About Me

My photo
I am an IT professional, Nowadays our Lifestyle is changed a lot and of course we are chasing money. In India More than 7 crore people affected by Diabetes, High Cholesterol and infertility due to their Poor Food Habits &amp Lifestyle. This Blog is very useful for youngsters to lead good Lifestyle and be healthy and students to choose career courses.Work hard, but make time for your love, family and friends. Nobody remembers Powerpoint presentations on your Final Day.I believe Life is ours and we only Live our Life.... Thanks for visiting and welcome you to visit again. WHO LOVES GOD ARE SEARCHING GOD, WHO LOVES PEOPLE ARE LIVING AS GOD - SK ( Reach me @ +91 9791139942 to lead Healthy Family Life )

Sunday 15 December 2013

குடிநீரைப் பாதுகாக்கும் செப்பு & உணவே மருந்து & அற்புத மூலிகை அறுகம்புல்

குடிநீரைப் பாதுகாக்கும் செப்பு

செப்பு மற்றும் பித்தளை பாத்திரங்களில் குடிநீரை தேக்கிவைக்கும் இந்திய மற்றும் இலங்கையரின் பழக்கம் மிகவும் வரவேற்கத்தக்கது என்று நுண்ணுயிரியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

செப்பு மற்றும் பித்தளை ஆகிய உலோகங்கள், தண்ணீரில் சுகயீனத்தை விளைவிக்கும் நுண்ணுயிர்க் கிருமிகள் பெருகுவதை தடுக்கும் என்று இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியர் டாக்டர். பி. இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இப்படியாக தண்ணீரை இந்த பாத்திரங்களில் சேமித்து வைக்கும் போது நீர் மூலம் பரவும் பல தொற்று நோய்களை தடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொதுவாகவே உலோகங்களுக்கு நோய்க்கிருமிகளை கொல்லும் தன்மை உள்ளது என்றும், அதிலும் குறிப்பாக, இந்த செப்பு மற்றும் பித்தளை போன்ற உலோகங்களுக்கு அந்த தன்மை அதிகமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணத்தினாலேயே கங்கை நீர், செப்பு பாத்திரங்களில் சேமித்து வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

செப்பு பாத்திரத்தில் குடிநீர் வைத்துக் குடிப்பது உடலுக்கு நல்லது என, இப்போது புதிதாகக் கண்டறியப்பட்டது போல் கூறப்படுகிறது. ஆனால், ஆயுர்வேத மருத்துவத்தில் ஏற்கனவே இது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 0.005 கிராம் செம்புச் சத்து தேவை.
செப்புப் பாத்திரத்தில் சேமிக்கப்பட்ட குடிநீர், உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என, ஆயுர்வேதம் கூறுகிறது. எகிப்தில், தொன்மைக் காலம் முதலே, செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் சேமிக்கும் பழக்கம் உண்டு. செப்பு உலோகத்தின் இன்னும் சில அதிசயங்கள்:

* கடந்தாண்டு உலகையே அச்சுறுத்திய இ-கோலி பாக்டீரியாவைக் கொல்லும் திறன், செப்பு உலோகத்திற்கு உண்டு என, பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தங்கத்திற்குக் கூட, இது போன்ற திறன் கிடையாது.
* செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின் வெப்ப நிலையிலேயே, நான்கே மணி நேரத்தில், நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன. ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில், பாக்டீரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழ்கின்றன. பித்தளை பாத்திரத்தில், நான்கு நாட்கள் உயிர் வாழ்கின்றன.
* ரத்தத்தில் செப்புக் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை குறைகிறது.
* இந்த நீர் மிகவும் தூய்மையாக இருப்பதால், நீரைப் பருகிய 45 நிமிடத்தில், செல்களால் உறிஞ்சப்படுகிறது.
* உடலில், "மெலானின்' என்ற நிறமியின் உற்பத்தி அதிகரிப்பதால், "விடிலிகோ' என அழைக்கப்படும் வெண் படையும் குறைகிறது

--------

உணவே மருந்து
* * * * * * * * * * *
உணவின் சுவைகளை உவர்ப்பு, துவர்ப்பு, கைப்பு, கார்ப்பு, இனிப்பு, புளிப்பு என ஆறு வகைகளாகக் கூறுவதுண்டு. அறுசுவைகளால் ஆனதே இந்த உடல்.

நாம் இப்போது எந்த வகை உணவு நம் உடலிற்கு உகந்தது இல்லையோ அதைத் தான் அதிகம் உண்கிறோம். நவீன உணவுகள் என்ற பெயரில் அதிக பட்சம் மைதாவால் ஆன நூடுல்ஸ், மக்ரோனி, பாஸ்தா போன்ற உணவுகளை உட்கொள்வதுதான் நாகரீகம் என்ற விளம்பர மோகத்தில் சிக்கியதால் , நம் பழமையான பாரம்பரிய உணவு வகைகளை தீண்ட தகாத பொருட்களை பார்த்து விட்டதை போல எண்ணம் பலருக்கு. அதை உண்டால் நம் தரம் தாழ்ந்து விட்டது போல எண்ணுகிறார்கள்... கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, திணை, சம்பா கோதுமை, மக்காசோளம், பார்லி, குதிரை வாலி, பனங்கற்கண்டு இந்த பெயர்களை எல்லாம் இனி வரும் காலங்களில் பிள்ளைகள் அறியாத விஷயமாக ஆகி விடும்.

இனியும் கூட இந்த வகை பாரம்பரிய உணவுகளை எடுத்து கொள்ளா விட்டால் வாழும் நாட்களை வியாதிகளுடன் நரகமாக வாழ வேண்டியது தான்.

வாரத்திற்கு ஒரு நாள் என பகல் நேரங்களில் கம்பு, புழுங்கலரிசி, தினை, வரகு, சாமை, கோதுமை ரவை, மக்காசோளரவை இவற்றில் சாதம் செய்து பச்சை காய்கறிகள், கீரை வகைகளை குழம்பாக்கி சேர்த்து உண்டு வர சர்க்கரை மட்டும் இல்லை நம் உடம்பில் இருக்கும் மற்ற பிரச்சனைகள் மொத்தமும் குணமாகும். கேரட், வெள்ளரி போன்றவற்றை சாலட் ஆகவும் இதனுடன் சேர்த்து கொள்ளலாம்.

இரவில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பாத்தி மட்டுமே சாப்பிடாமல் கேழ்வரகு அடை, கம்பு அடை, கம்பு இட்லி என்றும் காலையில் வரகரிசிப் பொங்கல், திணை பொங்கல், சோள தோசை, குதிரைவாலி இட்லி, கம்பங்கூழ், கேழ்வரகுகூழ் என்று சாப்பிட்டால் உடல் எப்போதும் எந்த கோளாறும் இல்லாமல் இயங்கும்.

கம்பு, திணை, வரகு, சாமை, மக்காசோளம், சம்பா கோதுமை, மற்றும் கொள்ளு போன்றவற்றை ரவை போல (அரிசி நொய் போல ) உடைத்து கஞ்சியாக செய்து , இரவு வேளையில் இரண்டு அல்லது மூன்று டம்பளர்கள் குடித்தால் மிகவும் நல்லது .. அனைவருக்கும் ஏற்ற இரவு உணவு இது. பெரும்பாலும் இரவில் வயிறு நிறைய உணவு உண்ணக்கூடாது.. அதிலும் சர்க்கரை வியாதிக்காரர்கள் முழு வயிறு நிறையும் அளவு உண்ணவே கூடாது என்றாலும் கூட, இந்த கஞ்சியை சர்க்கரை வியாதிக்காரர்கள் இரவில் முழு வயிறு நிறையும் அளவு கூட குடிக்கலாம்... இதனால் உடலில் சர்க்கரையின் அளவு ஏறாது..இது இவர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாகும்.
இஞ்சி,புதினா, கொத்துமல்லி, பிரண்டை, கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற்றில் துவையல் செய்து இந்த கஞ்சிக்கு தொட்டும் சாப்பிடலாம்.

கேழ்வரகு தானியங்களில் அதிக சத்துமிக்கது. இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் நிறைந்தது.

கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. கால்சியம், இரும்புச் சத்து, நார்ச் உள்ளது. பி 11 வைட்டமின் ரைபோபிளேவின் நயாசின் சத்து உள்ளது. ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்புண் மலச்சிக்கலை தவிர்க்க வல்லது. வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும்.

சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் உள்ளது. வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். மூலநோயாளிகள் சோள உணவு சாப்பிட கூடாது.

வரகில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. வரகு மாதவிடாய் கோளாறுகளை சரி பண்ணும்.

சாமை மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்தியை அதிகமாக்கி ஆண்மை குறைவையும் போக்கும்.

கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் போக்கும்.

பார்லியை அனைத்து வயதினரும் சாப்பிடலாம். நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பார்கள். உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும். மலச்சிக்கலை போக்க வல்லது. காய்ச்சலை தடுக்கும். உடலின் வெப்பநிலையை சீராக்கும். சிறுநீர் தடையில்லாமல் செல்ல உதவும். எலும்புகளுக்கு உறுதி கொடுக்கும். இருமலை நிறுத்தும். குடல் புண்ணை ஆற்றும்.

--------------

அற்புத மூலிகை அறுகம்புல்

நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகள் அமிலத்தன்மை உடையவை ஆகும். இவை உடல் நலத்தைக் கெடுக்கின்றன. அதேவேளை அறுகம்புல் சாறு காரத்தன்மை உடையது. இது எமது ஆரோக்கியத்திற்கு உகந்ததாகும். இன்றைய காலகட்டத்தில் அறுகம்புல் சாற்றைக் குடிக்க விரும்புவோர் ஆயுர்வேத மருத்துவரை அணுகி அவரது அறிவுறுத்தலின்படி அருந்தலாம்.

அறுகம்புல் (Cynodon dactylon) ஒரு மருத்துவ மூலிகையாகும். வாதம், பித்தம், சளி(கபம்) ஆகிய முக்குற்றங்களினால் உண்டாகும் நோய்கள், ஈளை, கண் புகைச்சல், குருதிப் பித்தம், சிறு நச்சுப் பூச்சிகளின் கடி ஆகியவற்றுக்கு நல்லதொரு மருந்து. குருதி தூய்மையடைய, வியர்வை நாற்றம் போக்க, உடல் அரிப்பைப் போக்க , நமைச்சல் தீர, வெள்ளைப்படுதல் நீங்க மருந்தாக உதவுகிறது..

அறுகம்புல் கட்டி, வீக்கம் என்பவற்றைக் குணப்படுத்தும். சிறுநீரைப் பெருக்கும். இரத்தக் கசிவைத் தடுக்கும். மென்மையான மலமிளக்கி. இதனால் மலச்சிக்கல் நீங்க வழி உண்டாகும். இனி அறுகம் புல்லின் அற்புதத்தன்மைகள் சிலவற்றைப் பார்ப்போம். அறுகம்புல் அமிலத்தன்மையைக் குறைக்கின்றது. நரம்பு மண்டலத்திற்கு உறுதியும் ஊட்டமும் அளித்து உடல் பலவீனத்தைப் போக்கும் ஆரோக்கியம் அளிக்கும் டொனிக் ஆகச் செயற்படுகின்றது.

உடலிலிருந்து நச்சுப் பொருட்களை அகற்றி இரத்ததோட்ட மண்டலத்தை தூய்மைப் படுத்துகின்றது. அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமான மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றது. அறுகம்புல்லில் பச்சயம் பரிணமித்துள்ளது. வாழ்வளிக்கும் உயிர் ஆற்றல், புரதம் கனிம உப்புக்கள் பலவும் உண்டு

காலையில் ஒரு தேக்கரண்டி அறுகம்புல் பொடியைச் சாப்பிட்டு நீர் அருந்த வேண்டும். காலை உணவிற்கு ஒரு மணி நேரம் முன்னதாக இதனை மேற்கொள்வது சிறந்தது. இப்பொடியைத் தேனில் குழைத்தும் உட்கொள்ளலாம். குழந்தைகளும் பொடியை விழுங்குவது மிகவும் எளிய வழியாகும்.

