About Me

My photo
I am an IT professional, Nowadays our Lifestyle is changed a lot and of course we are chasing money. In India More than 7 crore people affected by Diabetes, High Cholesterol and infertility due to their Poor Food Habits &amp Lifestyle. This Blog is very useful for youngsters to lead good Lifestyle and be healthy and students to choose career courses.Work hard, but make time for your love, family and friends. Nobody remembers Powerpoint presentations on your Final Day.I believe Life is ours and we only Live our Life.... Thanks for visiting and welcome you to visit again. WHO LOVES GOD ARE SEARCHING GOD, WHO LOVES PEOPLE ARE LIVING AS GOD - SK ( Reach me @ +91 9791139942 to lead Healthy Family Life )

Tuesday 28 May 2013

Tips to reduce Stress


கோபமோ அழுகையோ வந்துவிட்டால், 'என்னைக் கொஞ்ச நேரம் தனியா இருக்கவிடுங்க... ப்ளீஸ்’ என்று சிலர் சொல்லுவார்கள், கேட்டிருக்கிறீர்களா?
அது எப்படி? எவரும் இல்லாமல், தனிமையில் இருந்துவிட்டால், கோபம் எப்படிக் குறையும்? அழுகையை யார் கட்டுப்படுத்தி, ஆறுதல் வார்த்தை சொல்வார்கள்? - என யோசிக்கிறீர்கள்தானே?
உண்மையில், கோபத்தின்போதும் சரி... அழுகையின்போதும் சரி... அருகில் எவரேனும் நண்பர்களோ உறவினர்களோ இருந்துவிட்டால், அந்தக் கோபமும் அழுகையும் அவ்வளவு சீக்கிரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பாது. எதிரில் இருப்பவரிடம் பேசப்பேச, கோபம் இரட்டிப்பாகிக் கொண்டே இருக்கும். அழுது கொண்டே புலம்பும் வேளையில், எதிரில் இருப்பவரின் சமாதானமும் ஆறுதலும் இன்னுமான கழிவிரக்கத்தைக் கொடுக்க... அழுகையில் இருந்து விடுபடுவது என்பது அத்தனை எளிது அல்ல!

மாறாக, தனிமையில் இருந்துவிட்டால், அந்தக் கோபமும் அழுகையும் சிறிது நேரம் வரை இருக்கும். பிறகு, கோபத்துக்குக் காரணம் என்ன, அந்தக் கோபத்தால் இனி என்ன ஆகப்போகிறது, கோபத்தால் படபடப்பு அதிகமாகிப் போனதைத் தவிர, வேறு என்ன நல்லது நடந்துவிட்டது என, எதிராளி மேல் இருந்த கோபத்தை ஆராய ஆராய, நம் மீதும் இருக்கிற தவறு என்ன என்பது குறித்தெல்லாம் சட்டென்று தெரிந்து கொள்ள நேரிடும். 'அடச்சே... தப்பு நம்மபேர்லயும் இருக்கு. அவரை சள்ளுபுள்ளுன்னு தாறுமாறாப் பேசிட்டோமே’ என்று பிறகு வருந்துவோம். அப்படி பிற்பாடு வருந்துவதால் எந்தப் பயனுமில்லை. இதுபோன்ற முட்டல் பேச்சுக்களால், உறவோ நட்போ முறிந்துவிடவும் வாய்ப்பு உண்டு!

அதேபோல்தான் அழுகையும்! ஒரு துயரத்தின் வெளிப்பாடாக இருக்கிற அழுகையானது, நமக்குச் சுகத்தையும் நிம்மதியையும் தந்துவிட்டால், அதன் பிறகு எதற்கெடுத்தாலும் பொசுக்கென்று அழுதுவிடுவோம். அப்படி அழுதே ஆறுதல்பட்டுக் கொள்வோம். குறிப்பாக, அழும்போது ஆறுதல்படுத்தி, தலை தடவி, முதுகு வருடிவிட்டு, எவரேனும் ஆற்றுப்படுத்துவதற்கு இருந்துவிட்டால்... அழுகையானது பீரிட்டு வரும். எவராலும் கட்டுப்படுத்தவே முடியாத பேரழுகையாகிப் போகும்.

