About Me

My photo
I am an IT professional, Nowadays our Lifestyle is changed a lot and of course we are chasing money. In India More than 7 crore people affected by Diabetes, High Cholesterol and infertility due to their Poor Food Habits &amp Lifestyle. This Blog is very useful for youngsters to lead good Lifestyle and be healthy and students to choose career courses.Work hard, but make time for your love, family and friends. Nobody remembers Powerpoint presentations on your Final Day.I believe Life is ours and we only Live our Life.... Thanks for visiting and welcome you to visit again. WHO LOVES GOD ARE SEARCHING GOD, WHO LOVES PEOPLE ARE LIVING AS GOD - SK ( Reach me @ +91 9791139942 to lead Healthy Family Life )

Monday 19 December 2016

Health guide

நம்மை காக்கும் இம்யூனிட்டி! - ஹெல்த்தி வழிகாட்டி


ல்லா நோய்களும், எல்லோரையும் இலக்காக்குவது இல்லை. ‘‘நான் ஆஸ்பத்திரி பக்கம் போயே, 10 வருஷம் ஆச்சு’’ என்கிறார் ஒருவர். அதே ஊரில் இன்னொருவருக்குப் புதுப் புதுப் பெயர்களில் காய்ச்சல் வந்து போகிறது. ஊரில் எந்தக் காய்ச்சலையும் அறிமுகப்படுத்தும் முதல் நபராக அவர் இருக்கிறார். இதற்கு என்ன காரணம்? இரண்டாம் நபருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. எனவே, நோயை எதிர்த்துப் போராட சக்தி இல்லாமல், அவரது உடல் எல்லா நோய்களையும் தனக்குள் தங்க அனுமதிக்கிறது. ஒரு வீட்டில் நுழையும் ‘டெங்கு கொசு’ அனைவரையும் கடித்தாலும், அதில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவருக்கு மட்டுமே, டெங்கு காய்ச்சல் வரும். எதிர்ப்பு சக்தி வலுவாக இருப்பவருக்கு வராது. இதுதான் நோய் எதிர்ப்பு சக்தியின் வலிமை.

மனித உடல் ஓர் அற்புத இயந்திரம். இயந்திரங்கள் பழுதானால், அவற்றால் தாமாகவே சரியாக முடியாது. ஆனால், நம் உடல் அப்படி அல்ல. அது தன்னைத் தானே பழுது பார்த்துக்கொள்வதோடு, மீண்டும் அந்தப் பிரச்னை வராது இருப்பதற்காகத் தயாராகிறது. உடலின் இந்தப் பேராற்றல்தான் `நோய் எதிர்ப்பு சக்தி'.  

உடல் எப்போதும் வலிமையோடும் ஆரோக்கியத்தோடும் இருக்க வேண்டியது அவசியம். இதற்கு உணவு மட்டும் போதாது. நம் பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை, உடற்பயிற்சி என அனைத்தும் ஒன்றிணையும் போதுதான் நோய் எதிர்ப்பு சக்தியின் ஆற்றல் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப் பதற்கான வழிமுறைகளை விவரிக்கிறார் பொதுநல மருத்துவர் முத்தையா. சக்தி தரும் உணவுகள் பற்றி பட்டியலிடுகிறார் ஆயுர்வேத மருத்துவர் வெங்கடேஷ்வரன். அவற்றின் பலன்களைச் சொல்கிறார், உணவியல் நிபுணர் அனிதா.

நோய் எதிர்ப்பு சக்தி

நம் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் (WBC) இருக்கும். இதுதான் நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்திகொண்டது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு மைக்ரோ லிட்டரில் 3500-16,000 அளவிலும், பெரியவர்களுக்கு 3500-11,000 என்ற அளவிலும் இருக்கும். வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்தால், கிருமிகளுக்கு எதிராகப் போராடும் சக்தியை நம் உடல் இழந்துவிடும். ஒருவருக்கு சளி, காய்ச்சல் போன்ற பிரச்னைகள் திரும்பத் திரும்ப வருகிறது என்றால், அவர் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர் என அர்த்தம். நோய் எதிர்ப்பு சக்தி என்பது, நம் உடலின் இயல்பான ஒன்று. உணவு, வாழ்க்கைமுறை, உடற்பயிற்சி எனப் பல வழிகளில் நாம் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்று, ஆரோக்கியமாக வாழலாம்.

பிறந்த குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் முதிர்ச்சி அடைந்திருக்காது. எனவே, தாய்ப்பால் வழியாகக் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. அதனால்தான், `குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே அளிக்க வேண்டும். அதன் பிறகு, தாய்ப்பால் புகட்டுவதுடன், வேறு உணவுகளையும் அளிக்கலாம். கட்டாயம் ஓராண்டு வரை தாய்ப்பால் புகட்ட வேண்டும்’ என்கின்றனர் மருத்துவர்கள்.

அதேபோல், நமக்கு வயதாகும்போது நமது நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கும் வயதாகிறது. இதனால், வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். முதுமையில், அலர்ஜி அல்லது சுவாசத் தொற்று உண்டாகும். எனவே கவனம் தேவை.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான காரணங்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின்கள்

வைட்டமின் சி: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதில் மிக முக்கியமானது வைட்டமின் சி. வைட்டமின் சி குறையும்போது, நோய் எதிர்ப்பு சக்தியும் குறைய ஆரம்பிக்கும். வைட்டமின் சி மாத்திரைகள் ஜலதோஷத்தைத் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் நல்ல நிவாரணி என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு, சராசரியாக 500 மி.கி அளவு வைட்டமின் சி மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். 

பெரிய நெல்லிக்காய், கொய்யாப்பழம் போன்றவற்றில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது, சளி முதல் புற்றுநோய் வரை நோய் வராமல் பாதுகாக்கும்.
வைட்டமின் ஏ மற்றும் டி: வைட்டமின் ஏ மற்றும் டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன. வைட்டமின் ஏ பார்வைக் குறைபாடுகளைப் போக்குகிறது, வைட்டமின் டி எலும்பு உறுதித் தன்மைக்கு அவசியமாகிறது. 
வைட்டமின் ஏ நிறைந்த அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, சுண்டைக்காய், கேரட், தக்காளி, பொன்னாங்கண்ணிக்கீரை, பசுநெய், வெண்ணெய் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

பசலைக்கீரை, அரைக்கீரை, காலிஃப்ளவர், சுண்டை வற்றல், ஆட்டு ஈரல், எள், பால், தயிர், நெல்லிக்காய் போன்றவை ரத்த விருத்திக்கு மிகவும் அவசியம். சர்க்கரை வள்ளிக்கிழங்கு, காளான் போன்றவை குழந்தைகளுக்கு ஏற்றவை.
வைட்டமின் பி: பி6 வைட்டமின் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு உயிரி ரசாயன விளைவுகளுக்கு (biochemical reactions) உதவுகிறது. சில வகை பி வைட்டமின்கள்,  ரத்த அணுக்கள் உற்பத்திக் குறைபாட்டை சரிசெய்யப் பயன்படுகின்றன. இவை, ரத்தசோகை மற்றும் நரம்பு மண்டலப் பாதிப்பை சீர்செய்யும். 

வைட்டமின் இ: சிறந்த ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படும். புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. முதுமை அடைதலையும் குறைப்பிரசவத்தையும் தடுக்க உதவுகிறது.
துத்தநாகம்: நம்முடைய செல்கள் ஃபிட்டாக இருந்தால்தான், நோய்க்கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட முடியும். இதற்கு, துத்தநாகம் அவசியம். வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றலை துத்தநாகம் அளிக்கிறது. 

கடலைப் பருப்பு, உலர்ந்த தேங்காய், எள் போன்றவற்றில் துத்தநாகம் உள்ளது.

மக்னீசியம்: இது இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி முழுமை பெறாது. உடலில் நடக்கும் 300-க்கும் மேற்பட்ட உயிரி மாற்றங்களுக்கு இது அவசியம். சிறுநீரகம் உள்ளிட்ட ஒவ்வோர் உறுப்பின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கும் இது அவசியம். கீரைகள், கோதுமைப் புல், நட்ஸ், விதைகள் போன்றவற்றில் மக்னீசியம் நிறைவாக உள்ளது.

தடுப்பூசிகள்
உயிரைப் பறிக்கும், உடல் உறுப்புகளை செயலிழக்கச் செய்யும் மிக மோசமான கிருமிகளுக்கு எதிராகத் தற்போது தடுப்பூசிகள் வந்துவிட்டன. இவை, குறிப்பிட்ட சில மோசமான நோய்களின் பாதிப்பில் இருந்து நம்மைக் காக்கின்றன.
குழந்தைகளுக்கு 15 வயது வரையிலும், பெண்களுக்குக் கர்ப்பக் காலத்திலும், இருபாலருக்கும் முதுமையின்போதும் போடப்படும் பிரத்யேகத் தடுப்பூசிகள் உள்ளன. குறிப்பாக, டெட்டனஸ், ரேபிஸ், இன்ஃபுளூயன்சா, ஜுரத்துக்கான தடுப்பு ஊசிகள், ஆஸ்துமா, சர்க்கரைநோய் போன்ற வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிமோனியா தடுப்பூசி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட...

 பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பாலே போதுமான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்துவிடும். அதுவே, முதல் ஒரு வருடத்துக்கு சின்ன அம்மை, தட்டம்மை, மணல்வாரி அம்மை உட்பட சில நோய்களில் இருந்து காக்கும் ஆற்றல் உடையது.  

 பெரிய குழந்தைகளுக்கு, தயிரையும் யோகர்ட்டையும் கொடுக்கலாம். இதில் உள்ள புரோபயாட்டிக், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். 

 சிறுநீரகக் கல் உருவாகி அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டு, முள்ளங்கி போன்ற காய்கறி உணவுகளை உண்டால் கல் சேர்வதைக் குறைக்கலாம்.

 கோடைக்காலத்தில், வெயிலில் வெளியே செல்ல நேர்பவர்கள் சிறிது உப்பு குறைவாக சேர்க்கப்பட்ட மோர் குடிப்பது அவசியம்.
 வயதானவர்களுக்கு ஏற்படும் ஞாபகமறதியைத் தடுப்பதற்கு, தனிமையைத் தவிர்ப்பது நல்லது. ஞாபகசக்தியைக் கூட்டுவதற்கு, உணவில் வல்லாரைக்கீரையைச் சேர்த்துக்கொள்ளலாம்.
வெயிட் லிஃப்ட்டிங் செய்பவர்கள், ஜிம் பயிற்சிகளில் ஈடுபடுபவர்கள், விளையாட்டு வீரர்கள் நல்ல கொழுப்பு அதிகம் உள்ள பிஸ்தா, பாதாம், வால்நட் முதலியவற்றைத் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வாழ்க்கைமுறை

ஆரோக்கியமான உணவுகள், முறையான உடற்பயிற்சி, சரியான ஓய்வு மூன்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

உடலுக்குத் தேவையான புரதம், வைட்டமின்கள், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தாதுஉப்புக்கள், நீர்ச்சத்து, நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்த சமச்சீரான உணவை உண்ணவேண்டியது முக்கியம். இந்த சமச்சீர் உணவில் மாற்றம் ஏற்படும்போது, உடலுக்குத் தேவையான ஆற்றல் விகிதத்திலும் மாற்றம் ஏற்படும். எனவே, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும்.
ஏதேனும் ஓர் உடற்பயிற்சி, விளையாட்டில் ஈடுபடுவது உடலையும் மனதையும் ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க மிகவும் உதவும். உடற்பயிற்சி, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சுலபமான வழியாகவும் இருக்கிறது. 

நடைப்பயிற்சி, ஜாகிங், நீச்சல், சைக்கிளிங் போன்ற கார்டியோ பயிற்சிகள் நமது இதயத்தையும் நுரையீரலையும் மேம்படுத்தும்; மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்; அதன் மூலம் உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி,  முழு உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகின்றன.

மனித உடலுக்கு உழைப்பைப்போலவே ஓய்வும் முக்கியம். ஓய்வின்போதுதான் உடல் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு, இறந்த செல்களை நீக்கி, புதிய செல்களை உருவாக்கி வளர்சிதை மாற்றத்தைச் செய்துகொள்கிறது. இதனால், நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்படுகிறது. உறக்கம் கெடும்போது, வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுவதால், நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது. இதனால், ஒபிஸிட்டி முதல் நரம்புப் பிரச்னைகள் வரை ஏற்படுகின்றன.

இயற்கையோடு இயைந்த வாழ்க்கைமுறை ஆரோக்கியம் காக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவும். உதாரணமாக, பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தாமல் இருப்பது, மண் பாத்திரங்களில் சமையல் செய்வது, ஆர்கானிக் காய்கறிகள், பழங்களைப் பயன்படுத்துவது போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

வெயிலில் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி உள்ளது. இது, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். தோல் நோய்கள் உட்பட பல்வேறு பிரச்னைகளில் இருந்து காக்கும். தினமும் குறைந்தது 15-20 நிமிடங்களாவது வெயில் உடலில் படும்படி இருப்பது மிகவும் நல்லது.

ஃப்ரிட்ஜில் பதப்படுத்திய பொருட்களைத் திரும்பத் திரும்ப எடுத்துச் சூடாக்கி உண்பதைத் தவிர்க்க வேண்டும். இப்படிச் சாப்பிடும்போது உணவுப்பொருளில் வேதி மாற்றம் ஏற்பட்டு உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும்.

நடப்பது உடலுக்கு மிகவும் நல்லது. ஒன்றிரண்டு மாடி உள்ள கட்டடங்களில் லிஃப்ட்டைப் பயன்படுத்தாமல், படிகளை உபயோகிப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது.

புகைபிடிப்பதும், மது அருந்துவதும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எமன். எனவே, இவற்றைத் தவிர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தி மேம்படவும் ஆரோக்கிய வாழ்வு அமையவும் மிகவும் முக்கியம்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள்

தினசரி கொதிக்கவைத்து ஆறவைத்த குடிநீரைப் பருகுவது நல்லது. சராசரியாக இரண்டு, மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஒரே மாதிரியான உணவு உண்பதைத் தவிர்த்துவிட்டு, அனைத்துவிதமான உணவுகளையும் தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அனைத்து விதமான சத்துக்களும் கிடைக்கும்.
வானவில் வண்ணக் காய்கறிகள், பழங்களை தினம் ஒரு வண்ணம் என உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

சராசரியாக ஒரு நாளைக்கு ஆணுக்கு 60 மி.கி, பெண்ணுக்கு 50 மி.கி புரதச்சத்து அவசியம். பருப்பு மற்றும் பயறு வகைகளில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. மாமிச உணவுகளைக் காட்டிலும், மிகவும் அதிகமாக சோயாபீன்ஸில் புரதம் உள்ளது. 

சோயா, கறுப்பு உளுந்து, கொள்ளு, பச்சைப் பயறு, பட்டாணி, ராஜ்மா, கடலைப் பருப்பு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் உட்கொள்ள வேண்டும்.

மாவுச்சத்தும் அவசியம். மைதா போன்ற சத்துஇல்லாத, அதிக அளவில் பக்குவப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

சிறுதானியங்கள், தீட்டப்படாத அரிசி மற்றும் முழுக்கோதுமை போன்ற தானியங்கள் மிகச்சிறந்தவை.
கொழுப்புச்சத்து மிகவும் அவசியம். கொழுப்பை முற்றிலுமாகத் தவிர்ப்பது தவறு. குறைந்தது 10 - 20 சதவிகிதக் கொழுப்புச்சத்து அவசியம். இதற்கு, நாம் தினசரி பயன்படுத்தும் கடலை எண்ணெயும் நல்லெண்ணெயுமே போதுமானவை. ஒருவருக்கு, ஒரு நாளைக்கு, நான்கு டீஸ்பூன் எண்ணெய் போதுமானது.

வேப்பிலைத் தண்ணீர்க் குளியல், வேப்பிலையை அரைத்துப் பூசுவது, மஞ்சளை அரைத்துப் பூசுவது, பயத்தம் பருப்பு மாவு, சீயக்காய் போன்றவற்றைப் பயன்படுத்துவது நல்லது.

மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், ஏலம் போன்றவற்றை தினசரி சேர்த்துவர அவை எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நம்மை நோயில் இருந்து பாதுகாக்கும். மஞ்சள் தூளை வீட்டில் தயாரிப்பது நல்லது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிற்றுண்டிகள்

ருப்பு அடை, காய்கறி தோசை, ராகி அடை, வெண்பொங்கல், சாம்பார், வெந்தயக்களியுடன் கருப்பட்டி, நல்லெண்ணெய். 

மாதம் ஒரு முறை வேப்பம்பூ ரசம்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்குச் சத்துமாவுக் கஞ்சி, இட்லி, சாம்பார், சட்னி. இட்லி மாவுடன் கொத்தமல்லி, கேரட், பீன்ஸ் கலந்துகொள்வது நல்லது.
வாரம் ஒரு முறை சுண்டை வற்றல் குழம்பு (பொரித்த சுண்டை வற்றல்).

முருங்கைக்கீரை சூப், காளான் சூப், காய்கறி சூப்.

ருப்பு, பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்த ரசம். தக்காளி, பூண்டு, மிளகு சேர்த்த ரசம். நெல்லிக்காய்த் துவையல், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை சேர்த்த துவையல்.

யிர், குடலில் உள்ள நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்களைப் பாதுகாக்கும்.

தேங்காய், பருப்பு, பசுநெய் சேர்த்துச் செய்த பொன்னாங்கண்ணிப் பொரியல்.

வெள்ளைச் சீனி சேர்க்காத தேநீர்.

சைவ உணவு உண்பவர்கள் குளிர்காலங்களில் நாட்டுக்கோழி சூப் சாப்பிடலாம்.

தவிர்க்க வேண்டியவை...
பேக்கரி உணவுகளான கேக், பன், பிரெட், நூடுல்ஸ், ஜங்க் ஃபுட்ஸ், குளிர்பானங்கள், பாக்கெட்டில் அடைத்த சிப்ஸ்கள், சாக்லேட், மிட்டாய்கள், செயற்கைச் சுவை சேர்க்கப்பட்ட சைவ, அசைவ உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும்.

உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க,  ஊறுகாய், சிப்ஸ், அப்பளம், வற்றல், கருவாடு போன்ற உப்பு அதிகமாக உள்ள பண்டங்களைத் தவிர்க்கவேண்டியது அவசியம்.


நோய் எதிர்ப்பு சக்திக்கு... 

எனர்ஜி டிரிங்க்ஸ் 

கொரிமேட்டோ ஜூஸ்

தேவையானவை: கொத்தமல்லி இலை - 1 கப், தக்காளி - 4, புதினா - 1 கைப்பிடி, எலுமிச்சைப்பழச் சாறு - 2 டீஸ்பூன், சீரகத்தூள், உப்பு - தலா 1/4 டீஸ்பூன், பனங்கற்கண்டு அல்லது தேன் - தேவையான அளவு.
செய்முறை: கொத்தமல்லி, தக்காளி, புதினா, எலுமிச்சைப்பழச் சாறு, சீரகத்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்க வேண்டும். பின், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். இறுதியாக, வடிகட்டிய சாறுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து நன்றாகக் கலக்கிப் பரிமாறவும்.

பலன்கள்: தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிக அளவில் உள்ளன. இவை, நம் உடலில் உள்ள நோய்க்கிருமிகளின் தாக்குதலைத் தடுக்கும். புதினா இலையில் உள்ள வைட்டமின் பி மற்றும் இரும்புச்சத்து, காய்ச்சல், காமாலை போன்றவற்றைக் குணமாக்கும். கொத்தமல்லியில் உள்ள ஏ,பி,சி சத்துக்கள், மாலைக்கண் நோய், சிறுநீரகக் கோளாறு முதலியவற்றைப் போக்கும்.

கிவி ஜூஸ்

தேவையானவை: கிவிப் பழம் - 4, இஞ்சித் துருவல் - 1/4 டீஸ்பூன், பனங்கற்கண்டு / தேன் - தேவையான அளவு.
செய்முறை: கிவிப் பழத்தைத் தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கி இஞ்சித் துருவலுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். பின், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். இறுதியாக, வடிகட்டிய சாறுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்தால் சுவை பிரமாதமாக இருக்கும்.

பலன்கள்: கிவிப் பழத்தில் கொழுப்புச்சத்து மிகவும் குறைந்த அளவில் உள்ளது. உடல் எடையைக் குறைக்க உதவும். கிவியில் உள்ள வைட்டமின் சி, நோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது. இஞ்சி, மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளைக் குறைக்கிறது.

கேட்டி - டாட்டி மிராக்கிள்

தேவையானவை: 
கேரட் துருவல் - 1 கப், தக்காளி - 3, நறுக்கிய வெள்ளரிக்காய் - 1 கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், பனங்கற்கண்டு - தேவையான அளவு.
செய்முறை: கேரட், தக்காளி, வெள்ளரிக்காய், எலுமிச்சைப்பழச் சாறு, பனங்கற்கண்டு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்க வேண்டும். பின், வடிகட்டி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து காலை நேர உணவுடன் எடுத்துக்கொள்ளலாம்.
பலன்கள்: வைட்டமின் ஏ, சி நிறைந்த ஜூஸ் இது. எளிதில் செரிமானம் ஆகும். காசநோய், நுரையீரல் நோய், ஆஸ்துமா போன்ற மூச்சுக்குழல் நோய்களைக் குணமாக்கும். கேரட்டில் உள்ள பீட்டாகரோட்டின் கண்புரை நோய் வராமல் பாதுகாக்கும். வெள்ளரி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்து, சிறுநீர் வெளியேற உதவும். கண்பொங்குதல் பிரச்னை நீங்கும்.

ஆப்பிள் - கேரோ பன்ச்

தேவையானவை: தோல், விதை நீக்கிய ஆப்பிள் - 1 கப், கேரட் துருவல் - 1/2 கப், எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்,  பட்டைத்தூள் - 1 சிட்டிகை, இஞ்சி - சிறு துண்டு, தேன் - தேவையான அளவு.
செய்முறை: கேரட், இஞ்சி, பட்டைத்தூள் உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து வடிகட்டி தனியாக வைக்க வேண்டும். பின், ஆப்பிளுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்து வடிகட்டி, சாறு எடுக்க வேண்டும். இப்போது, இரண்டு சாறுகளையும் ஒன்று சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், தேன் விட்டு, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து அருந்தலாம். இனிப்பு வேண்டாம் என்பவர்கள் தேன் சேர்க்காமலே அருந்தலாம்.
பலன்கள்: கேரட்டில் உள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவும். ரத்தப் புற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும். இஞ்சி, இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். மெத்தத்தில் இந்த ஜூஸ், இதய நோய் மற்றும் புற்றுநோய் பாதிப்பு வராமல் தடுக்கும், சருமத்தைப் பொலிவாக்கும்.

கரம் மசாலா சர்பத்

தேவையானவை: பட்டை - 2 துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா 4, பிரிஞ்சி இலை - 2, ரோஜா மொக்கு - 1, எலுமிச்சைச் சாறு, பனங்கற்கண்டு - தேவையான அளவு.
செய்முறை: பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை மற்றும் ரோஜா மொக்கு ஆகியவற்றை வாணலியில் போட்டு லேசாக வறுத்து எடுக்கவும். ஆறியதும், மிக்ஸியில் போட்டு மசாலாப் பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளவும். ஒரு கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் இரண்டு டீஸ்பூன் அரைத்த மசாலா பொடியைச் சேர்க்கவும். பின், நன்றாகக் கலந்து ஒரு கொதிவந்ததும் மூடிவைத்து, நன்கு ஆறவிடவும். ஆறிய மசாலா டிகாக்‌ஷனை வடிகட்டி, அதனுடன் எலுமிச்சைச் சாறு, பனங்கற்கண்டு சேர்த்துத் தேவையான அளவு தண்ணீர் கலந்து ஐஸ் கட்டிகள் சேர்த்து அருந்தலாம்.

பலன்கள்: எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலுக்கு கிளென்சராக செயல்படும். பட்டை, செரிமானத்துக்கு உதவும். இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். உடல் எடையைக் குறைக்கும். சளித் தொல்லையைக் கட்டுப்படுத்தும். வாய் துர்நாற்றம், பல் தொடர்பான பிரச்னைகளுக்கு நல்லது.

லெமன் மின்ட் கூலர்

தேவையானவை: புதினா - 1 கப், எலுமிச்சைப்பழச் சாறு - 2 டீஸ்பூன், இஞ்சி - 1 சிறு துண்டு, உப்பு - 1/4 டீஸ்பூன், கற்கண்டு - தேவையான அளவு.
செய்முறை: புதினா, எலுமிச்சைச் சாறு, இஞ்சி, உப்பு, கற்கண்டு சேர்த்து அரைக்க வேண்டும்.  பின், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். மாலை நேர எனர்ஜி டிரிங்க் ரெடி!

பலன்கள்: எலுமிச்சையில் உள்ள கால்சியம், எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. எலுமிச்சையில் உள்ள பாஸ்பரஸ், மக்னீசியம், புரோட்டீன், கார்போஹைட்ரேட் உடல் எடையைக் குறைக்கவும் செரிமானத்துக்கும் உதவுகிறது. காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நிவாரணம் தருகிறது. மூட்டுவலி, உடல் தசைகளில் வலி போன்றவற்றைச் சரிசெய்கிறது. புதினாவில் உள்ள இரும்புச்சத்து, ரத்த விருத்திக்கு உதவுகிறது.

தேங்காய்ப்பால் கூலர்

தேவையானவை: தேங்காய்த் துருவல் - 1 கப், வெள்ளரிக்காய் - 1/2 கப், பனங்கற்கண்டு - தேவையான அளவு.
செய்முறை: தேங்காய்த் துருவல், வெள்ளரிக்காய், பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை வடிகட்டி, காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலுக்குக் குளிர்ச்சியாக இருக்கும்.

பலன்கள்: 
முகம் பளபளப்பு பெற வெள்ளரிக்காய் உதவுகிறது. தேங்காய்த் துருவல், வாய்ப்புண் மற்றும் குடல்புண்ணைக் குணமாக்க உதவுகிறது. தேங்காயில் அதிக அளவு மாங்கனீஸ் நிறைந்து உள்ளது. இதில் உள்ள தாமிரம் மற்றும் வைட்டமின் சி, சருமத்தை மென்மை அடையச் செய்கிறது. ரத்தசோகையைச் சரிசெய்யும். உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும். எலும்புகளை உறுதியாக்கும்.

நெல்லிக்காய் ஜுஸ்

தேவையானவை: நெல்லிக்காய் - 3, துளசி, புதினா - ஐந்து இலைகள், இளநீர், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நெல்லிக்காயைத் தோல் சீவி மிக்ஸியில் போட்டு, இளநீர் ஊற்றி அரைக்க வேண்டும். இதில், உப்பு, துளசி, புதினா இலைகள் சேர்த்து அருந்தலாம்.

பலன்கள்: செரிமானப் பிரச்னைகள் தடுக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எடுத்துக்கொண்டால், புற்றுநோய், இதயப் பிரச்னைகள் வராது. தொண்டைத் தொற்றுகளை நீக்கக்கூடியது. உடல் எடையைக் குறைக்க உதவும். கல்லீரலைச் சுத்தம் செய்யும். உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் உப்பையும், சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையையும் சேர்க்கக் கூடாது.

