About Me

My photo
I am an IT professional, Nowadays our Lifestyle is changed a lot and of course we are chasing money. In India More than 7 crore people affected by Diabetes, High Cholesterol and infertility due to their Poor Food Habits &amp Lifestyle. This Blog is very useful for youngsters to lead good Lifestyle and be healthy and students to choose career courses.Work hard, but make time for your love, family and friends. Nobody remembers Powerpoint presentations on your Final Day.I believe Life is ours and we only Live our Life.... Thanks for visiting and welcome you to visit again. WHO LOVES GOD ARE SEARCHING GOD, WHO LOVES PEOPLE ARE LIVING AS GOD - SK ( Reach me @ +91 9791139942 to lead Healthy Family Life )

Tuesday 30 October 2012

Lady's finger can cure Diabets


தற்போது நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையில் இந்தியா முதலில் உள்ளது. ஏனெனில் இந்தியர்கள் எந்த ஒரு உணவிலும் சரியான கட்டுப்பாட்டுடன் இல்லாததால், பாரபட்சமின்றி நோய்கள் உடலைத் தாக்குகின்றன. அவ்வாறு தாக்கும் நோயில் ஒன்று தான் நீரிழிவு. அதிலும் அந்த நோய் வந்தால், அதற்கான டயட சார்ட்டை தயார் செய்வது என்பது மிகவும் கடினம். பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தந்தாலும், நீரிழிவு நோயளிகளுக்கு சில நேரங்களில் அவை கெடுதலை விளைவிக்கும். ஏனெனில் நிறைய காய்கறிகளில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பொருள் உள்ளது. உதாரணமாக, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் போன்ற காய்கள் அனைத்தும் உடலுக்கு மிகவும் சிறந்தவை. ஆனால், அது நீரிழிவு உள்ளவர்களுக்கு சிறந்தது அல்ல. ஆகவே இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எந்த ஒரு உணவை உண்ண வேண்டுமென்றாலும், மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. அதிலும் உண்ணும் காய்கறிகள் மற்றும் பழங்களில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நிச்சயம் இனிப்பு உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காய்கறிகள் தான் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம், அவற்றிலும் இனிப்புகள் அதிகம் இருக்கும் காய்கறிகளும் உள்ளன.


நீரிழிவு நோய் தற்போது அனைவரின் உடலிலும் வந்துவிடுகிறது. இத்தகைய நீரிழிவு உடலில் வந்துவிட்டால், அதனை முற்றிலும் சரிசெய்ய முடியாது. ஆனால் அவற்றை கட்டுப்படுத்தி, ஆரோக்கியமாக வாழ முடியும். அதற்கு இன்சுலின் ஊசி தான் ஒரே வழி என்று நினைக்க வேண்டாம். அத்தகைய நீரிழிவை இயற்கை முறையிலும் கட்டுப்படுத்தலாம். அதிலும் காய்கறிகளில் வெண்டைக்காயை சாப்பிட்டால், நீரிழிவு கட்டுப்படும்.

