About Me

My photo
I am an IT professional, Nowadays our Lifestyle is changed a lot and of course we are chasing money. In India More than 7 crore people affected by Diabetes, High Cholesterol and infertility due to their Poor Food Habits &amp Lifestyle. This Blog is very useful for youngsters to lead good Lifestyle and be healthy and students to choose career courses.Work hard, but make time for your love, family and friends. Nobody remembers Powerpoint presentations on your Final Day.I believe Life is ours and we only Live our Life.... Thanks for visiting and welcome you to visit again. WHO LOVES GOD ARE SEARCHING GOD, WHO LOVES PEOPLE ARE LIVING AS GOD - SK ( Reach me @ +91 9791139942 to lead Healthy Family Life )

Thursday 21 June 2012

Neem oil can cure psoriasis

உலகிலேயே தோல் நோய்கள் அதிகம் வருவதில், முதலில் இருப்பது சொரியாசிஸ் தான். இது மரபு காரணமாக ஏற்படுகிறது. மேலும் இது வந்தால் தோலானது திட்டு திட்டாக வரும். இந்த திட்டு ஏற்பட்ட இடமானது தடிமனாக, வறட்சியுடன் இருக்கும். இந்த சொரியாசிஸ் விரைவில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவும் தன்மையுடையது. அதற்காக இது தொற்றுநோய் அல்ல. மேலும் இது வந்த இடத்தை சுற்றி சிவப்பு நிறத்துடன் இருப்பதோடு, வறண்டும் காணப்படும். இந்த சொரியாசிஸை உடனே முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் இதற்கு தினமும் மருந்து எடுத்துக் கொள்வதால் சரிசெய்யலாம். மேலும் இதனை இயற்கையான முறையில் குணப்படுத்தலாம். அதற்கு வேப்ப எண்ணெய் தான் சிறந்த மருத்துவ பொருள்.
சொரியாசிஸை குணப்படுத்தும் வேப்ப எண்ணெய்...
1. தோல் நோய்கள் பொதுவாக அதிகம் வருவதற்கு அடிப்படையாக இருப்பது சருமமானது வறட்சி அடைவது தான். இத்தகையதற்கு சிறந்தது தான் வேப்ப எண்ணெய். இதை தடவினால் சருமமானது வறட்சியை அடையாமல், எண்ணெய் பசையுடன் இருக்கும்.
2. வேப்ப எண்ணெய் தடவுவதால் எரிச்சல், அரிப்பு மற்றும் சருமம் சிவப்பு நிறத்தை அடைதல் போன்றவை குணமாகிறது. மேலும் இதில் உள்ள மருத்துவ குணம் சருமத்தில் திட்டு திட்டாக தோலானது வருவதை சரி செய்கிறது.
3. மேலும் இது தோல்களில் எந்த ஒரு நோயும் தாக்காமல் பாதுகாப்பதோடு, தோலில் இருக்கும் திசுக்களுக்கு வலுவை கொடுத்து, சருமத்தை பாதுகாக்கிறது.
4. இந்த எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் இருப்பதால், இது தோலில் ஏற்படும் வெடிப்பை சரிசெய்து, சருமத்தில் தொற்றுநோய் ஏற்படாமல் பார்த்து கொள்கிறது.
சொரியாசிஸை தடுக்கும் 4 வழிகள்...
1. இரவில் படுக்கும் முன் வேப்ப எண்ணெயை தடவி, காலையில் எழுந்ததும் சுத்தமாக கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சொரியாசிஸை குணப்படுத்தலாம்.
2. இரவில் எண்ணெய் தடவி சுத்தம் செய்த பின், சொரியாசிஸ் வந்த பகுதியை அதிகாலையில் சூரிய வெளிச்சத்தில் காண்பிக்க வேண்டும். இதனால் சருமமானது உடலுக்கு தேவையான வைட்டமின் டி-யை உறிஞ்சிக் கொண்டு, சரிசெய்கிறது.
3. எங்கு வெளியே சென்றாலும் பாதிக்கப்பட்ட பகுதியை துணியால் மறைத்துக் கொண்டு செல்ல வேண்டும். இதனால் அந்த பகுதியை அழுக்கு மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்கலாம்.
4. மேலும் மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பகுதியில் வைப்பதன் மூலமும் சரிசெய்யலாம். ஏனெனில் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள் இதில் உள்ள கிருமியை அழித்து விரைவில் குணப்படுத்தும்.

