About Me

My photo
I am an IT professional, Nowadays our Lifestyle is changed a lot and of course we are chasing money. In India More than 7 crore people affected by Diabetes, High Cholesterol and infertility due to their Poor Food Habits &amp Lifestyle. This Blog is very useful for youngsters to lead good Lifestyle and be healthy and students to choose career courses.Work hard, but make time for your love, family and friends. Nobody remembers Powerpoint presentations on your Final Day.I believe Life is ours and we only Live our Life.... Thanks for visiting and welcome you to visit again. WHO LOVES GOD ARE SEARCHING GOD, WHO LOVES PEOPLE ARE LIVING AS GOD - SK ( Reach me @ +91 9791139942 to lead Healthy Family Life )

Monday 20 February 2012

How to Enjoy your Married Life Happily

ஆணுக்கும், பெண்ணிற்கும் திருமணம் என்பது அழகான, அம்சம். காதலிக்கும் போது எத்தனையோ விசயங்களை பேசியிருக்கலாம். பொய் கூட காதலின்போது ரசிக்கப்படும். அதே பொய் திருமணத்திற்குப் பின்னர் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. எனவே நிச்சயிக்கப்பட்ட திருமணமோ, காதல் திருமணமோ எதுவென்றாலும் திருமணமான புதிதில் தம்பதியர் கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகளை கூறியுள்ளனர் உளவியல் வல்லுநர்கள்.

திருமணமான முதல்நாள் இரவில் புதுமணத் தம்பதியரின் உடல்கள் மட்டும் சங்கமிப்பதில்லை உள்ளங்களும் சங்கமிக்கின்றன. அங்கே சந்திக்கும் இரு உள்ளங்களும் தங்களை முழுமையாக புரிந்திருக்க வேண்டும். அவர்களது மனமும் "உறவு"க்கு தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கே சந்தோச சாம்ராஜ்யம் நடைபெறும்.

பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்

தம்பதியரியரிடையே சரியான பேச்சுவார்த்தை இருப்பது அவசியம். எதையும் கூறும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேசவேண்டும். எதையும் தெரிவிப்பதில் நேர்மையை கடைபிடிப்பது அவசியம்.

ஒருவர் மட்டுமே பேசக்கூடாது மற்றவரையும் பேச அனுமதிக்கவேண்டும். நீங்கள் பேசுவதை விட துணைவரை பேசவிட்டு கேட்டுக்கொண்டிருப்பது மிகச்சிறந்த நன்மதிப்பினை ஏற்படுத்தும். எதிர்காலத்தைப் பற்றி பேசுங்கள். பேச்சானது எப்பவுமே நேர்மறை எண்ணத்துடன் இருக்கவேண்டும்.

வார விடுமுறை வசந்தம்

வாரவிடுமுறை நாட்களில் வீட்டைவிட்டு கண்டிப்பாக வெளியே செல்லுங்கள். சினிமா, பார்க், ஹோட்டல் எங்கு வேண்டுமானலும் இருக்கலாம். தனியாக இருவரும் கிளம்புங்கள். அமைதியான சூழலில் அமர்ந்து இருவரும் பேசி மகிழுங்கள். வாரம் ஒருமுறையாவது இரவு நேரத்தில் டின்னருக்கு ஏற்பாடு செய்யலாம். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் புதுமணத் தம்பதியர் அமர்ந்து பேசுவது அன்பை அதிகப்படுத்தும்.

புகழ்ச்சி அவசியம்

காதலிக்கும் போது எத்தனையோ புகழ்ச்சி வார்த்தைகளை கூறியிருக்கலாம். திருமணத்திற்குப்பின்னல் அதை பின்பற்றுவதில் தவறேதும் இல்லை. ஏனெனில் புதுமணப் பெண்கள் முதலில் எதிர்பார்ப்பது கணவரின் புகழுரையைத்தான்.

தவறுக்கு மன்னிப்பு

புதுமண வாழ்க்கையில் தவறு நிகழ வாய்ப்பு ஏற்படுவது குறைவு. அதே சமயத்தில் எங்காவது செல்ல திட்டமிட்டு விட்டு அழைத்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் தவறாமல் மன்னிப்பு கேட்கலாம். அது உங்கள் மீதான மதிப்பினை அதிகரிக்கும்.

சந்தோச சாம்ராஜ்யம்

குழந்தை பற்றிய விஷயத்தை முதலிரவிலேயோ அல்லது அதற்கு முன்போ முடிவெடுத்து விடுங்கள். குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என்றால் பாதுகாப்பான கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தி உறவில் ஈடுபடுங்கள். குழந்தை உடனே வேண்டும் என்பவர்கள், குழந்தை உடனே பிறக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் உறவு கொள்ள வேண்டாம். காரணம், அந்த எண்ணமே உங்களுக்கு மன நெருக்கடியை ஏற்படுத்தி விடலாம்.

உங்கள் மகிழ்ச்சிக்காகவும், துணையின் மகிழ்ச்சிக்காகவும் மட்டுமே உறவை வைத்திடுங்கள். செக்ஸ் என்பது அற்புதமான, அருமையான மருந்து என்பதை புதுமணத் தம்பதியர் உணரவேண்டும். இந்த மருந்து மட்டும், உடலுக்கும், மனதுக்கும் சரியாக கிடைத்து வந்தால் மனநெருக்கடி ஏற்பட வாய்ப்பில்லை. அப்புறம் என்ன தம்பதியரிடையே சந்தோச சாம்ராஜ்யம்தான்.
திருமணம் செய்துகொள்வது ஆண்களுக்கு அவசியமான ஒன்று அதனால் இதயநோய் வருவது கூட தடுக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மணமாகாத ஆண்கள் எல்லாம் சந்தோசமாக பேச்சிலர் வாழ்க்கையை கைவிட்டு விட்டு குடும்பத்தஸ்தர் ஆகலாம் என்று சந்தோச முழக்கமிட்டுள்ளனர் ஆய்வாளர்கள்.

திருமணம் குறித்தும் குறிப்பாக திருமணத்தினால் ஆண்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது தனியாக வாழும் ஆண்களை விட திருமணம் செய்து கொள்ளும் ஆண்களுக்கு இதயநோய் பாதிப்பு ஏற்படுவது குறைந்துள்ளது தெரியவந்தது.

பேச்சிலர்ஸ், விவாகரத்து ஆனவர்கள், மனைவியை இழந்தவர்கள் ஆகியோர்களைவிட மனைவியோடு வாழ்பவர்களுக்கு இதயநோய் ஏற்படுவதில்லையாம். ( மனைவியோடு சண்டை போட்டு இதயநோய் வருதே என்ன செய்ய? என்று கேட்பவர்கள் விதிவிலக்கானவர்கள் )

கனடாவைச் சேர்ந்த 4403 இதய நோயாளிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் 33 சதவிகிதம் பேர் பெண்கள். இவர்களில் திருமணம் முடித்தவர்களை விட விவாகரத்தானவர்கள், மனைவியை இழந்தவர்கள், தனியாக வசிப்பவர்களுக்கு இதயவலி தொடர்பான நோய்கள் அதிகம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதிலிருந்து வாழ்க்கைத் துணைவியின் மூலம் கணவரின் நலன் பாதுகாப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கணவரின் உடல் நலனில் அக்கறையோடு செயல்பட்டு அவருக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்து கொடுப்பதினாலேயே ஆண்களுக்கு இதயநோய் ஏற்படுவதில்லையாம்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சும்மாவா சொன்னார்கள். எனவே ஆண்களே திருமணம் என்றாலே அலறவேண்டாம். உங்களை கவனிக்க அக்கறையான ஒருவர் வரப்போகிறார் என்று உற்சாகத்துடன் திருமணத்திற்கு தலையாட்டுங்கள்.

Stress Urinary Incoontinence in Women

சிரிப்பு என்பது மன அழுத்தம் போக்கும் மருந்து என்று கூறப்படுகிறது. ஆனால் சில பெண்கள் சிரிக்கவே யோசிப்பார்கள் காரணம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்புதான். சில பெண்களுக்கு சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, சிறுநீர்க்கசிவு ஏற்படும். இதை மருத்துவ ரீதியாக, ஸ்ட்ரெஸ் யுரினரி இன்கான்டினென்ஸ்( Stress Urinary Incontinence ) என்று கூறுவர். இதுவொரு வினோதமான நோய்தான்.

இந்த சிறுநீர் கசிவை பற்றி தங்கள் பெற்றோரிடமோ, கணவரிடமோ கூட இதைப்பற்றி பேச கூச்சப்படுகிறார்கள். வெளியில் சென்றால் சிறுநீர்க்கசிவு ஏற்பட்டு, சிறுநீர் வாடை அடித்து விடுமோ என்று கவலைக்கு உள்ளாகிறார்கள். வீட்டில் நடக்கும் சுப காரியங்களில் கூட கலந்து கொள்வதில்லை.

மன உளைச்சல்

வீட்டு வேலை செய்யும் பெண்களைக் காட்டிலும், வெளியில் பணிபுரியும் பெண்கள்தான் அதிகம் இதனால் மனரீதியில், உடல் ரீதியில் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், இப்போது இந்நிலை மாறிவிட்டது. அமெரிக்கா போன்ற நாடுகளில்தான் இதற்கான சிகிச்சை அளிக்கப்படும் என்ற நிலைமை மாறி இந்தியாவிலும் இதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுபோன்ற பெண்களின் சிறுநீரக மற்றும் சிறுநீர் பிரச்சினைகளை குணப்படுத்துவதற்கென்றே யூரோ கைனாகாலஜி என்கிற நவீன மருத்துவதுறை வந்துள்ளது என்பதை பெண்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

குண்டானவர்கள் கவனம்

இந்த நோய் சுகப்பிரசவமான பெண்களுக்கு, அடுத்து வயது முதிர்ச்சியானவர்களுக்கு, ஆஸ்துமா, மலச்சிக்கல் உள்ள பெண்களுக்கு, 35 வயதிற்கு மேலானவர்களுக்கு, குண்டான பெண்களுக்கு, மெனோபாஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கு, கருப்பை அகற்றப்பட்டவர்களுக்கு, சிறுநீர் பையில் துவாரம் ஏற்பட்டவர்களுக்கும் வர வாய்ப்பு உண்டு. இவர்களுக்கு எல்லாம் கட்டாயம் வரும் என்பதில்லை. எனவே சிறுநீர் கசிவு பிரச்சினை ஏற்பட்டால் சாதாரண பிரச்சினை என்று நினைத்துக் கொண்டு மன உளைச்சல் அடையாமல் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறவேண்டியது அவசியம்.

தொற்றுநோய் தாக்குதல்

இதுதவிர பெண்களுக்கு சிறுநீரக பாதையில் தொற்று நோய்கள், சிறுநீரக கற்கள், சிறுநீரக பாதை அடைப்பு, சிறுநீர் கழிவதில் பிரச்சனைகள் முதலியன ஏற்படுகின்றன. அவற்றை குணப்படுத்த சில இயற்கை முறைகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இளநீரும், தண்ணீரும்

நிறைய தண்ணீர் குடிக்கவும். இளநீர் குடிப்பது பல சிறுநீரக பாதிப்புகளை போக்கும். சிறுநீர் கழிக்கையில் வலி உண்டானால் பரங்கிக்காய் சாற்றை குடிக்கவும். தினசரி 2 அத்திப்பழங்களை 10 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு குடிக்கவும்.

குறைவாக சிறுநீர் போனால் உலர்ந்த திராட்சை ஜுஸ் குடிக்கவும். அதிக சிறுநீர் போவதை தேன் கட்டுப்படுத்தும்.

யோகாசனங்கள்

சிறுநீர் கோளாறுகளை யோகாசனங்கள் மூலம் குணப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய நமஸ்காரம் – சிரசாசனம், சர்வங்காசனம், சலபாசனம், தனுராசனம், மத்ஸ்யேந்திராசனம், விருச்சிகாசனம், சவாசனம் முதலியன செய்வதன் மூலம் சிறுநீரக தொற்று, கோளாறுகளை குணப்படுத்தலாம்

Friday 17 February 2012

Anti Ageing Tips

என்றும் இளமையுடன் தோற்றமளிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும், ஆசையாகவும் உள்ளது. லேசாக முகத்தில் சுருக்கம் வந்தாலே மனதும் சுருங்கி வயதாகிவிட்டதோ என்று அடிக்கடி கண்ணாடியைப் பார்ப்பவர்கள் பலருண்டு. உடலையும், மனதையும் இளமையாக வைத்துக் கொள்ள மருத்துவர்கள் கூறும் முறைகளை பின்பற்றினாலே போதும் என்றென்றும் இளமையாகவும் புதுமையாகவும் தோற்றமளிக்கலாம்.

உணவில் கட்டுப்பாடு

நாம் உண்ணும் உணவே நமக்குள் அதிசயிக்கத்தக்க மாற்றத்தை செய்கிறது. நமது ஆரோக்கியத்தையும், தோற்றத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். நாளொன்றுக்கு ஐந்து கப் பழச்சாறு அல்லது காய்கறிச் சாறு உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். புருக்கோலி, காரட், ஆரஞ்ச் போன்றவைகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ரெட் மீட் உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று கூறும் மருத்துவர்கள் தினசரி மீன் உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர். தாவர எண்ணெய்களில் சமைத்த உணவையே உட்கொள்ள வேண்டும். தினசரி 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும் என்பது அவர்களின் ஆலோசனை.

காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது சருமப் பொலிவிற்கும், முக வசீகரத்திற்கும் ஏற்றது என்று சமீபத்திய ஆய்வில் தெரிவந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து காய்கறி, பழங்கள் எடுத்துக்கொள்பவர்கள் பொன்னிற மேனியை பெறுவார்கள் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உணவுப்பழக்கத்திற்கும், மேனி எழிலுக்கும் உள்ள தொடர்ப்பு குறித்து இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளதாவது,

அன்றாட உணவில் கேரட், தக்காளி போன்றவைகளை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. தினசரி உணவில் பழங்கள், காய்கறிகள் எடுத்துக்கொள்வது கரோட்டினாய்டு லெவலை அதிகரித்து மேனியை பொலிவுறச் செய்வதாகவும் ஆய்வை மேற்கொண்ட டாக்டர் இயான் ஸ்டீபன் கூறியுள்ளார்.

வசீகரத் தோற்றம்

இரண்டு மாதங்களுக்கு பழங்கள், காய்கறிகளை உட்கொண்டால் அதில் உள்ள கரோட்டினாய்டுகளும், ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ்சும், உடலில் உள்ள இறந்த செல்களை அழித்து மேனியை பொன்னிறமாக்குகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

மனிதர்களின் தோல் நிறம் உயிரியல் தொடர்பானது. இது பளபளப்பாக இருப்பது ஆரோக்கியத்தின் அறிகுறி என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எனவே அநேகம் பேர் ஆரோக்கியமான பொன்னிற மேனியை அதிக அளவில் விரும்புகின்றனர் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எனவே வசீகர தோற்றம் வேண்டுபவர்கள் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு காய்கறிகள், பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்களேன்.


ஆன்டி ஆக்ஸிடென்டல்

முதுமையை தவிர்ப்பதில் ஆன்டி ஆக்ஸிடென்டலுக்கு முக்கிய பங்குண்டு. நார்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள், பருப்புவகைகள் போன்றவற்றை உண்பதன் மூலம் அதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்டல் இளமையை தக்கவைக்கின்றன. ஸ்ட்ராபெர்ரி, மாதுளம்பழம் போன்றவை அதிகம் உண்ணவேண்டும். கிரீன் டீயில் அதிக ஆண்டி ஆக்ஸிடென்ட்டல் உள்ளன. இது நன்றாக செயல்வினை புரிந்து முதுமை வராமல் தடுக்கின்றது.

புகை, மது கூடாது

நம்முடைய லைப்ஸ்டைலை மாற்ற வேண்டும். அதிக புகைப் பிடிப்பது. ஆல்கஹால், போதை வஸ்துகள் உபயோகிப்பதும் முகத்தில் அதிக சுருக்கத்தை வரவழைக்கும். இரத்தத்தை விஷத்தன்மையானதாக்கி நிறத்தை மங்கச்செய்கிறது. எனவே இளமையை விரும்புபவர்கள் குடிப்பதை, புகைப்பதை விட்டொழிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

உடற்பயிற்சி அவசியம்

உடற்பயிற்சியே இளமையை தக்க வைக்கும் இனிய வழி என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி அரைமணி நேரம் உடற்பயிற்சி செய்வது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து தசைகளை இருக்கமாக்குகிறது. இதனால் முதுமை தோற்றம் ஓடியே போய்விடும் என்பது மருத்துவர்களின் கருத்து.

எளிய சோப், கிரீம்கள்

முகச்சுருக்கத்தை போக்கவும், தோலை பாதுகாக்கவும் எளிய வழிகள் உள்ளன. ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளும் சோப், மற்றும் இளமையை கூட்டும் கிரீம் போன்றவைகளை உபயோகிக்க வேண்டும். கூடுமானவரை சூரிய ஒளியில் நம் உடல் அதிக அளவில் படுவதானாலும் முகச்சுருக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தரமான சன்ஸ்கிரீன் தடவாமல் வெளியில் கால் வைக்க வேண்டாம்.

கவலையை துரத்துங்கள்

கவலையே நமது முகச்சுருக்கத்தை அதிகமாக்கி வயதான தோற்றத்தை தரும். எனவே எதற்கும் கவலை வேண்டாம். மகிழ்ச்சியான நினைவே நமது உடலினுள் நல்ல ஆரோக்கியமான ஹார்மோனை சுரக்கச் செய்யும் என்பது மருத்துவர்களின் அறிவுரை கவலைப்படும்படியாக சம்பவங்கள் நடைபெற்றால் அதை புறந்தள்ளிவிட்டு மனதை அமைதியாக்கும் இசையை கேளுங்கள், நல்ல புத்தகங்களை படியுங்கள். என்கின்றனர் வல்லுநர்கள். இதுவே உங்களின் இளமையை நீட்டிக்கும் வழி.

மூளையை உற்சாகப்படுத்துங்கள்

இளமையை தக்கவைப்பதில் மூளைக்கு முக்கிய பங்குண்டு. எனவே மூளையை சுறுசுறுப்பாக்கும் விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள். நினைவாற்றலை அதிகரிக்கும் செயல்கள், பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காண்பது போன்ற ஆக்டிவான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம் நமது மூளையை சுறுசுறுப்பாக வைக்கலாம். இதன் மூலம் முதுமை என்பது நம் அருகில் கூட எட்டிப்பார்க்காது என்கின்றனர் மருத்துவர்கள்.

Health Benefits of Yoga

யோகாசனம் மூலம் உடலும் மனமும் ஆரோக்கியமாகும் என்பதோடு தாம்பத்ய உறவுக்கு உற்சாகமூட்டுவதாக உளவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். யோகாசனப் பயிற்சியின் மூலம் மன அழுத்தம் குறைவதோடு தாம்பத்ய வாழ்க்கையில் சிறந்த முறையில் செயல்பட செய்வதும் தெரியவந்துள்ளது.