நீரிழிவை கட்டுப்படுத்த எப்படி வெண்டைக்காயை பயன்படுத்த வேண்டும்?
* இரண்டு வெண்டைக்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதன் இரு முனைகளையும் நீக்கிவிட வேண்டும்.
* முனைகளை நறுக்கியப்பின் அதிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு திரவம் வரும். அப்போது அதனை கழுவிடாமல், ஒரு டம்ளர் நீரில் அந்த துண்டுகளை போட்டு, இரவில் படுக்கும் முன்பு ஊற வைத்து, மறக்காமல் மூடிவிட வேண்டும்.
* பின் காலையில் எழுந்து, அந்த துண்டுகளை நீக்கி, அந்த நீரை குடிக்க வேண்டும்.
* இதனை தினமும் காலையில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும்.
* சொல்லப்போனால் வெண்டைக்காயை வேக வைத்து சாப்பிடுவதை விட, இவ்வாறு சாப்பிடுவது தான், சிறந்த பலனைத் தரும்.
ஆகவே வெண்டைக்காயை குழம்பு, பொரியல் என்று சாப்பிடுவதை தவிர்த்து, மேற்கூறியவாறு சாப்பிட்டால், நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம்.
வெண்டைக்காய் எப்படி நீரிழிவைக் கட்டுப்படுத்தும்?
* வெண்டைக்காயில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. ஆகவே இதனை அதிகம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதோடு, வயிறும் நிறைந்துவிடும். இதை ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.
* நீரிழிவில் டைப்-2 நீரிழிவு என்று ஒன்று உள்ளது. இது சிறுநீரகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த வகையான நீரிழிவு இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதோடு, சிறுநீரகத்திற்கும் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே வெண்டைக்காயை சாப்பிட்டால், சிறுநீரகத்தில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.
* எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ள உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இந்த சத்து உடலில் இருக்கும் கார்போஹைட்ரேட்டின் செரிமான நேரத்தை குறைத்து, அவை இரத்தத்தில் கலக்காமல் தடுக்கிறது. இத்தகைய சத்து வெண்டைக்காயில் அதிகம் உள்ளது.
எனவே, வெண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்து, நீரிழிவைக் கட்டுப்படுத்துங்கள்.


எனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், எந்த காய்கறிகளை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதைப் பார்ப்போமா!!!
பாகற்காய்

நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த பாகற்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

வெந்தயக் கீரை

கீரை வகைகளில் வெந்தயக் கீரையை சாப்பிட்டு வந்தால், நீரிழிவைத் தடுக்கலாம். இந்த கீரையில் உள்ள லேசான கசப்பு சுவையானது, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை குறைக்கிறது.

வெண்டைக்காய்

வெண்டைக்காயை நறுக்கும் போது வரும் ஒருவித பசை போன்ற நீர்மம், நீரிழிவைக் கட்டுப்படுத்தும். அதற்கு இரவில் தூங்கும் போது வெண்டைக்காயை இரண்டாக கீறி, ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, அதிகாலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

சுரைக்காய்

இன்சுலின் குறைபாட்டினால் வரும் நீரிழிவை, சுரைக்காயின் சாற்றை எடுத்து, காலையில் குடித்து வர சரியாகும்.

லெட்யூஸ் (Lettuce)

இந்த பச்சை இலைக் காய்கறியில் நார்ச்சத்து அதிகமாகவும், சர்க்கரையின் அளவு குறைவாகவும் உள்ளது. ஆகவே இதனை சாப்பிடுவது நல்லது.

காலிஃப்ளவர்

மற்ற காய்கறிகளைப் போன்று, காலிஃப்ளவர் இனிப்பு சுவையற்றது. ஆகவே இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால், உடலானது நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இனிப்பு சுவை இல்லாத காய் என்பதால, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.

பூசணிக்காய்

அனைவருக்குமே பூசணிக்காய் இனிப்பு சுவையுடையது என்பது தெரியும். ஆனால் அவற்றில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக இருக்கும். எனவே தான் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு காய்கறி.

பிரெஞ்சு பீன்ஸ்

பிரெஞ்சு பீன்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. எனவே இதனை நீரிழிவு உள்ளவர்கள் உண்டால், நீரிழிவைத் தடுக்கலாம்