ஆனால் தனிமையில் அழும்போது, 'என்னடா இது? இதுக்குப் போய் யாராவது அழுவாங்களா? ஏன் அழணும்? எதுக்கு அழணும்? அழறதுனால, ஒண்ணும் நடக்கப் போறதில்லை. அழுது அழுது, கண்ணு சிவந்து, கன்னம் வீங்கிப் போறதுதான் மிச்சமா இருக்கப் போகுது!’ என்று தனிமையில் அமர்ந்திருக்கிற ஐந்தாவது நிமிடமே தெரிய ஆரம்பித்துவிடும். மனமானது, கலங்கிய நிலையில் இருந்து மாறி, தெளிந்த நிலைக்கு மெள்ள மெள்ள வந்துவிடும்.

எதிராளி முன்னே தன்னைக் குற்றவாளியாகப் பார்க்கிற மனோபாவம் எவருக்கும் இருக்காது. ஆனால், தனிமையில் தன்னுடைய பலத்தையும் பலவீனத்தையும் மிக எளிதாகத் தெரிந்து உணர்ந்து கொள்ளலாம். நம் பலத்தையும் பலவீனத்தையும் தெரிந்து கொண்டுவிட்டால், அங்கே பிறரின் மீது கோபப்படவும் தேவையில்லை; தன்னை நினைத்து அழுவதும் அவசியம் அற்றது.
இப்படியானதொரு தனிமையும் ஓய்வும் நம் உடலுக்குக் கிடைக்கிறபோது, அந்த உடலானது எவ்வளவு தெளிவாகவும் திடமாகவும் உருமாறும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
ஒருநாளில் எட்டு மணி நேரம் என்பது அலுவலகத்தில் பணிபுரிகிற நேரம். ஆனால், நம் உடலானது சுமார் பதினாறு மணி நேரங்கள் வரைக்கும் ஒருநாளில் உழைக்கிறது. காலையில் எழுந்து, பக்கெட் பக்கெட்டாக தண்ணீர் பிடித்து, இரண்டாவது மாடியில் இருக்கிற... மூன்றாவது மாடியில் இருக்கிற வீட்டுக்கு கொண்டு செல்வதில் இருந்தே நம் அன்றாடப் பணி துவங்கிவிடுகிறது.
பிறகு, வீட்டில் இருந்து பேருந்து நிலையத்துக்கு அல்லது ரயில் நிலையத்துக்கு நடந்து செல்கிறோம். பேருந்தில் ஏறினால், அமர்வதற்கு இடம் கிடைப்பதை விடுங்கள்; ஓரிடத்தில் நிற்பதற்கேனும் கொஞ்சம் இடம் கிடைக்கிறதா என்று பாருங்கள். அத்தனை நெரிசல்... அவ்வளவு தள்ளுமுள்ளு. மேல்கம்பியைப் பிடித்துக்கொண்டு, கால் கடுக்க நின்று, தோளில் தொங்கவிட்டிருக்கிற சாப்பாட்டுப் பையையும் பத்திரப்படுத்தி, பிறகு நெளிந்து, சுருங்கி, வளைந்து, கசங்கியபடி வாகனத்தில் இருந்து இறங்கி, அலுவலகத்துக்கு நடந்து வந்து, அங்கே படியேறி, அதிகாரியின் இடத்தும் இருக்கைக்குமாக அலைந்து, ஓடியாடி வேலை பார்க்க வேண்டும்.