Important fruits to eat in our day to day Life

சத்துள்ள சாத்துக்குடி

எப்போதும் கிடைக்க கூடிய பழங்களுள் ஒன்று சாத்துக்குடி. வைட்டமின்-சி சத்து அதிகம் உள்ள சாத்துக்குடியில், நார்சத்து, இரும்பு சத்து, கால்சியம் சத்து போன்றவையும் உள்ளன. வயிறு தொடர்பான பிரச்னைக்கு சாத்துக்குடி மிகவும் நல்லது. சாத்துக்குடி நோய் எதிர்ப்பு சக்தி உடையது. உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்க கூடியது. மனித உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களான புரதம், கால்சியம், நார்ச்சத்து, உயிர்சத்து, போன்றவை பழங்களில் அதிகம் காணப்படுகின்றன.

உடலுக்கு நேரடியாக சத்துக்களை கொடுப்பவை பழங்கள் மட்டுமே. உண்ணும் உணவு எளிதாக ஜீரணமாவதற்கும், வாய், வயிறு, குடல் பகுதிகளில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் பழங்கள் உதவிபுரிகின்றன. சீதோஷ்ண காலங்க்ளில் விளையும் பழங்களை உண்டாலே உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அந்த வகையில் சாத்துக்குடி பழம் உடலுக்கு பலத்தை தருவதோடு ரத்த உற்பத்தியை அதிகரிக்கும் என்கின்றனர்.

இதயம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கிறது. செரிமான சக்தியுள்ள இந்த சாத்துக்குடி ரத்த ஓட்டத்தை சீராக்கும் தன்மையுள்ளது. நமது தோலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது சாத்துக்குடி. சிகிச்சை பெற்று வருபவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி புத்துணர்வுடன் செயல்பட சாத்துக்குடி ஜூஸ் உதவுகிறது. ஏராளமான நன்மைகள் கொண்ட சாத்துக்குடியை சாப்பிட்டு நாமும் பயன்பெறலாமே.
-------------------------
மாதுளை:

வளரியல்பு :– மாதுளம்வளமான மண்ணில் நன்கு வளரும். இந்தியாவிலும் பல பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது . இதன் தாயகம் இரான் இராக் பின் இந்தியா, பாக்கிஸ்தான் பங்களாதேஸ், சைனா, தெற்குஅரேபியா, ஆப்கானீஸ்தான், போன்ற நாடுகளுக்குப் பரவிற்று . இது ஒரு குறுமரம். இதுசுமார் 10 லிருந்து 25 அடி வரை வளரக்கூடியது . இதன் பூ சிகப்பாக இருக்கும் .மின்னும் சிவப்பாக மஞ்சள் கலந்த பச்சையாக பழங்கள் தோற்றம் தரும். பழத்தின் நுனியில் குஞ்சம் போன்ற அமைப்பு இருக்கும். பழத்துள் கெட்டியான விதைகள் சாறு நிறைந்திருக்கும் . இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு மூன்று வகையா கசாறுகள் இருக்கும். இவற்றின் உலர்த்தப்பட்ட விகைகளிலிருந்து நறுமணப் பொருள்கள் செய்கின்றனர் .விதைகள் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது

மருத்துவப்பயன்கள் :-

மாதுளம் பிஞ்சைக் கொண்டு வந்து புளித்த மோரில் அரைத்துக் கலக்கி செரியாகழிச்சல், சீதக்கழ்ச்சல், நீர்நீராய் கழிதலுக்கும் தர கழிச்சல்கள் நிற்கும்.

மாதுளம்பழத்திற்கு `மாதுளங்கம்’ என்ற பெயரும் உண்டு .மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன.

மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது .உடலுக்குத்தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய்நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது.

இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்திகிடைக்கிறது .பித்தத்தைப் போக்குகிறது, இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது .ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்டசிறுநீரை வெளியேற்றுகிறது .குடற்புண்களை (அல்சர்) குணமாக்குகிறது.

மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும்.

இதயநோய்கள், இதயபலகீனம், நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும்.சீதபேதிக்கு மாதுளை சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடைகூடும்.

தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.

ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம் பழம் சாப்பிடுவதால் மிகுந்தசக்தியை அடைய முடிகிறது.

மாதுளம் பழத்தோலுடன் வேலம்பட்டைத் தூளைக் கலந்து பல் துலக்கிவர பல்வலி, பல்லில் ரத்தம் கசிதல் நீங்கும்.

மாதுளம்பட்டை ச்சாறுவயிற்றிலுள்ள புழுக்களை வெளிப்படுத்தும்.

மூக்கிலிருந்து குருதி வடிவதை நிறுத்த மாதுளம்பூச் சாற்றுடன் அறுகம்புல் சாற்றையும் சம அளவுகலந்து தரலாம்.

மாதுளம்பழச் சாறு ஒருடம்ளர் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். நெஞ்செரிச்சல், மந்தம், அடிக்கடிமயக்கம் போன்றவை நீங்கும்.

மாதுளம் பழச் சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சி யடையும். காய்ச்சல் தணியும். மாதுளம்பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும் .மாதுளம் பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம்.

மாதுளம் பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்து விடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதயவலி நீங்கிவிடும்.

பெரிய இனிப்பு மாதுளம் பழத்தில் ஆறு எடுத்து இதன் முத்துக்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 200 கிராம் சீனியை இதில் கலந்து வைத்து அரை மணி நேரம் வரை இருந்தால், முத்துக்களின் சாறு நீர்த்துப் பிரியும். இந்த சாறு அரைலிட்டர் சேர்ந்தால், ஒருகிலோ சீனியை பாகுபதத்தில் காய்ச்சி, இதனுடன் மாதுளம் பழச்சாற்றைக் கலந்து வைத்து க்கொண்டு மீண்டும் பாகு பதம்வரை சூடு செய்து பத்திரப்படுத்திக் கொண்டுதினசரி 30 மில்லி அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், பித்த நோய்கள் நீங்கும். ஆயாசம் அகலும். வீரியவிருத்திக்கான டானிக் ஆகும் .நினைவாற்றல் பெருகும்.

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக் குப்பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும் .புதிய ரத்தம் உற்பத்தியாகிவிடும்.

மாதுளம்பூக்களைமருந்தாகப்பயன்படுத்தும்போது, இரத்தவாந்தி, இரத்தமூலம்வயிற்றுக்கடுப்பு, உடல்சூடுதணியும்.இரத்தம்சுத்தியடையும், இரத்தவிருத்திஉண்டாகும்.

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மூக்கில் இரத்தம் வடியும் நோய் உள்ளவர்கள், மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன் றுதினங்களுக்குக் கொடுத்தால், இரத்தம் கொட்டுதல் நின்றுவிடும். பெண்களுக்கு ஏற்படும் உதிரப் போக்கிற்கு இதே மருந்தை மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.

மாதுளம்பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக இருக்கும் போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து பாதியாக சுண்டக் காய்ச்சியதை, காலைநேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள தட்டைப்பூச்சிகள் மலத்துடன் வெளியேறிவிடும்.

மாதுளம்பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்ப நோய்தீரும் .மாதுளம் பூக்கள் அறுகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம். சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டு, வேளைக்கு 30 மில்லி எடுத்து இதில் பசுவெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும்.

அலர்ஜியை நிவர்த்திக்கும் மூலச்சூடும் வெட்டை நோயும் நீர்க்கடுப்பும் நீங்க மாதுளம்பூச்சாறு 300 கிராம் சேகரித்து அதில் 200 கிராம் பசுநெய் சேர்த்து பூச்சாறு சுண்டும் அளவிற்கு காய்ச்சி நெய்யை வடித்து வைத்துக் கொண்டு தினசரி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால், இரண்டு மாதத்தில் கடுமையான சயரோகப் பாதிப்பு, படிப்படியாகக் குறைந்துவிடும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் தேறும். தொடர்ந்து இருபது தினங்கள் இதே நெய்யை காலை மாலை சாப்பிட்டு வந்தால் எல்லா விதமான மூல நோயும் நீங்கும்.

-------------

இயற்கையின் கொடையான பப்பாளி பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வீடு, தோட்டம் என பல்வேறு இடங்களில் சர்வசாதாரணமாக நாம் பார்க்கக் கூடிய மரங்களில் ஒன்று பப்பாளி மரம். மருத்துவ குணங்கள் நிறைந்த பழம் பப்பாளியில், வைட்டமின் ஏ, சி ஷ்மற்றும் இ ஆகியவை உள்ளன.

பப்பாளி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கும். நார்சத்து மிக்கது. செரிமானத்துக்கு நல்லது. உடலுக்கு புத்துணர்வை தரும் பப்பாளி, தோலில் ஏற்படும் குறைபாடுகளை களையவல்லது.

இதனால் உடல் பொலிவு பெறும். கண் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது பப்பாளி. இதயம் தொடர்பான பிரச்னைகள், கேன்சர் வராமல் தடுக்கிறது. இதுபோன்று பல்வேறு நன்மைகளை தரும் பப்பாளி பழம், மற்ற பழங்களை விட விலையும் குறைவு. எளிதாகவும் கிடைக்க கூடியது. எனவே, பப்பாளி பழத்தை நாமும் சாப்பிட்டு பயன்பெறலாமே. பப்பாளி பழத்தை காயாகவோ, அதிமாக பழுத்த பின்னரோ சாப்பிடுவதை விட, சரியான பதத்தில் உள்ள பழத்தை சாப்பிடுவதே சிறந்தது.

-----------------

Wednesday 11 December 2013

What is the cause for diabetics


ஏன் வருகிறது சர்க்கரை நோய்?

மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருக்கும் நோய்கள் என்று ஒரு பட்டியலைப் போட்டால் அதில் முதலிடத்தில் இருப்பது சர்க்கரை நோய். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தொலைக்காட்சி, பத்திரிகை என எல்லா வகையான ஊடகங்களிலும் சர்க்கரை நோய் பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனாலும் இன்றைக்கும் அந்நோய் பற்றிய விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. இதற்கு உதாரணமாகவும் சில புள்ளி விவரங்களைத்தான் காண்பிக்க வேண்டியிருக்கிறது.

உலகம் முழுவதிலும் சுமார் 15 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2025&ம் ஆண்டுவாக்கில் இது இரண்டு மடங்காக உயரக்கூடும். அதிலும் குறிப்பாக, மூன்றாவது உலக நாடுகள் எனப்படும் வளரும் நாடுகளில் இந்த நோய் மிக வேகமாகப் பரவி வருகிறது.

உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் வாழ்க்கை முறை மாற்றத்தினால் லட்சக்கணக்கானவர்களைப் பாதிக்கும் நோயாக இது மறுமலர்ச்சி பெற்றுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பணக்காரர்களின் நோயாகக் கருதப்பட்ட இது, இயந்திரமயமாக்கல், உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை, நவீன யுகத்து கவலைகள் மற்றும் கஷ்டங்களின் காரணமாக, தற்போது சாதாரண மக்களையும் பாதிக்கும் அளவுக்கு மலிந்துவிட்டது.
உலகிலேயே சர்க்கரை நோயாளிகள் குறைவாக இருக்க வேண்டிய நாடு இந்தியா. ஆனால், அதிர்ச்சி தரக்கூடிய உண்மை என்ன தெரியுமா? இந்தியர்கள் மற்ற நாட்டினரைக் காட்டிலும் சர்க்கரை நோய்க்கு மிகச் சுலபமாக இரையாகிறார்கள். கடந்த ஐம்பதாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் பல மடங்கு அதிகரித்துள்ளது.
தற்போது கிராமப்புற மக்களில் சுமார் மூன்று முதல் நான்கு சதவீதத்தினரும், கர்ப்புறங்களில் பத்து முதல் பன்னிரண்டு சதவீதத்தினரும் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாற்பது வயதுக்குக் கீழே உள்ளவர்களில் 38 சதவீதத்தினரும், இருபத்தைந்து வயதுக்குக் கீழே உள்ளவர்களில் 5 சதவீதத்தினரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆராய்ச்சியாளார்களின் கூற்றுப்படி 2025&ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் மட்டும் சுமா ஆறு கோடி சர்க்கரை நோயாளிகள் இருப்பார்கள். சீனாவில் மூன்றே முக்கால் கோடி பேரும், அமெரிக்காவில் இரண்டேகால் கோடி பேரும் இந்த நோயாளல் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
சர்க்கரை நோய் பற்றி இன்னும் முழுமையான விழிப்புணர்வு வரவில்லை என்பதையே இந்தப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. எனவேதான், சர்க்கரை நோய்க்கும் பாலுறவுக்குறைபாட்டுக்குமான தொடர்பு பற்றி விரிவாகப் பேசும் முன்னர் இந்த நோய் பற்றி இங்கு விளக்கமாகப் பேச வேண்டி இருக்கிறது.