பத்மாசனம், தனுராசனம், புஜங்காசனம், சர்வாங்கசனம் ஆகிய ஆசனங்களை தவறாது செய்வதன் மூலம் உடலும், மனமும் உற்சாக மடைவதோடு தாம்பத்தியத்திலும் உற்சாகமுடன் ஈடுபடலாம். இது செலவில்லாத ஆரோக்கியமான மருத்துவம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பத்மாசனம்

பத்மாசனத்தில் உடல் ஒரு கட்டுக்குள் வந்து நிற்பதால் உடல் அசைவு அற்று ஒரே நிலையில் இருக்கும் போது சுவாசத்தினுடைய ஓட்டம் சமன்படுகிறது. சுவாசத்தினுடைய ஒட்டம் சமன்படுவதால் எண்ணங்களின் சிந்தனைகளின் ஓட்டமும் சமன்படுகிறது. இதனால் மனம் சலனமற்று அமைதி அடைகிறது. தியானப் பயிற்சிக்குரிய ஆசனம் பத்மாசனமாகும்.

புஜங்காசனம்

புஜங்காசனம் செய்தவன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகள் நீங்குகிறது. இப்பயிற்சியை செய்து வந்தால் வெள்ளைப்படுதல், மாதவிடாய் தள்ளி போதல் போன்ற நோய்கள் மறையும்.அதற்கு இந்த ஆசனம் செய்து முடித்ததும் உடன் சலபாசனம், தனுராசனம் ஆகிய ஆசனங்களை சேர்த்து செய்து வர வேண்டும்.

இதனால் முதுகுத்தண்டு தொடர் நழுவுதல், முதுகு தசை வலி மற்றும் அடிமுதுகு வலி ஆகியவற்றைப் போக்கி முதுகுத்தண்டை ஆரோக்கியமாக வைக்கிறது. சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும். வயிற்று பொறுமல், மலச்சிக்கல், இருதய பலவீனம் ஆகியவற்றை போக்குகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது.

தனுராசனம்

வில்போல வளைந்து செய்வதால் தனுராசனம் எனப்படுகிறது. இதை செய்வதன் மூலம் இது பெண்களுக்கு நல்ல பலன் தரும் ஆசனம். மாதவிடாய், கர்ப்பக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். பெண்களுடைய ஓவரி ஆண்களுடைய டெஸ்டீஸ் மற்றும் சிறுநீரகங்களைச் சுறுசுறுப்படையச் செய்து அதனால் பலம் பெற்று இளமை உண்டாகும். வயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமாகி வயிற்று ஊளைச் சதையை குறையும்.

உற்சாகம் கூடும்

யோகா பயிற்சியின் உடலானது கட்டுக்கோப்பாக மாறுகிறது எந்த அளவுக்கு, எத்தனை நிமிடத்திற்கு யோகாசனம் செய்கிறீர்களோ… அதைப் பொறுத்து உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரைந்து, உடல் பருமன் குறையும். அதே நேரத்தில் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சியால் உடல் எடை குறையும் போது ஏற்படும் சோர்வு, யோகாவில் இருக்காது என்பது உறுதி. இதனால் தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு இல்லற வாழ்க்கையிலும் ஈடுபாடு அதிகரிக்க உதவுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

Face Wrinkles Reduce Tips

இளம் வயதிலேயே ஒரு சிலருக்கு சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும். வறட்சியான தேகம், எண்ணெயில் பொரித்த உணவுகள். பாஸ்ட் புட் கலாச்சாரம் போன்றவைகள் இளமையிலேயே முகச்சுருக்கத்தை ஏற்படுத்திவிடும். அதேபோல் தேவையற்ற விசயங்களுக்கு கவலைப்படுவதும் முகச்சுருக்கம் ஏற்பட காரணமாகிறது. எனவே முகச்சுருக்கத்தைப் போக்க அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்.

காய்ச்சி ஆறவைத்த பால் உடன் இரண்டு டீஸ்பூன் அதனுடன் நான்கு துளி எலுமிச்சை சாறு கலந்து இரவு படுக்கும் முன்பு முகத்தில் சுருக்கம் உள்ள இடங்களில் பூசவும். காலை எழுந்த உடன் வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். சோப் போடக்கூடாது. இதை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு செய்து வர சுருக்கம் போகும்.

கேரட் சாறு, தேன்

ஒரு டேபிள் ஸ்பூன் கேரட் சாறுடன் ஒரு டீஸ்பூன் பால் சேர்த்து முகத்திலும் கழுத்திலும் தேய்க்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் கேரட் சாறு அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து கழுத்திலும் முகத்திலும் தேய்க்கவும். 20 நிமிடத்திற்குப்பிறகு ஒரு பிஞ்ச் சோடா பை கார்பனேட் கலந்த சுடுநீரில் பஞ்சை முக்கி துடைத்தால் எப்படிப்பட்ட சுருக்கங்களும் மாயமாகி விடும்.

பப்பாளி, பாதம் எண்ணெய்

பப்பாளிப்பழம் முகச்சுருக்கத்தைப் போக்கும் பழுத்த பப்பாளியை நன்கு கூழாக்கி அதனை முகத்தில் தேய்ப்பது நல்ல பலன் தரும். பப்பாளி சதையை சாப்பிட்ட பின் அதன் தோலின் உட்பகுதியில் உள்ள பகுதியை தேய்த்தால் போதும் நல்ல பலன் கிடைக்கும்.

இரவு படுக்கைக்குப் போகும் முன்பு பாதம் எண்ணெயை நன்றாக முகத்தில் தேய்த்து உறங்கவும். பின்னர் காலையில் எழுந்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவ சுருக்கம் போயே போச்சு.

வைட்டமின் ஈ

முகச்சுருக்கத்தை நீக்குவதில் ஈ வைட்டமினுக்கு முக்கிய பங்கு உண்டு. வைட்டமின் மாத்திரையை உடைத்து, அதனுடன் கிளிசரின் கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவவும். முகச்சுருக்கம் நீங்கும். நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள்.

ஆரஞ்ச் ஜூஸ்

முகச் சுருக்கம் வராமல் தடுக்க வாரத்தில் ஒன்றிரண்டு தடவையாவது ஆரஞ்சு, கரட் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் பளபளப்படையும். துவர்ப்பு சுவை இளமைக்குப் பாதுகாப்பு தரும். வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

தண்ணீர் குடிங்க

தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் முகச்சுருக்கம் மறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதிக அளவு தண்ணீர் குடிப்பதன்மூலம் தோலில் ஈரப்பசை அதிகரித்து இளமை தோன்றும். அது முகச்சுருக்கத்தை நீக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக பெண்கள் தினமும் குறைந்தது 1 1/2 லிட்டர் தண்ணீர் பருகவேண்டுமாம் இது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Baby Care Tips

குழந்தைகளின் சருமம் மென்மையானது. பட்டுப்போன்ற அந்த பிஞ்சுகளின் சருமத்தை பாதுகாப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்காக என சோப்புகளும், லோசன்களும் வந்துவிட்டன. அவை பாதுகாப்பானவை என்று கூறப்பட்டாலும் அவற்றில் உள்ள ரசாயனங்கள் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். எனவே இயற்கை முறையில் வீடுகளில் தயாரிக்கப்படும் பொருட்களை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் ஆரோக்கியத்தோடு குழந்தைகளின் சருமம் பாதுகாக்கப்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

கடலை மாவு

கடலை மாவை மைய அரைத்து அவற்றை குழந்தைகளுக்கு தேய்த்து குளிப்பாட்டினால் சரும ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டும் போது கடலை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைத்தால் பிசு பிசுப்பு மட்டுமே நீக்கி எண்ணெய் பசையை தக்கவைக்கும். இதனால் குழந்தைகளின் சருமம் பளபளப்பாகும்.

கடைகளில் விற்கும் லோஷன்களை போடும் போது அதில் உள்ள ரசாயனங்களினால் குழந்தைகளுக்கு அலர்ஜி வராத நிலையிலும் பின் விளைவுகள் கண்டிப்பாக இருக்கும். குழந்தைகளுக்கு முடிந்தவரை நாம் இயற்கை மூலிகைகள், வழிமுறைகளைக் கொண்டே சரி செய்து கொள்ள வேண்டும்.

சூரிய ஒளியில் ஆலிவ் எண்ணெய்

பிறந்த குழந்தைகளுக்கு ஆலிவ் ஆயில் தடவும் போது அது காலை நேரமாக இருக்க வேண்டும். காலையில் இளஞ்சூரியனில் ஒரு சில நிமிடங்கள் காட்டினால் தான் நாம் தேய்க்கும் எண்ணெய் குழந்தைகளுக்கு உடம்பில் பளபளப்பை கொடுக்கும்.

பாதாம் எண்ணெய் மிகவும் அடர்த்தியாக இருக்கும். அதில் ஏதாவது ஒரு வெஜிடபிள் ஆயில் கலந்து கொண்டு தேய்க்க வேண்டும். பிறகு ஒரு மணி நேரம் ஊறிய பிறகு கடலை மாவு கொண்டு குளிப்பாட்ட வேண்டும்.

கஸ்தூரி மஞ்சள்

பிறந்த குழந்தைகளுக்கு உடம்பில் முடி அதிகம் காணப்படும். நாளடைவில் ஏற்படும் மாற்றங்களால் முடி கொட்டி விட வாய்ப்பு உண்டு. வயதிற்கு வந்த பிறகு பார்த்தால் முடி அதிகம் இருக்காது. அப்படியும் இருந்தால் முடியை நீக்க, கஸ்தூரி மஞ்சளை கல்லில் உரசிப் பூசி சிறிது நல்லெண்ணெய் தடவி பிறகு குளிக்க வைக்க வேண்டும்.

தோல் மிருதுவாக

குழந்தைகளை குளிக்க வைக்கும் தண்ணீரில் ரோஜா இதழை போட்டு, 2 மணி நேரம் கழித்து குளிக்க வைக்கலாம். அது குழந்தைகளின் சருமத்தை மிருதுவாக வைப்பதுடன் இயற்கை மணமும், புத்துணர்ச்சியும் இருக்கும்.

பள பளக்கும் சருமம்

குழந்தைகளின் சருமத்திற்கு தேவையான பவுடரை வீட்டிலேயே தயாரிக்கலாம். பூலாங்கிழங்கு 100 கிராம், ரோஜா இதழ் 100 கிராம், ஆவாரம் பூ 50 கிராம், கடலை மாவு 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் 50 கிராம் இவையனைத்தையும் நன்றாக வெயிலில் சுத்தம் செய்து விட்டு உலர்த்த வேண்டும். பின்னர் அவற்றை பவுராக அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் தேங்காய் பாலில் குழைத்து குழந்தைகள் உடம்பில் தேய்க்கலாம். நாளாக, நாளாக சருமம் பளபளப்பாக இருக்கும்.

6 மாதங்கள் கழித்து குழந்தைகள் வளரும் பருவத்தில் சருமத்தைப் பராமரிக்க நிறைய காய்கறிகள், கீரைகள், பழங்கள் இவைகளை ஒரு நாளில் மாற்றி மாற்றி ஒன்றோ அல்லது இரண்டு தடவையோ நன்றாக மசித்து கொடுக்க வேண்டும். முக்கியமாக நீங்கள் சமைக்கிற சமையலில் கருவேப்பிலை சேருங்கள். கருவேப்பிலையை அரைத்துப் பயன்படுத்தினால், அதன் சத்து உடலுக்கு சேரும்.

Pregnancy tips for Working Women

பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்குப் பின்னர் வீட்டு வேலையும் செய்துவிட்டு அலுவலகத்திற்கும் சென்று வேலை செய்வது சிரமமான காரியம். இந்த சூழ்நிலையில் கர்ப்பகாலம் வேறு வந்துவிட்டால் பெரும்பாடாகிவிடும். மசக்கை, வாந்தி என உடல் அசதியோடு அலுவலகத்திற்குச் செல்லவேண்டிய கட்டாயம் வேறு மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிவிடும். எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் பின்பற்ற வேண்டிய ஆலோசனைகளை கூறுகின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

சத்தான உணவுகள்

ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்பது அவசியம். ஏனெனில் வீட்டு வேலைகளையும் செய்துவிட்டு அலுவலகத்திற்கும் வந்து வேலை செய்வதற்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் ஊட்டச்சத்து அவசியம். புரதம், மாவுச்சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

கொழுப்பு உணவு வேண்டாம்

கர்ப்பகாலத்தில் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது அவசியம். கொழுப்பு உணவுகளை அதிகம் உண்பது மன அழுத்தத்திற்கு வழி வகுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்

வசதியான ஆடைகள்

அலுவலகத்திற்குச் செல்லும் கர்ப்பிணிகள் வசதியான சற்றே லூசான ஆடைகளை அணிந்து செல்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். ஏனெனில் அது கர்ப்பிணிகளுக்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் மூச்சு விட ஏற்றது என்கின்றனர்

எழுந்து நடங்க

கர்ப்ப காலத்திற்கு முன்பு வேலை பார்த்ததைப் போல கர்ப்பத்தின் போதும் கடுமையாக வேலை செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதற்கான சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம். அவ்வப்போது பெர்மிசன், முடிந்தால் பார்ட் டைம் ஆக வேலை செய்வது குறித்தும் வசதிக்கேற்ப அலுவலக வேலையை கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.

உங்களின் பணிச்சூழல் பொருத்து நீங்கள் அவ்வப்போது சிறிது இடைவெளியில் வாக்கிங் செல்லலாம். ஏனெனில் அது முதுகுவலி, கால்களில் வீக்கம் மற்றும் ரத்தம் தேக்கமடைதல் போன்றவைகளில் இருந்து பாதுகாக்கும்.

காய்கறிகள், பழங்கள்

கர்ப்ப காலத்தில் வயிற்றை காயப்போடக்கூடாது. வேலை இருந்துகொண்டுதான் இருக்கும். அவ்வப்போது பழங்கள், காய்கறிகள் இணைந்த சாலட்களை சாப்பிடவேண்டும். சரிவிகித சத்துக்கள் கிடைக்கும். கண்டிப்பாக நொறுக்குத்தீனிகளை சாப்பிடக்கூடாது. வீட்டில் இருந்து ஜூஸ் தயார் செய்து கையோடு கொண்டு செல்வது நல்லது. அது உடலின் நீர்ச்சத்தினை தக்கவைக்கும்.

மேலதிகாரிகளிடம் தெரிவிக்கவும்
கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட உடனே அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டியது முக்கியமானதாகும். ஏனெனில் அதற்கேற்ப சலுகைகளை பெற அது அவசியமானது. அவ்வப்போது உணவு உண்பதற்கும், மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வதற்கும் இந்த அறிவிப்பு அவசியமாகிறது. மேலும் எத்தனை மாதங்கள் வரை அலுவலகம் வரமுடியும் என்பதையும் குழந்தை பிறந்தபின்னர் மீண்டும் பணிக்கு வரமுடியுமா? என்பதையும் தெரிவிப்பது மிகவும் முக்கியமானது.

EasyTips to reduce FATNESS

உடல் பருமன் என்பது இன்றைக்கு பெரும்பாலோனரை படுத்தி எடுக்கிறது. உடல் எடையை குறைப்பதற்காக டயட் என்ற பெயரில் உணவை குறைத்து, சுவையை குறைத்து எதையாவது செய்து இறுதியில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். உடல் எடையை குறைக்க உணவை குறைக்கத் தேவையில்லை என்பது உணவியல் வல்லுநர்களின் ஆலோசனை சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டாலே உடல் எடை கட்டுப்படுவதோடு மன உளைச்சலும் சரியாகும் என்கின்றனர் நிபுணர்கள்.

வெள்ளை நிற உணவுகள்

நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் வெள்ளைநிறப் பொருட்களை குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சீனி,உப்பு,சாதம்,பால்,தயிர் போன்ற வெள்ளை நிறப் பொருட்களை அளவை குறைத்து சேர்க்கவேண்டும். கொழுப்பு நீக்கப்பட்ட பால் உபயோகிக்க வேண்டும். இது உடல் எடையை குறைப்பதோடு சத்துக்களை அப்படியே தக்கவைக்கும்.

கொழுப்பை கரைக்கும் உணவுகள்

கொள்ளு பயிரை அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.கொள்ளு ரசம்,கொள்ளு சுண்டல் போன்றவை செய்து சாப்பிடலாம்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இது நிச்சயம் எடையை குறைக்கும்.

வாரம் ஒரு முறையாவது ஓட்ஸ்,பார்லி சேர்த்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் உடம்பில் உள்ள கொழுப்பையும்,பார்லி உடம்பில் அதிகம் உள்ள நீரையும் குறைக்கும்.ஆனால் பார்லியை அதிகம் முக்கியமாக கருவுற்றிருக்கும் பெண்கள் உபயோகப்படுத்த வேண்டாம். இது நீரின் அளவை குறைத்து சிசேரியனில் கொண்டு விட்டுவிடும். சிலர் கால்,கை வீக்கம் கர்ப்ப காலத்தில் ஏற்படும்போது அதிகம் பார்லியை உட்கொண்டுவிடுவதால் இப்படி நேர்ந்துவிடுகிறது.

சரி விகித உணவுகள்

காலை உணவு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஆவியில் வேகவைத்த உணவு, நீர் காய்கறிகள் என்று திட்டமிட்டு சமையுங்கள். வாரம் ஒரு முறை பொரித்த உணவு, ஸ்வீட்ஸ் என்றுகூட சாப்பிடலாம்.முக்கியமாக டயட் இருந்தாலும் நம் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் தொடர்ந்து கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். புரோட்டீன், கார்போஹைடிரேட், நல்ல கொழுப்பு, கால்ஷியம், இரும்புச் சத்து முதலியவை நம் உடலுக்கு கண்டிப்பாக தேவை. இதன் அளவு குறைந்தால் முடி கொட்டுதல்,ரத்த சோகை, எலும்பு தேய்மானம் முதலியவை ஏற்படும். பருப்பு, கீரை, அவித்த முட்டை, சாதம்,பால் முதலியவை சேர்த்துக் கொள்ளுங்கள். சமைக்கும் முறையில் அதிகம் கொழுப்பு சேர்ந்து விடாமல் செய்து சாப்பிடுங்கள்.

சூடான நீர்

குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்க உதவும். உங்களது லைப்ஸ்டைலுக்கு ஏற்றார்போல் உடல் பயிற்சியை அமைத்துக் கொள்ளுங்கள். உடல் எடையை குறைப்பதில் வாக்கிங் மிகச்சிறந்த பயிற்சி. எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி செய்யாதீர்கள். சாப்பிடும் முன்பு செய்வதுதான் சரி.

வீட்டு உணவுகள் சாப்பிடலாம்

3 வேளையாக சாப்பிடாமல் 3 மணி நேர இடைவெளியில் 6 தடவையாக சாப்பிடுங்கள். அதனால் எப்போதும் சாப்பிடும் ஒரு வேளை உணவை(அதே அளவை) இரண்டாக பிரித்து 2 வேளையாக சாப்பிடுங்கள்.இதுதான் இன்று மிகவும் அதிகமான பேர் பின்பற்றும் டயட்டிங் முறை. இப்படி பிரித்து சாப்பிடுவதால் உடம்பில் கொழுப்பு தங்க வாய்ப்பு இல்லாமல் எளிதில் உணவு ஜீரணமாகிவிடும். எப்போதும் சாப்பிடும் தட்டைவிட சிறிய தட்டில் சாப்பிடுங்கள். அப்போதுதான் நாம் நிறைய சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் வரும்.மெதுவாக, நன்றாக மென்று சாப்பிடுங்கள்.இதனால் உணவு எடுத்துக் கொள்ளும் அளவும் குறையும்.