Tips to protect from White Hair & Dandruff

வயதாகிவிட்டதை குறிக்கும் ஒரு இயற்கை செயல் தான் வெள்ளை முடி வருவது. அனைவருக்குமே ஒரு காலத்தில் நமது முடி நரைக்கும் என்பது தெரியும். ஆனால் அத்தகைய முடி 40 அல்லது 50-ல் தான் வெள்ளையாகும் என்று நினைப்போம். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு 20 வயதிலேயே முடியானது நரைக்க ஆரம்பித்துவிடுகிறது. இவ்வாறு கூந்தல் நரைப்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. அந்த காரணத்தை சரியாக தெரிந்து கொண்டால், இளமையிலேயே கூந்தல் நரைப்பதை தடுக்கலாம். இப்போது அந்த நரை முடி வருவதை எப்படி தடுப்பது என்று பார்ப்போமா!!!
* இன்றைய அவசர மார்டன் வாழ்க்கை முறையில் அனைத்து இளம் தலைமுறையினருக்கும் உள்ள பிரச்சனை தான் நரை முடி. ஏனெனில் அவர்கள் நிறைய டென்சன், மனஅழுத்தம் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே தான் விரைவிலேயே நரை முடி வருகிறது. உங்களுக்கு தெரியுமா? வயதானவர்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள், டென்சனுடன இருப்பதால் தான், அவர்களுக்கு நரை முடி ஏற்படுகிறது. ஆகவே அத்தகைய டென்சனை சிறுவயதிலேயே வந்தால், நரை முடியும் வந்துவிடும். எனவே எப்போதும் ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும்.
* தற்போதைய ஆய்வு ஒன்றில் தலையில் அதிகமான அளவில் பொடுகு இருந்தால், விரைவில் நரை முடி வந்துவிடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே எப்போதும் தலையை சுத்தமாக, பொடுகில்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் தலையில் உள்ள பொடுகு நீக்குவதற்கு ஹென்னாவுடன், எலுமிச்சை சாறு சேர்த்து தடவி குளித்து வந்தால், பொடுகு எளிதில் நீங்கிவிடும்.
* நரை முடி உடலில் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாவிட்டாலும் வரும். அதிலும் தற்போது உள்ள இளம் தலைமுறையினர் ஸ்லிம்முடன் இருக்க வேண்டும் என்பதற்காக டயட்டில் இருக்கிறார்கள். இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், நரை முடியானது வருகிறது.
* கூந்தல் வெள்ளையாவதற்கு உடலில் காப்பர் சத்து குறைவாக இருப்பது முக்கிய காரணம் என்று தற்போதைய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் காப்பர் தான், உடலில் உள்ள நிறமூட்டும் மெலனின் என்னும் நிறமியை அதிகம் உற்பத்தி செய்கிறது. ஆகவே இத்தகைய சத்து குறைபாட்டினால், கூந்தலுக்கு நிறமளிக்கும் மெலனின் அளவு குறைந்து, வெள்ளை முடி ஏற்படுகிறது. மேலும் இந்த காப்பர் சத்து கடல் உணவுகளில் அதிகம் உள்ளது. அதிலும் நண்டில் அதிகம் உள்ளது. சைவ உணவு என்றால் எலுமிச்சை மற்றும் காளானில் இந்த சத்து உள்ளது.
* சிலசமயங்களில் எந்த காரணத்தினால் வெள்ளை முடி வருகிறது என்று சொல்லமுடியவில்லை என்று இருப்பவர்கள், அதனை நீக்க ஒரு இயற்கை மருத்துவத்தை மேற்கொள்ளலாம். அது பீர்க்கங்காயின் சதைப் பகுதியை நன்கு அரைத்து, தேங்காய எண்ணெயில் ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை கூந்தலுக்கு தடவி, ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும்.
* இந்திய மக்களின் கருமையான கூந்தலுக்கான இரகசியம் கறிவேப்பிலை. இத்தகைய கறிவேப்பிலையை சமையலில் சேர்த்தும் சாப்பிடலாம் அல்லது வெதுவெதுப்பான எண்ணெயில் ஊற வைத்து, கூந்தலுக்கு தடவி வரலாம்.
ஆகவே மேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், கருமையான கூந்தல் வெள்ளையாவதை தடுக்கலாம்.