நாம் சாப்பிடும் உணவில் மாவுச் சத்த, புரதம் மற்றும் கொழுப்பு ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன. இந்தச் சத்துகள் உணவில் இருந்து பிரிக்கப்பட்டு, உடலில் உள்ள பல கோடி செல்கள் ஆற்றலுடன் செயல்ப அனுப்பி வைக்கப்படுகின்றன. குறிப்பாக, மாவுச் சத்துதான் குளுக்கோஸ் என்கிற சர்க்கரைச் சத்தாக மாற்றப்படுகிறது. இது குடலில் இருந்து ரத்த ஓட்டத்தில் கலக்கிறது. அங்கிருந்து எல்லா அணுக்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. ரத்தத்தில் இருந்து வரும் இந்தச் சர்க்கரைச் சத்து லமாகத்தான் செல்கள் செயல்படுவதற்கான சக்தி கிடைக்கிறது.

உணவு & உணவின் மூலமாகக் கிடைக்கும் மாவுச்சத்து & மாவுச் சத்து, சர்க்கரைச் சத்தாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலப்பது & ரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்து, சக்தியாக மாற்றப்பட்டு செல்களுக்குப் பயன்படுவது & இந்தச் சுழற்சி தடைபடாமல் நடந்து கொண்டிருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. அப்போதுதான் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு சீரான நிலையில் இருக்கும். உடலின் ஆரோக்கியத்துக்கு குளுக்கோஸ் சீரான அளவில் இருக்க வேண்டியது மிக அவசியம்.
உணவின் மூலமாக ரத்தத்தில் குளுக்கோஸ் கலந்து கொண்டே இருக்கிறது, ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் அதை உடல் செல்களால் பயன்படுத்த முடியவில்லை என்றால் அந்த நிலையைத்தான் சர்க்கரை நோய் என்கிறோம்.

குளுக்கோஸை ஏன் உடல் செல்களால் பயன்படுத்த முடிய வில்லை. இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்ல வேண்டும் என்றால் நாம் கணையம் என்கிற உறுப்பு பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்.
நமது உடலில் இயங்கும் நாளமில்லாச் சுரப்பிகளுள் முதன்மையானதாக விளங்கும் கணையம், வயிற்றுப் பகுதியில் தொப்புகளுக்கு மேல், இரைப்பைக்குப் பின்புறம் மாவிலை வடிவத்தில் காணப்படுகிறது. இதயத்தைப் போலவே, கணையமும் நாள் முழுக்கச் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. இரண்டு முக்கியமான வேலைகளின் கணையம் பங்கேற்கிறது.
செரிமான நீரையும் நொதிப் பொருள்களையும் வழங்கி, மாவுச் சத்தைக் கரைத்து அது ரத்தத்தில் கலக்க உதவுகிறது.

கணையத்தில் உள்ள லாங்கர்ஹான் திட்டுகள் எனப்படும் செல் தொகுப்பில் ஏறக்குறைய பத்து லட்சம் செல்கள் உள்ளன. இவற்றில் பீட்டா, காமா, ஆல்பா எனப்படும் செல்கள் அடங்கியுள்ளன.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான ஹார்மோனை உற்பத்தி செய்கின்றன. பீட்டா செல்கள், இன்சுலின் என்ற ஹார்மோனைச் சுரக்கின்றன. இந்த இன்சுலின்தான் குளுக்கோஸை எரித்து செல்களுக்குத் தேவையான சக்தியாக மாற்றுகிறது. செல்கள் வளர்வதற்கும், வேலை செய்வதற்கும் தேவையான அளவு சக்தியை சரியான விதிகத்தில் கிடைக்கச் செய்வதற்கு இன்சுலின் ஹார்மோன் மிக அவசியம்.

வயிற்றின் அடிப்பகுதியில் மூன்று அவுன்ஸ் கொள்ளளவு கொண்ட இன்சுலின் சுரப்பியானது, உணவு உள்ளே வரும் செய்தியை அறிந்து கொண்டே உடனேயே அதிகமாகச் சுரக்க ஆரம்பித்துவிடுகிறது. ரத்தம் மூலமாக செல்களுக்கு குளுக்கோஸ் செல்லும் அளவும் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. ஒரு வழியாக செல்களுக்கு குளுக்கோஸ் கிடைத்ததும் பழைய படி ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைய ஆரம்பித்து விடும்.

ரத்தத்தில் தேவைக்கு அதிகமான சர்க்கரை சேரும்போது என்ன ஆகும்? கல்லீரல் அதை கிளைக்கோஜென்னாக மாற்றி சேமித்துக் கொள்கிறது. ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறையும்போது கணையத்தில் சுரக்கும் குளுக்கோஜென் என்கிற ஹார்மோன், இந்த கிளைக்கோஜெனை குளுக்கோஸாக மாற்றுகிறது-. அந்த வகையில் இது இன்சுலினுக்கு எதிரான செயல்பாட்டைக் கொண்டிருக்கிறது.

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைப் பொறுத்துத்தான் கணையத்தில் ஹார்மோன்களின் சுரப்பு நடக்கிறது. சர்க்கரை அதிகரித்தால் இன்சுலின் சுரப்பு கூடும். சர்க்கரையின் அளவு குறைந்தால் குளுக்கோஜெனின் சுரப்பு அதிகரிக்கும். இப்படி மாறி மாறி சுரந்துதான் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை ஒரே சீரான நிலையில் வைக்கப்படுகிறது.
தொடர்ச்சியாகச் சாப்பிடும்போதெல்லாம் நம் உடலுக்குத் தேவையான குளுக்கோஸ் சத்தை எரிப்பதற்கு வேண்டிய இன்சுலினை, கணையம் உற்பத்தி செய்துகொண்டே இருக்கும்.

கணையம் பாதிக்கப்பட்டு இன்சுலினைச் சுரக்க முடியாமல் போனாலோ அல்லது தேவையான அளவு இன்சுலின் சுரப்பு நிகழவில்லை என்றாலோ குளுக்கோஸ் எரிக்கப்பட்டு சத்தியாக மாறாது. இந்த நிலையில்தான் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாகி சர்க்கரை நோயாக உருவெடுக்கிறது. இந்த அதிகப்படியான சர்க்கரை சிறுநீரில் கலந்து வெளியேறுகிறது.
சர்க்கரை நோயைத் தமிழில் மதுமேகம் என்பார்கள், சர்க்கரைச் சத்து சிறுநீரில் கலந்து வெளியேறுவதால், அது இனிப்புச் சுவையுள்ளதாக மாறும். இதில் எறும்புகள் மொய்ப்பதும் உண்டு. இதனால் இதை சர்க்கரை நோய் என்று கூறுகிறார்கள். டயாபடீஸ் மெல்லிடஸ் என்ற வார்த்தைக்கும் இதே பொருள்தான்.
பொதுவாக, சர்க்கரை நோயை நான்கு வகையாகப் பிரித்துள்ளனர்.

1. இன்சுலின் சார்ந்தது (மிஸீsuறீவீஸீ ஞிமீஜீமீஸீபீமீஸீt ஞிவீணீதீமீtவீ விமீறீறீவீtus),
2. இன்சுலின் சாராதது (ழிஷீஸீ-மிஸீsuறீவீஸீ ஞிமீஜீமீஸீபீமீஸீt ஞிவீணீதீமீtவீநீ விமீறீறீவீtus),
3. குறைபட்ட சர்க்கரை ஏற்பு ளநிலை (மினீஜீணீவீக்ஷீமீபீ நிறீuநீஷீsமீ ஜிஷீறீமீக்ஷீணீஸீநீமீ),
4. கணையச் சர்க்கரை நோய் (றிணீஸீநீக்ஷீமீணீtவீநீ ஞிவீணீதீமீtமீs) என்று நான்கு வகைப்படும்.
இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோய்
கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது எனில் இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படுகிறது. அதாவது கணையத்தில் இன்சுலினைச் சுரக்கும் செல்கள் அழிந்திவிடுவதால் இது தோன்றுகிறது. இதை டைப்&1 வகை நோய் எனக் கூறுகிறார்கள்.

சிறுவர்கள் மற்றும் டீன்&ஏஜ் வயதினரைத் தாக்கும் இது பதினாறு வயதுக்குட்பட்டவர்களுக்கு வரும்போது இன வயது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகளில் சுமார் ஐந்து சதவீதத்தினர் மட்டுமே இந்த நோயினால் பாதிக்கப்படுகிறார்கள்.
நமது உடலில் இயல்பாகவே நோய் எதிர்ப்புச் சக்தி என்பது உண்டு. வெள்ளை அணுக்களால் உற்பத்தி செய்யப்படும் இந்தச் சக்திதான் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடி அவற்றை அழிக்கிறது. சுற்றுப்புறச் சூழல், பரம்பரை போன்ற காரணிகளால் ஏற்படும் எதிர்மறைத் தாக்கத்தால், வெள்ளை அணுக்கள், கணையத்தில் உள்ள பீட்டா செல்களை எதிரிகளாக நினைத்து அழித்துவிடுகின்றன.
இதன் காரணமாக இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. சர்க்கரைச் சத்தும் சக்தியாக மாற்றப்படாமல் ரத்தத்தில் சேர்ந்துகொண்டே வருகிறது. மேலே சொன்ன காரணம் மட்டுமின்றி கணையத்தில் ஏற்படும் நோய்களாலும் பீட்டா செல்கள் அழிந்துவிடுகின்றன. இதனாலும் இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

இவர்களுக்கு இருக்கிற ஒரே தீர்வு, ஊசியின் மூலமாக இன்சுலினைப் போட்டுக்கொள்வதுதான். ஊசியின் மூலம் உள்ளே வரும் இன்சுலின் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை எரித்து இயல்பான நிலையைக் கொண்டு வருகிறது.
ஆனால், பிரச்னை என்னவெனில் இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவள்£கள், இன்சுலின் ஊசியை நம்பித்தான் தங்களது வாழ்நாளைக் கழிக்க வேண்டும். அவர்களின் அன்றாட வாழ்க்கை முழுக்க முழுக்க இன்சுலின் ஊசியைச் சார்ந்தே அமைவதால்தான் இதனை இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோய் என்கிறார்கள்.
இந்த வகை சர்க்கரை நோய்க்குக் காரணமான பல்வேறு ஜீன்கள் மற்றும் எண்ணற்ற வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டிருக்கிறார்கள். ஆனால், சர்க்கரை நோயை எந்தளப் பொருள் குறிப்பாக உருவாக்குகிறது என்ற விஷயம் மட்டும் இன்னும் ஆய்வு நிலையிலேயே இருக்கிறது.

