடிடேசன் செய்தவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவாக இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர், மெடிடேசன் மூலம் உடலும், மனமும் இணைந்து செயலாற்றுகிறது. உடலின் செயல்பாட்டை மனம் கட்டுப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

எனவே இதயநோயாளிகளுக்கு மெடிடேசன் முறையை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம் என்று ஆய்வாளர்க கூறியுள்ளனர். இந்த ஆய்வு முடிவு இதயநோய் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

Easy tips to reduce cholestral


கொலஸ்ட்ரால் அதிகம் இருக்க? அப்ப இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க...

உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்களில் ஒன்று தான் கொலஸ்ட்ரால். இந்த கொலஸ்ட்ரால் உடலில் அதிகம் இருந்தால், இதயத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். அதிலும் இந்த கொலஸ்ட்ரால் உடலில் அதிகம் ஏறுவதற்கு காரணம், உண்ணும் உணவுகள் தான். எப்படியெனில் வெளியே எங்கேனும் சென்றால், உடல் நலத்தில் அக்கரை இல்லாமல் சுவைக்காக கடைகளில் விற்கும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை வாங்கி சாப்பிடுகிறோம். இதனால் கொலஸ்ட்ரால் அதிகமாகி, இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்திற்கு போதிய இரத்தம் செல்லாமல் இருப்பதால், மாரடைப்பு ஏற்படுகிறது.
அதிலும் இந்த பிரச்சனை இளம் வயதிலிருந்தே உண்ணும் உணவினாலும் ஏற்படும். ஏனெனில் அப்போது உணவுக்கட்டுப்பாடு எதுவுமின்றி, கண்டதை அதிகம் சாப்பிடுவோம். இது பிற்காலத்தில் கொலஸ்ட்ராலை அதிகரித்து, தேவையற்ற நோய்களை வரவழைத்துவிடும்.
எனவே, இத்தகைய பிரச்சனைகளை தடுக்க எந்தவிதமான உணவுகளை சாப்பிட்டால், சரியாகும் என்று ஒரு சில உணவுகளை பட்டியலிட்டுள்ளோம். அவற்றை என்னவென்று படித்து பார்த்து, அந்த உணவுகளை உண்டு, உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள்.

1.ரெட் ஒயின்
அனைவருக்கும் ரெட் ஒயினின் நன்மைகளைப் பற்றி நன்கு தெரியும். அதுவும் ரெட் ஒயின் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும். ஏனெனில் அதில் உள்ள நார்ச்சத்தான டெம்ப்ரானில்லா (tempranillo) என்னும் பொருள், உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது. ஆகவே இதனை அளவுக்கு அதிகமாக பருகாமல் அளவோடு சாப்பிட்டால் நல்லது.

2.பாதாம்
பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் ஃப்ளேவனாய்டு அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து, இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பை தடுத்துவிடும்

3.ஓட்ஸ்
ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்தான பீட்டா-க்ளுக்கான் உள்ளது. இது உடலானது கொலஸ்ட்ராலை உறிஞ்சாமல் பாதுகாக்கும். ஆகவே தினமும் காலையில் ஓட்ஸை சாப்பிட்டால், உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகாமல், உடல் ஆரோக்கியமாக இருக்கும்

4.அவோகேடோ
அவோகேடோவில் கொலஸ்ட்ராலை உடலில் இருந்து குறைக்கும் பொருள் அதிகம் உள்ளது. ஏனெனில் இதில் பீட்டா-சிட்டோஸ்டெரால் உள்ளது. இது உடலில் இருந்து குறைந்தது 15 சதவீத கொலஸ்ட்ராலை குறைத்துவிடும்

5.ஆலிவ் ஆயில்
இதயம் ஆரோக்கியத்திற்கு ஆலிவ் ஆயில் மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளது. அது உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்

6.ஆப்பிள்
ஆப்பிளில் கொலஸ்ட்ராலை கரைக்கும் பொருளான பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் ஒன்று சாப்பிட்டு வர, உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும்

7.ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்
மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இது உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை குறைப்பதோடு, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை ஊக்கப்படுத்தும். ஆகவே வாரத்திற்கு இரண்டு முறை சாலமன் அல்லது கானாங்கெளுத்தி மீனை வாங்கி சமைத்து சாப்பிட்டால் நல்லது

8.சோயாபீன்ஸ்
சோயாபீன்ஸில் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இந்த சோயாபீன்ஸ் இதயத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும்.