கேரட் ஜூஸ்

தேவையானவை: கேரட் - 6, தண்ணீர் - தேவையான அளவு.  

செய்முறை: கேரட்டைக் கழுவி, சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டிப் பருக வேண்டும்.
பலன்கள்: ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ, சி, கே, வைட்டமின் பி8, ஃபோலேட் நிறைவாக உள்ளன. புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்கும். குறிப்பாக, `லுக்கீமியா’ எனப்படும் ரத்தப்புற்றுநோயைத் தடுக்கும். மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களிக்கிறது. மறதி நோயான அல்சைமரைத் தடுக்கும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது.

ஸ்ட்ராபெர்ரி திராட்சை மிக்ஸ்டு ஜூஸ்

தேவையானவை:  ஸ்ட்ராபெர்ரி - 200 கிராம், திராட்சை - 50 கிராம், தேன் - சிறிதளவு.

செய்முறை: ஸ்ட்ராபெர்ரி மற்றும் திராட்சைப் பழத்தை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து, தேன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். குளிர்ச்சிக்காக, சிறிது ஐஸ் கட்டிகள் சேர்த்துக்கொள்ளலாம்.
பலன்கள்: திராட்சை, ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள், புற்றுநோய் செல்களைத் தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களான, அந்தோசயனின் (Anthocyanin) மற்றும் எல்லாஜிக் அமிலம் (Ellagic Acid) இதில் அதிக அளவில் உள்ளன. நியாசின், ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவின் முதலான வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் சத்துக்களும் இதில் அதிக அளவில் இருக்கின்றன. மாங்கனீஸ், பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகம், கால்சியம் ஆகிய தாதுஉப்புகள் ஓரளவு கிடைக்கும். தொடர்ந்து சீரான இடைவேளைகளில் இந்த ஜூஸைக் குடித்துவந்தால், இதய நோய்கள் வராது. இளமைப் பொலிவு கிடைக்கும்.

அன்னாசி - புதினா ஜூஸ்

தேவையானவை: அன்னாசிப் பழத்துண்டுகள் - 200 கிராம், புதினா - 10 கிராம், சர்க்கரை அல்லது தேன், ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை: அன்னாசி, புதினா, சர்க்கரை அல்லது தேன் மற்றும் ஐஸ் கட்டிகள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டி அருந்த வேண்டும்.

பலன்கள்: வைட்டமின் சி மற்றும் பி6 நிறைந்த ஜூஸ். பீட்டாகரோட்டின் மற்றும் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுஉப்புகள் இதில் உள்ளன. புதினா, இருமலுக்கும் ஆஸ்துமாவுக்கும் மிகவும் நல்லது. தொண்டைக் கமறல், முகப்பரு இருப்பவர்கள், இந்த ஜூஸில் புதினாவை அதிக அளவு சேர்த்துப் பருகலாம். தோல் வறட்சி இருப்பவர்கள், உடலில் உள்ள நச்சுக்கள், மலச்சிக்கல் நீங்க, இந்த ஜூஸைப் பருகலாம். ஓர் உணவு வேளைக்கும் மற்றொன்றுக்கும் இடைப்பட்ட நேரத்தில் அருந்தலாம். ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவு இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன், புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் ஆற்றலும் இந்த ஜூஸுக்கு உண்டு.

மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் ஜூஸ்

தேவையானவை: தோல் நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டிய அன்னாசிப்பழம் - 50 கிராம், முலாம்பழம்  - பாதி, பப்பாளி - 50 கிராம், நடுத்தர வாழைப்பழம் - 1, பச்சை திராட்சை - 25 கிராம், ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு (விருப்பப்பட்டால்).
செய்முறை: அன்னாசி மற்றும் திராட்சைப் பழத்தை மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டி, சாறு எடுக்க வேண்டும். இதனுடன், முலாம் பழம், பப்பாளி, வாழை மற்றும் ஐஸ் கட்டிகளைச் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டாமல் அருந்த வேண்டும்.

பலன்கள்: ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மலச்சிக்கல், உணவு உண்டவுடன் மலம் கழிக்கும் பிரச்னை (இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம்) உள்ளவர்கள், மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள், இதய நோயாளிகள் இந்த ஜூஸை அருந்துவது மிகவும் நல்லது. தொடர்ந்து இந்த ஜூஸை எடுத்துக்கொள்வது, புற்றுநோய் ஆபத்தில் இருந்து காக்கும். சர்க்கரை சேர்க்காமல் அருந்த வேண்டும்.

ப்ரைம்ஸ்டோன் ஜுஸ்

தேவையானவை: மாம்பழம் - 1, தோல், விதை நீக்கிய ஆரஞ்சு, சாத்துக்குடி - தலா அரைப் பழம், சர்க்கரை, ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை: ஆரஞ்சு, சாத்துக்குடிச் சுளைகளை மிக்ஸியில் அரைத்துச் சாறு எடுக்க வேண்டும். இதனுடன், மாம்பழத்தை தோல், கொட்டை நீக்கி, துண்டுகளாக நறுக்கிப் போட்டு, சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து, மீண்டும் மிக்ஸியில் நன்றாக அரைக்க வேண்டும்.

பலன்கள்: வைட்டமின் ஏ மற்றும் ஃபிளேவனாய்டு இருப்பதால், கண்களுக்கு மிகவும் நல்லது. பொட்டாசியம் சத்து, இதயம் சீராகச் செயல்பட உதவும். இந்த ஜூஸில் உள்ள தாமிரம், ரத்தச் சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு உதவும். அதிக நார்ச்சத்து இருப்பதால், சர்க்கரை சேர்க்காமல் அருந்துவது, கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். செரிமானப் பிரச்னை இருப்பவர்களும் இந்த ஜூஸ் அருந்தலாம். மூட்டுவலி, இதய நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள், இந்த ஜூஸை அடிக்கடி பருகலாம்.

மிக்ஸ்டு வெஜிடபிள் ஜூஸ்!

தேவையானவை: கேரட், தக்காளி - தலா 3, பீட்ரூட் - 1, பாகற்காய் - சிறியது 1, சுரைக்காய் - சிறியது 1, முட்டைக்கோஸ் - 25 கிராம், இஞ்சி - மிகச் சிறிய துண்டு, ஓமம் - அரை டீ ஸ்பூன்,  எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், மிளகுத் தூள் - அரை டீஸ்பூன், உப்பு, ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை: ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு  தண்ணீர்விட்டு, ஓமத்தை ஊறவைக்க வேண்டும். கேரட், தக்காளி, பீட்ரூட், பாகற்காய், சுரைக்காய், முட்டைகோஸ், இஞ்சி ஆகியவற்றைச் சிறிய துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதனுடன், ஓமத் தண்ணீர், எலுமிச்சைச் சாறு, மிளகுத் தூள், உப்பு சேர்த்து, மீண்டும் அரைக்க வேண்டும். தேவைப்பட்டால், ஐஸ் துண்டுகள் சேர்க்கலாம்.

பலன்கள்: இதய நோயாளிகளுக்கு ஏற்ற ஜூஸ். சுரைக்காய் இருப்பதால், உடல்பருமன் இருப்பவர்கள், இந்த ஜூஸைக் குடிக்கலாம். புற்றுநோய் வராமல் தடுக்க, இதை அருந்தலாம். மலச்சிக்கல், ஜீரணக்கோளாறு உள்ளவர்கள், சளியால் அவதிப்படுபவர்கள் (ஐஸ் இல்லாமல்) இந்த ஜூஸைப் பருகலாம். எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, இந்த ஜூஸ் ஏற்றது.

ஆப்பிள் - பேரிக்காய் ஜூஸ்

தேவையானவை: ஆப்பிள் -1, பேரிக்காய் சிறியது -2.

செய்முறை: ஆப்பிள், பேரிக்காய்களை தோல், விதை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக வெட்டி, சிறிது நீர் சேர்த்து, மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். சர்க்கரை தேவை இல்லை; பழங்களின் இனிப்புச் சுவையே போதுமானது.
பலன்கள்: வைட்டமின் ஏ,சி,கே மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் இதில் நிறைய உள்ளன. சருமம் பொலிவு பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய்கள் அண்டாது. இதய நோயாளிகள், சிறுநீரகத்தில் கற்கள் இருப்பவர்கள், புற்றுநோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என அனைவருக்கும் ஏற்றது. சர்க்கரை நோயாளிகள் பழங்களை ஜூஸ்செய்து சாப்பிடாமல், அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் இந்த ஜூஸ் அருந்துவது நல்லது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவு உள்ளது.

டீடாக்ஸ் டிரிங்க்

தேவையானவை: ஆப்பிள் - 1, தக்காளி - 2, செலரி - 50 கிராம், வெள்ளரிக்காய் (பெரியது) - 1, ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு, தேவைப்பட்டால் - சிறிதளவு தேன்.