அதிகமான தண்ணீர்த் தாகம், அளவுக்கு அதிகமாக சிறுநீர் கழித்தல், அளவுக்கு அதிகமான பசி, அதிகமளாகச் சாப்பிட்டாலும் உடல் எடை குறைவு, கண் பார்வை மங்குதல், அதிகச் சோர்வு போன்றவை முதல் வகை சர்க்கரை நோய்க்கான முக்கியமான அறிகுறிகள்.
இன்சுலின் சாராத சர்க்கரை நோய். இதை டைப்&2 அல்லது இன்சுலின் சாராத சர்க்கரை நோய் என்கிறார்கள். இரண்டாம் வகை சர்க்கரை நோயால் சுமார் 95 முதல் 96 சதவீதத்தினர் வரை பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு முன்பெல்லாம் இந்த நோய் நடுத்தர வயதினருக்கு மட்டுமே வரளக்கூடிய நோய் என்ற கருத்து இருந்தது. ஆனால் சிறுவர்களும், டீன்&ஏஜ் பருவத்தினரும்கூட இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதும், அவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதும் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டுவிதமான காரணங்களால் இந்த நோய் உருவாகக் கூடும். சில சமயங்களில், சர்க்கரையை எரிப்பதற்குத் தேவையான இன்சுலின் ஹார்மோனை செல்கள் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்கக்கூடும். சில சூழல்களில் கணையத்தால் போதுமான அளவு இன்சுலினைச் சுரக்க முடியாது. இதனால், ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் திறன் முற்றிலுமாகக் குறைந்து, இரண்டாம் வகை சர்க்கரை நோயை உருவாக்கி விடுகிறது.

உடல் பருமனாக உள்ளவர்கள், இரண்டாம் வகை சர்க்கரை நோயால் மிக எளிதாகப் பாதிக்கப்படுகிறார்கள். இவ்வகை ளளநோய்த் தாக்குதலுக்கு ஆளானவர்களில் 80 சதவீதம் பேருக்கு உடல் பருமன் நோய் இருக்கிறது.
இரண்டாம் வகை சர்க்கரை நோயின் போது அறிகுறிகள் மிக மெதுவாக வெளிப்படுவதால், சர்க்கரை நோய் வந்துள்ளது என்பதை அவ்வளவு சுலபமாக யாரும் நம்பிவிட மாட்டார்கள். முதல் வகையில் சொன்ன அறிகுறிகளோடு அடிக்கடி நோய்வாய்ப்படுதல், உடலில் காயங்கள் ஆறாமல் இருத்தல் போன்றவையும் காணப்படும்.

கணையத்தின் செயல்பாட்டில் கோளாறு காணப்படுவதாலேயே பெரும்பாலும் இந்த நோய் ஏற்படுகிறது. அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கும் மருந்துகளைக் கொடுக்கும் பட்சத்தில் இவர்களது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. இன்சுலின் ஊசி போட்டுத்தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இதில் இல்லை.

நடுத்தர வயது உடையவர்கள், பருமனான உடல்வாகு கொண்டவர்கள், உடற்பயிற்சி செய்யாமல் சோம்பலான வாழ்க்கை வாழ்பவர்கள் ஆகியோரையே இந்த நோய் அதிகமாகப் பாதிக்கிறது.

குறைபட்ட சர்க்கரை ஏற்பு நிலை
இதை கர்ப்பக் கால சர்க்கரை நோய் என்பார்கள். இந்த வகை சர்க்கரை நோயால் கர்ப்பிணிகளில் இரண்டு முதல் மூன்று சதவீதத்தினர் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பக் காலத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவு, பிரசவத்துக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும்.
கர்ப்பக் கால சர்க்கரை நோய், பொதுவாக கர்ப்பக் காலத்தின் இரண்டாவது கட்டத்தில் அதாவது, ஆறாவது மாதவாக்கில் உருவாகிறது. இது குழந்தை பிறந்த பிறகு சரியாகிவிடுகிறது. பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் பிற்காலத்தில் சர்க்கரை நோயால் அவதியுறும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.

கர்ப்பக் காலத்தில் சர்க்க்ரை நோய் வந்தால், கர்ப்பக் காலம் முழுவதும் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளை அறிந்து கொள்ள வேண்டும். இதன்மூலம் தாய்க்கும், குழந்தைக்கும் ஏற்படும் பாதிப்புகளைப் பெருமளவு குறைக்கலாம்.

கருவுற்ற தாய்மார்களுக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டால் அவர்கள் பேறு காலத்தில் மட்டும் மருத்துவம் செய்து கொண்டால் போதும். குழந்தைப் பிறப்புக்குப் பிறகு பெரும்பாலும் சர்க்கரையின் ள்வு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும்.

கணையச் சர்க்கரை நோய்
பல்வேறு காணரங்களால் கணைய அழற்சி நோய் ஏற்படலாம். கட்டுப்பாடு இல்லாமல் மது அருந்துவது அவற்றில் ஒன்று. இந்தக் கணைய அழற்சி நோய், பின்னாளில் புற்று நோயாகவும் உருவெடுக்கலாம். கணைய அழற்சி நோயால், அதில் உள்ள லாங்கர்ஹான் திட்டுத் திசுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால், இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்பட்டு சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

பிற நோய்களுடன் துணை நோயாகவோ அல்லது மற்ற நோய்களுக்காகச் சாப்பிடும் மருந்துகளின் காரணமாக இன்சுலின்¢உற்பத்தி பாதிக்கப்படுவதாலோ இந்த நிலை தோன்றும். சர்க்கரை நோயாளிகளில் சுமார் ஒரு சதவீதத்தினர் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
கணைய அழற்சி, அட்ரீனல் அல்லது பிட்யூட்டரி சுரப்பிக் கோளாறுகள், மையோடோனிக் டிஸ்டிரோபி எனப்படும் தசை அழிவு நோய் ஆகியவற்றின் காரணமமாகவும், கார்டிகோ ஸ்டீராய்டுகள் காரணமாகவும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.
மேலே சொன்ன காரணங்களால், கணையத்தில் பாதிப்பு ஏற்பட்டு அதனால் இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. சிறுநீரகத்தில் பாதிப்பு, இதயத்தில் பாதிப்பு என்றால் பாதிக்கப்பட்ட இந்த உறுப்புகளை அறுவைச் சிகிச்சை மூலமாக மாற்றிக் கொள்வதற்கான வசதிகள் இருக்கின்றன. ஆனால், கணையத்தில் பாதிப்பு எனில் அதை மாற்றி வேறு கணையம் பொருத்த முடியாது. எனவே, இந்த வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இன்சுலின் சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது.

மேலே சொல்லப்பட்ட ஒவ்வொரு வகைக்கும் தனிப்பட்ட அறிகுறிகள் இருந்தாலும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேர் தங்களுக்கு நேர்ந்த பாதிப்பு பற்றி உணர்வதே இல்லை. ஏனெனில், சர்க்கரை நோய்க்கான எந்த அறிகுறிகளும் வெளிப்படையாகத் தெரிவதில்லை. அப்படியானால் முன்னரே சுதாரித்துக்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு சர்க்கரை நோயில் இல்லையா என்று நீங்கள் கவலையோடு கேட்பது புரிகிறது. நமது உடலில் ஏற்படும் மாற்றங்களைச் சற்று உன்னிப்ப்£கக் கவனித்தால் போதும். சர்க்கரை நோய்க்குரிய தனிப்பட்ட அறிகுறிகளை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் விட்டமின்-சி!

விட்டமின்-சி அடங்கிய உணவுகளைப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வதால்,இதயநோய் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் என்று தெரிய வந்துள்ளது.

சி ரியாக்டிவ் புரோட்டீன்-சிஆர்பி ஏற்படுவதாலேயே இதய நோயும்,சர்க்கரை நோயும் எளிதில் தாக்கக்கூடும் என்றும்,சிஆர்பி பாதிப்பை வைட்டமின்-சி சத்து கட்டுப்படுத்துவதால்,அந்நோய்கள் பாதிப்பில் இருந்து தப்பலாம் என்றும் கலிபோர்னியாவில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

நீண்ட நாட்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழும் மனிதர்களின் ரகசியம் அவர்கள் உண்ணும் உணவு முறையில்தான் ஒளிந்திருக்கிறது.
நமது உணவுகளில் அமிலத்தன்மையும் காரத்தன்மையும் அடங்கியுள்ளன. ஒவ்வொரு வகையான உணவிலும் ஒவ்வொரு தன்மை தூக்கலாகவும் குறைவாகவும் உள்ளன.
ஆரோக்கியமான உடல் அமைப்பிற்கு எண்பது சதவீத காரத்தன்மையும் இருபது சதவீத அமிலத்தன்மையும் கொண்ட உணவு தேவை. இந்த விகிதத்தில் இருந்தால்தான் நிறைந்த சக்தியும், நீடித்த ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்கும் யோகிகள் உண்ணும் உணவை மூன்று வகையாகப் பிரித்தனர். சாத்வீக உணவு, ரஜோ உணவு, தாமச உணவு என்பவையே அவை மூன்றும்.

சாத்வீக உணவு தூய்மையான உணவு. ரஜோ உணவு உயர்ச்சிகளைத் தூண்டக்கூடியது. தாமச உணவு என்பது சுத்தமற்ற, ஆரோக்கியமற்ற கெட்டுப்போன உணவு. யோகியர் சாத்வீக உணவையே தேர்வு செய்கின்றனர்.
பால், வெண்ணெய், பழங்கள், காய்கறிகள், தானியங்கள், தேன் ஆகியவை முதல் வகையான சாத்வீக உணவில் அடங்குகிறது.

மாமிசம், மீன், பருப்பு வகைகள், சூடான பொருட்கள், உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய ரஜோ உணவாகும். புளித்த கெட்டுப்போன கருவாடு மாமிசம், மது, லாகிரி வஸ்துகள் தாமச உணவு வகையாகும்.

மிருகங்களின் மாமிசம், தானியங்கள், அரிசி இவற்றில் அமிலத்தன்மை அதிகம் உள்ளன. பச்சைப் பட்டாணி, வெங்காயம், கீரை வகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் காரத்தன்மை உள்ளது. அமிலத்தன்மை ஒரு சதவீதமும், காரத்தன்மை நான்கு சதவீதமும் கொண்ட உணவையே ஆரோக்கிய வாழ்க்கைக்குத் தேர்வு செய்ய வேண்டும்.

குடும்ப நலம் பேணும் தாய்மார்கள் சிறந்த உணவு உண்ண வேண்டும். வேலை அலுப்பு மற்றும் பல்வேறு காரணங்களால் பட்டினி கிடக்கும் பெண்கள் மிகுந்த சக்தி இழுப்புக்கு ஆளாக நேரிடுகிறது.

-------------------------------------------------------------------------------------------------------------
இழந்த சக்தியை ஈடு செய்யவும், உடல் நலம் பேணவும் தேவையான சலோரி சத்துள்ள உணவைக் கண்டறிந்து சாப்பிடுவது அவசியம்.

மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு 1800லிருந்து 2000 கலோரி வரை உணவு தேவைப்படுகிறது. இதனை அடைவதற்குத் தக்க உணவை அறிந்து சாப்பிடுதல் மிகவும் அவசியம்.

வெந்தயம்
ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில் தூங்கும் போது ஊற வைத்து விட்டு, மறு நாள் அந்த வெந்தயத்தை சாப்பிட்டால், உடலில் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

பாதாம்
தினமும் தண்ணீரில் ஊற வைத்த 6 பாதாம் பருப்பை சாப்பிட்டால், சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

பால்
பாலில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தின் கலவை சரியான அளவில் இருக்கும். அதனால் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும். எனவே தினமும் இரண்டு முறை பால் குடிப்பது நல்லது.

காய்கறிகள்
அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரை வகைகளை உணவோடு சேர்க்க வேண்டும். இந்த வகையான காய்கறிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும்.

பருப்பு வகைகள்
பருப்பு வகைகள் மற்றும் முளைத்த பயறுகளை உணவோடு சேர்த்து கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் கலந்த மற்ற உணவுகளை விட, பருப்பு வகைகளால் இரத்த குளுக்கோஸ் தாக்கம் குறைவாகவே இருக்கும். அதனால் இது முக்கிய உணவாக கருதப்படுகிறது.