Dandruff prevent & Hair growth tips

பெண்களுக்கானாலும் சரி, ஆண்களுக்கானாலும் சரி, அழகைத் தரும் கூந்தல் அதிகமாக உதிர பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று தான், பொடுகு. அந்த பொடுகு தலையில் வந்து விட்டால், அதனால் வரும் அரிப்பைத் தாங்கவே முடியாது. எப்ப பார்த்தாலும் கையானது தலையிலேயே இருக்கும். இதனால் மிகுந்த சங்கடத்திற்கு தான் ஆளாகிறோம். இப்படி சங்கடத்தை ஏற்படுத்தும் பொடுகை நீக்க சில வழிகள் உள்ளன. அதுவும் வீட்டிலேயே உள்ளன. அது என்னவென்று படித்துப் பாருங்கள்...
பொடுகை நீக்க சில டிப்ஸ்...
1. வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து, அதை தலையில் தேய்த்து குளித்து வந்தால், உடல் உஷ்ணம் குறைவதோடு, பொடுகு தொல்லையும் நீங்கும்.
2. வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை நன்றாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து, குளித்து வந்தால், பொடுகு வராமல் தடுக்கலாம்.
3. வெந்தயத்தை தேங்காய் எண்ணெயோடு சிறிது சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்சனையை நீக்கலாம்.
4. தலைக்கு குளிக்கும் போது, சிறிது தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து தலையில் தேய்த்து வாரம் ஒரு முறை குளித்தால், பொடுகு மறையும்.
5. துளசி, கறிவேப்பிலை ஆகியவற்றை அரைத்து, சிறிது எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால், பொடுகு பிரச்னை நீங்கும்.
6. நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலைமாவு ஆகியவற்றை தண்ணீரில் கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால், பொடுகு நீங்கும்.
7. தலைக்கு குளிக்கும் போது, இறுதியாக குளிக்கும் தண்ணீரில், சிறிது வினிகர் கலந்து தலைக்கு ஊற்றி குளித்தால், பொடுகு வராமல் இருக்கும்.
8. தேங்காய் எண்ணெயில் வசம்பை நன்கு பவுடராக்கி, அதில் போட்டு ஊற வைத்து, அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.

இயற்கை முறையில் முடியை அழகாக, மென்மையாக, பட்டு போல வளர்க்க சிறந்த ஒன்று முட்டையை பயன்படுத்துவது. முட்டையில் அதிக புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. இதனால் முடியானது மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் முட்டை தலையில் உள்ள பொடுகு, வறண்ட சருமம், முடி வெடிப்பு போன்றவற்றை வராமல் தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் முட்டையில் உள்ள வைட்டமின் டி, ஏ, ஈ போன்றவை முடி உதிர்வதைத் தடுப்பதோடு, தூசி அதிகம் படுவதால் கூந்தல் பாதிக்கப்படுவதையும், சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்களால் முடி பாதிக்கப்படுவதையும் தடுக்கிறது.

சரி, இப்போது இந்த முட்டையை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா!
1. இரண்டு முட்டையை உடைத்து, அதன் மஞ்சள் கரு பகுதியை ஒரு பௌலில் விட்டு அத்துடன் சிறிது ஆமணக்கெண்ணெய் மற்றும் சிறிது தண்ணீர் கலந்து, முடிகளின் மயிர்கால்களில் நன்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து பின் மெதுவாக மசாஜ் செய்து குளித்தால், முடியானது பட்டு போல இருக்கும். பொடுகு இருப்பவர்கள் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து தடவவும்.
2. முடி நன்கு வளர வேண்டுமென்றால், மஞ்சள் கருவுடன் சிறிது பாதாம் எண்ணெய்யை விட்டு கலந்து தடவி ஊற வைத்து குளிக்கவும்.
3. முட்டையில் ஹேர் மாஸ்க் செய்ய வேண்டுமென்றால், ஒரு முட்டையுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கூந்தல் முழுவதும் தடவி 10-15 நிமிடம் வரை ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்கவும். இது ஒரு சிறந்த ஹேர் கண்டிசனர்.
4. இரண்டு முட்டையை உடைத்து ஒரு பௌலில் ஊற்றி, தலைக்குத் தடவி 3 நிமிடம் மசாஜ் செய்து, பின் ஷாம்பு போட்டு குளித்து, சிறிது வினிகரை நீரில் விட்டு அதனை தலைக்கு ஊற்றி, பிறகு குளிர்ந்த நீரில் அலசினால், முடியானது மென்மையாக இருக்கும்.
5. முட்டையுடன் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சை பழச்சாற்றை விட்டு கலந்து கூந்தலுக்கு தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் அலசினால் முடி அழகாக பட்டுப்போல் மின்னும்.