தலையில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பொடுகு. அத்தகைய பொடுகு ஸ்கால்ப்பில் அளவுக்கு அதிகமாக இறந்த செல்கள் இருப்பதால் ஏற்படுகிறது. அவ்வாறு பொடுகு தலையில் அளவுக்கு அதிகமாக வந்துவிட்டால், கூந்தல் உதிர்தல், பிம்பிள், முகப்பரு மற்றும் நரை முடி போன்றவை ஏற்படும். ஆகவே இத்தகைய பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு, இந்த பொடுகை போக்குவதற்கான செயல்களில் விரைவில் ஈடுபட வேண்டும். அதிலும் அந்த பொடுகை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, நீக்கிவிட முடியும். இப்போது அந்த பொருட்கள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, தலையில் இருக்கும் பொடுகை இயற்கை முறையில் நீக்குங்கள்.
* தயிர் மற்றும் மிளகு: 2 டீஸ்பூன் மிளகுத்தூளை 1 கப் தயிருடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை தலையில் நன்கு தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு தலையை அலவ வேண்டும். இதனால் தலையில் உள்ள பொடுகு நீங்கிவிடும்.
* ஆலிவ் ஆயில்: ஆலிவ் ஆயிலில் பொடுகை நீக்கும் தன்மை உள்ளது. அதற்கு இரவில் படுக்கும் முன்பு, அந்த ஆயிலை லேசாக சூடேற்றி, ஸ்கால்ப்பில் தடவி, நன்கு மசாஜ் செய்து, பின் தூங்க வேண்டும். பின் அதனை காலையில் எழுந்து, ஷாம்பை போட்டு குளிக்க வேண்டும்.
* வினிகர்: வினிகரில் பொட்டாசியம் மற்றும் நொதிகள் அதிகம் உள்ளது. இது ஸ்கால்ப்பில் ஏற்படும் அரிப்பு மற்றும் பொடுகை சரிசெய்யும். அத்தகைய சிறப்புடைய வினிகரை பல வழிகளில் பயன்படுத்தலாம்.
- ஆப்பிள் சீடர் வினிகரை தலையில் தடவி, 5-7 நிமிடம் மசாஜ் செய்து, குளித்து வந்தால், தலையில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, பொடுகு போவதோடு, பொடுகினால் ஏற்படும் கூந்தல் உதிர்தலும் நின்றுவிடும்.
- இல்லையெனில் ஒரு டேபிள் ஸ்பூன் வினிகரை, தலைக்கு குளிக்கும் போது, கடையில் ஒரு கப் தண்ணீருடன் கலந்து தலைக்கு ஊற்ற வேண்டும்.
* எலுமிச்சை மற்றும் பூண்டு: இநத கலவை சிறந்த பலனைத் தரும். ஏனெனில் ஏற்கனவே எலுமிச்சை ஸ்கால்ப்பில் உள்ள தோல் செதில்செதிலாக வருவதை தடுக்கும். மேலம் பூண்டு ஒரு ஆன்டி-பயாடிக் மற்றும் ஸ்கால்ப்பில் பாக்டீரியா வராமல் தடுக்கும். ஆகவே அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 2 டேபிள் ஸ்பூன் பூண்டின் பற்களை அரைத்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி, பின் ஷாம்பு சேர்த்து குளிக்க வேண்டும்.