செய்முறை: ஆப்பிள், வெள்ளரியைத் தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். தக்காளி, செலரியை நன்கு சுத்தம்செய்து துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு, ஐஸ் கட்டிகள் சேர்த்து அரைக்க வேண்டும். வடிகட்டாமல் அப்படியே அருந்தலாம்.
பலன்கள்: நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்ற உதவும். செரிமானக் குறைபாடுகளைச் சரிசெய்யும். உடலில் உள்ள செல்களின் வளர்ச்சிக்குத் தேவையான நுண்ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்து உள்ளதால், அடிக்கடி குடித்துவந்தால், தேகம் பொலிவு அடையும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னை, ‘டிமென்ஷியா’ எனப்படும் மறதி நோயாளிகளுக்கு, இந்த ஜூஸ் நல்ல பலன் அளிக்கும்.

கறிவேப்பிலை - கொத்தமல்லி ஜூஸ்!
தேவையானவை: கறிவேப்பிலை, கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி,  புதினா - கால் கைப்பிடி, தோல் நீக்கி நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, எலுமிச்சை - 1/2 பழம், உப்பு அல்லது தேன் - தேவையான அளவு.
செய்முறை: எலுமிச்சையைச் சாறு எடுத்து, தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி ஆகியவற்றோடு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, மிக்‌ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டாமல் ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். இதனுடன், எலுமிச்சைச் சாறு  மற்றும் தேவைப்பட்டால் உப்பு அல்லது தேன் சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்: வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளெக்ஸ் உள்ளன. காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட வேளையில், இந்த ஜூஸைக் குடிப்பது நல்லது. சர்க்கரை நோயாளிகள் தேன், உப்பையும், சிறுநீரக நோயாளிகள் உப்பை மட்டும் தவிர்க்கலாம். சிறந்த டீடாக்ஸ் ட்ரிங்க் இது. வடிகட்டிப் பருகினால், சத்துக்கள் பெருமளவு குறைந்துவிடும். எனவே, வடிகட்டாமல் குடிப்பதே நல்லது.

பீட்ரூட் ஜூஸ்

தேவையானவை: பீட்ரூட் - 4, தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை: பீட்ரூட்டை தோல்நீக்கி, சுத்தம்செய்து சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டிப் பருக வேண்டும். வடிகட்டாமல் பருகுவது இன்னும் நல்லது.
பலன்கள்: நார்ச்சத்து, வைட்டமின்கள், மாங்கனீஸ், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளன. கொலஸ்ட்ராலைக் குறைக்கும், நல்ல கொழுப்பை அதிகரித்து இதயத்தைப் பலப்படுத்தும். ஃபோலிக் அமிலம் இதில் இருக்கிறது. பெண்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் அவசியம் ஃபோலிக் அமிலம் தேவை. பீட்ரூட் ஜூஸில் இருந்து கிடைக்கும் ‘பீட்டைன்’ சத்து கல்லீரல் செயல்பாடுகளைச் சீராக்கும். பீட்டாகரோட்டின் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஆஸ்துமாவைத் தடுக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாட்டைத் தடுக்கும்.

4 ஸ்டார் மிக்ஸ்டு ஜூஸ்

தேவையானவை: ஆப்பிள் - 2, பேரிக்காய் - 2, கேரட் (நடுத்தர சைஸ்) - 1, புதினா - சிறிதளவு, தேன், தண்ணீர் -  தேவையான அளவு.

செய்முறை: ஆப்பிள், பேரிக்காய், கேரட்டை தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். புதினா இலைகளை உதிர்த்து, நறுக்கிய துண்டுகளோடு சேர்த்து, தேன், தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து, வடிகட்டி, அருந்த வேண்டும்.
பலன்கள்: வைட்டமின் ஏ, சி நிறைவாக உள்ளதால், கண்களுக்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கலோரி நிறைந்தது. எனவே, இந்த ஜூஸை இரண்டு உணவுவேளைக்கு இடைப்பட்ட நேரத்தில் குடித்தால், அதிகமாகச் சாப்பிடுவதைத் தடுக்க முடியும். இதில் உள்ள நுண்ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு வலு சேர்க்கும். எனவே, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு ஏற்றது. உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் இருப்பவர்கள் இந்த ஜூஸைக் குடிப்பது நல்லது. அல்சைமர், பார்கின்சன் போன்றவற்றைத் தடுக்கும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும். உடல்பருமனாக இருப்பவர்கள், தேன் சிறிதளவு மட்டும் சேர்த்து அருந்தலாம்.

Sunday 27 November 2016

Important Minerals for human

குழந்தைகளின் வளர்ச்சியில் தாதுஉப்புக்கள் எப்படி உதவுகின்றன தெரியுமா? #MineralSalts

தாதுஉப்புக்கள்
டல் திசுக்களின் உருவாக்கத்துக்கும் முழுமையான உடல் நலனைப்பேணவும் தாதுஉப்புக்கள்மிக அவசியம். எலும்புகள், பற்கள், நகங்கள் உருவாக தாதுக்கள் வேண்டும். சுவாசத்திற்கான ஈரத்தன்மை,என்சைம்களின் உற்பத்தி, தசை மற்றும் நரம்புத் திசுக்களைக் கட்டுப்படுத்த, அமில-காரத்தன்மை சமநிலை பேண, ரத்த அளவைக் கூட்ட என, தாதுக்கள் மிக அவசியம். எனவே, குழந்தைகளின் உணவில் தாதுச்சத்துக்கள் குறையாமல் பார்த்துக்கொள்வது நல்லது. தாதுச்சத்துக்கள் எந்தெந்த உணவுப் பொருளில் எவ்வளவு இருக்கிறது என்பது பற்றி விளக்குகிறார், விருதுநகர் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் என்.அரவிந்த் பாபு.  
கால்சியம்: உடலிலுள்ள 99 சதவிகித கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களில் உள்ளது. வீக்கம் மற்றும் ரத்தப்போக்கைத் தணிக்க கால்சியம் தேவைப்படுகிறது. கால்சியம் சத்து குறைந்தால்,எலும்புகள்உடையும். ரத்த ஓட்டம் மந்தப்படும். ரத்தம் உறையும் தன்மை கெடும்.
பீட்ரூட், அத்திப்பழம், திராட்சை, தர்ப்பூசணி, பால், உலர் பழங்கள், தானியங்கள், பீன்ஸ் ஆகியவற்றில் கால்சியம் கிடைக்கும்.
1 வயது முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 600 மில்லிகிராமும் 10 முதல் 12 வயது வரை 800 மில்லிகிராமும் தினசரி தேவை.
பாஸ்பரஸ்: உடலில் 75 சதவிகித பாஸ்பரஸ் பற்கள், எலும்புகளில் உள்ளன. உடல் வளர்ச்சிக்குத் தேவையான இந்தத் தாது, செரிமானத் திரவங்களைத் தூண்டுகிறது. கொழுப்புச்சத்து ரசாயன மாற்றம்
பெற இது அவசியம். மூளை மற்றும் நரம்புச் செயல்பாடுகளுக்கு இதன் தேவை அதிகம்.
உடல் எடை குறைவது, பற்கள் பலவீனப்படுவது போன்றவை ஏற்பட, இதன் பற்றாக்குறையே காரணம்.
 பால், ஈஸ்ட், உலர் பழங்கள், சோயாபீன்ஸ், காரட், கொய்யா, பேரீச்சம்பழம் ஆகியவற்றில் பாஸ்பரஸ் உள்ளது.

1 வயது முதல் 9 வயது வரை 600 மில்லிகிராமும் 10 வயது முதல் 18 வயது வரை 800 மில்லி கிராமும் தினசரி தேவை.
இரும்புச் சத்து: உடலில் 70 சதவிகித இரும்புத்தாது, ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களில் உள்ளது. இதுதான் ஹீமோகுளோபினாக உருவாகிறது. 20 சதவிகித இரும்புச் சத்து, கல்லீரலில் சேமிக்கப்படுகிறது.
நிணநீரிலும் சில வகை என்சைம்களிலும்கூட இரும்புச்சத்து உள்ளது. உடலின் ஒவ்வொரு திசுவுக்கும் ஆக்ஸிஜனைக் கடத்திச் செயல்படவைப்பது, இரும்புச்சத்துதான். இரும்புச்சத்து குறைந்தால்
ரத்தச்சோகை உண்டாகும். வைட்டமின் 'சி' மற்றும் 'இ' குறைபாடுகளால் ரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் அழிந்துவிடும். இதைச் சரிக்கட்ட, கூடுதல் இரும்புச்சத்து தேவை.
இலைக் காய்கறிகள், புதினா, மாம்பழம், பேரிச்சம்பழம், எள், தானியங்கள், பருப்புகள், சோயாபீன்ஸ், பிஸ்தாப் பருப்பு, வெல்லம், ராகி, ஈரல், சுவரொட்டி ஆகியவற்றில் இரும்புச்சத்து உள்ளது.
பொட்டாசியம்: திசுக்கள், தசைகள் உருவாக்கத்துக்கு பொட்டாசியம் தேவை. தசைகளின் இழுவிசைத் திறனைப் பராமரிப்பது பொட்டாசியமே.  பூண்டு, முள்ளங்கி, பரங்கி, தக்காளி, பசலைக்கீரை, கொய்யா,ஆப்பிள், பால், உருளைக்கிழங்கு, வாழைப்பழம், இளநீர் இவற்றிலிருந்து பொட்டாசியம் பெறலாம்.

1 வயது முதல் 3 வயது வரை 1,100 மில்லிகிராமும் 4 வயது முதல் 6 வயது வரை 1,550 மில்லிகிராமும் தினசரி தேவை.