ஒமேகா-3
ஒமேகா-3 மற்றும் மோனோ அன்சாச்சுரேட்(monounsaturate) கொழுப்பினி போன்ற நல்ல கொழுப்புகள் கலந்த உணவை உட்கொண்டால் உடலுக்கு நல்லது. கனோலா(canola) எண்ணெய், சணல் எண்ணெய், கொழுப்பு மீன் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றில் இயற்கையாகவே இந்த கொழுப்புகள் அடங்கியுள்ளன. மேலும் இதில் கொழுப்பு அளவு குறைவாகவே இருக்கும்.

பழங்கள்
அதிக நார்ச்சத்துள்ள பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் கொய்யாப் பழத்தை சாப்பிட வேண்டும். ஆனால் மாம்பழம், வாழைப்பழம் மற்றும் திராட்சை போன்ற பழங்களில் சர்க்கரையின் அளவு கூடுதலாக இருக்கிறது, அதனால் இதை அதிகமாக உண்ணக்கூடாது.

உணவு முறை
அதிகமாக உண்ணுவதால் ஒருவரின் உடலில் உள்ள இரத்த சர்க்கரையின் அளவு கூடுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் சிறிய அளவு உணவை போதிய இடைவேளையில் அடிக்கடி உண்ணவும். இது சர்க்கரை அளவு அதிகமாவதையும், கீழே இறங்காமலும் தடுக்கும். வேண்டுமெனில் நடுவே நொறுக்குத் தீனியாக பழங்கள், நார்ச்சத்துள்ள பிஸ்கட், மோர், தயிர், காய்கறியுடன் கலந்த உப்புமா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

முக்கியமான உணவுகள்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் குறைவான கார்போஹைட்ரேட், அதிகமான நார்ச்சத்து, தேவையான அளவு புரதம், வைட்டமின் மற்றும் கனிமங்கள் கலந்த உணவை உண்ண வேண்டும். இனிப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள பண்டங்களை உண்ணக் கூடாது. போதிய இடைவேளையில் (5 வேளை) சிறிய அளவில் உணவை உட்கொள்ள வேண்டும்.

தண்ணீர் மற்றும் மதுபானம்
நிறைய தண்ணீர், காய்கறி மற்றும் பழச் சாறுகளை பருகவும். மேலும் மதுபானம் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

அசைவ உணவு
அசைவ உணவுகளில் மீன் அல்லது சிக்கனை உண்ணலாம். ஆனால் ஆடு மற்றும் மாட்டுக் இறைச்சியில் அதிக அளவில் தேங்கிய கொழுப்பு இருப்பதால், அதனை தவிர்க்க வேண்டும். மேலும் அதிக கொழுப்புச்சத்து உள்ளவர்கள், முட்டையின் மஞ்சள் கரு, ஆடு மற்றும் மாட்டு இறைச்சியை தவிர்க்க வேண்டும்.

உணவு பழக்கம்
இந்தியர்களுக்கான சர்க்கரை நோய் கட்டுப்பாடு உணவில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புச் சத்து அடங்கியிருக்க வேண்டும். எப்போதும் சமநிலையான உணவு, உடல் ஆரோக்கியத்திற்கு பக்க பலமாக நிற்கும்.

------------------------------------------------------------------------------------------------------------

நடைப் பயிற்சியின் பயன்கள்

1) நடைப்பயிற்சியில் 70 மடங்கு பிராணசக்தி உடலில், திசுக்களில் அதிகம் கிரகிக்கப்படுகிறது. நடக்கும்போது (ஆக்ஸிஜன்) நிமிடத்திறகு 27 லிட்டர் காற்று தேவைப்படுகிறது.

2) பிராணசக்தி அதிகரிப்பதால் இரத்தம் சுத்தம் பெறுகிறது. சுழற்சி வேகம் அதிகரிக்கிறது & அளவும் அதிகரிக்கிறது.

3) தேவையற்ற இரத்தக் கழிவுகள் வெளியேறுகிறது. வியர்வை மூலம் கொழுப்புக்கழிவுகள், உப்புகள் வெளியேற்றப்படுகிறது. உடல் துர்நாற்றம் குறைகிறது.

4) நுரையீரல், அதில் உள்ள சிற்றரை திசுக்கள், நல்ல நலம் பெறுகின்றன. சுவாசம் சீர்படுவதுடன் மேம்படுகிறது.

5) இதயத்தின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இதயத் திசுக்கள் வலிமை பெறுகின்றன.

6) பசியின்வேகம், பசித்தன்மை, தாகம் ஜீரணம் இவைகள் ஒழுங்குப்படுத்தப்படுகிறது. மேம்படுத்தப்படுகிறது. தன் மயமாதல் சிறப்படைந்து எலும்பு, திசுக்களில் சேரும் சத்துக்கள் அதிகரிக்கின்றன.

7) எலும்புகள், தசைகளில் திசைவுகள் குறைந்து புதிய வலுவும், வனப்பும் பெறுகின்றன.

அதிக உடல் எடை, பருமன், சதைக் கோளங்கள் இலகுவாக, இயல்பாக, ஆபத்தில்லாமல், இணக்கமாக, எளிமையாக குறைய நடைப் பயிற்சியில் மாத்திரமே சாத்தியம் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.

9) அதிக தேவையில்லாத கொழுப்பை குறிப்பாக எல்.டி.எல் லிஞிலி கொலஸ்ராலை குறைத்து சீர்படுத்தி ஹச்.டி.எல். பிஞிலிஐ அதிகரித்து இதயத் திசுக்களுக்கு ஓய்வுதர துணைபுரிகிறது. நமது இரத்தத்தில் எல்.டி.எல் அளவு 100 மி.கி. மேல் இருக்கக் கூடாது.

10) நமது முதுமை, திசு அழிவு குறைந்து புதிய செல்கள் உருவாகி இளமை மேம்படுகிறது.

11) தொப்பை, தொங்கு சதை, பிதுங்கு சதைகள், இடுப்புச் சதைகள் மெதுவாக குறைய ஆரம்பிக்னிற்ன. உடல் கட்டழகு அடைகிறது.

12) நீரழிவு அன்பர்களுக்கு நடைபயிற்சிதான் ஒப்பற்ற மருந்து எனலாம். எந்த அளவு சர்க்கரை நோயின் தாக்கம் உள்ளதோ அதற்கேற்ற தூரம் தினமும் நடந்திட வேண்டும்.

13) பொதுவாக அனைத்துப் பிணிகளும் நடைப்பயிற்சியால் மட்டுப்படுவதுடன் கட்டுப்படுகிறது. மருந்து மாத்திரைகளின் தேவைகளை உடனடியாகக் குறைக்கிறது.

14) நமது மெட்டாபாலிசம் அளவு சிறப்புற்று உடலில் வெப்பசக்தி (கலோரி) உற்பத்தி, பயன்பாடு மிகவும் அதிசயதக்க அளவில் கூடுகிறது.

15) கால்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து கால்வலி, பாதவலி குறைந்து நரம்பு முறுக்கு, இரத்த அழுத்த தடைநீங்கி புதுசக்தியைப் பெறுகிறது.

16) தினமும் காலையில் நீர் குடித்து பின் சிறிது தூரம் நடந்தாலே எப்படிப்பட்ட கடின மலச்சிக்கலும் விலிகிவிடும். மூலநோயும் குறைய ஆரம்பிகிறது.

17) சுவாச அடைப்பை சரிசெய்கிறது. சைனஸ், ஒற்றை தலைவலி, சரியாகி நுரையீரலில் காற்று சென்று வரும் அளவை பல மடங்கு பெருக்குகிறது.

18) நடக்கும்போது பசியின்மை விலகுகிறது. உணவின் ருசி மிகுந்திடும்.

19) இரத்த அழுத்தம், மாரடைப்பு அன்பர்களும் சுகம் அடைகின்றனர்.

20) மனச்சுமை, மனஅழுத்தம், உறக்கமின்மை போன்றவற்றில் இருந்து இலகுவாக, இயல்பாக, இனியமைகா நிவாரணம் கிட்டுகிறது.

21) மனதில் ஒரு இணக்கம், இயல்புநிலை, ஆனந்தம், உற்சாகம், உத்வேகம் பீறிட்டு வரும் அற்புத சுகத்தை அறிந்திட, அனுபவிக்க நீங்களும் நடங்கள் & பிறருடன் சேர்ந்து நடங்கள். தினமும் நடங்கள். விரும்பி நடங்கள். மகிழ்ச்சியாக நடங்கள்.

ஆதாரம் தேவையா?

ஆதாரம் இருக்கா என எகத்தாளம் இடுவோர் பலர். நம்மில் பலர் சந்தேகப் பார்வை. சிந்தனையுடன் நடைப் பயிற்சியைத் தொடங்குவர். உடனடியாக நோய்கள் நீங்குமா என கேட்டவண்ணம் இருப்பார்கள். ஆர்வத்தில் ஆரம்ப நிலையில் சுறுசுறுப்பாக நடைப்பயிற்சியை மேற்கொண்டாலும் நம்மில் பலர் தொடர்ந்து நடைபயணம், பயிற்சியை மேற்கொள்வதில்லை. எதையும் விரும்பினால் உறுதியாக நம்மால் முடியும். எதையும் வருந்திச் செய்தால் வலியிலே முடியும். பாதியில் நிற்கும். நடப்பது நல்லது. அதையும் தொடர்ந்து செய்ய வேண்டும். செய்ய இயலும். அதையும் பயிற்சியாக, பயணமாக இல்லாமல் வாழ்வின் தினசரி, அங்கமாக, இயன்றபோது இயல்பாக, விரும்பி, இணக்கமாக நடக்க, நடந்திட உதவிட இந்நூலில் பல உத்திகள் ஆங்காங்கே தரப்படுகின்றன & விரைவில் நமது பழக்கமாகி நல்ல நலம் பெறுவோம். பிறருக்கும் வழிகாட்டி வாழ்வில் வளம் பெறுவோம். சந்தேகத்துடன் ஆதாரம் தேடும் முன் நடந்து நீங்களே ஆதாரமாகி விடுங்கள்.



Unknown medicinal uses of Raddish (mullangi) & brinjal (Katharikai) & Peerkankai

முள்ளங்கி சமைத்து உண்ணக் கூடிய கிழங்கு இனமாகும். நீண்ட வெண்ணிறக் கிழங்காகக் காய்கறிக் கடைகளில் கிடைக்கும்.

கிழங்கு, இலை, விதை மருத்துவக் குணம் உடையவை. கிழங்கு சிறுநீரைப் பெருக்கும். குளிர்ச்சியை உண்டாக்கும். இலை பசியைத் தூண்டி சிறுநீரைப் பெருக்கித் தாதுவைப் பலப்படுத்தும். விதை காமத்தைப் பெருக்கும். பொதுவாக கிழங்குகளை இரவில் உண்பது உடலுக்கு நல்லது கிடையாது. இதில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. கர்ப்பிணிப் பெண்கள் கிழங்கைத் தவிர மற்றவற்றை உண்ணக் கூடாது. தமிழகம் எங்கும் பயிரிடப்படுகின்றது.

வேறு பெயர்கள்: முளா, தசணாக்கியா, முலகஞ்சாமியம், விசுறுகுபந்தம்

வகைகள்:

வெள்ளை முள்ளங்கி:

இதன் கிழங்கு நீண்ட வெள்ளை நிறத்தில் இருக்கும். இதையே நாட்டு முள்ளங்கி என்று கூறுவார்கள். இதில் பிஞ்சு முள்ளங்கியே மருத்துவத்திற்கு மிகவும் சிறந்தது.

சிவப்பு முள்ளங்கி:

இதன் கிழங்கு நீண்டு சிவப்பு நிறத்தில் இருக்கும். இதைச் சமையலுக்குப் பயன்படுத்துவார்கள்.