9.தக்காளி
தக்காளியில் லைகோபைன், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் இருக்கிறது. இவை கொலஸ்ட்ராலை எளிதில் கரைத்துவிடும். ஆகவே அதனை சமைத்தோ அல்லது அப்படியேவோ சாப்பிட்டால், நல்லது

10.வெண்டைக்காய்
வெண்டைக்காய் சாப்பிட்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறையும். ஏனெனில் அதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆனால் இதனை வறுத்து சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் போய்விடும்

11.பூண்டு
பூண்டை அதிகம் உணவில் சேர்த்தால், கொலஸ்ட்ரால் குறைந்து விடுவதோடு, தமனிகளில் எந்த ஒரு அடைப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும். அதிலும் தினமும் அதிகமான அளவில் பூண்டை சாப்பிடாமல், 3-4 பூண்டு சாப்பிட்டால், இதயம் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும்

Home remedies to cure infertility


விந்து முந்துவதை தடுக்கும் வீட்டு மூலிகைகள்

ஆண்களின் மிகப்பெரிய பிரச்சினை விந்து முந்துதல். இது ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும்.உறவின் போது பெண் தனது உணர்வின் உச்ச கட்டத்தை அடைவதற்கு முன்னரே ஆணுக்கு உணர்வின் உச்ச கட்டம் எட்டி விந்து வெளியேறிவிடுவதைத்தான் விந்து முந்துதல் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உலக அளவில் நூற்றுக்கு பத்து ஆண்களுக்கு இந்த பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விந்தணு குறைபாட்டினால் புதிய சந்ததியை உருவாக்க முடியாத நிலை. அதனால் ஏற்படும் மனச்சோர்வு ஆண்களை பாதிப்பிற்குள்ளாக்குகிறது. இந்த குறைபாட்டை நீங்க மருத்துவமனைகளுக்கு சென்று பல ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கும் ஆளாகின்றனர். இதனைத் தவிர்க்க பல்வேறு இயற்கை மருந்துகளை நம் முன்னோர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர். அவற்றை படியுங்களேன்.

1.முந்துதலை தடுக்கும் வெந்தயம்
தினமும் காலையில் ஒரு டீஸ்பூன் வெந்தயம் வாயில் போட்டு தண்ணீர் குடித்து  முழுங்கி வர விந்து முந்துதல் நிற்கும்

2..முந்துதலை தடுக்கும் முருங்கை
முருங்கை இயற்கை வயாக்ரா எனப்படுகிறது. முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, இவ்விரண்டும் சம அளவில் சேர்த்து, சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்து உண்ணலாம் இதனால் ஆண்மை அதிகரிக்கும்.. விறைப்பு நீடிக்கும், வேகமும் பெருகும். கீரையும், பூவும் சம அளவில் சேர்த்து, வேகவைத்து கடைந்து குழம்பாகவும் உபயோகிக்கலாம்.

3.தாது விருத்திக்கு அரைக்கீரை
அரைக்கீரை இன்றைக்கு அனைத்து காலங்களிலும் எளிதாக கிடைக்கும். இந்த கீரை இரத்தத்தை உற்பத்தி செய்யும். கபத்தை உடைத்து வெளியேற்றும். வாத சம்பந்தமான வியாதி தணிக்கும். நரம்பு வலி, பிடரிவலியை எளிதில் போக்கவல்லது. இது தாதுவை விருத்தி செய்யும். விந்தணு குறைபாடு உள்ளவர்கள் இதை பருப்புடன் சேர்ந்து கடைந்து சாப்பிடலாம். சாப்பிடலாம்.

4.ஆண்மை பெருக்கும் ஜாதிக்காய்
விந்து முந்துதலை தவிர்க்க உதவும் முக்கியமான நாட்டு மருந்து ஜாதிக்காய்,ஜாதி பத்ரி. ஜாதிக்காய் சூரணத்தை கால் பங்கு எடுத்து அதனுடன் மற்றுமுள்ள ஆண்மை பெருக்கும் மூலிகைகளின் பொடியோடு இரவில் பாலில் கலந்து சாப்பிட விந்து முந்துதல் நிற்கும்.