மாலை வேலை முடிந்ததும் மீண்டும் அதே வாகனம்; அதே நெரிசல்; அதே தள்ளுமுள்ளு. ஆக மொத்தம், ஒருநாளில் பதினாறு மணி நேரம் வரை... நம் உடலானது மிகக் கடுமையாக உழைக்கிறது. அந்த உழைப்பின் அயர்ச்சி, உடலில் பல தருணங்களில் வெளிப்படும். ஒருமுறை கால்களில் வலி பின்னியெடுக்கும். இன்னொரு முறை முதுகுத்தண்டில் வலி விண்ணென்றிருக்கும். அடுத்த முறை பார்த்தால் தோள்பட்டையிலும் இன்னொரு நாளில் இடுப்பிலும் வலி இறங்கி, கண்ணில் நீர் வரவைக்கும்.

ஆக, உடலுக்கு ஓய்வு மிக மிக அவசியம். 'இந்த உடம்புக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்று உடல் மொத்தத்தையும் ரிலாக்ஸ் படுத்துவது என்பது அவசியமான ஒன்று! அதுதான் மனவளக்கலையின் மிக முக்கியமான பயிற்சியாகத் திகழ்கிறது. மனவளக் கலையில்... உடல் தளர்த்துகிற பயிற்சியை எவர் ஒருவர் சரியாகச் செய்கிறாரோ... அவருக்கு வண்டியை சர்வீஸ் செய்த பிறகு கிடைக்கிற புத்துணர்ச்சி போல, பளபளப்பு மாதிரி, உடலும் மினுமினுப்பு ஏறிய நிலையில் இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

முகத்தை மேல் நோக்கி வைத்துக்கொண்டு, ஒரு விரிப்பின் மீது, உடல் மொத்தத்தையும் தளர்த்திய நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் உடல் தளர்த்துகிற, உடலுக்கு ஓய்வு கொடுக்கிற பயிற்சியின் முதல்நிலை.

இந்தப் பயிற்சியை இதுவரை செய்ததே இல்லை என்றிருப்பவர்கள், முதலில் ஒரு விரிப்பில் மல்லாக்கப் படுத்துக்கொண்டு, முகத்தை மேல் நோக்கியபடி வைத்துக்கொண்டு, கை -கால்களை நீட்டி, கழுத்தை நேராக்கி, அதேநேரம் உடல் முழுவதையும் தளர்த்தியபடி ஒரு இரண்டு நிமிடம்... இரண்டே நிமிடம்.... உடலுக்கு ஓய்வு தந்து பாருங்களேன்!

அந்த இரண்டு நிமிடத்துக்குப் பிறகு உடலில் சட்டென்று ஒரு புத்துணர்ச்சி பரவியிருப்பதை உணருவீர்கள்; உணர்ந்து சிலிர்ப்பீர்கள்!

இந்த இரண்டு நிமிட ஓய்வை உடலுக்குக் கொடுத்த பிறகு அந்த உடலானது இந்த ஓய்வுக்காக, ஓய்வின் சுகத்துக்காக, அதன் மூலம் கிடைக்கிற புத்துணர்ச்சிக்காக ஏங்கத் துவங்கிவிடும். குழந்தைகளின் ஏக்கங்களையும் ஆசைகளையும் புரிந்து கொண்டு செயல்படுத்தி மகிழ்விக்கிற பெற்றோரைப் போல், நாமும் நம் உடலின் ஏக்கத்தையும் விருப்பத்தையும் புரிந்து, அறிந்து, உணர்ந்து, செயல்படுத்துவதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது. அந்த வெற்றியின் பெயர்... ஆரோக்கியம்!

Know it - Indian Herbals


அகத்தைச் சுத்தப் படுத்துவதால் அகத்தி எனப் பெயரை வைத்துள்ளனர் சித்தர்கள்.

அகத்திக் கீரையை உண்டால் உணவு எளிதில் சமிபாடடையும். பித்த தொடர்பான நோய்கள் நீங்கும், வாரத்துக்கு ஒரு முறையேனும் தவறாமல் அகத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிடடால் தேகத்தில் சூடு தணியும் கண்கள் குளிர்ச்சி பெறும். குடல் புண் ஆறும், சிறு நீர் மற்றும் மலம் தாரளமாக கழியும். பித்து எனும் மனக் கோளாறும் நீங்கும், அகத்தி கீரை வயிற்றுப் புண் (அல்சர்) என்னும் நோயைக் குணப்படுத்தும்.

அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்து நான்கு பங்கு சின்ன வெங்காயம் சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினசரி ஒரு வேளை குடிக்கலாம். அகத்தி கீரையையும் மருதாணி இலையையும் சம அளவில் எடுத்து நன்கு அரைத்து கால் வெடிப்புகளில் பற்றுப்போட்டால் வெடிப்புகள் மறையும்.
அகத்திக் கீரைச் சாற்றை சேற்றுப் புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும். உடம்பில் காணப்படும் தேமலுக்கு அகத்திக் கீரையின் இலையைத் தேங்காய் எண்ணெயில் வதக்கி, அதை விழுதாக அரைத்துப் பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும்.

அகத்திக் கீரையைச் சாம்பாரில் இட்டும், துவட்டல் கறியாக சமைத்தும் சாப்பிடலாம். அகத்தி கீரையைக் ஏகாதசி அன்று விரதமிருந்த பிறகு துவாதசியன்று உணவில் அகத்திக் கீரை உடன் நெல்லிக்காயையும் சேர்த்துக் கொள்வது சிறப்பு. எதையும் அர்த்ததுடன் தான் நம் முன்னோர்கள் வகைப் படுத்தியுள்ளனர். நாம் அதை மதித்து நடக்க வேண்டும்,

அகத்திக் கீரைக்கு எல்லா மருந்துகளின் வீரியத்தையும் முறிக்கும் சக்தி உண்டு .எனவே சித்த மருந்துகள் சாப்பிடும்போது இதைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும். வாரம் ஒரு முறை மட்டுமே அகத்தியை உபயோகிக்க வேண்டும் .அதிகம் உபயோகித்தால் சொறி சிரங்கு வரும் .

"அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே" என்று ஒரு பழமொழி அகத்தியைப் பற்றிக் கூறப்படுகிறது.

அகத்தியை போற்றும் சித்தர் பாடல்:

”மருந்திடுதல் போகுங்காண் வங்கிரந்தி வாய்வாம்
திருந்த அசனம் செரிக்கும்- வருந்தச்
சகத்திலெழு பித்தமது சாந்தியாம்
நாளும் அகத்தியிலை தின்னு மவர்க்கு."

அகத்திக்கீரையோட மகத்துவம் நமக்கு பலபேருக்கு தெரியாது. இதில் வைட்டமின் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும் இருக்குது. சாம்பார், கூட்டு, பொரியல் செஞ்சி இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் எலும்பு நல்லாகவே வளரும். வயசான காலத்தில் சிலபேருக்கு இடுப்பு எலும்பு பலமில்லாமல் முன்பக்கமோ, பின்பக்கமோ வளைஞ்சி நடக்கவே முடியாமலிருக்கும்..

இந்தமாதிரிப் பிரச்சினைகளைத் தவிர்க்க அடிக்கடி அகத்திக்கீரை சாப்பிடவும். இது வாயுவை உண்டாக்குகின்ற கீரையா இருந்தாக்கூட அதோட பெருங்காயம், வெ‌ள்ளைப்பூண்டு சேர்த்து சமைச்சா வாயு விலகிப்போயிரும். அகத்திக்கீரையில அவ்வளவு மகத்துவம் உள்ளது.

அரைக்கீரையை தினமும் சோற்றுடன்/ சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும். கல்யாணமான ஆண்க‌ள் அரைக்கீரையோட வெங்காயம் சேர்த்து நெ‌ய்யில பொரிச்சி சாப்பிட்டு வந்தா புது ரத்தம் ஊறி தாது அவுக்க‌ள் உற்பத்தியாகி இல்லற வாழ்க்கைக்கு தேவையான சக்தி கிடைக்கும்.