Home remedies to cure eye's dark circle

இன்றைய பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். இந்த கருவளையம் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மட்டும் வருவதில்லை, அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. அதிலும் தற்போது நிறைய க்ரீம்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. மேலும் அவற்றை பயன்படுத்துவதால், சில சமயங்களில் பல பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. ஆகவே அத்தகைய பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாமல் இருக்க, வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே சிறந்தது. இப்போது அந்த கருவளைத்தை போக்குவதற்கான இயற்கைப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!
* உருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை, காட்டனில் நனைத்து, அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.
* எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.
* தக்காளி ஜூஸை ஒரு நாளைக்கு இரண்டு முறை, சிறிது புதினா மற்றும் உப்பை சேர்த்து கலந்து குடித்து வந்தால், கருவளையங்கள் நாளடைவில் நீங்கிவிடும்.
* பாதாமை சிறிது பாலுடன் சேர்த்து, பேஸ்ட் போல் செய்து, கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருமையான வளையம் போய்விடும்.
* மற்றொரு முறை ஒரு டீஸ்பூன் அன்னாசிப் பழச்சாற்றுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தினமும் தடவி வந்தால், கருவளையங்கள் நீங்கி, முகம் நன்கு பொலிவோடு காணப்படும்.
* இல்லையெனில் தினமும் படுக்கும் முன்பு, வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த க்ரீம்களை தடவி வந்தால், கருவளையம் போய்விடும்.
* சிறிது புதினா இலையை பேஸ்ட் செய்து , அதனை கண்களைச் சுற்றி தடவி வந்தால், கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். கண்களில் கருவளையம் வருவதற்கு கண்கள் களைப்புடன் இருப்பதும் ஒரு காரணம். ஆகவே இந்த முறை கண்களை புத்துணர்ச்சியாக்கும்.

Deepavali Special - Non Veg Recipes

மண மணக்கும் செட்டிநாடு மட்டன் குழம்பு

மட்டன் குழம்பு என்றாலே அது செட்டிநாட்டு மட்டன் குழம்பு தான், அந்த அளவிற்கு சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும். இதற்கு காரணம் இதில் சேர்க்கப்படும் மசாலாக்கள். காரமான குழம்பை சாப்பிட நினைப்பவர்கள் இதை முயற்சி செய்யலாம். சரி தேவையான பொருட்களுக்கு போவோம்.
தேவையான பொருட்கள்
மட்டன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள் - 3 ஸ்பூன்
சோம்பு - 1/2 டீ ஸ்பூன்
பட்டை, கிராம்பு கருவேப்பில்லை
தாளிக்க சிறிதளவு எண்ணெய் - 4 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
அரைக்க தேவையானவை :
மிளகு - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
பூண்டு - 6 பல்
இஞ்சி - ஒரு துண்டு
செய்முறை:
கறியை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சுத்தம் செய்த கறியை சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். 5 விசில் வரை விட்டால் கறி நன்றாக வெந்து விடும்.
ஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு மூன்றையும் வறுத்து பூண்டு, இஞ்சி சேர்த்து அரைக்கவும்.
அகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். இத்துடன் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். நன்றாக வதங்கிய உடன் அரைத்து வைத்த மசாலாவை போட்டு வதக்கவும். சிறிது வதங்கிய பின் அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, அதில் வேகவைத்த கறியைப் போட்டு நன்கு கொதிக்க விடவும். குழம்பு நன்றாக கொதித்து வற்றி எண்ணெய் மிதந்து வரும். இப்பொழுது ஸ்டவ்வை நிறுத்திவிடலாம். சுவையான செட்டிநாட்டு மட்டன் குழம்பு தயார்.

காரசாரமான...அசாரி கோஸ்ட் (மட்டன்)
மழைக்காலம், குளிர்காலம் என்றால் காரசாரமான ரெசிபி எதாவது சாப்பிடணும் போல இருக்கும். அப்ப இந்த அசாரி கோஸ்ட் (மட்டன்) ரெசிபி ரொம்ப நல்லா இருக்கும். அது எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
மட்டன் (1/2 இஞ்ச் எலும்புடன் கூடிய கறி) - 800 கிராம்
வெங்காயம் - 4
தக்காளி - 4
வரமிளகாய் - 8
கிராம்பு - 5
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 2 டீஸ்பூன்
எலுமிச்சைப்பழச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு எண்ணெய் - 7 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை :
1. முதலில் மட்டனை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயம், தக்காளியை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. பிறகு வரமிளகாய், கடுகு, வெந்தயம், சீரகம், பெருஞ்சீரகம், கிராம்பு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, பின் அவற்றை குளிர வைத்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
3. பின் ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு எண்ணெயை ஊற்றி, வெங்காயத்தை அதில் போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும். பின் தக்காளி, இஞ்சிபூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
4. பிறகு அதில் அரைத்து வைத்துள்ள அந்த பொடியை போட்டு சிறிது நேரம் நன்கு கிளரவும்.
5. அடுத்து அதில் கழுவிய மட்டனை சேர்த்து நன்கு பிரட்டவும். பின் அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளரவும். அதில் ஊற்றிய எண்ணெயும், மசாலாவும் தனியாக பிரியும் வரை பிரட்ட வேண்டும்.
6. பின் அதில் இரண்டு கப் தண்ணீரை ஊற்றி, மூடி போட்டு மூடிவிட்டு அரைத் தீயில் வைத்து மட்டன் வேகும் வரை வேக விடவும்.
7. மட்டன் வெந்ததும், அதில் எலுமிச்சைப்பழச்சாற்றை விட்டு கிளரி இறக்கி விடவும்.
8. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லியை அதன் மேல் தூவி பரிமாறலாம்.
இதோ சுவையான, காரசாரமான அசாரி கோஸ்ட் ரெடி!!!