5.தரமான தக்காளி சூப்
ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்களுக்கு தக்காளி சூப் நிவாரணம் தருகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். தினம் ஒரு கப் தக்காளி சூப் குடிப்பது விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இதற்குக் காரணம் தக்காளியில் இருக்கும் லைக்கோப்பின் எனும் பொருள் தான் தக்காளிக்கு அடர் சிவப்பு நிறத்தைத் தருகிறது. அந்த மூலக்கூறு தான் ஆண்களின் விந்தணு வீரியத்திற்கு காரணமாய் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

6.மன்மதனாக மாற்றும் இஞ்சி
இஞ்சிக்கு ஆண்மையைப் பெருக்கும் ஆற்றல் நிறையவே உண்டு. பண்டைய இலக்கியங்களில் இஞ்சிச்சாறுடன், தேன் மற்றும் பாதி வேக வைக்கப்பட்ட முட்டையைக் கலந்து ஒரு மாதத்திற்கு சாப்பிட்டு வந்தால் மன்மதனை போல் செயல்படமுடியும் என்று பண்டைய நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னதான் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டாலும் படுக்கை அறையில் மனைவியை அணுகும் போது தன்னம்பிக்கையும் அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.

Health Benefits of AMLA

ஆரோக்கியமான உடலுக்கு நெல்லிக்காய் சாப்பிடுங்க..

அனைவருக்குமே நெல்லிக்கனியைப் பற்றி நன்கு தெரியும். இந்த நெல்லிக்கனி நிறைய உணவுப் பொருட்களில் பயன்படுகிறது. அதாவது ஸ்வீட்ஸ், ஜாம், பவுடர், ஊறுகாய், சில சமயங்களில் அப்படியே சாப்பிட என்றெல்லாம் பயன்படுகிறது. ஆனால் இந்த நெல்லிக்காய் உடலுக்கு எவ்வளவு நல்லது என்பது தெரியுமா? ஏனெனில் நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. இந்த நெல்லிக்காயில் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், இதனை ஆயுர்வேத மருந்துகளில் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இப்போது இந்த நெல்லிக்காயை சாப்பிட்டால், எதற்கெல்லாம் நல்லது என்பதைப் பார்ப்போமா!!!
நெல்லிக்காயின் நன்மைகள்:
* நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லிக்காயை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
* உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும்.
* இது ஒரு இயற்கையான ஆன்டி-ஏஜிங் பொருள். ஆகவே இதனை உட்கொண்டால் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. மேலும் ஸ்காப்பிற்கு போதுமான அளவு ஈரப்பசை தருவதோடு, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.
* செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்து, மலச்சிக்கலை சரிசெய்யும்.
* உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
* கல்லீரலின் செயல்பாட்டை முறையாக நடத்துகிறது.
* இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த நோயும் உடலை தாக்காமல் பாதுகாக்கும்.
* நெல்லிக்காய் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
நெல்லிக்காயை தவிர வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுப் பொருட்கள்:
* அனைத்து விதமான பச்சைக் காய்கறிகள், கீரைகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
* குடைமிளகாயின் வகைகள் அனைத்திலுமே வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது.
* பழங்களில் மாம்பழம், அன்னாசி பழம், ஆரஞ்சு, கிவி, பெர்ரி பழங்கள் மற்றும் பப்பாளியில் அடங்கியுள்ளன.
* காய்கறிகளில் காலிஃப்ளவர், பிராக்கோலி, சிவப்பு முட்டைகோஸ் போன்றவற்றில் உள்ளன.
* மூலிகைகளில் பேசில், புதினா, கொத்தமல்லி, ரோஸ்மேரி போன்ற அனைத்திலும் வைட்டமின் சி அதிகம் உள்ளன.
ஆகவே உடல் ஆரோக்கியத்துடன் இருக்க நெல்லிக்காயுடன், மேற்கூறிய சில உணவுப் பொருட்களையும் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Home remedies for Food Poison