குழந்தை பெற்ற பெண்கள் உடலில் போதுமான சக்தி இருக்காது. அவர்கள் அரைக்கீரையைக் கடைஞ்சி சாப்பிட்டால் நல்ல பலம் கிடைப்பதுடன் குழந்தைக்கு தேவையான பாலும் சுரக்கும்.

முருங்கைக்கீரை உங்க வீட்டுலயோ, வீட்டுக்கு பக்கத்திலயோ இருக்கும். ஆனா நாம அதை சீண்டுறதில்ல. அதில இருக்குற மகத்துவம் நமக்கு தெரியாததுதான் காரணம். நிறைய தா‌ய்மார் குழந்தைக்கு பால் கிடைக்குறதில்லனு மனசு சங்கடப்பட்டு ஏதேதோ வைத்தியம் செ‌ய்வாங்க. அவங்கல்லாம் ஏனோ முருங்கைக்கீரையை மறந்திட்டாங்க. முருங்கைக்கீரையை பருப்போடவோ தனியாவோ சமைச்சு சாப்பிட்டு வந்தாலே தேவையான தா‌ய்ப்பால் சுரக்கும். குழந்தைங்களுக்கு சிலநேரம் வயிற்று உப்பிசம் வந்து வீல்வீல்னு கத்தும்.

இந்த மாதிரி பிரச்சினைக்கு முருங்கைக்கீரையை சுத்தம் பண்ணி உ‌ள்ளங்கையில வச்சி நல்லா கசக்கி சாறு எடுத்து வடிகட்டி, அரை ஸ்பூன் அளவுக்கு எடுத்து அதோட அரை பட்டாணி அளவு கல் உப்பை கரைக்கவும். அப்புறமா அரை ஸ்பூன் அளவுக்கு வெந்நீர் சேர்த்து கலந்து உ‌ள்ளுக்கு கொடுத்தா வீல் வீல் சத்தம் அடங்கிப்போயிரும். முருங்கைக்கீரையை சுத்தம் பார்த்து நல்லா வேக வச்சி அதோட கோழி முட்டையை உடைச்சிப்போட்டு நல்ல கிளறவும்.

பிறகு சூடு ஆறுறதுக்கு‌ள்ள அதை சாப்பாட்டோட சேர்த்து சாப்பிட்டு வந்தீங்கனா ஒடம்புல பலம் ஏறும். 40 நா‌ள் விடாம செஞ்சிட்டு வந்தீங்கனா முழு பலனையும் அடையலாம். கொத்தமல்லிக்கீரையை சாம்பார், ரசத்துல ஏதோ வாசனைக்காக சேர்ப்போம். ஆனா தனியா செஞ்சி சாப்பிடுறதில்ல. துவையலாவோ, சாதத்தோட கலந்தோ சாப்பிட்டு வந்தீங்கனா புது ரத்தம் உற்பத்தியாகுறதோட எல்லா சக்தியும் கிடைக்கும்.

வயித்துப்புண்ணால கஷ்டப்படுறவங்க கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டு வந்தா நல்ல குணம் கிடைக்கும். மூக்கடைப்பு, மூக்குல சதை வளர்ந்து அவதிப்படுறவங்க கொத்தமல்லி துவையலை ஒரு கொட்டைப்பாக்கு அளவு தினமும் சாப்பாட்டுல சேர்த்து வந்தா நல்ல நிவாரணம் கிடைக்கும். தூதுவேளைக்கீரையை நெ‌ய்யில வதக்கி துவையலாவோ மசியலாவோ சாப்பிட்டு வந்தீங்கனா கபக்கட்டு விலகி உடம்புல வலு ஏறும். அறிவு வளரும்.