அதிக எண்ணெய்,மட்டன் ஸ்நாக்ஸ் போன்ற கலோரி அதிகமுள்ள பொருட்களை தவிர்த்து விடுங்கள். மாதம் ஒரு முறையோ,வாரம் ஒரு முறையோ கொழுப்பில்லாத கறியாக சாப்பிடலாம்,.டீ குடிப்பது உடலில் கொழுப்பை சேர விடாது. அதுவும் க்ரீன் டீ மிகவும் நல்லது.பாலை சேர்க்காமல் அல்லது ஸ்கிம் மில்க்கை சேர்த்து குடிக்கலாம். முடிந்தவரை வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள்.வெளியில் சாப்பிடுவதுகூட எடை ஏற ஒரு காரணம். முக்கியமாக பிட்ஸா,சிக்கன் ஃபிரை போன்ற அயிட்டங்கள் நிச்சயம் எடையை கூட்டிவிடும்.

பி பாசிட்டிவ்

உடற்பயிற்சி, டயட் இல்லாமல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல. டயட் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தாமல் ஹெல்தியாக சாப்பிடுகிறோம் என்று நினையுங்கள். நிச்சயம் சரியான டயட்டும்,உடற்பயிற்சியும் எடையை குறைக்கும். தவிர உடல் எடையை குறைப்பதில் நேர்மறை எண்ணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடல் மெலிவிற்காக உடற்பயிற்சி,டயட்டிங் இருக்க ஆரம்பிக்கும் போது இனி உடல் எடை குறையும், கொஞ்சம் குறைந்து விட்டது என்று அடிக்கடி மனதில் நினைக்க வேண்டும். இதுதான் உங்களை மேலும் முயற்சி செய்ய வைக்கும். என்ன செய்தும் உடல் எடை குறைய வில்லையே என்று பாதியில் விட்டு விடாதீர்கள்.அப்புறம் மேலும் எடை கூட வாய்ப்பு அதிகம்.

3 ways to relief from stress

பர பரப்பான இன்றைய வாழ்க்கை சூழலில் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்கவேண்டிய நிர்பந்தம் பலருக்கும் உண்டு. இது தவிர அலுவலகத்திற்கு செல்லும் பெரும்பாலோனோர் போட்டி நிறைந்த சூழலில் பணிபுரிவதால் மன அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் பணமும், இன்றைய ஆடம்பார வாழ்க்கைச் சூழலும் கூட மன அழுத்தத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக இருக்கின்றன. நமக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை விரட்ட எளிய பயிற்சிகளை உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆக்சிஜன் தெரபி

ஆழமாய் சுவாசிப்பதன் மூலம் மன அழுத்தத்தை விரட்ட முடியும் என்று பல்வேறு நாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த சுவாசத்தின் மூலம் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. இதனால் தசைகடள தளர்வடைகின்றன. மனமும் இயல்பு நிலையை அடைகின்றன. அடிவயிற்றில் கையை லேசாக வைத்துக்கொள்ளுங்கள். ஆழமாய் சுவாசிக்கவும் அப்பொழுது அடிவயிற்றின் அசைவுகளையும், மனமும், உடலும் லேசாக மாறுவதையும் உணரலாம்.

மனதில் உருவாகும் அழுத்தம் வந்து படிகிற இடங்களில் ஒன்று கடைவாய் இணைப்பு. பற்களை இறுக கடித்தபடி காதுக்கு கீழ் சுட்டுவிரலால் அழுத்தவும். நீளமாக மூச்சை உள்ளிழுத்து அதனை வாய் வழியாக வெளியேற்றவும். மனஅழுத்தத்தின் சுவடுகள் உடலில் தங்காமல் வெளியேறிவிடும்.

இடைவெளி விடுங்கள்

மன அழுத்தம் அதிகமாகுதா? செய்யும் வேலையில் இருந்து சிறிதுநேரம் இடைவெளி விடுங்கள் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். மரங்கள் அடர்ந்த சோலையில் சில நிமிடங்கள் நடக்கலாம் அல்லது ஓய்வறைக்கு சென்று சிறிது தண்ணீர் அருந்தலாம். இதனால் மன அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது என்பது அவர்களின் கருத்து.

அழுத்தம் போக்கும் இசை
மன அழுத்தம் போக்குவதில் இசைக்கு முக்கிய பங்கு உண்டு. மன அழுத்தம் காரணமாக அதீத டென்சன் ஏற்படும் போது மனதிற்கு பிடித்த பாடலை ஹெட்போன் மூலம் கேட்கலாம். இதனால் மன அழுத்தம் படிப்படியாக மறைந்து போகும் மனம் அமைதியாகும். எனவே கையோடு ஹெட்போன் வைத்துக்கொள்வது மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பை குறைக்கும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

கொஞ்சம் புன்னகை

இடியே விழுந்தாலும் பதற்றம் வேண்டாம். ஏனென்றால் பதற்றத்தோடு எழுபவன் தோல்வியோடு உட்காருவான் என்ற பழமொழியே உள்ளது. எனவே எதனால் இது நேர்ந்தது என்பதை கொஞ்சம் நிதானமாக யோசித்தாலே பிரச்சினையின் தீர்வு பிடிபடும். அப்புறம் என்ன உங்களுக்கு டென்சன் ஏற்படுத்திய சம்பவத்தை கொஞ்சம் புன்னகையுடன் சமாளியுங்கள். மன அழுத்தம் அழுது கொண்டே ஓடிப்போகும்.

Health Benefits of Sex

தம்பதியரிடையே உணர்வு பூர்வமான தொடர்பை ஏற்படுத்த உதவும் தாம்பத்ய உறவானது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் எண்ணற்ற நன்மைகளை ஏற்படுத்துவதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.

பிரகாசமான முகம்

உறவானது தம்பதியர்களின் உடலிற்கு பொலிவூட்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உடலுறவினால் மனஉளைச்சல் நீங்குவதால் உங்கள் முகம் எப்பொழுதும் பிரகாசமாக இருக்குமாம்.

உடலுறவின்போது சுவாசம் அதிகரிப்பதனால் இதயம் மற்றும் மூளைக்கு ஆக்சிஜன் அளவு சீராக கிடைக்கிறதாம். இதனால் உடல் பொலிவாகுமாம். உதட்டில் அடிக்கடி முத்தமிடுவதால் எனாமலுக்கு சக்தி கிடைக்கிறதாம். இதனால் பற்கள் பளபளப்பாகுமாம்.

அழகாய் பூக்குதே

உறவின் போதும் வெளியேறும் வியர்வையினால் மேனி பளபளப்பாக இருக்குமாம். பெண்களுக்கு தலைமுடி பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்குமாம்.

கட்டான உடல்

அதிகமாக காதலுணர்வு ஏற்படுவதனால் அதிகமாக உள்ள கெட்ட கொழுப்பு கரைக்கப்படுகிறதாம். இதனால் உடலில் தேவையற்ற இடங்களில் உள்ள சதைகள் கரைந்து கட்டான உடலமைப்பு ஏற்படுகிறதாம். நீச்சல் மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கிடைக்கின்ற உடல் கட்டமைப்பினை விட தாம்பத்ய உறவின் போது கிடைக்கும் உடல் அழகு 20 சதவிகிதம் அதிகமாக இருக்குமாம்.

ரத்த அணுக்கள் எண்ணிக்கை

தினமும் உறவு கொள்ளும் தம்பதியருக்கு ஹீமோகுளோபினின் செயற்பாடு 30 சதவிகிதமாக அதிகரிக்கும் என பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. உடலுறவினால் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறதாம்.

வயதான தம்பதியர் உறவு கொள்வதன் மூலம் மூட்டு வலி, மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் போன்றவை நீங்குமாம்.

மூச்சடைப்பு ஏற்படாது

அடிக்கடி உறவில் ஈடுபடும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதில்லையாம். உறவின் போது அதிகமாக மூச்சு வாங்குவதால் நாசித்துவாரம் சுத்திகரிக்கப்படுகிறது. இதனால் மூச்சடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதில்லையாம். ஆண்களுக்கு ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற நோய்கள் தாக்குவதில்லையாம்.

சிறந்த எக்ஸர்சைஸ்

தாம்பத்ய உறவினால் உடல் சமநிலை பெறுகிறதாம் இதனால் ஹார்மோன் சுரப்பு சீராக இருக்கிறதாம். இதனால்தான் செக்ஸ் ஒரு சுகமான உடற்பயிற்சி என்று கூறுகின்றனர்.

இதயநோய் தீரும்

வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது உறவு கொள்ளும் தம்பதியருக்கு இதயக் கோளாறுகள் 50 வீதமாகக் குறைக்கப்படுகிறதாம். உறவின் போது இதயமானது 80 முதல் 150 தடவைவரை துடிக்கிறதாம். இதனால் இதயத்தை சுற்றி உள்ள கொழுப்புகள் கரைக்கப்பட்டு மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைகிறதாம்.

முக்கியமான விசயம் குறித்த முடிவு எடுக்கும் முன்பு உறவு வைத்துக்கொள்வது நல்லது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் திடமும், மன உறுதியும் ஏற்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Benefits of Fruit facial

உடலிற்கு தேவையான வைட்டமின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களை பழங்கள் அளிக்கின்றன. அவற்றை உண்ணும் போது அதன் சத்துக்கள் நேரடியாக நமக்குக் கிடைக்கின்றன. அதேசமயம் பழங்களை இயற்கையான அழகுசாதன பொருளாக உபயோகிக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். வீட்டிலேயே எளிய முறையில் தயார் செய்து உபயோகிக்கலாம். அழகு நிலையம் செல்லாமலேயே குறைந்த செலவில் டல்லான முகத்தை ப்ரெஷ்சாக்கலாம்.

கிளன்சிங் பால்

மாசடைந்த சூழல் காரணமாக வெளியே சென்று வந்தாலே முகம் கறுத்துவிடும். முகத்தின் தோல் அறைகளில் அழுக்குகள் புகுந்து பரு, கொப்புளங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தும். எனவே பழக்கூழ் மாஸ் போடும் முன்பு முகத்தை நன்றாக சுத்தம் செய்யவேண்டும். அதற்கு முதலில் கிளன்சிங் செய்யவேண்டும். அதற்கு பால் அவசியமானது.

ஒரு கிண்ணத்தில் சிறிதளவு பாலை எடுத்து முகம் முழுவதும் பூச வேண்டும். பின்னர் மெதுவாக தேய்க்கவேண்டும். 5 நிமிடம் கழித்து சிறிதளவு பஞ்சைக் கொண்டு துடைக்கவேண்டும். இதனால் முகத்தினுள் படிந்திருக்கும் அழுக்கு நீங்கிவிடும்.

புத்துணர்ச்சி தரும் மசாஜ்

தயிரானது இயற்கை அழகு சாதனங்களில் முதன்மையானதாக உள்ளது. இது சூரியக்கதிர் தாக்குதலினால் ஏற்படும் கருமையை போக்குகிறது. சருமத்திற்குத் தேவையான அனைத்து வித சத்துக்களும் கிடைக்கிறது. தேன் பயன்படுத்தியும் மசாஜ் செய்யலாம்.

வறண்ட சருமம் கொண்டவர்கள் தேனுடன் பப்பாளிக்கூழ் சேர்த்து மசாஜ் செய்யலாம். தக்காளி, ஆரஞ்ச், கொய்யாப்பழம், வாழைப்பழம் போன்றவைகளையும் கூழ் போல மசித்து மசாஜ் செய்யலாம் முகத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

வெந்நீர் ஒத்தடம்

மசாஜ் முடிந்தவுடன் ஸ்கிரப் செய்ய வேண்டும். வால்நெட், பாதாம் இவற்றைப் பொடியாக அரைத்து ஸ்கிரப்பாக பயன்படுத்தலாம். சருமத்தில் அதிக கருப்பு வெள்ளை இருந்தால் சர்க்கரையைப் பொடித்து அத்துடன் சிறிது பப்பாளி விழுதை சேர்த்து முகத்தில் அழுத்தி தடவ வேண்டும். இதனால் இறந்த செல்கள் உதிர்ந்து விடும். பின்னர் சிறிய டவலைக் கொண்டு வெந்நீரில் நனைத்து பொறுக்குமளவு சூட்டுடன் முகத்தின் மேல் போட்டு மூன்று நிமிடங்கள் கழித்து எடுக்க வேண்டும். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று முறை செய்ய வேண்டும். இந்த முறையை பின்னபற்ற முடியாதவர்கள் சிறிய பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும் அதனுள் வேப்பிலைகள் சிறிது போட்டு அதோடு சேர்த்து ஆவி பிடித்தால் மிகவும் நல்லது.

பழக் கூழ் பேசியல்

இதற்கு அடுத்தபடியாக பேசியல் போடலாம். முகத்திற்கு பேக் போட நமக்கு தேவையான பழங்களை தேர்ந்தெடுக்கவேண்டும். கேரட், ஆப்பிள், ஆரஞ்சு, உருளைக்கிழங்கு, தேன், வெள்ளரி, ஸ்ட்ராபெரி, பேரீச்சம் பழம், எலுமிச்சைச்சாறு சிறிதளவு இவற்றில் ஏதாவது ஒன்றை நன்றாக அரைத்து பேக் போட்டு அரைமணி நேரம் ரிலாக்ஸ் ஆக இருக்கவேண்டும். பின்னர் முகம் கழுவினால் உங்கள் முகத்தைப் பார்த்து நீங்களே அசந்துபோவீர்கள். அந்த அளவிற்கு முகம் பொலிவாய் மாறும். பழங்களை தனியாகவும் அரைத்து பேசியல் போடலாம் அல்லது இரண்டு, மூன்று பழங்களைச் சேர்த்து அரைத்தும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

Tips for women to lead better life

இல்லற வாழ்க்கையில் ஆரோக்கியமான தாம்பத்திய உறவு அவசியமானது. அது மகிழ்ச்சியோடு தம்பதியரிடையே உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும். எனவே இல்லற வாழ்க்கையில் இடைவெளி ஏற்படாமல் இருக்க பெண்களுக்கு ஆலோசனைகளை கூறியுள்ளனர் உளவியல் நிபுணர்கள்.

வேண்டியதை கேளுங்கள்


உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை கேட்பது தவறில்லை. ஒருவேளை தவறாக நினைத்து விடுவாரோ என்ற அச்ச உணர்வும் அவசியமில்லை. உங்களின் தேவையை தவறாமல் தெரிவிக்கலாம், அதனால் உங்களவர் கூடுதல் உற்சாகமடைவார் என்கின்றனர் உளவியாலாளர்கள்.

ஆரோக்கியம் அவசியம்

உடலை கவனமாக பராமரிக்கவேண்டும். அது ஆரோக்கியம் கூட. எனவே உடலை சுத்தமாக பராமரிப்பதோடு சுகாதாரமாகவும் இருக்கவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள். தினசரி குளித்து அதற்கேற்ப பெர்ப்யூம் போட்டாலே அந்த வாசனையே தெரிவித்துவிடும் உங்களின் தேவையை.

கை கோர்த்து தெரிவியுங்கள்

ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு பரிபாஷை உண்டு. தனியான தருணங்களில் சந்திக்கும் போது உங்களின் தேவையை கைகோர்த்து தெரிவிக்கலாம். அந்த நெகிழ்ச்சியுடனே, ஒரு வித எதிர்பார்ப்புடனே அன்றைய தினம் கழியும். மனதிலும், உடலிலும் உற்சாக பேட்டரி உற்பத்தியாகும்.

உற்சாக விளையாட்டு

உறவின் போது எப்பொழுதுமே அவர்தான் தொடங்கவேண்டும் என்று காத்திருக்க வேண்டாம். முன் விளையாட்டுக்களை நீங்கள் தொடங்கினால் உங்களவர் உற்சாகமடைவார். அவரின் ஆர்வத்தை அதிகரிக்கும்.

அழகாய் உணருங்கள்

இது மிகவும் முக்கியமானது. நீங்கள் எப்பொழுதுமே உங்களை அழகானவராய் உணருங்கள். ஏனெனில் உங்களவருக்கு நீங்கள்தான் உலக அழகி. அந்த எண்ணமே உங்களை உற்சாகமுடன் செயல்பட வைக்கும்.

யோகசனம்

தினசரி யோகா செய்வது உடல் ஆரோக்கியத்தோடு மனம் ஆரோக்கியமடையும் உறவிற்கு உற்சாகம் தரும் எனவே தினசரி யோகா செய்வது நலம் என்கின்றனர் நிபுணர்கள்.

பாதுகாப்பான உறவு

நமது உடல் நலத்திற்கு ஏற்ப பாதுகாப்பான உறவினை மேற்கொள்ளவேண்டும் என்பது உளவியல் நிபுணர்களின் மேலான அறிவுரையாகும். இவற்றை பின்பற்றினால் உங்களவர் உங்களின் தலையணை மந்திரத்திற்கு கட்டுப்படுவது உறுதி என்கின்றனர் நிபுணர்கள்

Home Pedicure Tips

பாதங்களை பாதிப்பவை பித்த வெடிப்புகளும், விரல் இடுக்குகளில் ஏற்படும் புண்களும்தான். அழகான முகம் கொண்டவர்கள் கூட பாதங்களில் உள்ள பித்தவெடிப்புகள், புண்களினால் பாதிப்பிற்குள்ளாகின்றனர். முகத்தை பராமரிப்பதைப் போல பாதங்களையும் வாரம் ஒருமுறை கவனித்தால் பஞ்சுபோன்ற பாதங்களைப் பெறலாம். அழகியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகள் உங்களுக்காக.

மருதாணி இலைகள்

முற்காலங்களில் வீட்டின் கொல்லைப்புறத்தில் மருதாணி மரம் வைத்திருப்பார்கள் வாரம் ஒருமுறை அவற்றை பறித்து மைய அரைத்து கை, கால்களில் அழகு படுத்துவார்கள். அதனால் பாதங்கள் நோய் தாக்குவதில் இருந்து பாதுகாக்கப்பட்டது. இப்பொழுது மருதாணி அரைப்பதற்கெல்லாம் பொறுமை இல்லை. அதனால் ரெடிமேட் மெகந்தி வைத்து அழகு படுத்துகின்றனர். பாதங்களை பாதுகாக்க மீண்டும் பழைய நிலைக்கே திரும்ப வேண்டும் என்று அழகியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

மஞ்சள், வேம்பு

இந்தியாவின் மருத்துவ மூலிகைகளான மஞ்சளும், வேம்பும் பாதங்களை பாதுகாப்பதில் மிக முக்கியமானவை. வேப்பிலையை பறித்து மஞ்சள் அதனுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்கவேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.