காரமான...மட்டன் சில்லி!
பிரியாணிகளுக்கு சில சைடு டிஷ்களை செய்வீர்கள். அந்த சைடு டிஷ்ஷில் மட்டன் சில்லி செய்து கொடுத்தால் நன்கு காரமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். இப்போது இந்த மட்டன் சில்லியை செய்வது எப்படியென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
மட்டன் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 12
தக்காளி - 1
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 2
மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் மட்டனை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயத்தை நறுக்காமல், உரித்து வைத்துக் கொள்ளவும். தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.
பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின் அதில் உரித்து வைத்துள்ள வெங்காயத்தையும், கீறி வைத்திருக்கும் பச்சை மிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
சிறிது நேரம் கழித்து நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து வதக்கவும். பின்னர் கழுவி வைத்துள்ள மட்டனை அதில் போட்டு, சிறிது உப்பை சேர்த்து ஒரு முறை பிரட்டி, மஞ்சள் தூள் மற்றும் 1/2 கப் தண்ணீரை விட்டு மூடி 3-4 விசில் விட்டு இறக்கவும்.
இப்போது குக்கரில் இருக்கும் மட்டனில் சிறிது தண்ணீர் இருக்கும். ஆகவே அந்த குக்கரை மறுபடியும் அடுப்பில் வைத்து, தண்ணீர் சுண்டும் வரை நன்கு சுருளக் கிளறவும்.
இப்போது சுவையான காரமான மட்டன் சில்லி ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறலாம்.


நல்லி எலும்பு கறி கிரேவி!
ஆட்டு எலும்பு கறி சத்து நிறைந்தது. இதனை வேகவைத்து சூப் ஆக குடிக்கலாம். கிரேவி செய்தும் சாப்பிடலாம். கிராமங்களில் இன்றைக்கும் நல்லி எலும்பு கறிக்கு அதிக வரவேற்பு உண்டு. பக்குவம் மாறாமல் செய்தால் சுவை சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
ஆட்டு நல்லி எலும்பு - 15
பெரிய வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 5
தயிர் - 1/2 கப்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 1 கைப்பிடி
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
பட்டை - சிறிது
கிராம்பு - 5
ஏலக்காய் - 4
பிரிஞ்சி இலை - 2,
நல்லி எலும்பு கறி செய்முறை
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். ஆட்டு எலும்பை கழுவி சுத்தம் செய்து வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். இதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கி, கறியை சேர்த்து பிரட்டவும்.
கறி நன்கு வதங்கியதும் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும். 10,12 விசில் வந்த உடன் ஸ்டவ்வை நிறுத்தி விடவும். விசில் இறங்கிய உடன் தக்காளி, நன்கு அடித்த தயிர் சேர்த்து கொதிக்க விடவும். அடுப்பை மிதமாக எரியவிட்டு எண்ணெய் பிரியும் வரை வைத்து இறக்கவும். இதனுடன் நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும். நல்லி எலும்பு கிரேவி சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.