நீலம் கலந்த மஞ்சள் முள்ளங்கி:

இதன் கிழங்கு நீண்டு நீலம் கலந்த மஞ்சள் நிறத்தில் காய்கள் இருக்கும். இதைப் பெரும்பாலும் சமையலுக்கே பயன்படுத்துவார்கள்.

ஆங்கிலத்தில்: Raphanus sativus; Linn; Brassicaceae

இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்:

முள்ளங்கி இலைச் சாற்றை 5 மி.லி. அளவு எடுத்து 3 வேளை தொடர்ந்து சாப்பிட்டு வர மலச்சிக்கல், சிறுநீர்க்கட்டு, சூதக்கட்டு, எளிய வாத நோய்கள் குணமாகும்.

முள்ளங்கிக் கிழங்குச் சாறு 30 மில்லி 2 வேளை குடித்து வர சிறுநீரகக் கோளாறு, நீர்த்தாரைக் குற்றங்கள் குணமாகும்.

முள்ளங்கியை உணவுடன் சேர்த்து வர சூட்டைப் பெருக்கி உடம்பை சமச்சீராக வைத்துக் கொள்ளும். எனவே தாராளமாக சிறுநீர் வெளியேறும். பசியை உண்டாக்கி, மலச்சிக்கலைப் போக்கும். அதி மூத்திரம், நீர்த்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக்காசம், கபநோய், இருமல் குணமாகும்.

முள்ளங்கியை சிறுசிறு துண்டுகளாகச் சீவி உலர்த்தியது ஒரு கைப்பிடியளவு எடுத்து, அத்துடன் நெருஞ்சில் முள் காய், சீரகம், கொத்தமல்லி, ஏலரிசி, சோம்பு, வாலுளுவை, கார்போக அரிசி, வாயுவிடங்கம் இவற்றை வகைக்கு அரை கைப்பிடியளவு எடுத்து சேர்த்து இடித்துப் பொடியாக்கி, 25 கிராம் பொடியை 200 மி.லி. நீரில் போட்டு 50 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை 25 மில்லியளவாக குடித்து வர மூத்திரம் மிகவும் குறைந்ததாகவும், மாவு கலந்தாற் போலவும், பால் போன்றும் போகும். இதனால் உடம்பிலும், முகத்திலும், வயிற்றிலும் உள்ள வீக்கங்கள் குறையும். மூத்திரம் வெள்ளையாகப் போவதோடு வீக்கம் வற்றிவிடும்.

முள்ளங்கியைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி உலர்த்தியது, கைப்பிடியளவு எடுத்து கஞ்சி செய்து குடித்துவர வீக்கம், சுவாசக் குறைபாடுகள் குணமாகும்.

பச்சை முள்ளங்கியை சாறு பிழிந்து சிறிது இந்துப்புச் சேர்த்து பொறுக்கும் அளவிற்கு காய்ச்சி வடிகட்டி காதில் 2 சொட்டுவிட காது குத்தல், காது வலி, காதில் சீழ் வடிதல் குணமாகும்.

முள்ளங்கியை தினமும் உணவில் சாப்பிட்டு வர மூலம், மூத்திரக் கல்லடைப்பு குணமாகும்.

முள்ளங்கி சமூலத்தை சாறுபிழிந்து 200 மில்லியளவு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து 3 வேளை குடிக்க நீர்ச்சுருக்கு நீங்கும்.-
------------------------------------------

• உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறத ு.

• ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில் கத்தரிக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது.

• 100 கிராம் கத்தரிக்காயில் 24 சதவிதம் கலோரிகள், 9 சதவிதம் நார்ச்சத்து உள்ளது.

• அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் திரவப் பொருள் உள்ளது.

• ஆந்தோசயான் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய்எதிர்ப்புப் பொருளாகும்.

• "பி' காம்ப்ளக்ஸ் வகையான வைட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட், பைரிடமாக்சின், தயமின் மற்றும் நியாசின் ஆகிய உயிர்ச்சத்துகளும் கத்தரிக்காயில் அடங்கியுள்ளன.

• மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன.

• கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் உடற்செயலின் மாற்றங்களுக்கும ், வளர்சிதை மாற்றத்திற்கும் மிகவும் உகந்தவை.
-------------------------

பீர்க்கங்காய்

பீர்க்கங்காய், வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது என்று சொன்னால் பலருக்கு நம்பக் கடினமாக இருக்கும்.

நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாட்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதில் பீர்க்கங்காய் கை கொடுத்து உதவுகிறது.

பீர்க்கங்காய் முற்றிவிட்டால் கவலை வேண்டாம். முற்ற முற்ற நல்லது. பீர்க்கை முற்றிய பிறகு மருத்துவக் குணங்கள் நிரம்பிய டானிக்காகவும், சத்துணவுப் பொருளாகவும் திகழ்கிறது.

நூறு கிராம் பீர்க்கங்காயில் கிடைக்கும் கலோரி 18தான். ஆனால் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டம¢ன்களும் தாது உப்புக்களும் தக்க அளவில் உள்ளன. இதனால்தான் டானிக்காகவும், சத்துணவு நிரம்பிய காய்கறியாகவும் இந்த எளிய காய்கறி விளங்குகிறது.

நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாகவும் இதைச் சேர்த்துக்கொள்ளலாம்.

இதன் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையே.

இதன் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.

சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை குணமாகப் பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். மேலும் இதன் இலைகளை அரைத்துப் புண்கள் உள்ள இடங்களில் கட்டினால் போதும். சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது.

இரத்த சோகை நோயாளிகளும், தோல் நோயாளிகளும் இதன் வேரைத் தண்ணீர் விட்டுக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடி கட்டி அருந்தி வர வேண்டும். இதன் மூலம் இரத்த விருத்தி ஏற்படும். பீர்க்கை தோல் நோய்க்கிருமிகளை அழித்துவிடும்.

கண் பார்வை தெளிவு, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை அடிக்கடி தேடிப்பிடித்து உண்ண வேண்டும்

Unknown medicinal uses of Drumstick tree leafs & flowers

சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர். முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.

விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புஷ்டி யாகும் – எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி
- அகத்தியர் குணபாடம்

கண்களைப் பாதுகாக்க முருங்கை பூக்கள்

பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும்.

முருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைப்பார்கள். அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன்கொடுக்கும் என்பதால்தான் அதனை நட்டு வைக்கின்றனர்.

முருங்கையின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் முருங்கையின் பயன்களைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று.

இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர் செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.

முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.
முருங்கை பூவின் மருத்துவ மகிமையை பல நூல்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர்.

வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.

கண்களைப் பாதுகாக்க:

இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.

ஞாபக சக்தியைத் தூண்ட:

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.

இந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு. முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

பித்தம் குறைய:

மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க:

அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும்.
முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு:

கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று
நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

பெண்களுக்கு:

சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.

தாது புஷ்டிக்கு:

ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கி விடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை. இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.
------
Unknown medicinal benefits of sweetlemon(Saathukudi) & Lemon

சாத்துகுடி

மனித உடலுக்கு நேரடியாக சத்துக்ளை கொடுப்பது பழங்கள் மட்டுமே. பழங்கள் எளிதில் சீரணமாவதற்கும், வாய், வயிறு, குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் ஏற்றவை. உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து அதாவது புரதச் சத்து, வைட்டமின் சத்துக்கள், கால்சியம் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் பழங்களில் அதிகம் அடங்கியிருக்கின்றது. தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்தந்த சீதோஷ்ண காலங்களில் அதிகம் விளையும் பழங்களைச் சாப்பிட்டால் நல்லது.

பழங்கள் மலச்சிக்கலைப் போக்கி உடலை நோயின்றி காக்கின்றன. பழங்களின் மருத்துவக் குணங்களைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். கடந்த இதழில் உலர்ந்த திராட்சையின் பயன்களைக் கண்டோம். இந்த இதழில் எங்கும் கிடைக்கும் சாத்துக்குடியின் மருத்துவக் குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இந்தப் பழம் இருக்கும். சாத்துக்குடி, நாரத்தை, ஆரஞ்சு வகையைச் சார்ந்தது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது நல்லது.

நோயுற்றவர்களுக்கு

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.

ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.

இரத்த விருத்திக்கு

சிலர் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். சிறிது வேலை செய்தாலும், அதிகமாக அசதி உண்டாவதாகக் கூறுவார்கள். கை, கால் மூட்டுக்களில் வலி உண்டாகும். சில சமயங்களில் தலைச் சுற்றலுடன் இலேசான மயக்கம் ஏற்படும்.

இவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும்.

இரத்தத்தில் சிவப்பணுக்களின் (ஹீமோ குளோபின்) எண்ணிக்கை குறைவதால் இரத்தச் சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. நமது நாட்டில் இரத்தச் சோகையால் 67 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.

எலும்புகள் வலுவடைய

சிலருக்கு இலேசாக அடிபட்டால் கூட எலும்புகள் உடைந்துவிடும். மேலும் எலும்புகள் வலுவற்று காணப்படும். இதற்குக் காரணம் கால்சியச் சத்து குறைபாடே ஆகும். இவர்கள் சாத்துக்குடி கிடைக்கும் காலங்களில் அதிக அளவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.

மலச்சிக்கல் தீர

மலச்சிக்கல்தான் அனைத்து நோய்களுக்கும் மூலகாரணம் என்பதை நாம் பல இதழ்களில் அறிந்துள்ளோம் . மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க பழங்களே சிறந்த மருந்தாகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

நன்கு பசியைத் தூண்ட

பசியில்லாமல் சிலர் அவதியுறுவார்கள். இவர்களின் வயிறு எப்போதும் நிரம்பி உள்ளது போல் தோன்றும். சாத்துக்குடி பழத்தை தினமும் உண்டு வந்தால் சீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

குழந்தைகளுக்கு

ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கால்சியச் சத்து அதிகம் தேவை. குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது இந்த கால்சியம் சத்துதான். சாத்துக்குடியில் அதிகளவு கால்சியச் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது மிகவும் நல்லது.

பெண்களுக்கு

நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கு எலும்புகள், எலும்பு மூட்டுகள் தேய்மானம் அடையும். மேலும் மாதவிலக்கு நிற்கும் காலமான (40-45 வயதுகள்) மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு சத்துக் குறைவால் பல இன்னல்கள் உண்டாகும். இந்தக் குறை நீங்க பெண்கள் தினமும் சாத்துக்குடி சாறு அருந்துவது நல்லது.

முதியோர்களுக்கு

வயது முதிர்ந்தவர்களுக்கு உணவு சரியாக செரிக்காமல் மலச்சிக்கல் உண்டாகும். இதனால் உடல் அசதி, சோர்வு உண்டாகும். இவை நீங்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.

கிடைக்கும் காலங்களில் இந்தப் பழத்தை அதிகம் சாப்பிட்டு நோயின்றி வாழலாம்.
--------------
எலுமிச்சை:

எலுமிச்சை வெறும் சாதாரண கனியல்ல. மாம்பழம் வாழப்பழம் போல் உண்பதற்காக மட்டும் உருவானதல்ல. அது ஒரு உயிரூட்டமான கனி. கனிகளில் பறித்த பின்னும் உயிரூட்டமாக இருப்பது எலுமிச்சைதான். அது மங்களகரமானது. மஞ்சள் நிறமே நேர்மறையான எண்ணங்களைத் தூண்டக்கூடியது. அந்த நிறத்தில்தான் எலுமிச்சை உள்ளது.

எலுமிச்சைப் பழம் ஜீவனுள்ளதாக கருதப்படுகிறது. அதன் சக்திகள் அளப்பரியது. இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படாதது. மேலும் எலுமிச்சை முன்பு வேறு ஜீவன்களை காவு கொடுத்து வந்த இடங்களில் அவைகளுக்கு பதிலாக எலுமிச்சையை பலி கொடுப்பதை இன்னும் பார்க்கலாம். அதே சமயம் யாராவது பெரியவர்களை பார்க்கப்போனாலும் அவர்கள் கையில் ஒரு எலுமிச்சையை கொடுத்து ஆசி பெறுவது இன்னும் வழக்கத்தில் உள்ளது. வீடுகட்டி குடிபோகும் போது நிச்சயம் எலுமிச்சைப் பழத்தை நான்கு திசைகளுக்கும் காவு கொடுப்பார்.