Skin care oils

பெரும்பாலான வீடுகளில் சமைப்பதற்கு தவிர இன்றைக்கு வேறு எதற்காகவும் எண்ணெய் பயன்படுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. பல்வேறு சருமப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. உடலுக்கு குளிர்ச்சியும், சருமத்திற்கு பளபளப்பும் தருகிறது என்பதனாலேயே பண்டைய காலங்களில் எண்ணெய் குளியல் பரிந்துரைக்கப்பட்டது. இன்றைக்கும் ஆயுர்வேதத்தில் பல சிகிச்சைகளுக்கு எண்ணெய் வகைகளை பரிந்துரை செய்யப்படுகிறது.
ஆலிவ், எள், கடுகு, தேங்காய், பாதாம், சூரிய காந்தி, ஆமணக்கு முதலியவற்றில் இருந்து பிழிந்து எடுக்கப்படும் எண்ணெய் பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக எள் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகியவை மசாஜ் செய்யப் பயன்படுத்தப் படும் எண்ணெய்கள் ஆகும்.
வெப்பத்தை தடுக்கும்
எள் எண்ணெய்தான் நல்லெண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. மிகவும் லேசானது; வாசனை அற்றது; நம் சருமத்தால் சுலபமாக உள்ளிழுக்கப் படுவது. இந்த எண்ணை சமச்சீரான எண்ணெய் என்பதால் எல்லா தோஷங்களுக்கும் நல்லது என்கிறது ஆயுர்வேதம். எள்ளில் இயற்கையாகவே சூரிய வெப்பத்தை தடுக்கும் பொருட்களான SPF உள்ளது. அதனால் தோலில் ஏற்படும் சின்னச்சின்ன தடிப்புகள், கட்டிகள் இவற்றிற்கு மிகச் சிறந்த மருந்து. விட்டமின் E, தாதுப் பொருட்கள், புரதப் பொருட்கள், லேசிதின் நிறைந்துள்ள எண்ணெய் இது.
குளிர் காலத்தில் காக்கும்
ஆலிவ் எண்ணெய் மிக இலேசானது. நம் உடலில் இருக்கும் அமிலத்தன்மை, காரத்தன்மையை சீராக வைக்க உதவுகிறது. பாதாம் எண்ணெய் உலர் சருமம் இருப்பவர்களுக்கு மிக நல்லது. இதுவும் மசாஜ் எண்ணெய் தான். குளிர் காலத்தில் சருமத்தைக் காக்க உதவும்.
நறுமண மசாஜ் எண்ணெய்
ரோஜா, சந்தனக் கட்டை, மல்லிகை, லாவண்டர் ஆகியவற்றில் இருக்கும் நறுமணம் இந்த அத்தியாவசிய எண்ணெய்களினால் வருபவை. அதனால் இவற்றை அப்படியே பயன்படுத்தக் கூடாது. பிழிந்தெடுத்த எண்ணைகளுடனோ அல்லது ரோஸ் வாட்டருடன் கூடவோ சரியான விகிதத்தில் கலந்து உபயோகிக்க வேண்டும்.
பாதாம், எள் எண்ணையுடன், சில துளிகள் ரோஸ் அல்லது சந்தன எண்ணெய் சேர்த்து கலந்தால் நறுமணம் மிக்க உடல் மசாஜ் எண்ணெய் கிடைக்கும். சந்தன எண்ணெய் சொறி, சிரங்குகளிலிருந்து காக்கும். ரோஸ் எண்ணெய் நல்ல இரத்த ஓட்டத்துக்கும், சருமத்தை நல்ல நிலையில் வைத்திருக்கவும் உதவும். இந்த இரண்டு எண்ணைகளும் மனதிற்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கின்றன. 50 கிராம் பிழிந்தெடுத்த எண்ணையுடன் 5 துளிகள் அத்தியாவசிய எண்ணெய் சேர்த்து நறுமண மசாஜ் எண்ணை தயாரிக்கலாம்.
கூந்தலுக்கு பாதுகாப்பு
முட்டை மஞ்சள் கருவுடன் சில துளி ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். சருமம் வெளுக்க இத்துடன் சில துளி எலுமிச்சை சாறு கலந்து பூசலாம்.
முட்டையின் மஞ்சள் கருவுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து கூந்தலில் தடவலாம். உலர்ந்த கூந்தல், நுனி பிளந்த கூந்தல் இவற்றிற்கு மிகச் சிறந்த நிவாரணம் தரும் இந்தக் கலவை.
இளம் குழந்தைகளின் உச்சந்தலையில் செதில் செதிலான சருமம் காணப்படும். இவற்றை அப்படியே கையால் பிய்த்து எடுக்கக் கூடாது. சுத்தமான ஆலிவ் எண்ணையை சிறிதளவு பஞ்சில் தோய்த்து இவற்றின் மேல் தடவ வேண்டும். அடுத்தநாள் இவை மிருதுவாகி விடும். பேபி ஷாம்பூ போட்டு தலையை அலசினால் போய்விடும்.
கரு வளையங்கள் போக்கும்
கண்ணுக்கு கீழே கருவளையம் உள்ளவர்கள், சுத்தமான பாதாம் எண்ணெய்யை கண்ணுக்குக் கீழ் தடவி மோதிர விரலால் நிதானமாக வட்ட வடிவில் ஒரு நிமிட நேரம் மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து பஞ்சினால் துடைத்து எடுக்கவும்.
கைகளுக்கு பாதுகாப்பு
கைகளுக்கு எள் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் நன்றாகப் பூசி ½ தேக்கரண்டி சர்க்கரையை ஸ்கரப்பர் (scrubber) போலத் தேய்க்கவும். சர்க்கரை முழுவதும் கரைந்த பின் கைகளை ஒரு ஈரத் துவாலையால் துடைக்கவும்.
பாதாம் எண்ணெய்யை சுட வைத்து நகங்கள் மற்றும் அவற்றை சுற்றி இருக்கும் தோலின் மேலும் மசாஜ் செய்யுங்கள். இதை முழங்கால், முழங்கைகளிலும் தேய்க்கலாம்.