மிளகுத்தூள் மட்டன் தொக்கு!
வளரும் குழந்தைகளுக்கு மட்டன் சமைத்து தருவது அவசியம். அதில் உள்ள உயர்தர புரதச் சத்து குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்றது. காரம் குறைந்த மிளகு அதிகம் சேர்க்கப்பட்ட மட்டன் தொக்கு குழந்தைகளுக்கு ஏற்றது. அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
மட்டன் - கால்கிலோ
சின்ன வெங்காயம் – 50 கிராம்
தக்காளி - 1
மிளகுத்தூள் - 2 டீ ஸ்பூன்
இஞ்சி, பூண்டு 2 டீ ஸ்பூன்
தனியா – 1 டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 டீ ஸ்பூன்
வர மிளகாய் -2
பட்டை,லவங்கம் சிறிதளவு
கருவேப்பிலை தாளிக்க சிறிதளவு
எண்ணெய் 3 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மட்டன் தொக்கு செய்முறை
வாணலியில் அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வரமிளகாய், தனியா, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி வைக்கவும். அவற்றை தனியாக மிக்சியில் அரைத்து எடுக்கவும்.
குக்கரில் இரண்டு 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பிலை, பட்டை, லவங்கம் போட்டு தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய மட்டனை நன்கு கழுவி குக்கரில் போட்டு வதக்கவும், அப்போது இஞ்சி, பூண்டு விழுது போட்டு கிளறிவிடவும். பின்னர் உப்பு, மஞ்சள் தூள் போட்டு நன்கு கிளறவும்.
இதோடு அரைத்து வைத்த வெங்காய, தக்காளி விழுதை போட்டு வதக்க வேண்டும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். குக்கரில் மூடி போட்டு 4 விசில் வரை விடவும். விசில் இறங்கிய உடன் குக்கரை திறந்து அதில் மிளகு தூள் போட்டு கிளறவும்.
பின்னர் மிதமான தீயில் எண்ணெய் பிரியும் வரை வேக விடவும். சுவையான மட்டன் தொக்கு தயார். சூடான சாதத்திற்கோ, சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.

சாஹி மட்டன் குருமா!!!
மட்டன் பிடிக்காதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். அந்த மட்டனை இதுவரை குழம்பு, வறுவல் என்று செய்து வீட்டில் உள்ளோருக்கு கொடுத்திருப்போம். ஆனால் இப்போது அந்த மட்டனை வைத்து கொஞ்சம் வித்தியாசமாக செய்து கொடுத்து நல்ல பாராட்டைப் பெற, சாஹி மட்டன் குருமா சிறந்தது. அது எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
எலும்பில்லாத மட்டன் - 600 கிராம்
வெங்காயம் - 3
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 3
கிராம்பு - 4
இலவங்க பட்டை - 1
மிளகு - 7
இஞ்சிபூண்டு விழுது - 3 டீஸ்பூன்
மல்லிப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
முந்திரி பேஸ்ட் - 1/4 கப்
கரம் மசாலா பொடி - 1 டீஸ்பூன்
கிரீம் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
மட்டனை ஒரு இன்ச் சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். பின் அதனை நன்கு சுத்தமாக கழுவி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
பின் அதில் இலவங்க பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அதோடு இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு 1 நிமிடம் தொடர்ந்து வதக்கவும். முக்கியமாக அடி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும். பின் அதில் கழுவிய மட்டனை சேர்த்து, தீயை அதிகப்படுத்தி 3-4 நிமிடம் கிளறி வேகவிடவும்.
பின் மல்லிப் பொடி, மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, மறுபடியும் 2-3 நிமிடம் வேக விடவும்,
அடுத்து தயிர் மற்றும் ஒரு கப் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். பின் தீயின் அளவை குறைத்து, மட்டனை தட்டை வைத்து மூடி, மட்டன் வேகும் வரை வேக விடவும்.
பிறகு அதில் முந்திரி பேஸ்ட் மற்றும் கரம் மசாலா பொடியை போட்டு, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும். பின் அதில் கிரீமை சேர்த்து கிளறி 10 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
இப்போது சுவையான சாஹி மட்டன் குருமா ரெடி!!!


