About Me

My photo
I am an IT professional, Nowadays our Lifestyle is changed a lot and of course we are chasing money. In India More than 7 crore people affected by Diabetes, High Cholesterol and infertility due to their Poor Food Habits &amp Lifestyle. This Blog is very useful for youngsters to lead good Lifestyle and be healthy and students to choose career courses.Work hard, but make time for your love, family and friends. Nobody remembers Powerpoint presentations on your Final Day.I believe Life is ours and we only Live our Life.... Thanks for visiting and welcome you to visit again. WHO LOVES GOD ARE SEARCHING GOD, WHO LOVES PEOPLE ARE LIVING AS GOD - SK ( Reach me @ +91 9791139942 to lead Healthy Family Life )

Friday 24 April 2015

Easy tips for Diabetes control

வேம்பு
சர்க்கரை நோய்க்கான சிகிச்சைக்கு கொழுந்து வேம்பு இலைகளை பயன்படுத்தலாம். அதிலிருந்து எடுக்கப்படும் சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகினால் சர்க்கரை நோய்க்கு நல்ல பலனை அளிக்கும்

நாவல் பழ விதை
நாவல் பழ விதைகளில் உள்ள க்ளுகோசைட், ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றுவதை தடுக்கும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும். மேலும் இன்சுலின் உயர்வை கட்டுப்பாட்டில் வைக்கும்.சர்க்கரையை கட்டுப்படுத்தி சர்க்கரை நோய்க்கான அறிகுறியை பறந்தோட வைக்க உதவும் நாவல் பழ இலைகள். எனவே சர்க்கரை நோயாளிகள் நாவல் இலைகளை மெல்ல பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் இதயத்தை பாதுகாக்கும் குணங்களையும் இந்த பழம் கொண்டுள்ளது

துளசி இலை
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க துளசி இலை உதவுகிறது. துளசி இலையில் விஷத்தன்மையுள்ள அழுத்தத்தை போக்கும் ஆற்றல்மிக்க ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளது. இந்த அழுத்தம் தான் சர்க்கரை நோயில் பல சிக்கல்களை உண்டாக்குகிறது.

பாகற்காய்
இரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்க உதவும் பையோ ரசாயனமான இன்சுலின்-பாலிபெப்டைட் இந்த செடியில் உள்ளது. பாகற்காயை குழம்பில் மற்றும் சூப்களில் பயன்படுத்தலாம்.

முருங்கைக்காய் இலைகள்
இந்த இலைகளில் உள்ள நார்ச்சத்து தெவிட்டான நிலையை அதிகரித்து உணவு உடைபடுவதை குறைக்கச் செய்யும்

கருப்பு சீரகம்
கருப்பு சீரகம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுவதால், சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க இவற்றைப் பயன்படுத்தலாம்.

ஆளி விதைகள்
இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை நிலைப்படுத்த ஆளி விதைகள் உதவும். குறிப்பாக ஆளி விதைகளை உட்கொண்டு வந்தால் உணவிற்குப் பிற்பட்ட சர்க்கரை அளவு 28 சதவீதமாக குறையும்.

வாழைப்பூ:
நீரிழிவு நோயாளி ஒருவர் வாழைப்பூவை கசாயம் செய்து சாப்பிட்டார் என்றால் கண்டிப்பாக நீரிழிவு கட்டுப்படும். ஆனால் வாழைப்பூவில் கடலைப்பருப்பைச் சேர்த்து இன்று நாம் பருப்பு வடையாகத்தான் சாப்பிடுகிறோம். இதே வாழைப்பூவுடன், சிறிது காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து அரைத்து துவையல் மாதிரி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது சர்க்கரை நோய் கட்டுப்படும்

வெந்தயம்:
சர்க்கரை நோயை பிரதானமாக கட்டுப்படுத்தக் கூடிய தன்மை வெந்தயத்திற்கு உண்டு. வெந்தயத்தைப் பிரித்தால் வெந்த + அயம். வெந்த என்றால் பஸ்பமாகி விட்டது என்று அர்த்தம். அயம் என்றால் இரும்பு என்று பொருள். இரும்பை பஸ்பமாக்கக்கூடிய ஒரு பொருள் எது என்றால், அது வெந்தயம் தான். தொடர்ந்து வெந்தயத்தை வறுத்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வந்தால் கூட நீரிழிவு நோய் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்

நார்ச்சத்து காய்கறிகள் மற்றும் பழங்கள் அடங்கிய உணவுகளில் வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் வளமையாக உள்ளது. தமனி சுவர்கள் நச்சு அடையாமல் இருக்கவும், பாதிப்படையாமல் இருக்கவும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் தடுக்கும். அப்படி இல்லாத பட்சத்தில் அடைப்பு ஏற்பட்டு இதய நோய் உண்டாகிவிடும்.

மருந்து மாத்திரை இல்லாமல் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது உடற்பயிற்சி. இந்த நோயின் தீவிரத்தை இது குறைக்கும். அதனால் நீண்ட கால சிக்கலையும் குறைக்கும். உடற்பயிற்சிக்கு தேவையான ஆற்றல் உடல் எடையை குறைக்க உதவும். இதனால் உடல் பருமன் பிரச்சனையும் நீங்கும். உடற்பயிற்சி என்பது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும். இதனால் டைப் 2 வகை சர்க்கரை நோய்க்கு மூல காரணமாக விளங்குவதை இது கையாளும். மேலும் சீரான முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால் கொலஸ்ட்ரால் அளவும், இரத்த கொதிப்பும் கூட குறையும். தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தால் கூட நல்ல பயன் கிடைக்கும்.

தியானம் செய்வதால் நம் உடலில் உள்ள இன்சுலின் எதிர்ப்பு குறையும். கார்டிசோல், அட்ரினாலின் மற்றும் நோராட்ரினலின் போன்ற சில மன அழுத்த ஹார்மோன்கள் இன்சுலின் மற்றும் குளுக்கோஸ் அளவுகளின் உற்பத்தியை தீவிரப்படுத்தும். ட்ரான்ஸ்சென்டென்ட்டல் தியான முறை மூலமாக நரம்பியல் ஹார்மோன்களை குறைத்தால், இரத்தத்தில் உள்ள இன்சுலின் மற்றும் க்ளுகோஸின் அளவு சமநிலையுடன் விளங்கும். மெட்டபாலிக் சிண்ட்ரோம் மற்றும் சர்க்கரை நோயை நடுநிலையாக்க இது உதவும்.