தாதுஉப்புக்கள்

சோடியம்: வயிற்றில் தேவையான அளவு ஹைட்ரோகுளோரைடு அமிலம் சுரக்க, சோடியம் தேவை. தசைகளில் அளவுக்கு அதிகமாக கால்சியம் படிவதை சோடியம் தடுக்கும்.  இதில் பற்றாக்குறை ஏற்பட்டால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும்.
பீட்ரூட், காரட், பிரெஞ்சு பீன்ஸில் சோடியம் உள்ளது.
1 முதல் 3 வயது வரை 589 மில்லிகிராமும் 4 வயது முதல் 6 வயது வரை 1005 மில்லிகிராமும் தினசரி தேவை.
அயோடின்: தைராய்டு சுரப்பியிலிருந்து திரவம் சுரக்க, அயோடின் அவசியம். உடலில் அயோடின் சத்து குறைந்தால் தைராய்டு சுரப்பி வேலை செய்யாது. உடல் பருமன் ஏற்படும். மலச்சிக்கல் உருவாகும்.
இலைக் காய்கறிகள், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் ஆகியவற்றில் அயோடின் உப்பு இருக்கிறது.

1 வயது முதல் 5 வயது வரை 90 மில்லி கிராமும் 6 வயது முதல் 11 வயது வரை 120 மில்லிகிராமும் தினசரி தேவை.
மெக்னீசியம்: பற்கள், எலும்புகள் வளர்ச்சிக்கு மெக்னீசியம் தேவை. தசைகளின் செயல்பாட்டுக்கும் மிக அவசியம்.
கொய்யாப்பழம், முள்ளங்கி, பசலைக்கீரை, உருளைக்கிழங்கு ஆகியவற்றி இருந்து இந்த தாதுச்சத்தைப் பெறலாம்.
6 முதல் 12 மாதக் குழந்தைக்கு 45 மில்லிகிராமும் 1முதல் 3 வயது வரை 50 மில்லிகிராமும் 4 முதல் 6 வயது வரை 70 மில்லி கிராமும் 7 முதல் 9 வயது வரை 100 மில்லிகிராமும்
10 முதல் 12 வயது வரை ஆணுக்கு 120 மில்லிகிராமும் பெண்ணுக்கு 160 மில்லிகிராமும் தினசரி தேவை.
 
தாதுஉப்புக்கள்    
குளோரின்: வயிற்றில் ஹைட்ரோகுளோரைடு அமிலம் சுரக்க குளோரின் தேவை. மூட்டுகளில் விறைப்புத் தன்மை ஏற்படாமல் பாதுகாக்கிறது. ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. பற்கள் மற்றும் எலும்புகளின் உருவாக்கத்துக்கு குளோரின் அவசியமானது.
காரட், இலந்தை, பீட்ரூட், பிரெஞ்சு பீன்ஸ், முட்டைக்கோஸ், தக்காளி, வாழைப்பழம், பேரீச்சம்பழம் இவற்றில் குளோரின் தாதுக்கள் உண்டு.
கந்தகம்: ரத்தத்தைச் சுத்திகரிக்கும் தாது, கந்தகம். தோலைப் பளபளப்பாக்கும். கல்லீரலைக் காக்கும்.
பூண்டு, முள்ளங்கி, வெங்காயம், பீட்ரூட்டில் இந்தச் சத்து உள்ளது.
மாங்கனீஸ்: முடி, கணையம், கல்லீரல் செயல்பாடுகளில் இதன் பங்கு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்குக் கூட்டும், தசைகளைப் பலப்படுத்தும்.
பூண்டு, முட்டைக்கோஸ், பீட்ரூட், கொய்யா மூலம் மாங்கனீஸ் சத்தைப் பெறலாம்.
தாமிரம்: உடலில் இரும்புச்சத்து கிரகிக்கப்பட, தாமிரச் சத்து தேவை.
துத்தநாகம்: விதைப்பையின் நலனைக் காக்கிறது.
ஒன்று முதல் ஒன்பது வயது வரை 5 முதல் 8 மில்லிகிராம் என வயதுக்கேற்ப மாறுபடும். 10 முதல் 12 கிராம் வரை ஆண், பெண் இருவருக்குமே 9 மில்லி கிராம் தேவை.
கோபால்ட்: ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது. குளோரின், தாமிரம், துத்தநாகம், கோபால்ட் ஆகிய தாதுக்கள், இலைக் காய்கறிகள், கொய்யா, பீட்ரூட், உருளைக்கிழங்கு மூலம் கிடைக்கும்.
50 சதவிகித தாதுச்சத்துக்கள், காய்கறிகள், பழங்கள், கீரைகளிலிருந்தே கிடைக்கின்றன. பெற்றோர்கள், தம் குழந்தைகளுக்கு இந்தச் சத்துக்கள் குறயாதபடி பார்த்துக்கொண்டால், எந்தப் பிரச்னையும் வராது.

Thursday 24 November 2016

10 Health care Mistakes

இந்த 10 தவறுகளைச் செய்யாதீர்கள் இளைஞர்களே! #Alert

தவறு
பொதுவாக நாற்பது வயதில் தான் ஒரு மனிதன்  முழுமையாகிறான் எனச்  சொல்வார்கள் ஆனால் இப்போது வேலைப்பளு, மனம் போன வாழ்வு, ஒழுக்கமின்மை என பல காரணங்களால், தவறுகளால்  இப்போது நாற்பதிலியே மனிதன்  முடமாகிறான். அறுபது - எழுபது வயதுகளில் வர வேண்டிய பல வகையான  நோய்கள் தற்போது முப்பது - நாற்பது வயதுகளிலேயே வர ஆரம்பித்திருக்கிறது. உலகம் முழுவதும் இளம் வயது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தவாறே இருக்கிறது. . சர்க்கரை வியாதி, பிபி, கொலஸ்ட்ரால், கல்லீரல் பிரச்னை என அத்தனையும் நாற்பது வயதிலேயே வர ஆரம்பித்திருக்கிறது. 
கார்த்திக்குக்கு 28 வயது தான் ஆகிறது, கடும் உழைப்பாளி, நல்ல சம்பளமும் வாங்கிக்கொண்டிருந்தான். பெற்றோர்கள் அவனுக்கு வரன் பார்த்திருந்தார்கள், ஆசை ஆசையாக ஊருக்குச் சென்றவன், அங்கே திடீரென மயங்கி விழுந்தான்.  முதன் முதலாக மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்ற கார்த்திக்கிடம், அவருக்கு  சர்க்கரை நோய், பி.பி, இதய நோய் வந்துள்ளது என மருத்துவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்தான், மனமுடைந்தான். கொஞ்சம் நிதானித்து முன் கூட்டியே உடல்நலனை கவனித்திருந்தால் இந்த நோய்களை தடுத்திருக்கமுடியும் என மருத்துவர் சொன்னதை கேட்டு முற்றிலும் நொறுங்கிப்போனான். இன்று தமிழகம் முழுவதும் கார்த்திக்கை போன்ற பல நபர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் எங்கோ ஒரு நூறு பேர் அய்யோ கொஞ்சம் யோசிச்சிருக்கலாமே என உச் கொட்டுகிறார்கள். இதற்கு யார் காரணம்? எது தீர்வு ?
தவறு
உலகம் முழுவதும்  மருத்துவ உலகில் தற்போது பிரபலாமாகி வரும் சொல் பிரிவென்டிவ் மெடிசின் என சொல்லப்படும்  முன்காப்பு மருத்துவம். ஒரு நோய் வந்த பின்னர் சிகிச்சை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதை விடவும், அவ்வபோது உரிய பரிசோதனைகளைச் செய்து,  கூடுமானவரை நோய்களை தடுப்பதையே நோக்கமாக கொண்டது தான் பிரிவென்டிவ் மெடிசின். நாம், இருபது வயதுகளில்  செய்யும் தவறுகளின் வெளிப்பாடே நாற்பதில் வரும் பிரச்னைகள். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி,  கல்லூரி பருவத்துக்கு பிறகு அடுத்த பத்தாண்டுகளில் எவ்வாறு தங்களது உடல்நலனில் அக்கறை கொள்கிறார்கள் என்பதை பொறுத்து தான் அவர்களது பிற்பாதி வாழ்க்கை அமைகிறது. இளம் வயதில்  நாம் செய்யும் சின்ன சின்னத் தவறுகள் எல்லாவற்றுக்கும் வட்டியும் முதலுமாக பின்னாளில் வந்து சேர்வது தான் எக்கச்சக்க நோய்கள்.
சரி, நாம் செய்யும் தவறுகள் தான் என்ன? இது குறித்து மருத்துவர் சி. ராஜேந்திரன் விரிவாகச் சொல்கிறார்.