வேப்ப எண்ணெய்

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.

வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.

சுடுநீர், எலுமிச்சை

பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.

கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் இறந்துபோன செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாக பட்டுப்போல மாறும்.

இரவு நேரத்தில் உறங்கப் போகும் முன் நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

தரமான காலணிகள்

தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்தினாலும் சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானதை பார்த்து கவனித்து வாங்குவது நல்லது.

குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

Eyebrow care Tips

கண்களின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் புருவங்களுக்கு முக்கிய இடம் உண்டு. புருவத்தை அழகாக திருத்தினாலே முகத்திற்கு கூடுதல் வசீகரம் கிடைக்கும். ஒவ்வொருவரும் அவரவர் முக அமைப்பு, கண்களுக்கு ஏற்ப புருவத்தை டிரீம் செய்து கொள்ளலாம்.

ஒவல் முகம் அழகாக

ஓவல் முகம் உள்ளவர்களுக்கு புருவம் சிறு வளைவுடன் இருந்தால் வசீகரமாக இருக்கும். நீண்ட, ஓவல் முகம் உள்ளவர்கள் சிறிய புருவத்தை அமையுங்கள் அழகாகத் தெரியும். சதுர முகம் உள்ளவர்கள் பெரிய வளைவாக பிறை வடிவில் மாற்றிக் கொள்ளுங்கள். முகம் ஓவல் வடிவமாகத் தெரியும். புருவத்தின் முடிவு மிகவும் கீழ் நோக்கி இருந்தால் வயதான தோற்றம் தரும். மாற்றிக்கொள்ளுங்கள்.

புருவங்களின் இடைவெளி

குறுகிய நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் இடைவெளி அதிகம் இருக்கட்டும். நீண்ட நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் அதிக இடைவெளி தேவையில்லை. அகன்ற மூக்கு உள்ளவர்கள் புருவங்களின் இடைவெளியை அதிகப்படுத்தாதீர்கள். புருவங்கள் நெருங்கி இருந்தால் முகம் குறுகி, கண்கள் சிறிதாக தெரியும்.

கருப்பானவர்களுக்கு

நீளமூக்கு உள்ளவர்களுக்கு புருவம் தழைத்தே இருக்கட்டும். தினம் விளக்கெண்ணெய் தடவுங்கள். முடி நன்றாக வளரும்.வட்ட முகம் உள்ளவர்கள் புருவம் கீழ் நோக்கி வருவதுபோல் அமைத்துக் கொள்ளவும்.

கருப்பு நிறம், அழகிய முகம் உள்ளவர்கள் புருவத்தை சரி செய்து கொள்ளவேண்டிய அவசியமே இல்லை.

செய்யக் கூடாதவை

வீட்டிலேயே புருவத்தை சீர் செய்பவர்கள் பிளேடால் எடுக்காதீர்கள். அதிகமாக வளர ஆரம்பித்துவிடும். எதிர்த்திசையில் எடுத்தால் முரட்டுத்தனமாக வளரும். அடுத்த முறை நூலினால் எடுக்கும்போது அந்த இடத்தில் ஆழப்புள்ளி உண்டாகலாம்.

புருவத்திற்கு ஏற்ற ஐஷேடோ

உடைக்கு மேட்சான நிறத்தில் ஐ ஷேடோ எடுங்கள். கண்களை மூடி புருவம் மீது ப்ரஷ்ஷால் தடவுங்கள். பெரிய கண் உள்ளவர்கள் மெல்லிய கோடாகவும், சிறு கண் உடையவர்கள் அழுத்தமாகவும் ஐலைனர் போடவேண்டும். விழி துருத்திக் கொண்டு இருப்பது போல் தோற்றம் உள்ளவர்கள் பழுப்பு நிற ஐஷேடோ பயன்படுத்தலாம். கருமையான விழி உடையவர்கள் புருவத்துக்கும் இமைக்கும் நடுவில் சாக்லெட், நீலம், பச்சை நிற ஐஷேடோ பயன்படுத்தலாம் அது கண்களின் அழகை அதிகரித்துக்காட்டும்.

Hot drinks helps Colds

மழைக்காலமோ, குளிர்காலமோ ஜலதோஷம் பிடித்து ஒரு வழியாக்கிவிடும். எதை சாப்பிட்டாலும் ருசியே இருக்காது. காரணம் ஜலதோஷத்தினால் மூக்கடைப்பு ஏற்படுவதோடு சுவை அறிய முடியாத அளவிற்கு வாய் கசந்துவிடும். எனவே ஜலதோஷத்தினால் சளித் தொந்தரவு இருக்கிறதா? சூடா குடிங்க சளி காணமல் போய்விடும் என்று தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்

ஜலதோஷம் மற்றும் அது சார்ந்த தொந்தரவுகள் ஏற்பட்டால் சூடான பானத்தை அருந்துவது நோயின் தன்மையைக் குறைத்து விடுதலை அளிக்கும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த கார்டிஃப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெரும்பாலான மக்களை எரிச்சலுக்கும், சிக்கலுக்கும் உள்ளாக்கும் பொதுவான நோய் ஜலதோஷம். இதற்கு எளிய மருத்துவ வழி இருப்பதும், அது நிரூபிக்கப்பட்டிருப்பதும் மருத்துவ உலகின் மகத்துவம் என ஆச்சரியப்படுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தொண்டை வலி போயே போச்சு

மூக்கு ஒழுகுதல், எரிச்சல், தும்மல், தலைக்கனம், சோர்வு, தொண்டை வலி என எதுவானாலும் சூடான தண்ணீரை அடிக்கடி குடியுங்கள் என அவர் அறிவுறுத்துகிறார் ஆராய்ச்சியாளர். குளிர் காலங்களில் சூடான பானங்களை அருந்தி வருவதனால் இத்தகை நோய்களின் தாக்கங்களும், அது தரும் விளைவுகளும் மிகவும் குறையும். சூடான பானங்களை இத்தகைய பருவ காலங்களில் அருந்துவதை மக்கள் வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும் என்கின்றனர் அவர்கள்.

நம்ம ஊர் கசாயம்,

வெளிநாட்டுக்காரர்கள் இப்பொழுதுதான் இதனை கண்டறிந்துள்ளனர். ஆனால் நம் ஊரிலோ ஜலதோஷம், தொண்டை வலி என ஏதேனும் வந்தால் கருப்பட்டி அல்லது பனை வெல்லத்தை தட்டிப்போட்டு சுடச் சுட ஒரு சுக்கு காப்பி போட்டுத் தருவது நம்முடைய பாட்டிகளின் கைப் பக்குவம். அதை குடித்தபின்னர் ஜலதோஷம், சளித் தொந்தரவு காணமல் போய்விடும். அதேபோல நாட்டுக்கோழியை சமைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடாக குடிக்க கொடுப்பதும் நம் ஊர் வழக்கம். சளியாவது ஒன்றாவது, அதெல்லாம் எட்டிக்கூட பார்க்காது.

Preventing Alzheimer (Memory disorder) disease

இங்கதான் வச்சேன், ஆனா எங்க வச்சேன்னு தெரியலையே? என எதையாவது தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அவ்வப்போது செய்யவேண்டிய முக்கியமான வேலைகள் கூட மறந்து விடுகிறதா?. 'கஜினி'யாகி விட்டோமே என்று பயப்படத் தேவையில்லை. இந்த ஞாபக மறதிக்கு முக்கியக் காரணம் மூளையின் நினைவுச் செல்கள் சிறிது சிறிதாக செயல் இழந்து வருவதுதான்.

நினைவுத்திறன் குறைபாடு இன்றைக்கு பெரும்பாலோனோருக்கு ஏற்பட்டு வருகிறது. இவர்கள் எண் விளையாட்டு, குறுக்கெழுத்துப் புதிர் போன்ற புத்திசாலித்தனமான விளையாட்டினை விளையாடுவதன் மூலம் நினைவுத்திறனை மீட்க முடியும் என்று மூளை நரம்பியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவர்கள் உண்ணவேண்டிய ஊட்டச்சத்துணவுகளையும் பரிந்துரைத்துள்ளனர்.

பச்சைக் காய்கறிகள்

பச்சை இலை காய்கறிகளான ப்ரூகோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கீரைகள் போன்றவற்றில் வைட்டமின் பி6, பி12 மற்றும் போலேட் உள்ளது. இது மூளை நினைவுத்திறனுக்கு ஏற்றது. அல்சீமர் நோயாளிகள் இவற்றை அதிகம் உண்ண பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள். இவற்றில் உள்ள உயர்தர இரும்புச்சத்து மன அழுத்தம் தொடர்பான நோய்களையும் தடுக்கிறதாம். தினசரி உணவில் கேரட் சேர்த்துக்கொள்வதன் மூலம் நினைவுத் திறன் அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தானியங்கள்
சிவப்பு அரிசி, ஓட்ஸ் மற்றும் தானியவகைகள் மூளைக்கு ஏற்றது. இவற்றை உண்பதன் மூலம் மூளை நரம்புகளுக்குத் தேவையான ஆக்ஸிசன் கிடைக்கிறது. இது மூளைக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்க செய்யும்.

முட்டை அவசியம்
முட்டையில் உள்ள புரதம், வைட்டமின் பி காம்ளக்ஸ், போன்றவை மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. நினைவுத் திறனை அதிகரித்து மூளை நரம்புகளுக்குத் தேவையான சத்துக்களை அளிக்கிறது. எனவே தினசரி உணவில் முட்டை சேர்த்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் நரம்பியல் நிபுணர்கள்.

பச்சைத் தேநீர்

பச்சைத் தேநீர் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானதாக பரிந்துரைக்கப்படுகிறது. இதில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் மூளையின் நியூரான்களை ஆரோக்கியமானதாக்குகிறது. எனவே அல்சீமாரால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சைத் தேநீர் அருந்துவது சிறப்பானது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ப்ளுபெரீஸ் பழங்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் மூளைக்கு மிகவும் ஏற்றது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ப்ளு பெரீஸ் பழங்கள் நினைவாற்றலை அதிகரித்து கற்கும் திறனை உயர்த்துகிறதாம். மூளை தொடர்பான அழுத்தத்தினை குறைக்கிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் மறதி நோய், அல்சீமரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ப்ளு பெரீஸ் பழங்களை உண்ண கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஸ்ட்ராபெரீஸ் பழங்களில் ஆன்டி ஆக்ஸிடென்ஸ் அதிகம் உள்ளது. இவை மூளை நரம்புகளை பாதுகாத்து உடலுக்கு தேவையான கட்டளைகளை செலுத்துவதற்கு பாதுகாப்பளிக்கிறது.

பாதாம் பருப்பு
மீன்கள், பாதம் பருப்பில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் நினைவாற்றலை அதிகரிக்கிறது. இவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ஸ், வைட்டமின் ஈ போன்றவை மூளையின் நரம்புகளுக்கு தேவையான ரத்த ஓட்டம் தடங்களின்றி நடைபெற வழிவகுக்கிறது. சுறுசுறுப்பு, விழிப்புணர்வு திறன் அதிகரிக்க இவற்றை தினசரி உணவுகளில் எடுத்துக்கொள்ளவேண்டும் என நரம்பியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

டார்க் சாக்லேட்

சாக்லேட் பிரியர்கள் சந்தோசமாய் இனி சாக்லேட் சாப்பிடலாம் ஏனெனில் டார்க் சாக்லேட்டில் உள்ள கோகோ மூளைக்கு உற்சாகம் தருகிறது. நினைவாற்றலை அதிகரிக்கிறதாம். எனவே டார்க் சாக்லேட் சிறிதளவு சாப்பிடலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே இந்த உணவுகளை உட்கொள்வதோடு மூளைக்குத் தேவையான உற்சாகமான பயிற்சியினை மேற்கொள்வதன் மூலம் நினைவாற்றலை அதிகரிக்கலாம் என்று மூளை நரம்பியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Health Benefits of Oatmeal

உடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன என்று கடந்த 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்களும், கடந்த 100 ஆண்டுகளாக சீனர்களும் கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்கர்களும் நி பித்துள்ளனர்.

சர்வ ரோக நிவாரணி

ஓட்ஸ் உணவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் இ , துத்தநாகம், செலினியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ் போன்றவை காணப்படுகின்றன. இதில் அதிக அளவு புரதமும் உள்ளது.

நீரிழிவு நோயாளிகளும், கொழுப்பு சத்து, உடல்பருமன் கொண்டவர்களும், உயர் ரத்த அழுத்தம் உடையவர்களும் தினசரி ஒரு கப் ஓட்ஸ் உட்கொள்வதன் மூலம் இந்த நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

தினமும் ஒரு கப் ஓட்ஸ்

தினசரி காலை ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி பருகுவதன் மூலம் அதில் உள்ள நார்ச்சத்து புற்றுநோய் செல்களை அகற்றுகிறதாம். இதில் உள்ள ரசாயனம் புற்றுநோய் செல்களை எதிர்த்து அவற்றை அழிக்கின்றனவாம். கெட்ட கொழுப்புகளை நீக்குகிறதாம். நீரிழிவு நோயாளிகள் ஓட்ஸ் பருகுவதன் மூலம் அவர்களுக்கு ஜீரணம் மெதுவாக நடைபெற்று ரத்தத்தில் சர்க்கரை உடனே கலப்பது தடுக்கப்பட்டது.

இதயநோய்

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினசரி ஓட்ஸ் உணவு கொடுத்து வந்ததன் மூலம் இதயத்தில் ரத்த நாளங்களில் படிந்திருந்த கெட்ட கொழுப்புகள் அகன்றன. தமனி இறுக்கம் நீங்கி மூச்சு விடுவதில் இருந்த சிரமம் குறைந்தது. உயர் ரத்த அழுத்தம் தவிர்க்கப்பட்டது. உடலில் உடல் பலவீனம் மறைந்தது. இறந்து போன செல்களுக்கு பதிலாக புதிய செல்கள் உருவானது.

இளமையை தக்கவைக்கும் ஒட்ஸ் சத்துக்கள்

பெண்கள் அழகாக, இளமையாகத் தோன்ற ஓட்ஸ் உணவுடன் 50 கிராம் பச்சை வெங்காயத்தை பச்சையாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வரவும். கோதுமையும், பாதாம் பருப்பையும் ஓட்ஸ் சாப்பிடும்போது சேர்த்துச் சாப்பிடவும், இதனால் கோபமும், கவலையும் பறந்து போகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மகிழ்ச்சியான வாழ்க்கை

11, 12 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து மக்கள் ஓட்ஸ் சாப்பிட்டார்கள். அதற்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாகத்தான் இவர்கள் சீனர்களைப் பார்த்து ஓட்ஸ் சாப்பிட ஆரம்பித்தார்கள். இன்றும் உலகில் ஓட்ஸ் அதிகம் சாப்பிடுகிறவர்கள் சுவிஸ் மக்கள்தான். இவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நல்ல வருமானத்துடன், சேமிப்புடன் வாழ்கின்றனர். அதற்கு ஓட்ஸ் உணவு கொடுக்கும் உற்சாகம்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஓட்ஸ் உணவானது குதிரையின் நரம்பு மண்டலத்தைப் போல மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தையும் இது கிளர்ச்சியுடன் வைத்திருக்கிறது என்பதிலிருந்து கண்டுபிடித்துள்ளனர். எனவே தினசரி ஒரு கப் ஓட்ஸ் உணவை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது என்று அறிவுத்துகின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

Sunday 12 February 2012

Variety of KISS - Valentine's DAY Special

அன்பு, பாசம், நேசம், காதல் என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் எளிமையான 'மீடியம்' முத்தம். தாய் தந்தை பிள்ளைகளுக்குத் தரும் முத்தம், காதலன் காதலிக்குத் தரும் முத்தம், கணவன் மனைவிக்குத் தரும் முத்தம் என கிடைக்கும், கொடுக்கப்படும் இடத்திற்கேற்ப முத்தத்தின் அர்த்தம் மாறும்.

முத்தம் தோன்றியது எப்போது என்பதில் தெளிவான வரலாறு நம்மிடம் இல்லை. ஆனாலும், கி.மு. 1500வது ஆண்டிலேயே நமது வேதங்களில் முத்தம் குறித்த குறிப்புகள் உள்ளன. இந்தியர்கள் கண்டுபிடித்த முத்தத்தின் வகை 30 ஆகும். அதேசமயம், ரோமானியர்கள் கண்டுபிடித்ததோ 3 வகை முத்தத்தை மட்டுமே.

முத்தத்திற்கு வரலாறுகளில் ஒவ்வொரு விதமான அர்த்தம் கூறியுள்ளனர். முத்தம் குறித்த பல்வேறு நம்பிக்கைகளும் உலக மக்களிடம் உலவி வருகின்றன. ரோமானியர்களைப் பொறுத்தவரை, ஒருவருக்கு ஜலதோஷம் பிடித்திருந்தால் அவரது மூக்கில் கழுதையை முத்தமிட வைப்பார்களாம். அப்படி செய்தால், ஜலதோஷம் போய் விடும் என்பது அவர்களது நம்பிக்கை.

அதேபோல ரோமானியர்கள், கல்யாண நிகழ்ச்சிகளின் முடிவில் ஒருவருக்கொருவர் முத்தத்தை அன்புப் பரிமாற்றமாக பகிர்ந்து கொள்வார்களாம்.

அதேபோல மிகவும் பிரபலமானது எஸ்கிமோ முத்தம். பனிப் பிரதேசங்களில் வசிக்கும் இனுயுட் இன மக்கள் ஒருவர் மீது கொண்ட பாசத்தை வெளிப்படுத்த மூக்கோடு மூக்கு உரச நெற்றி அல்லது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிடுவது வழக்கம். இதை அவர்கள் கலாச்சாரமாகவே பின்பற்றி வருகின்றனர்.

அதேபோல வெளிநாடுகளில் கடிதம் எழுதுவோர் கடிதத்தின் முடிவில் எக்ஸ் (X) குறியிடுவது வழக்கம். அதாவது முத்தத்தைப் பரிமாறிக் கொள்வதன் அடையாளமாக அதை வைத்துள்ளனர்.

முத்தத்தால் சில நன்மைகளும் உண்டு என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது முத்தம் கொடுப்பதன் மூலம் நமது உடலில் கலோரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைகிறதாம். எவ்வளவு குறைகிறது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாவிட்டாலும் கூட, முத்தம் கொடுக்கப்படுவதைப் பொறுத்து நிமிடத்திற்கு 4 முதல் 6 கலோரி வரை குறையுமாம். அதேசமயம், விநாடிக்கு 12 கலோரி வரை குறைகிறது என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர்.

முத்தத்தில் சில சிக்கல்களும் உண்டு. உதடுகளை தயார்படுத்துவதற்கு முன்பு அதையும் தெரிந்து கொள்வது நல்லது. மிகவும் ஆழமாக கொடுக்கப்படும் முத்தத்தால், சில நேரங்களில் உயிரிழப்பு கூட ஏற்படும் என்கிறார்கள்.