Tips to have healthy baby

கர்ப்பம் தரிக்கும் பெண்ணிற்கு இருக்கும் ஒரு பெரிய ஆசை என்ன என்று கேட்டால், அது என் குழந்தை ஆரோக்கியமாக, எந்த ஒரு குறையும் இல்லாமல் பிறக்க வேண்டும் என்பதே. அப்படி அவர்கள் நினைத்தால் மட்டும் போதாது. அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்ளவும் வேண்டும், நன்கு ஆரோக்கியமான உணவை உண்ணவும் வேண்டும். மேலும் அவர்கள் இந்த காலகட்டத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் சிலவற்றை பட்டியலிட்டுள்ளனர். அது என்னவென்று பார்ப்போமா!!!
கர்ப்பிணிகள் கவனத்திற்கு...
1. கர்ப்பம் தரிக்கும் பெண் 16-18 வாரங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் தான் குழந்தையின் உருவம் உருவாகும். இந்த நேரத்தில் எந்த ஒரு நோயும் தாயை தாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுவும் கொடிய வைரஸ்-ஆல் தாய் தாக்கப்பட்டால் குழந்தையின் மூளை வளர்ச்சி, இதயம் போன்றவை பாதிக்கக்கூடும்.
2. இந்த காலகட்டத்தில் கஷ்டமான வேலைகளையோ அல்லது நீண்ட தூரம் பயணமோ செய்யக் கூடாது. மேலும் அடிக்கடி உடலுறவு வைக்கக் கூடாது.
3. மேலும் இந்த நேரத்தில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதனால் குழந்தைக்கு எதாவது பிரச்சனை இருந்தால் அறிந்து குழந்தைக்கு எதுவும் ஏற்படாமல் முன்கூட்டியே அறிந்து அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்கலாம்.
4. இந்த நேரத்தில் ரத்த சோகைக்கான பரிசோதனை செய்ய வேண்டும். ஏனெனில் தாய்க்கு இரத்த குறைபாடு இருந்தால் அது குழந்தையின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே எல்லா சோதனைகளையும் செய்வது நல்லது.
5. கர்ப்பிணிகள் இந்த நேரத்தில் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான டெஸ்ட் என்றால் அது ரத்தப் பிரிவு டெஸ்ட். ஏனெனில் தாய் மற்றும் சேய்க்கு ஆர்எச் பொருத்தமின்மை இருந்தால் அது குழந்தையின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.
6. மேலும் கர்ப்பிணிகள் அதிக உப்பு, அதிக சர்க்கரை, கொழுப்பு இருக்கும் உணவுகளை சாப்பிடவே கூடாது. ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உண்பது மிகவும் அவசியம். அத்துடன் இரும்பு, கால்ஷியம் இருக்கும் மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும்.
7. அடிக்கடி இரத்தக் கொதிப்பு அளவை சோதித்துக் கொண்டே இருக்க வேண்டும். இரத்தக் கொதிப்பு அதிகரித்தால் தாய்க்கு வலிப்பு வரக்கூடும்.
8. கடைசி மூன்று மாதத்திற்கு கண்டிப்பாக உடல் உறவு கொள்ளக்கூடாது. இதனால் குழந்தையானது குறை மாதத்திலே பிறக்கக்கூடும்.
மேற்கூறியவாறெல்லாம் நினைவில் கொண்டு இருந்தால் குழந்தையானது ஆரோக்கியமாக பிறப்பதுடன், தாயும் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