தவறு
1. மோசமான  நேர மேலாண்மை :- 
சிறுவயதில் இருந்து கல்லூரி முடிக்கும் வரை பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் வளர்பவர்களுக்கு,  அதன் பின்னர் அவர்களை பிரிந்து வெளியூரில் வேலைக்கு செல்லும் ஆரம்பகட்ட வருடங்களில் கட்டற்ற சுதந்திரம் கிடைக்கிறது. காலையில் எழுந்திருப்பது முதல் இரவு படுப்பது வரை அத்தனையிலும்  மெத்தனம் மேலோங்குகிறது.  உடலை பற்றியும், சுகாதாரம் பற்றியும் அறவே கவலைப்படாமல்  இருப்பார்கள். கட்டற்ற சுதந்திரத்தை சோம்பேறித்தனத்தால் தவறாக பயன்படுத்துவார்கள். எந்த நேரத்தை எப்படி செலவழிப்பது எனத் தெரியாமல் திணறுவார்கள்.சிலர் பாதை மாறுவார்கள். நேரத்தை சரியாக  கடைபிடிக்காமல் இருக்கும் தவறு தான் வாழ்வியல் முறை மாறுவதற்கான அடிப்படை காரணம்.
2. உணவில் அக்கறையின்மை!
சுமார் இருபது வருடங்கள் வரை  பெரும்பாலும் வீட்டில் செய்த உணவையே சாப்பிட்டு வந்தவர்கள், வேலைக்கு சென்ற பின்னர் சொந்த சம்பாத்தியம் இருந்தாலும் வீட்டு சாப்பாடு கிடைக்காமல் தவிக்க நேரிடலாம். இந்த சமயங்களில் ஹோட்டல் உணவுகளையே நாடுவது, துரித உணவுகளை அதிகம் சாப்பிடுவது , காலை உணவை தவிர்ப்பது, இரவு உணவை வெளுத்து கட்டுவது, சத்தான சமச்சீரான உணவுகளை தவிர்ப்பது என உணவு முறை முற்றிலும் மாறிவிடுகிறது. 
இந்த தவறுகளால், உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை தவிர்ப்பதால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவை சரியாக உடலுக்கு கிடைப்பதில்லை அதே சமயம் மோசமான உணவு பழக்க வழக்கத்தால்  உடலில் தேவையற்ற கொழுப்பும்  சேருகிறது, புற்றுநோயை உண்டாக்கும் உணவுப் பொருள்களை  தொடர்ந்துச் சாப்பிடுவதால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு  அதிகரிக்கிறது. 
3.  நண்பர்கள் சேர்க்கை : -
பள்ளி, கல்லூரி நண்பர்களை தாண்டி புது இடம், புது நண்பர்கள் என  இளம் வயதில் பலருக்கும் புது சேர்க்கை   உருவாகும். நண்பர்கள் எப்போதுமே நல்ல விஷயம் தான், ஆனால் சில சமயங்களில் தவறான நண்பர்களுடன் சேர்ந்தால் வாழ்கை பாதை மாறிவிடவும் வாய்ப்புண்டு. கல்லூரி செல்லும் வரை பணத்துக்கு இன்னொருவரை எதிர்பார்க்க வேண்டிய நிலை இருக்கும் ஆனால் சம்பாதிக்க ஆரம்பித்தவர்களுக்கு தனது பணம் தானே தாரளமாக செலவு செய்யலாம் என்ற எண்ணம் பிறக்கும். மது, புகைப்பிடித்தல் போன்ற விஷயங்களில் இளம் வயதினர் பலர் சிக்கிக்கொள்வது தவறான சேர்க்கையால் தான்.
தவறு
4. தொழில்நுட்பங்களுக்கு அடிமையாகுதல் : -
எதையும் முதலில் பார்க்க வேண்டும், படிக்க வேண்டும், பகிர வேண்டும் என்ற ஆவல் இளம் வயதினரிடையே  மிகவும் அதிகம்.பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களை எந்த அளவுக்கு அணுக வேண்டும். எந்த புள்ளியில் நிறுத்திவிட வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. தொழில்நுட்பங்களை தெரிந்து வைத்திருப்பதிலும், தொழில்நுட்பங்களை சிறப்பாக கையாளுவதும், தொழில்நுட்ப அப்டேட்களை விரல் நுனியில் வைத்திருப்பதும்  நல்ல விஷயம். ஆனால் அதே சமயம்  டிஜிட்டல் சாதனங்களில் அடிமையாவது நல்லதல்ல. மனதையும், உடலையும் பாதிக்கும் காரணிகளில் மிகவும் முக்கியமானது மொபைலும், டிஜிட்டல் சாதனங்களும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
5. வேலைவாய்ப்பின்மை : -
வேலைவாய்ப்பின்மை ஒரு மிகப்பெரிய மன அழுத்தம் தரக்கூடிய பிரச்னை. தன்னம்பிக்கையை தளர வைக்கும் கடினமான  கால கட்டம் இது. ஒரு சிலர் வெற்றிகரமாக மன உறுதியுதியுடன் இந்த  காலத்தை கடந்தாலும், பலர்  இந்நாட்களில் தளர்ந்து விடுகிறார்கள். ஒரு நாளை எப்படி கடத்துவது என தெரியாமல் பலர் வித விதமாக யோசிப்பார்கள். சிலர் எப்போதும் மனதுக்குள் புழுங்கி கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் சோகத்தை மறைப்பதற்காக போதை வஸ்துகளை நாடுகிறார்கள்.  இவை எல்லாமே உடலுக்கு கேடு விளைவிப்பதோடு மனதை பாதித்து புத்துணர்ச்சியை கெடுக்கின்றன. 
தவறு
6. வேலைபளு : -
முன்னெப்போதும் விட தற்போதைய தலைமுறை மிக அதிகமாக இளம் வயதிலேயே  உழைக்க தொடங்குகிறார்கள், ஐ.டி உட்பட பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களும்  அதிக லாபம் என்பதையே நோக்கமாக கொண்டு ஊழியர்களை  பிழிய ஆரம்பித்திருகின்றன. உடல் உழைப்பு என்பதை விடவும் அறிவு உழைப்பு அதிகம் தேவைப்படும் நிறுவனங்களில்  நித்தம் நித்தம் புதுப்புது ஐடியாக்களை யோசித்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தங்கள், சக்திக்கு மீறிய டார்கெட்டுகள் போன்றவை வைக்கப்படுவதால் வேலைபளு அதிகமாகிறது, 
இதனால் பலர் வீக் எண்ட் என்றாலே மது, சிகரெட் போதையில் திளைத்து மன அழுத்தத்தை குறைக்க முயலுகின்றனர். மன அழுத்தத்தோடு, புகை, மது ஆகியவற்றின் பாதிப்புகளும் சேர்ந்து  தாக்க ஆரம்பிக்கிறது.
அறிவு சரக்கு, கற்பனைத் திறன் போன்றவை ஒரு கட்டத்தில் தீர்ந்து விடுகிறது. இதனால் நாற்பது வயதாகும் போது, அப்போது நிறுவனத்துக்குள் நுழையும் இளைஞர்களுடன் போட்டி போட்டு பலரால் உழைக்க முடிவதில்லை. விளைவு நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். இது மீண்டும் மன அழுத்தத்தில் தள்ளுகிறது. 
தவறு
7. ரிலேஷன்ஷிப் சிக்கல்கள் :-
ஆண்கள், பெண்கள் இருதரப்பினரும் இளம் வயதில்  சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை ரிலேஷன் ஷிப் சிக்கல்கள் தான். முப்பது வயதுக்குள்ளாகவே திருமணம் முடிந்து விவாகரத்து கோருவோர்களின் எண்ணிக்கை கடந்த  பத்து ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது.
படிப்பு, வேலை என இயந்திரத்தனமாக வளர்ந்த மனிதர்களுக்கு, சக பார்ட்னரை எப்படி கையாளுவது என தெரிவதில்லை. கணவன் - மனைவி குடும்ப  உறவில் பிரச்னை ஏற்படும் போது உச்சக்கட்ட மன அழுத்தத்துக்கு பலர் தள்ளப்படுகிறார்கள். இதனால் மீண்டும் பலர் போதை வஸ்துகளுக்கு அடிமையாகிறார்கள். ரிலேஷன்ஷிப் பிரச்னைகளால் அலுவலகத்தில் பலர் சரியாக பணி புரியாமால் போவதால் அங்கேயும் மரியாதை குறைவதால் இந்த பிரச்னைகள் எல்லாம் ஒரு சுழற்சியாக சுழன்று அடிக்கும். 
8.பாலியல்  கோளாறுகள்  :-
இந்தியாவில் பாலியல் கல்வி இல்லை, பாலியல்  தொடர்பான விழிப்புணர்வும் கிடையாது. ஆண்களும் சரி, பெண்களும் சரி பாலியல் ரீதியாக பாதிக்கபடுவது இந்தக் காலகட்டத்தில் தான். பாலியல் பற்றிய சரியான புரிதல் இல்லாத அதே சமயம் பாலியல் குறித்த அத்தனை தவறான தகவல்களையும் புரிதல்களையும் இணையம், போலி டாக்டர்களின் நிகழ்ச்சிகள் போன்றவை வழியாக தெரிந்து கொள்கிறார்கள். இதனால் பலர் தவறான பாதைக்கு செல்கின்றனர். ஆண்கள், பெண்கள் இருவருக்குமே பாலியல் கோளாறுகளால் தீவிர மன அழுத்தம் ஏற்படுகின்றன.  