ஜப்பானில் அப்படி ஒரு சம்பவம் அந்தக் காலத்தில் நடந்துள்ளதாம். ஒரு ஜப்பானியப் பெண்ணும், ஆணும் உடலுறவில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பெண் ஆர்கஸத்தை அடைந்தபோது அந்த ஆண், தனது காதலியின் உதடுகளைக் கவ்வி நீண்டநேரம் ஆழமான முத்தத்தைக் கொடுத்துள்ளான். செக்ஸ் உச்சத்தை அடைந்ததால் ஏற்பட்ட ரத்த அழுத்தத்துடன், இந்த ஆழமான முத்தமும் சேர்ந்து, மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டு அந்தப் பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டாளாம்.

அதேபோல சீனாவில் ஒரு பெண் மிகவும் ஆழமான முத்தத்தை வாங்கியபோது அவளது காது செவிடாகி விட்டதாம்.

இது உண்மைதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். வாயோடு வாய் பொருத்தி, உதடுளை இறுக்கமாக கவ்வியபடி ஆழமாக முத்தம் கொடுக்கும்போது வாய்க்குள் காற்று புக முடியாத நிலை ஏற்படுகிறது. இது பிரச்சினையைத் தரும் என்பது உண்மைதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

உதடோடு உதடு பொருத்தி முத்தமிடும்போது இருவரது வாய்க்குள்ளும் கிட்டத்தட்ட 10லட்சம் பாக்டீரியாக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன என்பது இன்னொரு எச்சரிக்கைச் செய்தி. முத்தமிடுவதன் மூலம் சில வகை நோய்களும் கூட உடல் விட்டு உடல் மாறும் வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம், முத்தமிடுவதால் எச்ஐவி பரவுவதில்லை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று.

செக்ஸ் உறவில் முத்தம் தவிர்க்க முடியாத ஒன்று. செக்ஸ் 'யுத்தமே', முத்தத்தில் ஆரம்பிப்பதுதான். இப்படிப்பட்ட முத்தத்தை ஹாலிவுட் சினிமாப் படங்கலில் மிக அழகாக சித்தரித்துள்ளதையும் நாம் காண முடியும்.

உலகிலேயே முதல் முறையாக முத்தக் காட்சிஇடம்பெற்ற படம் ஹாலிவுட் படம்தான். 1896ம் ஆண்டு முதல் முத்தக் காட்சி ஹாலிவுட் படம் ஒன்றில் இடம் பெற்றது. அதேபோல முதல் முறையாக பிரெஞ்சு முத்தம் இடம் பெற்ற ஆண்டு 1961ம் ஆண்டாகும்.

அதேபோல 1926ம்ஆண்டு ஜான் பாரிமோர் என்ற ஹாலிவுட் கலைஞர் நடித்த படத்தில் கிட்டத்தட்ட 127 முத்தக் காட்சிகள் இடம் பெற்றிருந்ததாம். இன்று வரை இதுதான் முத்த ரெக்கார்டாக உள்ளது.

மோகம் தரும் முத்தத்தில் சில வகை...

ப்ரீஸ் கிஸ். இது படு வேடிக்கையானது. சின்ன ஐஸ் கியூபை எடுத்து உங்களது வாய்க்குள் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் வாயைத் திறந்து, உங்களது பார்ட்னரை நெருங்கி அந்த ஐஸ் கியூபை அவரது வாய்க்குள் பாஸ் செய்யுங்கள். உங்களது நாவால்தான் பாஸ் செய்ய வேண்டும், அப்படியே துப்பக் கூடாது. பிறகு முத்தமிடுங்கள். ஜில்லென்றிருக்கும்.

பிரெஞ்ச் கிஸ். இது உலகப் புகழ் பெற்றது. சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த முத்தத்திற்கு ஆன்மாவின் முத்தம் என்று பிரெஞ்சுக்காரர்கள் பெயர் வைத்துள்ளனர். இரு நாவுகள் சம்பந்தப்பட்டது இது. இந்த முத்தத்தின் மூலம் இருவரின் ஆன்மாவும் ஒன்றாக சங்கமிப்பதாக பிரெஞ்சுக்காரர்கள் நம்புகிறார்கள். இதற்குப் பிரெஞ்சு முத்தம் என்று பெயர் இருந்தாலும் கூட பிரான்ஸில் இதை 'இங்கிலீஷ் கிஸ்' என்றுதான் அழைக்கிறார்களாம்.

ப்ரூட்டி கிஸ். இதுவும் கிட்டத்த ப்ரீஸ் முத்தம் போன்றதுதான். ஸ்டிராபெர்ரி, திராட்சை அல்லது நறுக்கிய சின்ன மாம்பழத் துண்டு ஒன்றை எடுத்து அதை உதடுகளுக்கு நடுவில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உங்களது பார்ட்னரின் உதட்டுடன் வைத்து அழுத்துங்கள். அது நசுங்கி வழியும்போது இருவரும் இணைந்து அதைப் பருகி இந்த ப்ரூட்டி கிஸ்ஸை அனுபவிக்கலாம்.

ஹாட் அன்ட் கோல்ட் கிஸ். முதலில் உங்களது பார்ட்னரின் உதடுகளை சிறிது நேரம் மென்மையாக சுவையுங்கள். அதன் பின்னர் சற்று பலமாக ஊதுங்கள். முதலில் குளிர்ந்து போயிருக்கும் உதடுகள், நீங்கள் ஊதுவதன் திடீர் வெப்பத்தை சந்திப்பார் உங்களது பார்ட்னர். கூடவே இன்னொன்னும் கிடைக்குமா என்று கோரிக்கையும் வைப்பார்.

லிக் கிஸ். முத்தம் கொடுப்பதற்கு முன்பு உங்களது பார்ட்னரின் உதடை, அது மேல் உதடாகவும் இருக்கலாம், கீழுதடாகவும் இருக்கலாம், மெதுவாக உங்களது உதட்டால் தடவிக் கொடுங்கள். உணர்ச்சிகள் தூண்டப்படுவதை அனுபவிப்பீர்கள். பிறகு முத்தத்திற்குப் போகலாம்.

நெக் நிப்பிள் கிஸ். உதடுகளில் முத்தமிடுவதற்கு முன்பு உங்களது பார்ட்னரின் கழுத்தை மென்மையான முத்தத்தால் ஒரு 'சுற்று சுற்றி' விட்டு பின்னர் உதடுகளுக்கு் போங்கள்.

டாக்கிங் கிஸ். இது படு ஜாலியானது, கூடவே உணர்வுகளைத் தூண்டக்கூடியது. இருவரும் நேருக்கு நேர் முகத்தை வைத்துக் கொள்ளுங்கள். இருவரது உதடுகளும் நெருக்கமாக இருக்க வேண்டும். உதட்டோடு உதடு உரச, ஆனால் முத்தம் தரக் கூடாது, எதையாவது சிறிதுநேரம் ஜாலியாக பேசிக் கொண்டிருங்கள். உதடுகள் உரசும், உணர்வுகள் தூண்டப்படும், உள்ளங்கள் நெருங்கி வரும், பின் தொடர்ந்து வரும் உறவு வலுப்படும்.

சொல்லிக் கொண்டே போகாலம் முத்தத்தின் கதையை. உடல்கள் இணைவது மட்டும் உறவுகள் அல்ல, அன்பும் பரிமாறிக் கொள்ளப்பட வேண்டும். அதற்கு முத்தம் ஒரு நல்ல கருவி என்பதால் முத்தத்தில் ஆரம்பியுங்கள் உங்கள் இனிய உறவுகளை.

How to win Wife's Heart

அலுவலகம், நண்பர்கள் என ஆண்கள் பொழுதுபோக்க எத்தனையோ வழிகள் உள்ளன. இல்லத்தை வழிநடத்தும் பெண்களுக்கு வீடு, கணவர், குழந்தைகள்தான் எல்லாமே. குடும்பமே உலகம் என்று இருக்கும் பெண்களை மகிழ்ச்சியடைச்செய்ய சில வழிமுறைகளை மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒருநாள் வீட்டுவேலை

எத்தனை நாள்தான் வீட்டுவேலைகளை பெண்களே செய்வது. விடுமுறை நாளன்று நண்பர்களை பார்க்கப் போகிறேன் என்று டேக்கா குடுக்காமல் சின்ன வேலைகளில் உதவினால் பெண்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஏதாவது ஒருபொருளை விரும்பி கேட்டால் உடனே மறுக்காமல் பார்க்கலாம் என்று சொன்னாலே போதும் பெண்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விடுவார்கள்.

பேசுவதை கேளுங்கள்

நான் என்ன சொன்னாலும் என் கணவர் கேட்டுக்குவார் என்று பெருமையாகக் கூறுவதைத்தான் பெண்கள் விரும்புகின்றனர். மாத சம்பள பணத்தை அப்படியே கொண்டு வந்து, மனைவி கையில் கொடுத்துவிட்டு ஒவ்வொரு நாளும் செலவுக்கு அவர்களிடம் கேட்க வேண்டுமாம். கேட்ட உடன் தராமல் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு தரும்போது மனைவியின் மனதிற்குள் மகிழ்ச்சி பொங்குமாம்.

சிரித்த முகம்

அலுவலகத்தில் இருந்து வரும்போதே டென்சனை சுமந்து கொண்டு வராமல் சிரித்த முகத்தோடு கணவர் வரவேண்டும் என்பதைத்தான் அநேகம் பெண்கள் விரும்புகின்றனர். மலர்ந்த முகத்துடன் வீட்டுக்கு வரும் கணவரை மகிழ்ச்சி பொங்க வரவேற்க பெண்களும் ரெடியாகத்தான் இருக்கின்றனர்.

எங்காவது வெளியில் சென்றால் அழகாக உடை அணிந்து செல்வதைப்போல வீட்டிற்குள் இருக்கும் போதும் கணவர் ரசனையாக உடை அணியவேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.

சமையல் எப்படி இருந்தாலும் `நல்லாயிருக்கு என்று கூறினால் மகிழ்வார்களாம். நன்றாக சமைக்கத் தெரிந்தால்கூட சும்மா ஒரு பேச்சுக்கு `என் அம்மா என்னை சமையல் அறை பக்கம் எட்டிப்பார்க்கவே விடவில்லை' என்று பந்தாவாக சொல்லி மகிழ்வார்களாம்.

பர்சேஸ் செல்வது முக்கியம்

கடையில் சென்று என்ன பொருள் வாங்கினாலும் மனைவியை அழைத்துச்செல்லுங்கள் ஏனென்றால் ஒரு கைக்குட்டை வாங்க வேண்டுமென்றால் கூட என்னைக் கேட்காமல் என் கணவர் வாங்கமாட்டார் என்று பெண்கள் பெருமையாக பேசுவதற்கு அது உதவும்.

கணவரோடு புடவைகடைக்குச் சென்று சும்மாவாவது அவரை காத்திருக்க வைத்துவிட்டு எட்டு மணிநேரம் கழித்து வெளியே வந்து, `எந்த புடவையும் எனக்கு பிடிக்கலைங்கன்னு' சொல்லிட்டு, முகத்தை அப்பாவித்தனமாய் வைத்துக்கொண்டு `பக்கத்து கடைக்கு போகலாமாங்க?' என்று கேட்கும்போது கணவர் மறுக்காமல் சரி என்று சொன்னால் மகிழ்ச்சியில் மனைவியின் உச்சி குளிர்ந்து போகுமாம்.

மனைவிதானே சொல்றாங்க, கேட்டுக்குவோம்!

Health Benefits of KISS

அன்பை வெளிப்படுத்தும் காரணியாக உள்ள முத்தம் பல்வேறு பலன்களை கொண்டிருக்கிறது. முத்தமிடுவது என்பது சாதாரணமானதல்ல அது வியக்கத்தக்க ஆச்சரியத்தக்க பலன்களை தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கொடுப்பவரை விட பெறுகின்றவருக்குத்தான் முத்தத்தின் பலன்கள் அதிக அளவில் சென்றடைவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக்கொள்வதன் மூலம் ஏற்படும் பலன்கள் உங்களுக்காக

உறவின் தொடக்கம்

முத்தம் என்பது தாம்பத்யத்தின் ஆரம்பம். உறவை தொடங்குவதற்கான சாவியாக முத்தம் செயல்படுகிறது.

உறவு பலப்படும்

முத்தம் என்பது தம்பதியர்க்கிடையேயான உறவை பலப்படுத்தும். காதலர்கள் ஒருவருக்கொருவர் பிணைப்பை உறுதிப்படுத்தவும் முத்தம் உதவுகிறது.

மன அழுத்தத்தை போக்கும்

மன அழுத்தத்தைப் போக்குவதில் முத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் முத்தமிட்டுக்கொள்வதின் மூலம் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

முத்தத்தின் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறதாம். 30 நிமிடங்கள் தொடர்ந்து முத்தமிட்டுக்கொள்வதன் மூலம் அலர்ஜி நோய் சரியாகிவிடும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உடலை இளைக்கச் செய்யும் முத்தம்

தினமும் 20 நிமிடங்கள் முத்தமிட்டுக்கொள்வது உடற்பயிற்சி செய்வதற்கு சமமாகும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 20 நிமிட முத்தம் 22 கலோரிகளை எரிக்கிறதாம். உடல் இளைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் அடிக்கடி முத்தமிட்டுக்கொள்ளலாம்

சுறுசுறுப்பாக்கும் முத்தம்

உடலில் ஏற்படும் சோர்வை நீக்கி சுறுசுறுப்பாக்குவதில் முத்தம் முக்கிய பங்காற்றுகிறது. முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கச் செய்வதில் முத்தத்தின் பங்கு அதிகம்

வறட்சியைப் போக்கும்

முத்தமிடுவதன் மூலம் வாயில் சலைவா எனப்படும் உமிழ்நீர் உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால் உதடு வறட்சி நீங்குவதோடு ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது. வாய்துற்நாற்றத்தை அகற்றி கெட்ட பாக்டீரியாவை அடியோடு அகற்றுகிறது.


ஸ்பரிசம் என்பது தம்பதியரிடையே உறவின் போது காதலை வெளிப்படுத்தும் உன்னத வழி. ஆனால் தொடாமலேயே காதலை வெளிப்படுத்த முடியுமா? உணர்வு பூர்வமான செய்கைகளினால் காதலை உணர்த்தி பெண்களின் உணர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்யமுடியும்.

அது எப்படி..? .தொடர்ந்து படியுங்கள்

பூக்களின் வாசம் தரும் இதம்

மலர்களின் சுகந்தம் தரும் இதம் பெண்மையை மலர வைக்கும். காதலை சொல்லாமலேயே சொல்லும் மலர்கள் பெண்களை சரியான மூடுக்கு கொண்டு வரும். கைகள் பேசும் பாஷையை அந்த மலர்கள் பேசும் அப்புறம் பாருங்கள்.

அருகாமையில் அமருங்கள்

துணையின் அருகில் நெருக்கமாக அமருங்கள், தொடவேண்டாம். கூந்தலையும், காதுமடலையும் லேசாக முகர்ந்து பார்த்தாலே போதும். உணர்ச்சி வசப்படத் தொடங்கி விடுவார்கள் பெண்கள். உங்களின் உணர்வுப்பூர்வமான இந்த நெருக்கம் தொடாமலேயே உங்களின் அதீத காதலை வெளிப்படுத்தும். இருவருக்குமிடையே நெருக்கத்தை அதிகரிக்கும்.

திராட்சையும் ஸ்ட்ராபெரியும்

காதலை வெளிக்கொணரும் மலர்களில் திராட்சைக்கும், ஸ்ட்ராபெரிக்கும் தனி பங்குண்டு. இந்த பழங்களைக் கொண்டு பெண்களில் இதழ்களைத் தீண்டலாம். கைகளால் தீண்டுவதை விட இந்த பழங்களினால் தொடுவது அதீத கிளர்ச்சியை ஏற்படுத்துமாம். அதேபோல் சாக்லேட், கேக் கிரீம்களும், காதலின் உணர்வை வெளிப்படுத்தும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

பறவையின் இறகு

பெண்களின் மென்மையான உடலை கைகளால் தொடுவதை விட பறவையின் இறகினால் லேசாக வருடுவது இதமான கிளர்ச்சியை ஏற்படுத்தும். அவர்களின் அந்த கிளர்ச்சி ஆணின் உணர்வுகளையும் அதிகரிக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள். மென்மையான தோலினை மயிலிறகால் வருடும் போது ஏற்படும் உணர்ச்சிக்கு ஈடு இணையில்லை என்கின்றனர் அவர்கள்.

பேச்சிலேயே கிளர்ச்சியூட்டலாம்

தொட்டுத்தான் உணர்த்த வேண்டும் என்பதில்லை. பேச்சிலேயே கூட கிறங்கடிக்கலாம் என்கின்றனர் உளவியலாளர்கள். காதலை சொல்ல நெருக்கமான ஒரு சூழலில் மென்மையான, ரகசியத்தைப் போல பேசும் பேச்சிலும் கூட கிளர்ச்சியூட்டலாம் என்கின்றனர்.

இந்த வழிமுறைகளை நீங்கள் அப்ளை செய்து பாருங்கள். அப்புறம் என்ன நீங்கள் தொடவே வேண்டாம். உங்களுக்கு வேண்டியது தானாகவே கிடைக்கும்.


மனித வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒன்று பாலுணர்வு. இயற்கையாக தோன்றும் இந்த உணர்வை ஆரோக்கியமானதாக மாற்றுவதில்தான் இருக்கிறது மனிதர்களின் வெற்றி. தம்பதியர்களிடையே ஆரோக்கியமான உறவு மேம்பட இந்த பாலுணர்ச்சியே முக்கிய காரணியாக இருக்கிறது. இதனை சிறப்பாக வெளிப்படுத்த நமது சமையலறையே முக்கிய சாதனமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர் வல்லுநர்கள்.

ஒருவரின் ஆரோக்கியம், மகிழ்ச்சி, இளமையை தக்க வைப்பதில் தாம்பத்யத்தின் பங்கு முக்கியமானது என்று தெரிவித்துள்ளார் ஹார்மோன் மற்றும் இளமையியல் சிறப்பு வல்லுநர் சிசில்லா டிரிகியர். லண்டனின் மருத்துவமனை வைத்துள்ள அவர் 25 ஆண்டுகளாக தனது மருத்துவமனைக்கு வந்த தம்பதியர்களை ஆய்வு செய்து இந்த உண்மையை கண்டறிந்ததாக குறிப்பிட்டுள்ளார். தினசரி தாம்பத்ய உறவில் ஈடுபடும் தம்பதியர் இளமையாகவும், ஆரோக்கியமாகவும், உடல் வனப்புடனும், மகிழ்ச்சியாகவும் இருப்பது தெரியவந்ததாக டெய்லி மெயில் இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

ஆரோக்கிய தெர்மா மீட்டர்

பாலுணர்ச்சியும், அது தொடர்பான ஆர்வமுமே நமது உடல் நலத்தை அளக்கும் தெர்மா மீட்டர் என்று டிரிகியர் குறிப்பிட்டுள்ளார்.