ஃபுட் பாய்சன் ஆனா கவலைப் படாதீங்க! வீட்ல மருந்திருக்கு
பண்டிகை என்றாலே பலகாரம் அதிகம் சாப்பிடுவார்கள். அதுவும், நெய், எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதால் வயிறு பிரச்சினையாகிவிடும். அதேபோல் ஒன்றுக்கு ஒன்று ஒத்துக்கொள்ளாத பொருட்களை சேர்த்து சாப்பிடுவதன் மூலமும் ஒவ்வாமை ஏற்பட்டு சிலருக்கு ஃபுட் பாய்சன் ஆகிவிடும் வாய்ப்பும் உள்ளது. இதனால் பண்டிகை நாளும் அதுவுமாக வயிற்றுவலி, டயாரியா என்று படுத்துக்கொள்வார்கள். மருத்துவமனைக்கு ஓடினால் கையில் இருக்கும் பணத்தை பெரிதாக கறந்துவிட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார்கள்.
எனவே நாம் உண்ட உணவு ஜீரணமாகாவிட்டாலோ, விஷமாகிவிட்டாலோ வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே நிவாரணம் தேடலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

இஞ்சியிருக்க பயமேன்
உணவில் ருசியை அதிகரிக்க அன்றாட சமையலில் இஞ்சி பயன்படுத்துகிறோம். இது மிகச்சிறந்த விஷ முறிவு மருந்து. இது அனைத்து வகையான ஜீரணக்கோளாறுகளையும் சரி செய்யும். ஒரு டேபிள் ஸ்பூன் தேனுடன் சிறிதளவு இஞ்சிச் சாறு கலந்து குடித்தால் எந்த விஷமாக இருந்தாலும் ஓடிவிடும். வலிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.

அகத்தை சீராக்கும் சீரகம்
உடலின் உள்ளே உள்ள ரத்தத்தை சுத்தம் செய்யும் என்பதனால்தான் இதற்கு சீர் அகம் என்று கூறுகின்றனர். எனவே பாத்திரத்தில் மூன்று டம்ளர் தண்ணீரை நன்கு காய்ச்சி அதில் ஒரு டேபிள் ஸ்பூன் சீரகத்தைப் போட்டு மூடிவைத்தால் அதில் சாறு இறங்கிவிடும். அந்த தண்ணீரை பருகினால் வயிறு உபாதைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

தெய்வீக மூலிகை துளசி
வயிறு மற்றும் தொண்டை தொடர்பான தொற்றுக்களுக்கு துளசி இலை சிறந்த மருந்தாக செயல்படுகிறது. துளசி இலையை நன்கு அரைத்து அந்த சாறில் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் அடுத்த சில மணிநேரங்களில் வயிறு, தொண்டை தொடர்பான நோய்கள் குணமடையும்.

வாழைப்பழம், ஆப்பிள்
பொட்டாசியம் சத்து நிறைந்த வாழைப்பழம் மிகச்சிறந்த விஷ முறிவு மருந்தாக செயல்படுகிறது. வாழைப்பழத்தை நன்கு அடித்து கூழ் போல மாற்றி ஷேக் செய்து சாப்பிடலாம்.இதேபோல் ஆப்பிள் சிறந்த விஷ முறிவு பழமாகும். இது நெஞ்செறிச்சல் இருந்தாலும் நீக்கும். ஆப்பிளில் உள்ள சத்தான என்சைம்கள் டயாரியாவை உண்டாக்கும் பாக்டீரியாவை அழித்து வயிறு வலியை குணமாக்கும்.

விஷத்தை முறிக்கும் எலுமிச்சை
எலுமிச்சையில் உள்ள அமிலம் விஷ உணவில் இருந்த கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டவை. எனவே ஃபுட் பாய்சன் ஏற்பட்டு வயிறு வலியால் அவதிப்படுபவர்களுக்கு எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து சிறிதளவு சர்க்கரை சேர்த்து ஜூஸ் குடிக்க தரலாம். லெமன் டீ குடிக்க கொடுத்தாலும் சிறந்த நிவாரணம் கிடைக்கும். இதேபோல் புதினா டீ தயாரித்து கொடுத்தாலும் வயிற்றினை சுத்தப்படுத்தி விஷத்தை முறித்துவிடும்.

தண்ணீர் குடிங்க
ஃபுட் பாய்சனால் டயாரியா ஏற்பட்டு உடம்பில் உள்ள நீர்ச்சத்து குறைந்து கொண்டே வரும். எனவே உடம்பின் நீர்ச்சத்தை தக்கவைக்க அவ்வப்போது தண்ணீர் குடிப்பது அவசியம். இதனால் விஷமும், பாக்டீரியாக்களும் விரைவில் வெளியேற்றப்படுவதோடு உடல் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும்.