Sunscreen remedies for your hair

சூரியனிடமிருந்து வரும் கதிர்களால் நமது சருமம் மட்டும் பாதிக்கப்படவில்லை, நமது கூந்தம் தான் பாதிப்படைகிறது. சொல்லப்போனால் முடி அதிகம் உதிர்வதற்கான காரணத்தில் இதுவும் ஒன்றாகும். ஆகவே நமது சருமத்தை பராமரிப்பது போல், நமது கூந்தலையும் நன்கு கவனத்தோடு பராமரிக்க வேண்டும். அவ்வாறு பராமரிக்க செயற்கையான முறையைத் தேர்ந்தெடுக்காமல் இயற்கை முறையை தேர்ந்தெடுங்கள். ஏனெனில் செயற்கையான முறையில் செய்யப்படும் பொருட்களில் பல கெமிக்கல்கள் சேர்ப்பதால் முடி உதிர்தலும், வலுக்கையும் ஏற்படுகிறது. இவ்வாறெல்லாம் ஏற்படாமல் இருக்க சில இயற்கை வழிகள், அதுவும் நம் வீட்டிலேயே இருக்கிறது.
கூந்தலைப் பாதுகாக்க சில வழிகள்....
கற்றாழை : இதில் அல்ட்ரா வயலட் கதிர்வீச்சின் தன்மைகள் அதிகம் இருக்கிறது. இது ஒரு சதைப்பற்றுள்ள செடி. இதில் வழுவழுப்பான ஒரு திரவம், ஜெல்லி போல் இருக்கும். இந்த திரவத்தை சரும பராமரிப்பில் அதிகம் பயன்படும். ஏனெனில் இதில் ஈரப்பசை அதிகமாக இருக்கும்.
அந்த ஜெல்லியை தலைக்கு தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் குளிக்கவும். இவ்வாறு செய்தால் சூரியனிடமிருந்து வரும் கொடிய அல்ட்ரா வயலட் கதிர்வீச்சில் இருந்து கூந்தல் பாதிப்படையாமல் காக்கும்.
டீ இலைச் சாறு : இது ஒரு சிறந்த விலைமதிப்புபில்லாத, ஈஸியாக கிடைக்கக்கூடிய, பாதுகாப்பான இயற்கைப் பொருள். இது கூந்தலை சூரியனிடமிருந்து வரும் அல்ட்ரா வயலட் கதிர்வீச்சில் (UV rays) இருந்து கூந்தலைப் பாதுகாக்கிறது. மேலும் இது கூந்தலை வறண்டு போகாமல் பாதுகாக்கிறது.
சிறிது டீத்தூளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து, ஒரு கப்பில் வடிகட்டி தலையில் ஊற்றி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிக்க வேண்டும். இதனால் முடியானது சூரியனிடமிருந்து வரும் கதிரால் பாதிப்படையாமல் இருப்பதோடு, கூந்தலுக்கு நிறத்தையும் தருகிறது.
ஹென்னா : ஹென்னா பவுடரை நீரில் கரைத்து பேஸ்ட் செய்து இரவில் ஊற வைத்து விட வேண்டும். பின் மறுநாள் காலையில் எழுந்து அதனை கூந்தலுக்கு தடவி 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளித்து பார்த்தால் கூந்தலானது சற்று கனமாக இருக்கும். இது கூந்தலுக்கு நிறத்தை மட்டும் தந்து, சூரியக் கதிரில் இருந்து பாதுகாப்பது மட்டுமில்லாமல், கூந்தல் உதிர்வதையும் தடுக்கிறது.
எள் எண்ணெய் : 5-6 துளி எள் எண்ணெயை சீப்பில் தடவி, பின் அற்த சீப்பை வைத்து கூந்தலை சீவுங்கள். இதனால் சூரியக் கதிர்கள் கூந்தலை தாக்காமல் இருப்பதோடு, கூந்தலும் மென்மையாகவும் பட்டுப்போலும் இருக்கும். வேண்டுமென்றால் வேறு எந்த எண்ணெயை வேண்டுமானாலும் இவ்வாறு உபயோகிக்கலாம்.
வைட்டமின் ஈ : முடியில் வைட்டமின் ஈ இருந்தால் கூந்தலானது ஆரோக்கியமாக, பலமாக இருக்கும். 2-3 வைட்டமின் ஈ மாத்திரைகளை ஸ்ப்ரே பாட்டிலில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து, அதனை நன்கு கரைத்து, பின் கூந்தலில் தெளிக்க வேண்டும். இதனால் அந்த வைட்டமின் கூந்தலுக்கு ஒரு திரை போல அமைத்து, சூரியனிடமிருந்து பாதுகாக்கிறது.
இவ்வாறெல்லாம் செய்து கூந்தலை பராமரித்தால், கூந்தலானது ஆரோக்கியமாக, உதிராமல் அழகாக இருக்கும்.