தூதுவேளை கீரையை கஷாயமா செஞ்சி கஸ்தூரி, கோரோஜனை மாத்திரை சேர்த்து சின்ன குழந்தைகளுக்கு கொடுத்திட்டு வந்தா சளியினால வர்ற கா‌ய்ச்சல் குணமாகும். டைபா‌ய்டு, நிமோனியா மாதிரி கா‌ய்ச்சல் நேரத்துல கபம் உண்டாகி நெஞ்சுல சளி அடைச்சிக்கிட்டா தூதுவேளைக்கீரையை கொடுத்திட்டு வந்தா நல்ல குணம் கிடைக்கும் என்கிறார் மூலிகை ஆரா‌ய்ச்சியாளர்

------------------------------------------------------------------------

தூதுவளை (Solanum trilobatum)

பிணிபல நீக்கும் கற்பக மூலிகை தூதுவளை.

சித்தர்கள் உடலை கற்பமாக்க கற்ப மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர். மூலிகையில் உள்ள தாதுப் பொருட்களை தனியாகவோ அல்லது பல மூலிகைகள் கலந்தோ அல்லது உலோக உபரச உப்பு பொருட்களை சேர்த்தோ நன்கு பக்குவப்படுத்திபத்தியம் மேற்கொண்டு ஒரு மண்டலம்(நாட்கள்) சாப்பிட்டு வந்தால் பிணியில்லாப் பெருவாழ்வு வாழலாம் உடலை கற்பமாக்கும் இம் மூலிகைகள்தான் கற்ப மூலிகைகள்.

தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தில் காயகற்ப மருந்துகள் சிறப்பானதாகும்.

காயகற்பம் = காயம்+கற்பம். காயம் என்றால் உடல். கற்பம் என்றால் உடலை நோயணுகாதபடி வலுவடையச் செய்யும் மருந்து.

நரை, திரை, மூப்பு, பிணிநீக்கி, வயதுக்கு தகுந்தவாறு ஏற்படும் நோய்களிலிருந்து விடுபடவைத்து நீண்டநாள் வாழச் செய்வது கற்பமாகும்

தூதுவளை ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும். இதன் இலை கரும்பச்சை நிறமானது. பூ ஊதா நிறமானது. சிறிய காய்கள் தோன்றிப் பழுக்கும். இதன் கொடியிலும் இலையிலும் கூரிய முட்கள் காணப்படும்.
தூதுவளை இலை மூலிகை மருத்துவத்தில் பயன்படுகிறது.

ச‌ளி ‌பிடி‌ப்பதா‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு உட‌ல் உபாதைக‌ளி‌ல் இருமலு‌ம் ஒ‌ன்று. ச‌ளி போனாலு‌ம் இரும‌ல் போகாம‌ல் பாடு படு‌த்து‌ம். இருமலை‌ப் போ‌க்க எ‌ளிதான வ‌ழி உ‌ள்ளது. தூதுவளை‌‌ இலையை 4 அ‌ல்லது 5 எடு‌த்து அத‌ன் மு‌ட்களை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு கழு‌வி‌க் கொ‌ள்ளவு‌ம். இலை‌க்கு‌ள் 4 அ‌ல்லது 5 ‌மிளகு வை‌த்து வெ‌ற்‌றிலை‌ப் போ‌ல் மடி‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிட இர‌ண்டே நா‌ளி‌ல் மா‌ர்‌பு‌ச் ச‌ளி போ‌ய், தொட‌ர்‌ந்து வ‌ந்த கு‌‌த்த‌ல் இருமலு‌ம் காணாம‌ல் போகு‌ம்.

தூதுவளையை உளு‌த்த‌ம் பரு‌ப்பு, பு‌ளி வை‌த்து துவைய‌ல் செ‌ய்து‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். ச‌ளி ‌பிடி‌த்தவ‌ர்களு‌க்கு இ‌ந்த துவையலை‌ செ‌ய்து கொடு‌த்தா‌ல் எ‌ந்த மரு‌ந்து‌க்கு‌ம் அசராத ச‌ளியு‌ம் கரை‌ந்து காணாம‌ல் போ‌ய் ‌விடு‌ம். தூதுவளை இலை உடலு‌க்கு உஷ‌்ண‌த்தை‌க் கொடு‌க்கு‌ம் எ‌ன்பதா‌ல், சூ‌ட்டு உட‌ம்பு‌க் கார‌ர்க‌ள் அ‌திகமாக சா‌ப்‌பிட‌க் கூடாது.