பாலுணர்ச்சியை தூண்டுவது என்பது அவர்கள் உட்கொள்ளும் உணவு முறையை சார்ந்ததாக இருந்துள்ளது. சத்தான உணவு உடல் நலத்திற்குத் தேவையான ஹார்மோன்களை சிறப்பாக செயல்பட வைப்பது தெரியவந்துள்ளது. அதன் மூலம் பாலுணர்ச்சியை தூண்டுவதற்கான ஹார்மோன்களின் சுரப்பு அதிகரித்தது கண்டறியப்பட்டதாக மருத்துவர் கூறியுள்ளார். இதன் மூலமே தினசரி தாம்பத்ய உறவில் ஈடுபட முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தினசரி உறவு என்பது உடற்பயிற்சி செய்வதைப்போல அவசியமானது என்று கூறும் மருத்துவர், இதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு இழந்த இளமையை மீட்டெடுக்க முடியும் என்கிறார். அதற்கான முக்கியமான மூன்று வழிமுறைகளை அவர் தெரிவித்துள்ளார்.

மூளைக்கு உற்சாகம்

எந்த செயலுமே முதலில் தொடங்குவது மூளையில் இருந்துதான். மனித உறுப்புக்களில் மிகப்பெரிய பாலுணர்ச்சியை தூண்டக்கூடிய ஆர்கன் மூளைதான் என்பதை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அங்கு உற்பத்தி செய்யப்படும் ஹார்மோனும், ரசாயனமாற்றமும்தான் பாலுணர்வின் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்கிறது. அதன் மூலம்தான் உறவின் போது வெளிப்படும் காதல், அளவுகடந்த கற்பனா சக்தியுடன் துணையை கவர மேற்கொள்ளும் சாகசம், அதனால் பெண்கள் அடையும் உச்சநிலை ஆகியவை ஏற்படுகின்றன. இவை எல்லாம் நாம் உண்ணும் உணவில்தான் இருப்பதாக தெரிவிக்கின்றார் மருத்துவர்.

எனவே முதலில் உண்ணும் உணவுமுறையில் அக்கறை கொள்ளவேண்டும். இதன் மூலம் சக்தியானது நரம்புகள் வழியே மூளையை அடைகிறது. சிறப்பாக செயல்பட முடியும் நம்பிக்கை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான உறவில் ஈடுபட மூளையானது தூண்டுகிறது.

ஹார்மோன்களின் ஒத்துழைப்பு

பாலுணர்ச்சியை தூண்டுவதில் ஹார்மோன்களின் பங்கு அவசியமானது. அவைதான் ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கையை சீராக வைக்க உதவுகிறது. இதில் மூன்று ஹார்மோன்களின் பங்கு முக்கியமானது. ஈஸ்ட்ரோஜென். டெஸ்ட்டிரோஜென், ஆகிய ஹார்மோன்கள் சிறப்பாக செயல்படுவதை சரிவிகிதமாக வைப்பதில் மீன், இறைச்சி, ஆகியவற்றில் உள்ள நல்ல கொழுப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை ஹார்மோன்களை தூண்டி அவற்றை சீரான முறையில் சுரக்கச்செய்கின்றன. புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதும் அவசியம் என்று தெரிவிக்கிறார் டிரிகியர்.

சக்தியின் ரகசியம்

ஆரோக்கியமான உறவு உடலின் சக்தியையும், உற்சாகத்தையும் அதிகரிக்கும். அதற்கு ஆரோக்கியமான அவசியமான உணவுகள் உதவுகின்றன என்கின்றனர் வல்லுநர்கள். இதன் மூலம் மனித வளர்ச்சியை அதிகரிக்கும் ஹார்மோன் (Human Growth Hormone (HGH).) சுரப்பு சீராவதோடு பாலுணர்ச்சியை தூண்டும் ஹார்மோன்கள் சுரப்பினை அதிகரிக்கச்செய்கிறது. தொடர்ச்சியான ஆரோக்கிமான உறவுக்கு புரதச்சத்து நிறைந்த கோழி இறைச்சி, மீன், பன்றி இறைச்சி ஆகியவை உதவுகின்றன என்று கூறுகின்றார் மருத்துவர்.

உண்ண உணவும், சுவாசிக்க காற்றும் மனிதன் உயிர்வாழ அத்தியவசிய தேவையாக உள்ளது போல ஆண் பெண் இடையேயான உறவும் அவசியமான ஒன்றுதான் என்று கூறுகின்றனர் உளவியலாளர்கள். அன்பான தாம்பத்யம் ஆயுளை நீட்டிக்கச் செய்வதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

வயதான பிறகும் முழுமையான தாம்பத்யத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆஸ்துமா, இரத்த அழுத்தம், இதயகோளாறுகள், போன்ற நோய்கள் குணமடைவதாக ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது. மனநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தாம்பத்ய உறவு கொள்வதன் மூலம் உற்சாகம் அதிகரித்து நோயின் தாக்கம் குறைவதாகவும் அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வயதுக்கு விடை கொடுங்கள்

ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுணர்வு உணர்ச்சியில் வயது வேறுபாடு எதுவும் இல்லை. ஆரோக்கியக் குறைவு, நோய், மருந்து மாத்திரைகள், மது, புகையிலை, போதை, சிகரெட், எண்ணெய், கொழுப்பு, அதிக எடை ஆகியவை உடலுறவில் ஆர்வம் தோன்றாததற்கு காரணமாகும்.

மாதவிடாய் நின்றாலும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரக்கும்வரை 50, 60 வயது வரையிலும் கூடப் பெண்களுக்கு உடலுறவில் ஈடுபாடு இருக்கும். அதனைப் போல, செக்ஸ் ஹார்மோன் டோஸ்டேரோன் சுரக்கும் 70, 80 வயதுவரை ஆண்களுக்கு உடலுறவில் இச்சையும், ஈடுபாடும் இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்

மனநிறைவும் திருப்தியும்

உடல் உறவின் உச்சக்கட்டத்தின் போது எண்டோர்பின்கள் மூளைக்குச் செல்வதால் இவை சிறந்த வலி நிவாரணியாகவும், தூக்க ஊக்கியாகவும் செயல்படுகின்றன. மேலும், அந்தச் சமயத்தில் வெளிப்படும் ஒப்பியட்டுகள் என அழைக்கப்படும் தூக்கக் கலக்கம் கலந்த நிலையையும், உடலில் களைப்பையும் அதே சமயம் முழு மனநிறைவான உணர்வையும் தருகின்றன.

நிம்மதியற்ற மனிதனுக்குத் திருப்தியையும், உடலுக்கு நல்ல ஓய்வுடன் ஆழ்ந்த தூக்கத்தையும் அளிப்பது உடலுறவு ஒன்று தான். ஒரு திருப்தியான புணர்ச்சிக்குப் பிறகு உடலும் மனமும் தளர்ந்து ஓய்ந்து தானாகவே தூக்க நிலைக்குப் போய்விடுவதாக பிரிட்டனிலுள்ள இராயல் சொசைட்டி மருத்துவக் கழகம் கண்டறிந்துள்ளது.

நோய்கள் குணமடையும்

தாம்பத்ய உறவினால் ஏற்படும் உணர்ச்சிப் பிரவாகத்தினால் ஆஸ்துமா நோயுள்ளவர்களின் பிடிப்புகள் உடனே தடுத்து நிறுத்தப்பட்டு விடுகின்றன. அவ்வாறே உயர் இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களின் இரத்தக்குழாய் இறுக்கமும் தளர்த்தப்பட்டு விடுகிறது.

நரம்பு, தசைபிடிப்பு, முதுகுப் பிடிப்பு, வலி உள்ளவர்களுக்கும் உடலுறவு நல்ல பலனைத் தருகிறது என்று மருத்துவஆராய்ச்சிகள் கூறுகின்றன. டென்ஷன், மன இறுக்கம், கவலை, படபடப்பு இவைகளுக்கு உடலுறவு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. வயதான பிறகும் தாம்பத்யத்தில் ஈடுபடுபவர்கள் நீண்ட நாள்கள் உயிர் வாழ்கிறார்கள் என்று கூறுகிறது.

எனவே வயது எதுவாக இருந்தாலும் நிறைவான தாம்பத்யமும், உறவும் தொடர்ந்தால் மன நிம்மதிக்கும், உடல் நலனுக்கும் எந்தக் குறையும் இருக்காது என்பதில் சந்தேகமில்லை

Health benefits of Sex

தம்பதியரிடையே ஏற்படும் நெருக்கமான அன்னியோன்யமான செயல்களால் மன அழுத்தம் குறைவதோடு உயர்ரத்த அழுத்த நோய் குணமடைவதாக உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தம்பதியரிடையே ஏற்படும் சர்வரோக நிவாரணியாக உள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள். ஜெர்மனியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தம்பதியர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஒரு வார காலத்திற்கு தம்பதியர் ஒருவரை ஒருவர் கைகளை இறுகப்பற்றுவது முதல் உறவு வரையிலான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் உடல் ரீதியான தொடர்பால், கார்டிசோல் எனப்படும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் சுரப்பது குறைவாக இருப்பது தெரிய வந்தது.

நோய் எதிர்ப்பு சக்தி

உறவின் மூலம் டிஹெஇஏ எனப்படும் (Dehydroepiandrosterone) ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறதாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறதாம். மேலும் பாதிப்படைந்த தசை செல்கள் சரியாவதோடு, சருமத்திற்கும் பளபளப்பு ஏற்படுகிறது.

ஆயுள் அதிகரிக்கும்

உறவின் போது ஏற்படும் ஆர்கஸம் வாழ்வின் ஆயுளை நீடிக்கச் செய்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். தம்பதியரின் நெருக்கம், உடலில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துதோடு, கண்ணின் மணியை விரியச்செய்கிறது. இதனால் பார்வையை விரிவடைகிறது. நீரிழிவு போன்ற நோய்களைக் கூட தாம்பத்ய உறவு குணப்படுத்துகிறதாம். புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்துவதோடு அறவே குணப்படுத்தவும் செய்கிறதாம். மார்பகப் புற்றுநோயை குணப்படுத்துவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மூளைக்கு புத்துணர்ச்சி

உறவின் போது ரத்த ஓட்டம் அதிகரித்து மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக கிடைக்கச் செய்கிறது. இதன் மூலம் மூளை புத்துணர்ச்சியடைவதோடு உடல் உறுப்புகள் சுறுசுறுப்படைகின்றன. உடலில் கழிவுகள் எளிதில் வெளியேற்றப்படுவதால் உடலும், உள்ளமும் லேசான உணர்வை பெறுகின்றன.

இளமை தரும் மருந்து

30 நிமிட உறவானது உடலில் 85 கலோரிகளை எரித்து உடலை கட்டுகோப்பாக வைக்கின்றதாம். எனவே செக்ஸ் மிகச்சிறந்த எக்ஸர்சைஸ் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது உடல் ரீதியான பிரச்சினைகளை போக்குவதோடு உள்ளரீதியான இறுக்கத்தையும் அகற்றுகிறது என்பது உளவியலாளர்களின் கருத்து.

வலிநிவாரணி

தாம்பத்யமானது வலி நிவாரணியாக திகழ்கிறது. உறவின் மூலம் ஹார்மோன் சுரப்பு அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதாம். இது தலைவலி, தசைவலி போன்றவைகளையும் நீக்கும் வலிநிவாரணியாகவும் விளங்குகிறது.

ரத்த அழுத்தம் கட்டுப்படும்
தாம்பத்ய உறவின் மிக முக்கியமான நன்மையாக மன அழுத்தம் குறைவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆய்வில் மன அழுத்தமான சூழலில் இருந்த தம்பதியர் உறவிற்குப்பின் தங்களின் மன அழுத்தம் குறைந்த தாக தெரிவித்தனர். அவர்களின் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது கண்டறியப்பட்டது. எனவே காதலுக்கும், மன அழுத்தத்திற்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. நெருக்கமான உறவு கொள்வதன் மூலம் , மன அமைதி ஏற்படுவதோடு ஆரோக்கியமான உடல்நலம் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Mom's Love make children brilliant

குழந்தைகளிடம் அன்பாய் அனுசரனையாய் பேசும் அம்மாக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. அதாவது, அம்மாக்கள் அன்பாய் பேசினால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அபரிமிதமாய் இருக்குமாம். அவர்களின் அறிவு வளர்ச்சி அற்புதமாய் இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

குழந்தைகளில் மூளை வளர்ச்சிக்கும் பெற்றோர்களின் செயல்பாட்டிற்கும் உள்ள தொடர்பு குறித்து வாஷிங்டன் பல்கலைக் கழகம் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், அம்மாக்களின் அன்புக்கும் தொடர்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

அன்பால் அறிவு வளரும்

நர்சரி பள்ளிகளில் பயிலும் 3 முதல் 6 வயதிற்குட்பட்ட மாணவர்களிடம் ஆய்வாளர்கள் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். மனரீதியான அவர்களின் பிரச்சினைகள், ஆரோக்கிய குறைபாடு போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி 92 குழந்தைகளின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்ததில் அவர்களில் பெரும்பாலோனோர் மன உளைச்சலினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

அவர்களின் சில குழந்தைகள் மன உளைச்சல் இன்றி காணப்பட்டனர். அதற்குக் காரணம் அந்த குழந்தைகளுக்கு கிடைக்கும் அம்மா பாசம் தான் என்பது தெரியவந்தது. ஆய்வின் போது குழந்தைகளை அவர்களின் அன்னையரிடம் பேசவைத்து அது படப் பதிவு செய்யப்பட்டு பின்னர் குழந்தைகளுக்கு காண்பிக்கப்பட்டது. குழந்தைகளிடம் அதிக அன்பும், பாசமும் காட்டும் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாசத்தோடு அதீத நினைவாற்றல் திறனையும் ஊட்டுகின்றனர் என்பது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு முடிவு தேசிய அகடெமி ஆப் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

பேச்சுத்திறன் வளரும்

இதேபோல் லண்டனில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். பிறந்த 3 மாதமே ஆன 50 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அந்த குழந்தைகளிடம் அவர்களின் அன்னையர்களை அடிக்கடி பேச்சு கொடுக்கும்படி தெரிவித்தனர். மேலும், விலங்குகளின் படங்களை காட்டி அவற்றின், பெயர்களை கற்றுக் கொடுக்கும்படியும் வலியுறுத்தப்பட்டது.

அவர்கள் கொடுத்த பயிற்சியின்படி 3 மாத குழந்தைகள் படங்களை பார்த்து அவற்றின் பெயர்களை உச்சரிக்க தொடங்கினர். மேலும் பல படங்களின் மூலம் அவற்றின் பெயர்களை தெரிவித்தனர். இந்த ஆய்வின் மூலம் குழந்தைகளிடம் அன்னையர் பேச்சு கொடுத்தாலே போதும், குழந்தைகளின் அறிவுத்திறன் வளரும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அம்மாவின் அன்பு

பொதுவாக குழந்தைகள் விளையாடி மகிழ அழகிய பொம்மைகள், விளையாட்டு சாதனங்கள் போன்றவற்றை பெற்றோர் வாங்கி கொடுக்கின்றனர். அவை அவர்களின் அறிவாற்றலை வளர்க்கும் என இதுவரை நம்பப்பட்டு வந்தது. இவற்றை எல்லாம் விட அன்னையர்களின் அன்பே குழந்தைகளை அறிவாளிகளாக மாற்றுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

குடும்பத்தோடு அமர்ந்து உணவருந்தும்போது ஊட்டச்சத்துள்ள உணவுகள் குழந்தைகளுக்கு அதிகம் கிடைத்தன. குழந்தைகளும் அவற்றை ஆர்வமுடன் உட்கொண்டதாக மனோத்தத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒன்றாக அமர்ந்து உண்ணும் குடும்பம் ஆரோக்கியமான குடும்பம் என்றும் இவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.,

எல்லா ஆய்வுகளுமே வீட்டில் குடும்பமாக அமர்ந்து உண்ணுவது சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவைப் பெறக்கூடிய நல்லதொரு வழியாகவே சுட்டிக்காட்டுகின்றன. நம் நாட்டில் காலை நேரத்தில் குழந்தைகளுக்கு அவசரமாக ஊட்டி விடுவதும், மதியம் பள்ளியில் சாப்பிடுவதும் வழக்கம் என்றாகிவிட்டது. இரவு நேரங்களில் குழந்தைகளுடன் அமர்ந்து ஒன்றாக உணவருந்துவதை பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். அதேபோல் விடுமுறை நாட்களில் மூன்று வேளையும் ஒன்றாக அமர்ந்து உணவு உட்கொள்வது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்கின்றனர் உளவியலாளர்கள்.

Maintain your fingure beautifully using Home Remedies

வேலைப்பளுவினால் கைகள் சொர சொரப்பாக மாறிவிடும். விரல்களின் முட்டிகளில் கருமை ஏறிவிடும். முக அழகுக்கு ஒதுக்கும் நேரத்தை கைகளையும், விரல்களையும் பாதுகாக்க நேரம் செலவிடுவதில்லை. மென்மையான கைகளும், கருமை விரல்களும் போக அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்கள் மென்மையான கைகள் கிடைக்கும்

எலுமிச்சை வைத்தியம்

கை விரல்களின் கருமை போக்குவதில் எலுமிச்சை மிகவும் சிறந்தது. தினமும் எலுமிச்சையை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து அதனை கை விரல்களில் தேய்க்கவும் பளிச் தோற்றம் கிடைக்கும்.

எலுமிச்சை சாறுடன் சிறிதளவு சீனி சேர்த்து கலந்து அதனை கை முட்டிகளில் பூசி நன்றாக ஸ்கரப் கொண்டு தேய்க்கவேண்டும். பின்னர் மாய்ச்சரைசர் பூசவும். வாரம் ஒருமுறை ரெகுலராக செய்து வர கருமை காணமல் போகும்.

வெது வெதுப்பான நீரில் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து கைகளை 15 நிமிடங்கள் ஊற வைத்து பின் மென்மையான துணியில் கைகளை துடைக்க வேண்டும். இதனால் கைகள் மென்மையாகும், நகங்கள் பளிச் ஆகும்.

பால் ஏடு, ரொட்டித் துண்டுகள்

பால் ஏடு எடுத்து அதனை கை விரல்களில் மென்மையாக பூசி மசாஜ் செய்யவேண்டும். பின்னர் எலுமிச்சை தோல் கொண்டு அந்த இடத்தை நன்றாக தேய்த்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால் பட்டுப்போன்ற கைகளும், கை முட்டிகளில் கருமையும் மறையும்.

ரொட்டித் துண்டுகளை நைசாக உதிர்த்து அதனுடன் பால் கலந்து கருமையாக உள்ள இடங்களில் அப்ளை செய்யவும். பின்னர் தேய்த்து கழுவ கருமை மறையும்.

கைகளின் கருமை போக்குவதில் தயிர் சிறந்த பொருள். சிறிதளவு கெட்டித் தயிர் எடுத்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கைகளில் பூசி ஊறவைக்கவும். 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவ விரல்கள் பளிச் தோற்றம் தரும்.

ஆலிவ் எண்ணெய்

கோதுமை மாவு ஒரு ஸ்பூன் பால் ஏடு அல்லது எலுமிச்சை சாறு கலந்து முட்டிகளில் தேய்த்து 15 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் கழுவினால் மென்மையாகும்.