10 Basic manners to teach children

அதிக அளவில் கட்டணம் கொடுத்து மிகப்பெரிய பள்ளிகளில் படிக்க வைத்தாலும் சில குழந்தைகள் அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாமல் வளர்கிறார்கள். இது அவர்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைக்கல்லாகிவிடும். எனவே குழந்தைகள் நாம் சொல்வதை கேட்டு புரிந்துகொள்ளும் பொழுதிலிருந்தே அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
பெரியவர்களை பெயர் சொல்லி அழைக்ககூடாது என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் அவ்வாறு அழைத்தலால் அவர்கள் மனது என்ன வேதனைப்படும் என்றும் புரிய வைக்க வேண்டும். நண்பர்களை கூட வாடி,போடி, என்று பேசுவதை தவிர்த்து பெயர் சொல்லி மென்மையாக அழைக்கப்பழக்குவது நலம்.
பெரியவர்களோ சின்னவர்களோ பேசிக்கொண்டிருக்கும்பொழுது கவனத்தை திசை திருப்ப பிள்ளைகள் குறுக்கே புகுந்து பேசுவார்கள். இப்படி பிள்ளை செய்யும் முதல் முறையே,"நாங்கள் பேசி முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும்" என்று தெளிவாக சொல்ல வேண்டும். Waiting their turn என்று ஆங்கிலத்தில் சொல்வோம். அப்படி பேசிக்கொண்டிருக்கும்பொழுது அருகில் இருக்கும் குழந்தையின் கைகளை பிடித்துக்கொண்டிருத்தல்/தோள்மீது கைபோட்டுக்கொண்டிருத்தலால் பிள்ளையின் மீது கவனம் இருக்கிறது என்று புரிய வைக்கிறோம்.
வீட்டுக்கு யாராவது வந்தால் பிள்ளைகள் கதவை திறந்து விட்டு ஓடியே போய்விடுவார்கள். இது தவறு என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். வீட்டுக்கு வரும் விருந்தினரை வரவேற்க பழக்க வேண்டும். கை குலுக்கி ஹாயோ, வணக்கமோ சொல்ல வேண்டும்.இதனால் விருந்தினர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.
சில வீடுகளில் பிள்ளைகள் சாப்பிட்ட தட்டைக் கழுவுவதில்லை.பால் டம்பளர், சாப்பிட்ட தட்டு எல்லாம் டேபிளிலேயே இருக்கும். அதே போல் தான் விளையாடி முடித்த பிறகு அதை அப்படியே போட்டுவிட்டு வேறு ஏதேனும் செய்யப்போய் விடுவார்கள். இது தவறு. முதலில் அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கச் சொல்லுங்கள்.
விளையாட்டில் கூட தோல்வியை சில குழந்தைகள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நிஜத்தில் வெற்றி தோல்வி இரண்டையும் ஏற்கும் பக்குவத்தை வளர்க்க வேண்டும். அதுதான் Good sportsmanship. sorry, please, thank you போன்ற வார்த்தைகளைச்சொல்ல பழக்க வேண்டும். நம்மிடம் நன்றி சொல்லும்பொழுது "You're welcome" சொல்ல மறக்காதீங்க. யாராவது குழந்தைகளை பாராட்டினால் நன்றி சொல்லப் பழக்க வேண்டும். தவிர்த்து மற்றவர்களின் குற்றங்களை சொல்லத் துவங்கக் கூடாது.
லிஃப்ட் கதவு திறந்ததும் முண்டியடித்து உள்ளே நுழையாமல் உள்ளே இருப்பவர்கள் வெளியேவந்ததும், நாம் உள்ளே செல்ல வேண்டும் என பிள்ளைக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.ஒரு அறை அல்லது கட்டிடத்தில் உள்ளே/வெளியே செல்லும் பாதை ஒரே கதவாக இருந்தால் வெளி வருபவரை முதலில் அனுமதிக்க வேண்டும்.பிறகுதான் நாம் உள் செல்ல வேண்டும்.
வயதானவர்களுக்குத்தான் முதலிடம். இதை குழந்தைகளின் மனதில் பதிய வைக்க வேண்டும். அதே போல் வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர்கள் கிளம்பியதும் கதவை டமால் என்று அடித்துச் சாத்தக்கூடாது என்பதையும் புரிய வைக்க வேண்டும்.
ஒவ்வொரு குடும்பத்தினருக்கு பிரத்யோக பழக்க வழக்கங்கள், கலாசாரங்கள் இருக்கின்றன. அவை அந்தக் குடும்பத்துக்கு முக்கியமானது என்பதை பிள்ளைகள் உணரவேண்டும். அதேபோல் வேற்றுமையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.மொழி,கலாசாரம்,மதம், பழக்க வழக்கங்கள் இது மனிதருக்கு மனிதர், குடும்பத்துக்கு குடும்பம் மாறு படும். இதை கேலி செய்வதை விடுத்து அவர்களின் பழக்கத்தை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இவைகளை கற்றுக்கொண்டால் உங்கள் குழந்தைகள் பிறர் பாரட்டத்தக்க வகையில் நல்ல குழந்தைகளாக வளர்வார்கள்.