வணிக நிலையகளிலும் வீடுகளிலும் தவறாமல் எலுமிச்சை வாசலில் இடம் பெற்றிருக்கும். நமக்கு ஏதாவது குறை இருந்தாலும் எலுமிச்சையில் சக்தியை ஏற்றித் தரும் பழக்கமும் இன்னும் இருக்கிறது. நாம் வாழ்த்து பெற பெரியவர்கள் நமக்கு ஆசி அளித்து எலுமிச்சையை வழங்குவார்கள். என்னமோ அதில் சக்தி இருப்பதை நம் மக்கள் தொன்மை காலம் முதல் அறிந்து உபயோகித்து வருகிறார்கள். வீட்டிற்கு திடீர் விருந்தாளி வருகிறார், குடிக்கக் கொடுக்க எதுவுமே இல்லையெனில் நமக்கு துணை வருவது வருவது எலுமிச்சை. நமக்கு மிக மிக எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கக் கூடிய பொருட்களில் ஒன்று எலுமிச்சை.

எலுமிச்சையில் வைட்டமின் சி, வைட்டமின் , கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட் என உடலுக்குத் தேவையான பல்வேறு மூலக்கூறுகள் உள்ளன. ஒரு எலுமிச்சைப் பழச்சாறில் 5 விழுக்காடு சிட்ரிக் அமிலம் உண்டு அடிக்கடி எலுமிச்சைப் பழச்சாறை அருந்துவதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் வெளியாவதுடன் குருதியும் தூய்மையாகிறது. எலுமிச்சையில் சிட்ரஸ் அதிக அளவில் உள்ளது. இதில் அதிகம் உள்ள வைட்டமின் – சி உடலுக்கு பல்வேறு வகைகளில் பயனளிக்கிறது.

தினமும் எலுமிச்சைப் பழச்சாறு அருந்துவது தோலைப் பளபளப்பாக்கி உடலுக்கு நல்ல மெருகை அளிக்கிறது. தோலிலுள்ள சுருக்கங்களை மாற்றவும், கரும் புள்ளிகளை மறையச் செய்யவும் எலுமிச்சைப் பழச்சாறு பயன்படும்.

மொத்தத்தில் மேனி அழகிற்கு தேவையான ஒரு இயற்கை உணவாகவும் இதைக் கொள்ளலாம்.. குளிக்கும் போது எலுமிச்சை தோலை உடலில் தேய்த்து குளிக்கலாம் .உடம்பும் சுத்தமாகும் .கிருமிகளும் நீங்கும்.

சந்தையில் எலுமிச்சைசோப்புகளும் ஷாம்புகளும் ஏராளம் உள்ளன. குறைந்த விலையில் நிறைந்த பயனைத் தரக்கூடிய பழவகைகளில் ஈடு இணையற்றது எலுமிச்சை ஆகும் . எலுமிச்சை, . பித்தத்தைப் போக்கும், தலைவலி தீர்க்கும், மலச்சிக்கல் விலக்கும், தொண்டை வலியைப் போக்கும், வாந்தியை நிறுத்தும், காலராக் கிருமிகளை ஒழிக்கும், பல் நோய் போக்கும், வாய் நாற்றம் போகும், சர்ம நோய்கள் விலகும்.பழச்செடி ஒரு சிறிய செடிவகை ஆகும் .குறு மரம். இதன் பழங்கள் மஞ்சள் நிறத்தில் பழுத்து காணப்படும். எலுமிச்சம் பழத்தின் தாயகம் மத்தியக் கிழக்கு நாடுகள் என்று கூறப்படுகிறது .. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்கு பரவியதாகவும் கூறுகின்றனர்.

அதிக உஷ்ணமுள்ள பள்ளத்தாக்குகளில் இது ஒரு காட்டுச் செடி போல வளர்ந்து பழங்களுடன் காட்சியளிக்கிறது. இந்தப் பழம் சாதாரண காய்கறிகளைப் போல் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றது.பல வகையான எலுமிச்சைகள் இருக்கின்றன. இவற்றில் நாம் நாட்டு எலுமிச்சை, கொடி எலுமிச்சை ஆகிய இரண்டை மட்டும்தான் நாம் பயன்படுத்துகின்றோம்.

உடல் எடை இளைக்கவும் எலுமிச்சைப் பழச்சாறு துணை செய்கிறது. தினமும் காலையில் இளம் சூடான தண்ணீரில் எலுமிச்சைச் சாறையும், தேனையும் கலந்து அருந்தி வாருங்கள். மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். .உயர் குருதி அழுத்தம், தலை சுற்றல் போன்றவை நீங்க இதிலுள்ள பொட்டாசியம் சத்து உத்தரவாதம் அளிக்கிறது.

காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி நிவாரணம் தருகிறது. டான்சிலைத் தடுக்கும், விஷத்தை முறிக்கும், வாய்ப்புண் ஆற்றும், தேள் கடிக்கு உதவும், மஞ்சல் காமாலையை நீக்கும், வீக்கத்தை குறைக்கும். வாயுவை அகற்றும் பசியை உண்டாக்கும் விரல் சுற்றிக்கு உதவும், நீரிலும் , காற்றிலும் ஏற்படும் கதிரியக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் எலுமிச்சை தோலில் உள்ள “புளோபிளேன்“ என்ற சத்தில் உள்ளது. தினமும் எலுமிச்சை உண்பவர்கள் கதிரியக்கத்தைத் தாங்கி தப்ப முடியும். புற்று நோய்க்காரர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத்தீங்கையும் எலுமிச்சை தடுக்கிறது.

வயிற்றோட்டம், வாந்திக்கு எலுமிச்சம்பழம் நல்ல மருந்தாகும். சர்கரைசேர்த்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து இருவேளை கொடுக்க வாந்தி, வயிற்றோட்டம் குணமாகும்.
வைரஸ் தொற்று இருந்தால் இது குணமளிக்காது.

இலையைப்புளித்த மோருடன் ஊறவைத்து பழைய சோற்றில் ஊற்றி உப்பிட்டு காலையில் உண்டுவர உடல் வெப்பம் குறையும். பித்த சூடு தீரும் தழும்புகள் குணமாகும். எலுமிச்சம் பழச்சாறு அளவோடு மருந்தாகத்தான் பயன்படுத்த வேண்டும். இது சமையலில், உணவுகளுக்குச் சுவை சேர்ப்பதற்காகப் பயன்படுகிறது. ரத்த அழுத்தம் குறைந்த தலைச் சுற்றல் இருக்கும்போது எலுமிச்சை சாறைக் குடித்தால் உடனடியாக உங்களது ரத்த அழுத்தம் சமநிலையை அடையும்.

மேலும், எலுமிச்சை சாறு உடல் நோய் எதிர்ப்புச் சக்திக்கும் மிகுந்த பயன்தரும் ஒரு பானமாகும். வயிற்றில் புண் இருப்பவர்கள் எலுமிச்சை சாறை அதிகம் சேர்த்துக் கொள்ள கூடாது. எலுமிச்சம் பழத்தின் தோல், சாறு, விதை எல்லாமே பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் சி, ஏ, பி, சுண்ணாம்புச் சத்து, உலோகச் சத்து, சர்க்கரை, பாஸ்பரஸ், சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம், புரோட்டீன், உப்பு, கொழுப்பு முதலியன அடங்கியுள்ளன.

இயற்கையாகவே சருமத்திற்கு ஊறு விளைவிக்காமல் சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. முகத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை அகற்றும் விதைகள் மற்றும் தோலிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. பன்னீர், எலுமிச்சை சாறு சம அளவு நீர்விட்டுக் குலுக்கி வாய் கொப்பளித்து வர வாய் துர்நாற்றம் நீங்கும்.

மெல்போர்ன் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர் ரோஜர் ஷார்ட், சில சொட்டு எலுமிச்சை சாறு மிக விலை மலிவான முறையில் கருத்தடை சாதனமாகவும், எய்ட்ஸ் கிருமி கொல்லியாகவும் பயன்படும் என்றுகண்டுபிடித்துள்ளதாகவும் பரிசோதனைச்சாலையில், எலுமிச்சை சாறு மிகவும் சக்திவாய்ந்த முறையில், மனித விந்துவையும், ஹெச்ஐவி கிருமியையும் கொல்கிறது என்றும எலுமிச்சைச் சாற்றை கருத்தடை சாதனமாக உபயோகப்படுத்துவது புதிய கண்டுபிடிப்பு அல்லவென்றும், பழங்காலம் தொட்டு உபயோகப்பட்டு வருவது என்றும், சமீபத்தில் இது அறியப்படாமல் போய்விட்டது என்றும் அவர் கூறியதாக ஒரு தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

சுமார் 300 வருடங்களுக்கு முன்னர், மத்தியதரைக்கடல் பெண்கள், எலுமிச்சைச் சாற்றையே மிகவும் பொதுவான கருத்தடை சாதனமாகப் பயன்படுத்தி வந்தார்கள் என்றும் தெரிகிறது
சில கோயில்களில் ஸ்தல விருஷமாகவும் எலுமிச்சை மரம் இருக்கிறது.

எலுமிச்சை உண்மையில் ஆத்மாவின் பிரபஞ்ச சக்தியை சேமிக்கும் ஒரு சிறிய storage battery ஆக விளங்குகிறது .சிறிது நேரம் ஒரு எலுமிச்சையை கையில் வைத்து பிரார்த்தனை செய்து ஒரு நோய் வாய் பட்டவரிடம் தந்து பாருங்கள். அவரிடம் ஒரு நல்ல மாற்றத்தை காணலாம். எலுமிச்சை இன்னும் புரிந்து கொள்ளவேண்டிய ஒரு கனி.
----
Unknown Herbal benefits of Onion, Gingeli(Ellu),Goosberry(nellikai), fennal (sombu)

வெங்காயம் ஒரு வயாகராவா?

முருங்கைக் காயைத்தான் காய்கறிகளின் வயாகரா என்று சொல்லக் கேட்டு இருப்பீர்கள். அதில் உண்மையில்லை. அதைவிட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம். இதில் அப்ரோடிஸியாக் பொட்டன்ஷியல் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் பொருட்கள் உள்ளன. தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னசிலேயே இடம் பிடித்திருக்கிறார்;.மிகச் சிறிய குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் உயிருக்கு ஆபத்தாகக் கூட முடிந்துவிடுவது உண்டு.

தேனீ போன்றவை கொட்டிவிட்டால் இளம் வயதினர் துடித்துப் போவார்கள். ஆனால் வயதானவர்கள், தேனீ கொட்டி விட்டதா? வெங்காயத்தை எடுத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள். வெங்காயத்தில் உள்ள ஒரு என்சைம் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண் டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

ஒரு நாளைக்கு ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை வீட்டுக்குள் அனுமதிக்கத் தேவையில்லை என்பார்கள். அதைப்போல வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். வெங்காயத்தை பச்சையாக, சமைத்து, சூப் அல்லது சாலாடாக்கிச் சாப்பிடலாம்.

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓடவைக்க உதவி செய்கிறது.
பைப்ரினோலிசின் என்ற பொருளை சுரந்து கொழுப்பு உணவுகள் மூலமாக ரத்த நாளங்களுக்குள் நுழைந்த கொழுப்பு களைக் கரைத்துவிடுகிறது.
பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைப்பார்கள். இவ்வாறு அடக்கிவைப்பதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இவர் களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற் சியைக் குறைத்து எல்லாவற்றையும் வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும் என்பது உங்களுக்குத் தெரியும். இத் தொல்லை இருந்தால் நிறைய வெங் காயம் சாப்பிடுங்கள், கற்கள் கரைந்து ஓடும்.
முதுமையில் வரும் மூட்டழற்சியை வெங்காயம் கட்டுப்படுத்தி விடுகிறது. வெங்காயத்தையும், கடுகு எண்ணெயை யும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறைந்துவிடும்.