இரவு நேரத்தில் தூங்கும் போது கைகளில் ஆலிவ் ஆயில் பூசலாம். காலை நேரத்தில் எழுந்து வெதுவெதுப்பான நீரில் கழுவ கைகள் மென்மையாகும். நகங்கள் உடையாமல் பாதுகாக்க சிறிது வெண்ணெய் தடவினால் நகங்கள் உறுதியாகும்.

மேற்கூறப்பட்ட முறைகளில் தினசரி ஏதாவது ஒரு முறையை பின்பற்றி கைவிரல்களை கவனித்தால் விரல் முட்டிகளில் கருமை மறையும்.

Health Benefits of Mookiratai (Punarnava)

மூக்கிரட்டை தாவரம் தரையோடு படரும் கொடி இனத்தைச் சேர்ந்தது. நெருக்கமாக வளரும் இந்த தாவரத்தின் பூக்கள் வெள்ளையாகவும் மஞ்சளாகவும் இருக்கும். சாலையோரங்களிலும், வெளியிடங்களிலும் செழித்து வளர்ந்திருக்கும் இந்த தாவரம் மருத்துவ குணம் கொண்டது. இதன் இலைகள் கீரையாக சமைத்து உண்ணப்படுகிறது. இதனை தனியாக சமைத்து சாப்பிட்டால் கசப்பு சுவையுடன் இருக்கும் என்பதால் கூட்டாக சமைத்து சாப்பிடுவார்கள்.

கண் கோளாறு நீங்கும்

மூக்கிரட்டை கீரையை பறித்து நன்றாக அலசி எடுத்து பொடியாக நறுக்கி நெய் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் கண் தொடர்புடைய நோய்கள் நீங்கும். மூக்கிரட்டை கீரையை கசக்கி சாறு பிழிந்து சுத்தமான துணியில் வடிகட்டி அதனை கண்களில் இரண்டு சொட்டு ஊற்றினால் கண் எரிச்சல் நீங்கும்.இதனை உணவில் அடிக்கடி உபயோகித்து வர கண் தொடர்புடைய நோய்கள் எட்டிப் பார்க்காது.

சிறுநீர் கோளாறு நீங்கும்

சிறுநீர்க் குழாய் கோளாறுகளை இக்கீரை உணவு குணமாக்கும். சிறுநீர் கோளாறு உள்ளவர்கள் மூக்கிரட்டையை சமைத்து உண்ண இது சிறுநீரை சுலபமாக பிரித்து வெளியேற்றும். இது மலச்சிக்கலை போக்க வல்லது. மூக்கிரட்டை கீரை இதயத்திற்கு பலம் தரும், அதை நல்ல முறையில் இயங்கச் செய்யும்.

மூலநோய் குணமாகும்

மூக்கிரட்டைக் கீரையைக் கொண்டு அதைச் சுத்தம் செய்து, அம்மியில் வைத்து மைய அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து அரிசி மாவுடன் கலந்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து அடைபோல தட்டி சாப்பிடலாம். காலை, மாலை தொடர்ந்து ஏழு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து வகையான மூல நோய்களும், குணமாகும். இது காய்ச்சல் மற்றும் மலேசிய ஜூரத்தை போக்கும். மூட்டு வலிக்கு இது சிறந்த மருந்தாகும்.

இந்த கீரையை சாப்பிடும் போது அதிக காரம், மீன், கருவாடு, அதிக உஷ்ணம் தரும் உணவுகள், பழம் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது.

Hair care tips - Dedicated to my Sweet heart wife (Sumi alias Sumathi)

நீண்ட கருமையான கூந்தல் பெண்களின் சாமுத்ரிகா லட்சணங்களில் ஒன்று. முக பொலிவுக்கு அழகை கூட்டுவது கூந்தல். அடர்த்தியான, சுருட்டையான, கூந்தலை அடைவதில் எல்லா பெண்களுக்கும் ஆசை. தலைமுடி நமது தோற்றத்திற்கு பொலிவு தருவதோடு மட்டுமல்லாது, கருகருவென மிளிரும் தலைமுடி ஆரோக்கியத்தின் அறிகுறி. தலைமுடி, வெய்யில், வெப்பம், இவைகள் மூளையை தாக்காமல் காக்கிறது.

மூன்று வகை கூந்தல்

முகத்தை போலவே கூந்தல்களுக்கும் தனித்தன்மை உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான முடி அமைப்பு இருக்கும். கூந்தலை எண்ணைப்பசை மிகுந்த கூந்தல், வறண்ட கூந்தல், சாதாரண கூந்தல் என இயற்கையிலேயே மூன்று வகை உண்டு.

எண்ணை சுரப்பியான செபாசியஸ் சுரப்பி, சேபம் எண்ணையை அதிகம் சுரப்பதால் கூந்தலின் எண்ணை அதிகமாகும். எண்ணைப்பசை அதிகமானால் மயிர்க்கால்கள் அடைத்துக் கொள்ளும். தலையில் அழுக்கு சேரும். ஒரு சிலருக்கு எண்ணை சுரப்பி போதிய அளவு சுரக்காததால், கூந்தல் வறண்டு விடும். எண்ணை போஷாக்கில்லாததால் முடி பலவீனம் அடைந்து, உலர்ந்து உடையும். எண்ணை சுரப்பி சரியான அளவில் சுரந்தால், கூந்தல் ஆரோக்கியமாக வளரும். முடிப்பிரச்சனைகள் தோன்றாது.

கருமையான கூந்தல் அழகு

பச்சைபயறு,பூலாங்கிழங்கு இரண்டையும் கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.அதில் சிறிது எடுத்து தயிர் கலந்து தலையில் தடவி ஊறவைத்து குளிக்க தலையில் பொடுகுத் தொல்லை ஏற்படாது. முடி உதிராது. இதே கலவையில் சிறிது எடுத்துதேங்காய் எண்ணெய்,ரோஸ் வாட்டர், எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து சோப்புக்கு பதிலாக உடலில் பூசி குளித்தால் சருமம் அழகாக தோன்றும். முட்டையின் வெள்ளை கருவை தனியே பிரித்து எடுத்து அதனை தலையில் பூசி ஊறவைத்து 15 நிமிடம் கழித்து தலையை அலச கூந்தல் பட்டுப்போல் மென்மையாகும்.

ஊறவைத்த வெந்தயம்

உடலுக்கு குளிர்ச்சி தருவதில் வெந்தயம் சிறந்தது. வெந்தயத்தை நன்றாக ஊறவைத்து அதனை மைய அரைத்து தலையில் அரைமணிநேரம் ஊறவைத்து அலசினால் உடல் சூடு போகும். கூந்தல் உதிர்வது குறையும்.

மருதாணி மகத்துவம்.

முடி செழித்து வளர வாரம் ஒருமுறை தலைக்கு நல்லெண்ணெய் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.

மருதாணி,செம்பருத்தி,கருவேப்பிலை,வேப்பிலை,ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டுபின்பு தலைக்கு தேய்க்கவும்.இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும்.

கடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி கூந்தலில் தடவி வர நன்றாக முடி வளரும்.

செம்பருத்தி கருவேப்பிலை

செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி ஊறிய பின் நன்றாக தேய்த்து அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

கருவேப்பிலை ரெண்டு கொத்து, சின்ன வெங்காயம் நான்கு எடுத்து இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்துகுளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

அலையான கூந்தல்

ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நான்கு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின்னர் அதனை மெல்லிய வெள்ளைத் துணியில் கொட்டி வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும், அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும். ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.

ரசாயன ஷாம்புகள்

எப்பொழுதுமே ஒரு செய்முறை செய்தால் அதை தொடர்ந்து செய்யவேண்டும்.மாற்றிக் கொண்டே இருந்தால் முடி உதிர்வதை தடுக்க முடியாது.ஷாம்புக்கள் பயன்படுத்தும்போதும் இதே முறையை பின்பற்ற வேண்டும். அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினாலும் முடி உதிரும். அதே சமயம் சத்தான உணவுகள், பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொண்டாலும் முடி உதிர்வது குறையும்

இன்றைய இளைய தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சினை கூந்தல் உதிர்வது. உடல்சூடு, மாசடைந்த சூழல் காரணமாக தலையில் படியும் அழுக்கு, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவைகளினால் கூந்தல் உதிர்கிறது. எனவே கூந்தல் உதிர்வை தடுக்க அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள் உங்களுக்காக.

தலையில் உண்டாகும் அதிக சூடு காரணமாகவும் சிலருக்கு கூந்தல் உதிரும். எனவே சூடு உடம்பு கொண்டவர்கள் வாரத்தில் ஒரு நாள் மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம் அல்லது மருதாணிக்கு பதிலாக, வெந்தயக்கீரை அல்லது வெந்தயத்தை ஊற வைத்து அரைத்தும் தலையில் தேய்த்து குளிக்கலாம். வெந்தயத்துடன் கடலைப்பருப்பை சேர்த்து அரைத்து குளிப்பதும் நல்ல பலன் தரும்.

கூந்தலுக்கு ஈரம் எதிரி

தலைக்கு குளித்த பின் ஈரம் காயும் முன்பே சீப்பால் சீவுவதாலும் அதிகளவில் கூந்தல் உதிரும் வாய்ப்பு உள்ளது. எனவே அதை தவிர்க்க வேண்டும். நன்றாக காயவைத்த பின்பே பெரிய பல் உள்ள சீப் வைத்து சீவி பின்னவேண்டும்.

வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால், உடல் உஷ்ணம் மற்றும் தலையில் அழுக்கு சேர்வது ஆகியவை கட்டுப்படும். இதனால், கூந்தல் உதிருவது குறையும்.

செம்பருத்திப் பூ

செம்பருத்தி பூ இதழ்களை வெயிலில் நன்கு காயவைத்து, அவற்றை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து, முடியில் தடவினால் முடி கொட்டுவது குறையும். கறிவேப்பிலையை நைசாக அரைத்து, அதை வெயி லில் காயவைத்து, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தலையில் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.

சிக்கலுக்கு பை

தலையில் அதிகமாக சிக்கல் சேர்ந்து விட்டால், பெரிய பற்கள் உள்ள சீப்பை பயன்படுத்தி சிக்கல் எடுக்க வேண்டும். சிறிய பற்களை பயன்படுத்தினால், முடி அதிகளவில் உதிரும்.

ப்ரீ ஹேர் விட்டு சென்றால், சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வாகனங்களில் செல்லும் போதோ அல்லது நெடுந்தூரம் பயணம் செய்யும் போதோ, ப்ரீ ஹேர் விடாமல் தலையை பின்னி செல்லலாம்.

ஊட்டச் சத்துக்குறைவு

ஊட்டச்சத்து குறைவு காரணமாகவும் முடி உதிர்தல் பிரச்னை ஏற்படலாம். எனவே பழங்கள், காய்கறிகள், கீரைகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை அதிகளவில் உணவில் சேர்க்க வேண்டும். கசகசாவைப் பாலில் ஊறவைத்து அரைத்து பாசிப்பருப்பு மாவைக் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால், முடி உதிருதல் நிற்கும். முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து தலையில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து சீயக்காய் போட்டு குளித்தால், கூந்தல் உதிர்வது குறையும்.

How to win Husband's Heart

தம்பதியரிடையே சின்ன சின்ன ஊடல்கள் ஏற்படுவது வாடிக்கை. அதனையே ஊதிப்பெரிதாக்கி விரிசல் ஏற்படுத்தாமல் அன்பால் அதை சரியாக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகவும், கணவரின் மனம் கவரவும் சில வழிமுறைகளை தெரிவிக்கின்றனர் குடும்ப நல ஆலோசகர்கள்.

அன்பால் அரவணைப்பு

குடும்பத்தில் முதல் பிரச்சினையே பெற்றோர்களை கவனிப்பதில்தான் ஏற்படுகிறது. நம்முடைய பெற்றோர்களை எப்படி கவனிக்கிறோமோ அதேபோல கணவரின் பெற்றோர்களையும், கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும். அன்பால் அரவணைத்து அவர்களுக்கு மரியாதை அளித்தால் கணவரின் குட் புக்கில் டாப் தான் நீங்கள்.

கணவருக்காக சமையுங்கள்

கணவரின் மனம் கவர முதலில் அவரது வயிற்றுக்கு சரியான விருந்தளிக்க வேண்டும் என்று முன்னோர்கள் தெரிவிப்பர். எனவே சுவையாக சமைத்து சூடாக பரிமாருங்கள். வார இறுதி நாட்களில் ஸ்பெசல் சமையலாக இருக்கட்டும். அப்புறம் நீங்களும் அவருக்கு ஸ்பெசல்தான்.

மனதிற்குள் மத்தாப்பு
கணவரின் துணிகளை துவைத்துப் போடுவது ஒரு கலை. திருமணத்திற்கு முன் யார் வேண்டுமானாலும் துணிகளை துவைத்திருக்கலாம். ஆனால் திருமணத்திற்குப் பின்னர் தன்னுடைய துணிகளை மனைவி துவைத்துப் போடுவது கணவரின் மனதிற்குள் மத்தாப்பு பூக்கும்.

இனிமையான இரவு விருந்து
இரவு நேரத்தில் கணவரின் வருகைக்காக காத்திருந்து உண்பது உங்கள் மீதான அபிப்ராயத்தை அதிகரிக்கும். தனக்காக தன் மனைவி பசியுடன் காத்திருப்பாள் என்ற எண்ணமே கணவரின் மனதில் காதல் உணர்வுகளை அதிகரிக்கும். அப்புறம் சண்டையாவது ஒன்றாவது.

அழகாய் அசத்தலாம்

கணவருக்கு பிடித்தமான உடை அணிவது அவரது கண்ணை மட்டுமல்ல காதலையும் அதிகரிக்கச் செய்யும். அதுதான் திருமணமாகிவிட்டதே, இனி என்ன என்று உடலை கண்டுகொள்ளாமல் விடுவது குடும்ப வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்தும். எனவே உடலை கச்சிதமாய் வைத்திருங்கள். அதற்கேற்ப உடையணிந்தால் கணவர் உங்கள் கைகளில் என்பதை நீங்களே உணர்வீர்கள்.

கொஞ்சமாய் பேசுங்கள் நிறைய கேளுங்கள்

எப்பவுமே லொட லொட என நீங்கள் பேசிக்கொண்டிருப்பதை விட கணவரை பேசவிட்டு நீங்கள் கேளுங்கள். இது உங்கள் மீதான பாசத்தை அதிகரிக்கும். நம் பேச்சை கேட்க ஆள் வந்துவிட்டார் என்று அவரை அதீத உற்சாகத்தில் ஆழ்த்தும்.

கை கோர்க்கும் காதல்

இறுதியான, முக்கியமானது படுக்கையறையில் வெற்றிகளை விட தோல்விகள் தான் அதிகம் விரும்பத்தக்கதாக உள்ளது. எனவே விட்டுக்கொடுங்கள். அவர் தடுமாறினாலும் நம்பிக்கையூட்டுங்கள். நீங்கள் தோற்பது அவரது மனதில் இடம் பெறுவதற்கான வெற்றிக்கு வழி வகுக்கும்.

Indians are most happiest peoples in the world

கோடி கோடியாய் பணத்தை கொட்டிக் கொடுத்தாலும் மகிழ்ச்சியை விலை கொடுத்து வாங்கமுடியாது. ஏனெனில் மகிழ்ச்சி என்பது மனதோடு தொடர்புடையது. பணக்கார நாடுகள் என்று கூறப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சியில் ஏழைகளாவே உள்ளனர். ஆனால் உலகிலேயே அதிகம் மகிழ்ச்சியுடன் இருக்கும் மக்களின் பட்டியலில் இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.

உலக மக்களின் மகிழ்ச்சி பற்றி, இப்சஸ் குளோபல் நிறுவனம் ஒரு ஆய்வு மேற்கொண்டது. 24 நாடுகளில் 18,000 பேரிடம் மகிழ்ச்சி குறித்து கேள்வி கேட்கப்பட்டு அதனை உள்ளடக்கிய ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் சர்வதேச அளவில் மகிழ்ச்சியானவர்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது அதிகரித்துள்ளது. அதாவது, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 4ல் 3 பேர் வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், 4ல் ஒருவர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

மகிழ்ச்சியில் பணக்காரர்கள்

பொருளாதார நெருக்கடி, போர், இயற்கை பேரிடர் என பல்வேறு பிரச்னைகளுக்கு நடுவில் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளவர்களில் இந்தியர்கள், இந்தோனேசியர்கள் மற்றும் மெக்சிகோ நாட்டினர் முக்கிய இடம் பிடித்துள்ளனர். ஹங்கேரி, தென்கொரியா, ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்களில் மிகவும் குறைவானவர்களே மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்

ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் 15 சதவீதம் பேர் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர். மண்டலவாரியாக பார்த்தால் லத்தீன் அமெரிக்காவில் அதிகம் பேர் மகிழ்ச்சியாக உள்ளனர். வட அமெரிக்கா, ஆசியா-பசிபிக், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்ரிக்கா ஆகியவை அடுத்தடுத்த இடங்கள் பிடித்தன.

பொருளாதார ரீதியாக வசதியாக இருப்பவர்களிடம் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும் என்று கூற முடியாது. ஒருவர் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பணத்தைத் தாண்டி பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக, உறவுமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலாசாரம் உள்ள மக்கள் அதிக மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்று இப்சஸ் குளோபல் நிறுவனத்தின் துணைத்தலைவர் ஜான் ரைட் கூறியுள்ளார்.

Friday 10 February 2012

Summer Safety chill Tips

கோடை காலம் தொடங்கும் முன்னே சாலையில் அனல் கொதிக்கிறது. வெப்பத்தினால் பல்வேறு நோய் பாதிப்புகள் தோன்றுவது இயற்கை. குழந்தைகளுக்கு வேர்க்குரு, அம்மை, அக்கி போன்ற நோய்களும், உஷ்ணம் தொடர்பான நோய்களும் ஏற்படுவது இயற்கை. எனவே நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகள் உங்களுக்காக

நுங்கு, சந்தனம்

வெப்பத்தினால் வேர்க்குரு தொல்லை அதிகம் இருக்கும். கோடையில் இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடை பனை நுங்கு. இந்த நுங்கு கொண்டு வேர்க்குரு உள்ள இடத்தில் தேய்த்தால் பலன் கிடைக்கும். நுங்கு கிடைக்காதவர்கள் சந்தனத்தை பூசலாம்.

அக்கி, அம்மை நோய்

வெயில் காலம் என்றாலே குழந்தைகளுக்கு கட்டி, அம்மை, அக்கி போன்ற நோய்கள் ஏற்படும். அம்மை நோய் கண்டவர்களுக்கு செந்தாழம்பூ சிறந்த மருந்து. இந்த பூக்களின் மடல்களை இடித்து நீரில்போட்டு நன்றாக சுண்டும்படி காய்ச்ச வேண்டும். ஆறியபின்னர் காலை,மாலை இருவேளையும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர நோய் கட்டுப்படும்.