தவறு
9. உடற்பயிற்சியின்மை :- 
கல்லூரி வரை செல்வதற்கு முன்னதாக பெரும்பாலும் பலர் ஏதாவதொரு வகையில் விளையாடி கொண்டிருப்பார்கள். இதனால் உடல் பருமன் போன்ற பிரச்னை இருக்காது. ஆனால் வேலைக்கு செல்ல ஆரம்பித்த பலர்  தங்கியிருக்கும் இடத்துக்கும் வீடுக்கும் மட்டுமே பயணிப்பார்கள். அதுவும் இரு சக்கர வாகனம் அல்லது காரில் தான்.   உடல் உழைப்பு, உடற்பயிற்சி இரண்டும் இல்லாததால் உடலில் கொழுப்புகள் படிய ஆரம்பிக்கும். சரியான உணவையும் சாப்பிடாமல் தவிர்ப்பதால் உடல் பருமன் வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம். உடற்பருமன் வரும்போது கூடவே வரிசையில் நான்கு நோய்கள் நிற்கும். 
தவறு
10. தொலைந்து போன தூக்கம்
தற்போதைய தலைமுறையில் இளம் வயதினர் அநேகம் பேர் தூக்கமின்மை பிரச்னையால் அவதிபடுகின்றனர். நைட் ஷிப்ட் ஒரு காரணம் என்றாலும் லேப்டாப்பில் இரவு இரண்டு படம் பார்ப்பது, நைட் ஷோ தியேட்டருக்கு செல்வது, நள்ளிரவை  தாண்டியும் யாருக்காவது மெசேஜ் செய்து கொண்டிருப்பது, சமூக வலைதளங்களில் மூழ்குவது போன்றவற்றால் இரவு தூக்கம் தடைபடுகிறது.
இரவு தூக்கம் தாமதமாகும் சமயத்தில் வளர்சிதை மாற்றம் பாதிக்கபடுகிறது.  இரவு தூக்கம் தாமதமாவதால், அதிகாலை எழுந்திருக்க முடிவதில்லை, அதிகாலையில் மட்டுமே கிடைக்கும் சுத்தமான ஓசோன்  வாயுவை சுவாசிக்கும் வாய்ப்பும் பறிபோகிறது. காலையில் தாமதமாக எழுவதால் அவசர அவசரமாக வேலைக்கு செல்ல நேர்கிறது. இதனால் உடற்பயிற்சி, காலை உணவுக்கு போதிய நேரம் ஒதுக்க முடிவதில்லை . இதன் காரணமாக அன்றைய தினம் சுறுசுறுப்பாக செயல்பட முடிவதில்லை. 
தவறான வாழ்வியல் முறை காரணாமாக என்னென்ன நோய்கள் வருகிறது ?
தவறு
1.உடற்பருமன் 
2. வைட்டமின் டி குறைபாடு 
3. சர்க்கரை நோய் 
4. உயர்  ரத்த அழுத்தம் 
5. தைராய்டு கோளாறுகள் 
6.ஹார்மோன்கள் சமசீரின்மை 
7.  புற்றுநோய் 
8. செரிமான கோளாறுகள் 
9. மன அழுத்தம் 
10. இதய நோய்கள் 
11. நரம்பு மண்டல பாதிப்புகள் 
12. முதுகு வலி, மூட்டு வலி 
13. சரும கோளாறுகள் 
14.பாலியல் தொந்தரவுகள் 
15. சுவாச பிரச்னைகள் .
தீர்வு என்ன? 
இளம் வயதில் சரியாக தன்னை பராமரிக்க வில்லை என்றால் பல பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் அதற்காக வேலைக்கு செல்லுதல், பேச்சலர் வாழ்கை, திருமணம் போன்ற பல விஷங்களை எல்லோராலும்  கடந்து வராமலும் இருக்க முடியாது. 
தனி மனித ஒழுக்கம், தனி மனித சுகாதரம், மன நலம் மற்றும் உடல் நலனில் அக்கறை, தெளிவான பார்வை, திட்டமிடுதல், மன வலிமை, உடல் வலிமை ஆகியவற்றில் கவனம் செலுத்தி  வாழ ஆரம்பித்தாலே பாதி பிரச்னைகள் சரியாகிவிடும், பல்வேறு நோய்கள் வருவதையும் தடுக்க முடியும் . நீண்ட காலம் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியுடன் வாழலாம். 
சிறுதானியங்கள், கீரைகள், பழங்கள், காய்கறிகள் என ஆரோக்கியமான சமச்சீரான உணவுகளை உட்கொள்ளவேண்டும். அதே சமயம் மோசமான குப்பை உணவுகளை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி, யோகா, நடைபயிற்சி போன்றவற்றுக்கு தினமும் அரை மணி நேரமாவது ஒதுக்க வேண்டும், உடலை தூய்மையாக வைத்து கொள்ளுதல், தன்னைச் சுற்றி சுகாதாரமாக வைத்துக் கொள்வது போன்ற, சில நல்ல பழக்க வழக்கங்களை வழக்கமாக்கி கொண்டால் அறுபதிலும் ஆரோக்கியம் உண்டு.
ஹெல்த் இன்சுரன்ஸ் அவசியம் :-
ஹெல்த் இன்சுரன்ஸ் பலருக்கும் ஆபத்தான கால கட்டத்தில் ஓரளவு கை கொடுக்கும் விஷயம். எதாவது நோய் வந்தபிறகு இன்சுரன்ஸ் எடுக்கலாம் என நினைத்தால் பிரீமியம் அதிகம் கட்ட நேரிடும். இளம் வயதிலேயே ஹெல்த் நன்றாக அலசி ஆராய்ந்து அவரவர்களுக்கு ஏற்ற பாலிசிகளை எடுத்துகொள்ளும் போது பிரீமியம் வெகுவாக குறையும். எதிர்பாராத காலகட்டத்தில் அவசர அவசியத்தேவைகள்  ஏற்படும் சமயங்களில்  இன்சுரன்ஸ் கைகொடுக்கும். இன்சூரன்ஸ் தொகை, நிறுவனம் ஆகியவற்றை பல கட்ட விசாரணைகளுக்கு பிறகு தேர்ந்தெடுப்பது நல்லது.
ஹெல்த் செக் அப் பண்ணுங்க :-
முப்பந்தைந்து வயதுக்கு மேல் தான் பலர் மருத்துவமனை வாசலுக்கே பலர் செல்லுகின்றனர். இது தவறு. மருத்துவமனை சென்றாலே பணம் செலவாகும், தனக்கு எதாவது நோய் இருக்கும் என சொல்லிவிடுவார்கள் என்ற பயம் பலருக்கும் இருக்கிறது. இதனால்  எதாவது பெரிய நோய் வரும் வரை மருத்துவமனை பக்கமே பலர் தலைவைத்து படுப்பதில்லை. 
'வரும் முன் காப்பது சிறந்தது' என்பது பலருக்கு புரிவதில்லை. ரத்த அழுத்தமோ, சர்க்கரை நோயோ, சுவாச நோயோ, உடல் பருமனோ, புற்றுநோயோ எதுவாக இருந்தாலும் ஆரம்பகட்டத்தில் பரிசோதனை மூலம்  கண்டறிந்தால் இந்த நோய்கள் எல்லாவற்றையுமே தடுக்க முடியும். அதன் பாதிப்புகளை குறைக்க முடியும். 
ஆக,   25 வயதில் இருந்தே ஆண்கள், பெண்கள் இருவரும்  வருடம் ஒரு முறை அல்லது இரண்டு வருடத்துக்கு ஒரு முறையாவது முழு  உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. குடும்பத்தில், பரம்பரையில்  யாருக்காவது மேற்சொன்ன  வாழ்வியல் நோய்கள் வந்திருந்தால்  அந்த இளைஞர்கள் கண்டிப்பாக குடும்ப மருத்துவரை அனுக்கி அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை எடுத்துகொண்டு நோய்களை தடுக்க முயற்சிப்பதே புத்திசாலித்தனம். தனியார் மருத்துவமனைகளில் பல ஆயிரங்கள் செலவழிக்க வேண்டியிருக்கும் சூழ்நிலையில், தமிழக அரசு மருத்துவமனைகளில் தற்போது  சலுகை விலையில் பொதுமக்களுக்கு மாஸ்டர் ஹெல்த் செக் அப் செய்யப்படுகிறது, ஆனால் இதை பலர் சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை  
இந்தியாவில்  பரிசோதனைகள் குறித்த   தெளிவின்மை மக்களுக்கு அதிகம், எனவே தான் பல நோய்கள் வருகின்றன, ஒரு சிலர் தனக்கு எதாவது நோய் இருக்குமோ என பயந்து பயந்தே தேவையற்ற பதற்றத்ததை உருவாக்கி கொள்கிறார்கள். ஒருவேளை  நோய் வந்துவிட்டாலும்  அதிக பதற்றமடைகிறார்கள். முன்காப்பு சிகிச்சை குறித்தது தெளிவு வரும்போது,  எதாவது நோய் வந்தால் கூட ஆரம்பக்கட்டதிலேயே மாத்திரை, மருந்துகள்  போன்ற  சிகிச்சைகளே  தேவைப்படாமல் வாழ்வியல் முறை மாற்றத்தால் மட்டுமே பல்வேறு நோய்களை தடுத்து விட முடியும் என்ற நிலை இருக்கும்போது தேவையற்ற  பதற்றத்தை  தவிர்போம். நலமாக, மகிழ்ச்சியுடன் வாழ்வோம்