எதற்கெடுத்தாலும் அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கு செலனியச் சத்து குறைவாக இருக்கும். இச்சத்து குறைவாக இருப்பவர்களுக் குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயம், பூண்டு போன்ற
காய்கறிகளைச் சாப்பிட்டால் செலனியம் சத்து கிடைக்கும். மன நிலையில் சமநிலை உண்டாகும்.
சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி சளிப்பிடிக்கும். இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் இருக்கும். இதைத் தவிர்க்க சுலபமான வழி, வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிடுவது தான். உடல் எடை அதிகமாக இருந்தாலும்கூட அதை வெங்காயம் குறைத்து விடும்.

புற்றுநோயைத் தடுக்கும் அற்புத மருந்துப்பொருள் வெங்காயம். புகைத்தல், காற்று மாசு, மன இறுக்கம் போன்றவைகளால் ஏற்படும் செல் இறப்புகளை, செல் சிதைவுகளை இது சீர்படுத்திவிடுகிறது. மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றையும் நீக்குகிறது.
முகச்சுருக்கம், சருமம் தொங்குதல் போன்றவற்றை வெங்காயத்திலுள்ள புரோட்டீன்கள் தவிர்க்கின்றன.
வெயிலில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் வெப்பத் தாக்கிலிருந்து தப்ப விரும்பினால் வெங்காயத்தை உள்ளங் கை, கன்னங்கள், வயிறு, குதி கால் போன்ற இடங்களில் தடவிக்கொள்ளலாம்.

பெரியவெங்காயம், சின்ன வெங்காயம் என இரண்டு வகை இருந்தாலும் இரண்டுமே ஏறக்குறைய ஒரே பலன் தருபவைதான். ஆனால் வைத்தியத்தில் சின்ன வெங்காயத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதற்கு மெடிசின் வெங்காயம் என்றே பெயர். வெங்காயத்தை சாப்பிடுங்கள், நோய் இல்லாமல் வாழுங்கள்.

-----------

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்பது பழமொழி. ஆனால் ஒரு ஆப்பிளில் இருக்கும் முழு சக்தியும் ஒரு நெல்லிக்காயில் இருக்கிறது என்பது அறிவியல் உண்மை.

நெல்லிக்காயை பிறை நிலா வடிவத்தில் வெட்டி தேனில் ஊறவைத்து எடுத்து காயவைத்து பத்திரப்படுத்தி தேவைப்படும்போது சாப்பிட்டு வரலாம்.

நெல்லிக்காய் ஊறுகாய் போட்டும் சாப்பிட்டு வரலாம்.

நெல்லிக்காயில் அதிக மருத்துவ குணம் இருக்கிறது என்பது தெரியும். ஆனால் அதில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் விஷயங்கள் இருப்பது பலருக்குத் தெரிவதில்லை.

மேலும், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும், உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் நெல்லிக்காய் சாப்பிடலாம். நெல்லிக்காயை பிறை நிலா வடிவத்தில் வெட்டி தேனில் ஊறவைத்து எடுத்து காயவைத்து பத்திரப்படுத்தி தேவைப்படும்போது சாப்பிட்டு வரலாம். நெல்லிக்காய் ஊறுகாய் போட்டும் சாப்பிட்டு வரலாம். நெல்லிக்காயில் அதிக மருத்துவ குணம் இருக்கிறது என்பது தெரியும். ஆனால் அதில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் விஷயங்கள் இருப்பது பலருக்குத் தெரிவதில்லை.
-----------------

குழ‌ந்தை பெ‌ற்ற ‌ெபண்க‌ள் ‌தினமு‌ம் ச‌த்தான அதே சமய‌ம் உடலு‌க்கு ஒ‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் உணவை தே‌ர்வு செ‌ய்து உ‌ண்ண வே‌ண்டு‌ம். குழ‌ந்தை‌க்கு பா‌ல் கொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதா‌ல் பா‌ல் சுர‌ப்பத‌ற்கு உதவு‌ம் உணவுகளையு‌ம் அ‌திகமாக உ‌ண்ண வே‌ண்டு‌ம்.

எனவே தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடி‌த்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

சுறா போ‌ன்ற ‌மீ‌ன்களுட‌ன் அ‌திகமாக பூ‌ண்டை போ‌ட்டு பு‌ட்டு செ‌ய்து ‌பி‌ள்ளை பெ‌ற்றவ‌ர்களு‌க்கு‌த் தருவா‌ர்க‌ள். இதுவு‌ம் பா‌ல் சுர‌ப்பத‌ற்கு உத‌வி செ‌ய்யு‌ம்.

தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும். உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு.

இதனா‌ல்தா‌ன் ‌பி‌ள்ளை பெ‌‌ற்ற பெ‌ண்களு‌க்கு தலை‌க்கு ஊ‌ற்று‌ம் போது ந‌ல்லெ‌ண்ணையை‌க் கா‌ய்‌ச்‌சி அ‌தி‌ல் பூ‌ண்டு போ‌ட்டு அ‌ந்த எ‌ண்ணெயை தே‌ய்‌த்து உட‌ல் முழுவது‌ம் மசா‌ஜ் செ‌ய்‌கி‌ன்றன‌ர்.

பூ‌ண்டி‌ற்கு இ‌த்தகைய மரு‌த்துவ குண‌ம் இரு‌ப்பதா‌ல் ‌பி‌ள்ளை பெ‌ற்ற பெ‌ண்க‌ள் பூ‌ண்டினை ஏராளமாக உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது.
----------
எள் - சுண்ணாம்புச் சத்தின் களஞ்சியம்

100 கிராம் எள்ளில் 1450 மிகி சுண்ணாம்பு உள்ளது. உடலுக்குத் தேவையான சுண்ணாம்பு அளிப்பதோடு மட்டுமல்லாமல் எள்ளில் மங்கானிஸ், தாமிரம் (copper) , மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்வரம் (Phosporus), வைட்டமின் பி1 (தியாமின்), துத்தநாகம் (zinc), வைட்டமின் இ, ஆரோக்கியமான புரதம் மற்றும் நார்ப்பொருளும் அதிகமாக இருக்கின்றன.

முன்னோர்கள் உணவுகளில் அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆனால் படிப்படியாக அதன் உபயோகம் இப்பொழுது குறைந்து வருகிறது. அதனைச் சமைக்கும் முறையும் மறந்துபோய்விட்டது. எள்ளில் செசமின் மற்றும் செசமொலின் என்ற இரு சத்துக்கள் இருக்கின்றன. இந்த இரு சத்துக்களும் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் ஈரல் சேதத்தையும் தடுக்கின்றன. எள்ளில் உள்ள வைட்டமின் சி இருதயத்தையும் நரம்பு மண்டலத்தையும் வலுப்படுத்துகிறது.

எள்ளிலிருந்து தய¡ரிக்கப்படும் நல்லெண்ணெய் சுருக்கத்தைப் போக்கவும் இன்னும் சில சரும நோய்களுக்கும் உதவுகிறது. உடல் பலவீனமாக உள்ளவர்கள் எள்ளை உட்கொண்டால் உடல் உரம் பெறும்.

-----------
சுகம் தரும் சோம்பு

அறிவிலும் ஆக்கத்திலும் மேன்மை கொண்ட நம் முன்னோர்கள் தங்களுடைய வாழ்வில் ஆரோக்கியத்திற்கே முதலிடம் கொடுத்தனர்.“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழியை உலகிற்கு உணரச் செய்தவர்கள் தான் சித்தர்களும் ஞானிகளும்.நம் வீட்டு சமையல் அறைகளுக்குள்ளேயே மாபெரும் மருத்துவக் களஞ்சியத்தை வைத்துள்ளனர். ஒரு மனிதனின் உணவு மூலமே அவனுடைய நோய்க்கு மருந்தை கண்டறிந்து சொன்னவர்கள் சித்தர்கள்.வீட்டுச் சமையலில் ஏதோ வாசனைக்காக சீரகம், சோம்பு, இலவங்கம், வெந்தயம், கடுகு இவற்றை பயன்படுத்துகிறார்கள் என்று எண்ண வேண்டாம். ஒவ்வொரு பொருளும் தலைசிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டது.கடந்த இதழில் சீரகத்தின் மருத்துவப் பயன்களை அறிந்தோம். இந்த இதழில் சோம்பின் குணங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். சோம்புபொதுவாக உணவு விடுதிகளில் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சிறு தட்டில் சோம்பை வைப்பார்கள். சிலர் அதை எடுத்து வாயில் போட்டு சாப்பிடுவதை பார்த்திருப்பீர்கள். அதன் அர்த்தம் என்ன என்பது இப்போது புரிந்திருக்கும். ஆம் உண்ணும் உணவை சீரணிக்க வைக்கும் சக்தி இதற்குண்டு. எனவே எளிதில் சீரணமாகாத உணவுகள், அசைவ உணவுகள் போன்றவற்றில் சோம்பை அதிகம் சேர்த்து சமைப்பார்கள்.இதை பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைப்பார்கள். இது பூண்டு வகையைச் சார்ந்தது. வெண்மை நிறத்துடன் சிறிது பச்சை கலந்த நிறமுடையது. இந்தியா முழுவதும் இது பயிரிடப்படுகிறது. குறிப்பாக கேரளா பகுதிகளில் அதிகம் விளைகிறது.இதன் பூ, விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.

யோனிநோய் குன்மம் உரூட்சைமந் தம்பொருமல்போனமுறு காசம் பீலிகமிரைப்-பீன உரைசேர்க்கின்ற வாதமு போஞ் சீர்பெரிய சீரகத்தால்மூக்குநோ யில்லை மொழி- அகத்தியர் குணபாடம்செரிமான சக்தியைத் தூண்டஎளிதில் செரிமானம் ஆகாத உணவுகளைக் கூட செரிக்கச் செய்யும் தன்மை சோம்பிற்கு உண்டு. உணவுக்குப்பின் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மென்று சாறை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வந்தால் உண்ட உணவு எளிதில் சீரணமாகும்.குடல்புண் ஆறசாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும்.வயிற்றுவலி, வயிற்று பொருமல்அஜீரணக் கோளாறுகளால் வயிற்றில் வாய்வுக்களின் சீற்றம் அதிகமாகி வயிற்றுவலி, வயிற்று பொருமல் ஆகியவை ஏற்படுகின்றன. இவர்கள் உடனே சிறிதளவு சோம்பை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் சிறிது நேரத்தில் குணம் தெரியும்.கருப்பை பலம்பெறகருப்பை பாதிக்கப்பட்டால் கருத்தரிப்பு நடக்காது. இதனால் சிலர் குழந்தை பேறு இல்லாமல் கூட அவஸ்தைப் படுவார்கள். பெருஞ்சீரகத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து, வேளையொன்றுக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது பனங்கற்கண்டு கலந்தோ சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகும்.ஈரல் பாதிப்பு நீங்கஉடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கும் உறுப்பு ஈரல்தான். ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகமாகி பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்.இருமல் இரைப்பு மாறநாள்பட்ட வறண்ட இருமல், இரைப்பு இவைகளால் அவதிப்படுபவர்கள் சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் நாள்பட்ட இரைப்பு, மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.சுரக் காய்ச்சல்அதிக குளிர் சுரம் இருந்தால் சோம்பை நீரில் கொதிக்க வைத்து கொடுத்தால் குளிர் சுரம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.பசியைத் தூண்டபசியில்லாமல் அவதிப்படுபவர்கள் சோம்பை தனியாக மென்று சாப்பிட்டு வந்தால் நன்கு பசியெடுக்கும்.இப்போது தெரிகிறதா சோம்பின் மகத்துவம்.