அக்கி நோய் உஷ்ணத்தினால் ஏற்படுவது. இதற்கு வெண்தாமரைப்பூவை கஷாயமாக போட்டு இருவேளைக்கு ஒரு ஸ்பூன் சாப்பிட உஷ்ணம் நீங்கும். பசலைக்கீரையை அரைத்து பசும் வெண்ணையில் குழைத்து அக்கியின் மேல் தடவி வர குணமாகும்.

வில்வ இலை மருந்து

உடலிலும், தலையிலும் ஏற்படும் கட்டிகளை குணப்படுத்த சீதாப்பழமர இலையையும், உப்பையும் சேர்த்து அரைத்து கட்டிமீது வைத்த கட்டவேண்டும். கட்டிகளின் மேல் எருக்கம்பாலை தடவிவர அவை விரைவில் பழுத்து உடைந்துவிடும். கண் எரிச்சலை போக்க வில்வம் பழம் சிறந்த மருந்து. வில்வம் பழத்தை நெருப்பில் இட்டு சுட்டபின், அதனை உடைத்து அதனுள் இருக்கும் விழுதை தலையில் தேய்த்துக்குளித்தால் எரிச்சல் நீங்கும்.

தண்ணீர் தண்ணீர்

கோடையில் தண்ணீர் மூலமாக நோய்கள் விரைவில் பரவும் என்பதால் எப்போதும் கையுடன் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துச் செல்வதே பாதுகாப்பானது. சுத்தமான தண்ணீர் குடிக்க வேண்டும். மிக முக்கியமாய் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் பாட்டில் குளிர்சாதனங்கள், மற்றும் தற்போது புற்றீசலாய் கிளம்பியிருக்கும் “எனர்ஜி டிரிங்” சமாச்சாரங்கள்.

கோடை காலத்தில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் காத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வெறும் தண்ணீர் இந்த பணியைச் செய்து விட முடியாது. காய்கறிகளில் ஏராளமான நீர்ச்சத்து உண்டு. முடிந்த அளவு காய்கறிகளை பச்சையாகவோ, கொஞ்சமாய் வேக வைத்தோ உண்பது மிகவும் சிறந்தது. அதிகமாய் வேகவைத்தோ, பொரித்தோ உண்பதில் எந்த விதமான பயன்களும் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

உஷ்ணம் தணியும்

உடல் உஷ்ணத்தில் அவதிப்படுகிறவர்கள் உணவில் வெந்தயத்தை அதிகம் சேர்த்தக்கொள்ளலாம். மணல்தக்காளி கீரை, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொண்டாலும் உஷ்ணம் தணியும். திராட்சைப்பழத்திற்கு உஷ்ணத்தை தணிக்கும் ஆற்றல் உண்டு. எனவே குழந்தைகளுக்கு திராட்சை கொடுத்தால் அது உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கி மலச்சிக்கலையும் போக்கும்.

தர்பூசணி, வெள்ளரிக்காய்

உடலின் வெப்பம் வெளியேற வேண்டியதும், உடல் குளிர வேண்டியதும் கோடை காலத்தின் தேவைகளில் ஒன்று. அதற்கு கொஞ்சம் கொஞ்சமாக உண்ணும் கார்போஹைட்ரேட் அடங்கிய உணவுப் பொருட்கள் உதவும். குறிப்பாக வேக வைத்த உருளைக்கிழங்கு, பீன்ஸ், பீட்டா ரொட்டி, அரிசி இவற்றை அதிகம் உண்ணலாம். வெங்காயம் நிறைய சாப்பிடுங்கள். வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் வெப்ப அரிப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்க வெங்காயத்திலுள்ள குவர்சடின் எனும் வேதியல் பொருள் உதவும்.
தர்பூசணி சாப்பிடுங்கள். தர்பூசணியில் 90 விழுக்காடு தண்ணீரே இருப்பதால், உடலின் தண்ணீர் தேவைக்கு சிறந்தது தர்பூசணி. தர்பூசணியை விட அதிக தண்ணீர் சத்துள்ள வெள்ளரிக்காயை உட்கொள்ளுங்கள் உடலுக்கு மிகவும் நல்லது.

Tips to enjoy Married Life

திருமணமான புதிதில் மனைவியின் மீது அதீத அக்கறை எடுத்துக்கொள்வது கணவரின் இயல்பு. சாதாரண காய்ச்சல், தலைவலி என்றால் கூட துடித்துப்போகும் அதே கணவன்தான் மணமாகி இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தங்களை கண்டுகொள்வதில்லை என்பது பெரும்பாலான பெண்களின் புகார். இதன் காரணமாகவே சின்ன சின்ன விசயங்கள் எல்லாம் பூதாகரமாக பார்க்கப்பட்டு பிரச்சினைகளாக உருவெடுகின்றன. பெண்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அலசும் கட்டுரை இது.

மனம் கவர்ந்தவரிடம் எதிர்பார்ப்பது

வெறும் உடல் ரீதியான உறவு மட்டுமே கணவரிடம் இருந்து பெண்கள் எதிர்பார்ப்பதில்லை. அதையும் தாண்டி மனதளவில் ஆறுதலாக இருக்கும் ஆண்களையே பெண்கள் விரும்புகின்றனர். பெண்களின் தேடுதல் மிகவும் பெரியது. அதை நிறைவேற்றும் ஆண்களை அவர்கள் பூஜிக்கின்றனர்.

பேசி புரியவைக்கலாம்

பேச்சு என்பது இரு மனங்களுக்கிடையேயான இறுக்கத்தை தளர்த்தும் ஆயுதம். மனதில் பாரம் என்றால் இருவரும் பேசுங்கள். அதிகமாக பேசுவது ஆறுதலைத் தரும். இருவருக்கிடையேயான நேசத்தை பகிர்ந்து கொள்ள பேச்சு உதவும்.

புறத்தோற்றத்தை ஒதுக்கித்தள்ளுங்கள்

மணமான புதிதில் ஒல்லியாக இருக்கும் பெண்கள் குழந்தை பெற்றவுடன் அவர்களின் உடல் குண்டாவது இயல்பு. இது அநேக ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விசயமாக இருக்கிறது. மனைவியின் புறத்தோற்றத்தை விமர்சனம் செய்யும் கணவர்கள் இன்றும் இருக்கின்றனர். இதனால் மனரீதியான பிரச்சினைக்கு பெண்கள் ஆளாகின்றனர். அழகு என்பது உருவத்தில் இல்லை. மனதில்தான் இருக்கிறது என்பதை புரியவைக்க வேண்டும். பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்ளும் ஆண்களே நல்ல துணைவர்களாக இருக்க முடியும்.

சின்ன சின்ன ரொமன்ஸ்

தாம்பத்ய உறவு மட்டுமே மணவாழ்க்கைக்கு முக்கியமில்லை. சின்ன சின்ன ரொமன்ஸ்களையும் பெண்கள் எதிர்பார்க்கின்றனர். பெண்கள் எதிர்பாராத நேரத்தில் அவ்வப்போது கொடுக்கும் முத்தம். சமையலறையில் சத்தமின்றி செய்யும் சில்மிசங்கள். மனைவியின் கைகளை பிடித்து உனக்கு நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தும் விதமாக காதோரம் கிசு கிசுப்பாக கூறும் ஐ லவ் யூ என்ற வார்த்தை என பெண்கள் எதிர்பார்ப்பது எத்தனையோ உண்டு. ஆனால் இவற்றை நிறைய ஆண்கள் செய்யத் தவறிவிடுகின்றனர்.

இனிய உறவின் உன்னதம்

ஆண்கள் அவசரக்காரர்கள். தங்களின் காரியம் முடிந்தவுடன் நிம்மதியாக ரெஸ்ட் எடுக்கப் போய்விடுவார்கள். ஆனால் பெண்களுக்கு எதையுமே ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். கணவருடனான நெருக்கத்தை அசை போடுவதில் பெண்களுக்கு அலாதி பிரியம் உண்டு. எனவே உறவின் போது மட்டுமல்லாது உறவிற்கு முன்பும், பின்பும் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

மனிதர்களுக்கு சத்தான உணவும், உடல் பயிற்சியும் எந்த அளவுக்கு முக்கியமோ அதுபோல தாம்பத்ய உறவும் அவசியம் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதன் மூலமும் ஆரோக்கியம் பெற முடியும்.

செக்ஸ் குறைபாடுகள் பற்றி வெளிப்படையான விவாதம் தேவை என வலி யுறுத்தும் மருத்துவர்கள் அதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறார்கள்.செக்ஸ் உணர்வுக் குறைவு உயிருக்கே அச்சுறுத்தல் என்றும் சர்க்கரை நோய், இதய நோய்கள் அதிக பட்ச கொலஸ்ட்ரால் அதற்கு காரணமாக இருக்கக்கூடும் எனவும் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பலனளிக்கும் யுனானி மருத்துவம்

தாம்பத்ய உறவில் ஏற்படும் குறைபாட்டினால் கணவன் மனைவிக்கிடையே பரஸ்பர அன்பும் நெருக்கமும் குறையும். எனவே செக்ஸ் குறைபாட்டை நீட்டிக்க விடக்கூடாது.

ஆங்கில வழியில் அளிக்கப்படும் மருந்துகள் தொடர்ந்து உரிய பலனளிக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின் விளைவாக உடல் எடை கூடுதல், இதய நோய்கள், புராஸ்டேட் புற்றுநோய் போன்றவை ஏற்படக்கூடும். ஆனால் உடலுறவுத் திறனில் மாற்றம் இருக்கும்.ஆனால் யுனானியைப் பொறுத்தவரையில் பலனை மட்டுமே தரக்கூடிய பல மருந்துகள் உள்ளன.

யுனானி மருத்துவத்தில் நோயைக் குணப்படுத்த மட்டுமின்றி நோயாளியின் உடலுக்கு சக்தி தரவும், நோய் எதிர்ப் பாற்றலை ஏற்படுத்தவும் சேர்த்தே மருந்து தரப்படுகின்றன. இதனால் நோயிலிருந்து விடுபடும் நோயாளி உடல் வனப்போடும் இளமைத் துடிப்புடனும், சுறுசுறுப்புடனும் இயங்க முடிகிறது.

ஏனென்றால் பாதாம் பிஸ்தா, குங்கு மப்பூ, ஆப்பிள் முரபா, அக்ரூட், ஜல் கோசா, பிண்டக் போன்ற உடலுக்கு வலு சேர்க்கும் பழ வகைகளும் மூலிகைகளும் சேர்த்தே யுனானி மருந்துகள் தயார் செய்யப்படுவதால்.

ஆண்மை மிளிரச்செய்யும் டெஸ்ட்டோஸ்டீரான்

எந்த நோயாளியாக இருந்தாலும் புதுத்தெம்புடன் நடமாட முடிகிறது என்கிற உத்தரவாதத்தை தருவதுடன், ஆண்மைக் குறைவோடு வருபவருக்கு என்ன மருந்துகள் தரப்படுகின்றன என்பதையும் கூறுகிறோம்.

பெண்மையை மிளிரச் செய்வதில் ஈஸ்ட்ரோஜனுக்கு எந்த அளவுக்கு பங்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆண்மையைக் காத்து நிற்பதில் டெஸ்ட் டோஸ்டீரான் பங்கும் இருக்கிறது.இந்த டெஸ்ட்டோஸ்டீரான் அளவை அதிகரிக்க வெறும் மருந்தால் முடியாது. மருந்து வடிவில் உடலுக்கு வலுவேற்ற வேண்டியது அவசியம்.

பாதாம் பருப்பு, பிஸ்தா, அக்ரூட், ஜால்கோஜா, பிண்டக் பருப்பு, பிஸ்து கிஸ்து, அபுல்கிப்பிப், துக்மே கலியூன், துக்மே ஜர்ஜிர், குங்குமப்பூ, குஷக், சிங்காடா, கசகசா, சுக்கு, லவங்கப்பட்டை போன்றவற்றால் செய்யப்பட்ட யுனானி மூலிகை மருந்துகள் தரப்பட்டால் ஆண்மைக் குறைவு முற்றிலும் நீங்கும்.நடுவயதை தாண்டிக் கொண்டிருக்கும் பெரும்பாலான ஆண்கள் செக்சில் பட முடியாத நிலை இருக்கும். அது நிரந்தரமல்ல. தற்காலிகமானதே. மறுபடியும் உங்களை இளமைத்துள்ளலோடு வைக்க யுனானி மூலிகைகளால் முடியும்.

முதுமையிலும் தாம்பத்யம் அவசியம்

வயாக்ரா மாத்திரையை தயாரித்து விற்பனை செய்து வரும் பிஸ்ஸர் நிறுவனம் நடுத்தர மற்றும் முதியோரிடையே உள்ள தாம்பத்திய உறவு குறித்து உலகளாவிய அளவில் ஆய்வு நடத்தியது. அதில் 40 முதல் 80 வயதுக்கு உட்பட்ட ஆண்- பெண் இருபாலர்களிடமும் நடத்தப்பட்ட ஆய்வில் முதுமையிலும் செக்சில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் கொரிய மக்கள் என்பது தெரிய வந்தது.

90% பேர் செக்ஸ் என்பது இப்போதும் தங்கள் வாழ்வின் முக்கிய அங்கம் எனத்தெரிவித்தனர். ஆனால் ஹாங்காங்கில் எடுக்கப்பட்ட சர்வேயில் 38% முதியோர் மட்டுமே தாம்பத்ய உறவில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளனர். இத்தகைய ஆய்வுகள் மொத்தம் 28 நாடுகளில் எடுக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டிலோ, வயதுக்கு வந்த பெண்ணோ பையனோ வீட்டில் இருந்து விட்டால் தாம்பத்யமே தவறு என்ற ரீதியில் நடுத்தர வயது பெண்கள் யோசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இதனால்தான் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.

முதுமையிலும் தாம்பத்யத்தை அனுபவிக்க முடியும், அனுபவிக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் கூற்று.

Beauty tips from home remedies

அழகு விஷயத்தில் பிரச்சினை இல்லாதவர்களே இல்லை. அதற்காக விலை உயர்ந்த அழகு சாதனங்களை முகத்திலும், உடலிலும் வைத்து தேய்க்க வேண்டிய அவசியமில்லை. அன்றாடம் நம் வீட்டில் உபயோகப்படுத்தும் பொருட்களே அழகு சாதனப் பொருட்களாக பயன்படுகின்றன.

அழகாக்கும் தானிய உமி

கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்களிலிருந்து நீக்கப்படும் உமி, தவிடு போன்றவை அழகிற்கு அழகூட்டும் பொருட்களாகப் பயன்படுகின்றன. வைட்டமின் ‘இ’ சத்து மிகுந்த இந்த தானியத்தின் தவிடுகள் முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, முகச் சுருக்கங்களையும் நீக்குகின்றன. முகத்திற்கு இளமையும், பளபளப்பும் கூட்டுகின்றன. சருமத்திற்கு இதமளிப்பதால் சருமத்திற்கான அழகு சாதன கிரீம்களில் சேர்க்கப்படுகின்றன. வைட்டமின் இ சத்து சருமத்திற்கு மிகவும் அத்தியாவசியமானது. தினசரி உணவில் சிறிதளவு கோதுமையை சேர்த்துக்கொண்டால் சருமம் பளபளப்பாகும்.

ஆலிவ், தேங்காய் எண்ணெய்

ஆலிவ் ஆயிலை முகத்தில், கை, கால்களில் பூசி வர சருமம் பள பளப்பாகும். தேங்காய் எண்ணெயும், பொலிவிற்கு ஏற்றது. அடிக்கடி சில மணி நேர இடைவெளியில் குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி வர முகம் புத்துணர்சியுடன் திகழும். ஆலிவ் எண்ணெயுடன், முட்டை வெள்ளைக் கரு,எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் மாஸ்க் போல போடவும். பத்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் பளிச் தோற்றம் தரும்.

கேரட், பீட்ரூட் மற்றும் செலரி ஆகியவைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள முகம் இளமைப் பொலிவுடன் திகழும் முதுமைத் தோற்றம் எட்டிப்பார்க்காது.

விளக்கெண்ணெய் மகத்துவம்

இரவு நேரங்களில் முகம் , கை, கால் முட்டிகளில் விளக்கெண்ணெய் தடவிவைத்து காலையில் வெது வெதுப்பான நீரில் குளிக்க வறண்ட தன்மை நீங்கும். சருமம் மென்மையாகும்.

தேன், வாழைப்பழம்

குளிர் காலமோ, கோடை காலமோ சருமத்தில் பளிச் தோற்றத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு வாழைப்பழத்தை நன்கு மசித்து அதில் தேன் கலந்து முகம், கை, கால்களில் பூசி ஊறவைக்கவும். 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவினால் சருமம் பொலிவு தரும்.

பளிச் பற்கள்

சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் சாதாரண உப்பு அயோடின் சத்து மிகுந்தது. இது எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது. சிறிது உப்பு கலந்த நீர் கால்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். உப்பு கலந்த நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளபளப்பாகும். கண்களுக்குக் கீழே தோன்றும் பை போன்ற வீக்கத்தைக் குறைக்கும். எலுமிச்சை சாறுடன் உப்பு கலந்து பற்களில் தேய்த்து வர மஞ்சள் தன்மை மறைந்து பற்கள் பளிச் தோற்றம் தரும்.

எண்ணெய் பசை நீக்கும்

இது ஒரு வகை மென்மையான, களிமண் வகையைச் சேர்ந்த மண். இது சருமத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய்ச் சத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. எனவே அதிக எண்ணெய்ப் பசை கொண்ட சருமத்திற்கும், கேசத்திற்கும் இம்மண் பவுடர், அழுக்கு நீக்கியாகவும், அதிக எண்ணெய்ப் பசையை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இது சருமத்திற்கு புத்துணர்ச்சியும், கண்களுக்கு குளிர்ச்சியும் தரக் கூடியது. கேசத்தினையும் சுத்தப்படுத்தக்கூடியது. எனினும் அதிகப்படியான தொடர்ச்சியான பயன்பாட்டினால் சரும வறட்சி ஏற்படும். இதிலுள்ள தாது உப்புகள், வைட்டமின்கள் சருமத்திற்கு ஊட்டத்தையும் இளமையையும் தருகிறது.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதனை வட்டமாக நறுக்கி கண்களின் மீது வைத்தால் கண்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படும், கருவளையம் நீங்கும். இதேபோல் உருளைக் கிழங்களை வட்டமாக நறுக்கி முகத்தில் தேய்க்க கரும்புள்ளிகள் நீங்கும், கருவளையம் போகும். துளசி இலை, கற்பூரம் ஆகியவற்றை அரைத்து, முகத்தில் பூசலாம். புதினாவை அரைத்து, அத்துடன் அரை மூடி எலுமிச்சை பழச் சாறு கலந்து முகத்தில் பூச, முகம் பொலிவடையும்.

முதலில் அழகு என்பது மனசை பொறுத்ததுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மனம் நன்றாக இருந்தால் புன்னகை முகத்தோடு அனைவரையும் வசீகரிக்கும் முகமாக அழகாக மாறிவிடும். அழகுக்கு எதிராக இருப்பது மன அழுத்தம் மட்டுமே எனவே மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். அனைத்தையும் விட முக்கியமானது தினசரி சராசரியாக 7 மணி நேரம் தூங்குவது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும் முகம் அழகாகும்.