Saturday 9 June 2012

Tips to increase children growth

குழந்தைகள் நன்கு சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக, உயரமாக வளர ஆசைப்படுகிறீர்களா? அப்படி குழந்தைகள் ஆரோக்கியமாக வளர நாம் சிறு வயதிலிருந்தே குழந்தைகளை கவனிக்கும் முறையிலேயே உள்ளது என்று சித்த மருத்துவர் வேலாயுதம் கூறுகிறார். மேலும் அவர் குழந்தைகளின் உயரம் ஒரு சில செயல்களை செய்யாததால் இரத்த ஓட்டமானது சரியாக பாயாததால் உயரமானது தடைபடுகிறது என்றும் கூறுகிறார்.
இப்போது உள்ள பெற்றோர்கள், குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்கிறேன் என்று அவர்களை ஓடிஆட விளையாட விடுவதில்லை. மேலும் குழந்தைகள் அப்படி விளையாடாததால், உடலில் சோம்பல் ஏற்பட்டு உட்காரும் போது கூன் போட்டபடி, சாய்ந்தபடி நாற்காலியில் உட்காருகிறார்கள். இதனால் எலும்பின் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் தடைபடுகிறது.
ஆகவே அவர்களுக்கு நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் உளுந்து தைலத்தை வாங்கி, காலையில் அரை மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் உடம்பில் தடவி விளையாட விடவேண்டும். மேலும் அவர்களை எகிறி குதித்துத் துள்ளி விளையாடவும் பழக்க வேண்டும். இவை குழந்தைகள் உயரமாக வளர்வதற்கான வழிகள் என்றும் கூறி, சில டிப்ஸ்களையும் கூறியுள்ளார்.
1. குழந்தை பிறந்து ஆறு மாதம் வரை தாய்ப்பாலை மட்டும் உணவாக கொடுக்க வேண்டும். அப்படி தாய்ப்பால் குடிப்பதால், குழந்தைக்கு உடலில் நல்ல எதிர்ப்புச் சக்தி கிடைப்பதோடு, ஆரோக்கியத்துடனும் இருக்கும்.
2. ஆறாவது மாதம் முதல் குழந்தைக்கு புழுங்கல் அரிசிச் சோறு, வேக வைத்த பருப்புடன் பசுநெய் சேர்த்து கொடுத்தால், உடம்பில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச்சத்துக்கள் போன்றவை நேரடியாக சேரும்.
3. குழந்தைகளை குளிப்பாட்டும் போது கை, கால்களை நன்றாக இழுத்துவிடவேண்டும். இவை எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
4. ஒரு வயது ஆனதும் செல்லத்துக்கு முட்டை, காய்கறி, தினம் ஒரு கீரை என்று கொடுத்து வந்தால், உடலுக்கு தேவையான வைட்டமின், தாது உப்புக்கள் போன்றவை உடலில் சேர்ந்து அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு சிறந்தாக இருக்கும்.
5. குழந்தைகளுக்கு நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தினமும் எள்ளு, பொட்டுக்கடலை, வேர்க்கடலை ஆகியவற்றால் செய்த ஸ்நாக்ஸை கொடுத்தால், உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். மேலும் தினமும் ஏதேனும் ஒரு பழம் கொடுக்க வேண்டும்.
6. மேலும் உளுத்தம் கஞ்சி, பிரண்டை துவையல் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் எலும்புகள் நன்றாக வளர்ச்சியடைந்து குழந்தைகள் உயரமாக வளர வழிவகுக்கும்.
இவ்வாறெல்லாம் செய்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், உயரமாகவும் வளர்வார்கள் என்று வேலாயுதம் கூறுகிறார்.