மங்லோரியன் சிக்கன் ரெசிபி: கோரி ரொட்டி கிரேவி!!!
தென்னிந்திய உணவுகளில் மங்லோரியன் ரெசிபி மிகவும் பிரபலமானது. அதிலும் அசைவ உணவுகள் தான் மிகவும் சுவையாக இருக்கும். இப்போது அத்தகைய மங்லோரியன் ரெசிபிகளில், சிக்கனில் சூப்பராக இருப்பது என்னவென்றால், அது கோரி ரொட்டி தான். என்ன பெயர் வித்தியாசமாக இருக்கிறதென்ற பார்க்கிறீர்களா? சாதாரணமான பெயர் தான். அதாவது கோரி என்றால் சிக்கன், ரொட்டி என்றால் சப்பாத்தி என்று அர்த்தம். ரொட்டி எப்போதும் சற்று கடினமாக இருக்கும். அதனை சிக்கன் கிரேவியுடன் தொட்டு சாப்பிட்டால், சற்று மென்மையாகிவிடும். எனவே தான் இதற்கு இந்த பெயர் வந்தது. இப்போது அந்த கோரி ரொட்டியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
 

தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ (சுத்தமாக கழுவியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தேங்காய் பால் - 1/2 கப் (கெட்டியானது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 3
ஏலக்காய் - 3
வரமிளகாய் - 4
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
புளி தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.
பின்னர் வதக்கி இறக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி வரமிளகாய், சீரகம், இஞ்சி பூண்டு விழுது, கிராம்பு, பட்டை மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்கு 1 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காயப் பேஸ்ட், மஞ்சள் தூள், மல்லி தூள், புளி தண்ணீர், தேங்காய் பால் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து, கொதிக்க விட வேண்டும்.
மசாலா கொதித்ததும், அதில் சிக்கன் துண்டுகளை போட்டு, சிறிது உப்பு சேர்த்து, நன்கு கிளறி, மூடி போட்டு சிக்கன் வேகும் வரை கொதிக்க விட்டு, மசாலா ஓரளவு கெட்டியான பின் இறக்க வேண்டும்.
இப்போது சுவையான கோரி ரோட்டி ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியை தூவி, ரொட்டி என்னும் சப்பாத்தியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.


அருமையான... ஸ்பைசி மீன் மசாலா!!
பொதுவாக மீனை குழம்பு, மசாலா, வறுவல் என்று செய்வார்கள். ஆனால் மசாலாவில் இப்போது செய்விருக்கும் மசாலா சற்று வித்தியாசமானது. அதாவது, இதில் மீனை வறுத்து, பின் மசாலா செய்வோம். சரி, அந்த மீன் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பொரிப்பதற்கு...
சாலமன் மீன் - 2
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மசாலாவிற்கு...
வெங்காயம் - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
கிராம்புத் தூள் - /14 டீஸ்பூன்
வெந்தயப் பொடி - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் மீனை நன்கு கழுவி சிறு நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். பின் அதனை கழுவி வைத்துள்ள மீனில் தடவி, 10 நிமிடம் ஊற வைக்கவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்துள்ள மீனை போட்டு பொரித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், வெந்தய பொடி, கிராம்பு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
நன்கு வதங்கியதும், அதில் மசாலாவிற்கு ஏற்ற அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்கவிடவும்.
பிறகு பொரித்து வைத்துள்ள மீனை இந்த மசாலாவில் சேர்த்து, ஒரு முறை பிரட்டி, தீயை குறைவில் வைத்து, 3 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
இப்போது அருமையான மீன் மசாலா ரெடி!!! இதன் மேல் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, சாதத்துடன் சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும்.