Diabets diet food

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் கட்டுப்பாட்டோடு இருப்பார்கள். எதையும் சாப்பிட பயப்படுவார்கள். 'எனக்கு ஷுகராச்சே...' என்ற வசனத்தை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
ஆனால் அவர்களுக்கு மற்றவர்களைப் போல் எல்லாமே சாப்பிட வேண்டுமென்ற ஆசை இருக்கும். இப்படி அவர்கள் ஆசைபடுவது தவறில்லை, நிச்சயமாக அவர்களும் எல்லாமே சாப்பிடலாம்தான். ஆனால் அப்படி சாப்பிட நினைப்பவர்கள் அளவோடு சாப்பிடுவது நல்லது. இப்போது நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் என்னென்னவெல்லாம் பயப்படாமல் சாப்பிடலாம் என்று பார்க்கலாமா...
1. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சோறு சாப்பிட பயப்படுவார்கள். அவர்கள் குத்தரிசி, சம்பா, பச்சையரிசி என எந்த அரிசியை உண்டாலும் அவை ஒரே மாதிரியே இரத்தத்தில் சர்க்கரையின் அளவில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஆகவே அவர்கள் எந்த வகை சாதத்தை உண்டாலும், அளவோடு சாப்பிட வேண்டும். சப்பாத்தி மட்டுமே சாப்பிட்டாலும்கூட சர்க்கரை அளவு கட்டுப்படப் போவதில்லை. அதிலும் கார்போஹைட்ரோட்தான் அதிக அளவு உள்ளது.
பிரபல நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் தமிழ்ச் செல்வன் அடிக்கடி இப்படி சொல்வார்: 'இங்க தமிழ்நாட்ல இருக்கிறவனுக்கு சர்க்கரை வியாதி வந்தால் சப்பாத்தி சாப்பிடறான்... பஞ்சாப்காரனுக்கு சர்க்கரை வியாதி வந்தா என்னய்யா சாப்பிடுவான்?!... அவரவர் பிறந்த மண்ணில் என்னை விளைகிறதோ அவற்றைச் சாப்பிடுவதுதான் சிறந்தது. ஆனால் அதை சரியான முறையில் சாப்பிடுங்கள்' என்பார்.
2. நீரிழிவுள்ளவர்கள் எந்த மாவில் தயாரித்த தின்பண்டங்களையும் உண்ணலாம். ஆனால் அதிலும் ஒரு அளவு வேண்டும்.
3. அதிலும் சோற்றுடன் நார்ப்பொருள் அதிகம் நிறைந்துள்ள காய்கறிகளை சேர்த்து உண்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்காது. அதிலும் எளிதில் கரையக்கூடிய நார்ப்பொருளாக இருந்தால் நல்லது. மேலும் அவர்கள் கடலை, பயறு, பருப்பு, சோயா போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
4. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவைத் தவிர மற்ற நேரங்களில் ஸ்நாக்ஸாக இனிப்பில்லாத பிஸ்கட்டை வாங்கி சாப்பிடுவர். ஏனென்றால் அதைச் சாப்பிட்டால் எதுவும் ஏற்படாது என்ற நம்பிக்கை,
ஆனால் உண்மையில் அதையெல்லம் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அதில் இருக்கும் மாவுப்பொருள் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்கச் செய்யும். இதைவிட பழங்களில் வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளி, அன்னாசி, மாம்பழம் மற்றும் காய்கறிகளில் வெள்ளரி, கேரட் போன்றவற்றை சப்பி சாப்பிட்டால், பசியும் அடங்கும், சர்க்கரையின் அளவும் அதிகரிக்காது. எதை உண்டாலும் எவ்வளவு உண்கிறோம் என்பதே முக்கியம்.
5. கிழங்குகளில் வத்தளைக் கிழங்கு இனிப்புக் கூடியது. ஆனால் அதன் கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்ற கிழங்குகளை விட குறைவானது. மேலும் இதில் கரட்டீன் சத்து இருப்பதால் மற்றக் கிழங்குகளை விட மிகவும் சிறந்தது. மரவள்ளிக் கிழங்கு கூட சாப்பிடலாம், ஆனால் அதில் மாப்பொருளை விட வேறு எதுவும் இல்லை. எனவே அவற்றை சற்று அளவோடே சாப்பிடலாம்.
ஆகவே நீரிழிவு நோயாளிகள் எந்த உணவு உண்டாலும் அளவோடும், மாவுப்பொருள் இருக்கும் உணவை, எதனோடு உட்கொள்கிறீர்கள் என்பதையும் முக்கியமாக நினைவில் கொண்டும் உண்ண வேண்டும்!