---------------------------------------------------------------------------
மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்:-

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ

--------------------------------------------------------------------------

துளசி

எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.

--------------------------------------------------------------------------
பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தில் சிகிச்சை இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. முதலாவது நோய் அணுகாமல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது. இரண்டாவது நோய் ஏற்பட்ட நேரத்தில் சிகிச்சையளித்து நோயை குணப்படுத்துவது.

இதில் முதலாவதான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிகிச்சை காயகற்பம் என அழைக்கப்படுகிறது. காயம் என்றால் உடல். கற்பம் என்றால் அழிவில்லாதது. நரை, திரை, மூப்பு அணுகாமல் என்றும் நோயணுகாமல் இளமையாக வைத்திருக்க உதவும் மூலிகைகளை காயகற்ப மூலிகை என்கிறோம். காயகற்ப மூலிகைகளில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது நெல்லிக்காய். மன்னன் அதியமான் அவ்வைப் பாட்டிக்கு நீண்ட ஆயுள் அமையும் பொருட்டு நெல்லிக்கனி கொடுத்ததாக சங்க இலக்கியங்களில் சொல்லப்படுகிறது.

நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது.

நெல்லிக்காயில் வைட்டமின் "சி" வேறு எந்த வகை காய்கறி பழங்களிலும் இல்லாத அளவுக்கு 600 மில்லிகிராம் உள்ளது. கால்சியம் 50 மில்லிகிராம், பாஸ்பரஸ் - 20 மில்லிகிராம், இரும்புச் சத்து 1.2 மில்லிகிராம் உள்ளது. ஆப்பிள் பழத்தை விட இது அதிக சக்தி வாய்ந்தது.

நெல்லிக்காய் ஈரலை தூண்டி, நன்கு செயல்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, தாதுக்களை நம் உடல் ஏற்றுக் கொள்ள துணை புரிகிறது. கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது.

நரம்பு மண்டலத்தை தூண்டி வேலை செய்கிறது. மூளை செல்களுக்கு புத்துணர்ச்சியளிப்பதால், மனத்தெளிவு, புத்திக்கூர்மை மற்றும் ஞாபசக்தி உண்டாகிறது. நுரையீரலை பலப்படுத்தி சுவாச நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. உடல் எடையை கூட்டாமல் தசைகளுக்கு பலம் அளிக்கக் கூடிய தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு. நீரிழிவை கட்டுப்படுத்தும் சக்தியுள்ளது. மேலும் இதில் வைட்டமின் "சி" சத்து அதிகம் உள்ளதால் நோய்க்கு எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது.

நெல்லிக்காய் கிடைக்காத காலங்களில் காய்ந்த நெல்லிக்காயை (நெல்லிமுள்ளி) பயன்படுத்தலாம். இதற்குரிய சக்தி காய்ந்த பின்னும் குறைவதில்லை.

எல்லா வயதினரும் இதை சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினம் கொடுக்க சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதுடன், மூளை வளர்ச்சியும், புத்திக் கூர்மையும் ஏற்படும். ஆயுர்வேத சக்தி மருந்து நெல்லிக்காயால் தான் தயார் செய்யப்படுகிறது.

Natural treatment for Hair falling control / baldness


தலைமுடி பேண சித்தவைத்திய முறை...!

வழுக்கை தலையில் முடிவளர:

வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

முடி உதிர்வது மற்றும் நரை போக்க:

1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே
போதும் இளநரை மாயமாகிவிடும்.

4) சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

5) கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்

Saturday 18 May 2013

Vaasthu Saasthra - Know it



இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டினுள்ளும் தன் ஆளுமையை நீட்டிகிறது. அதனால் தான் ஒருவனுக்கு தான் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. வீட்டில் அமைதி நிலவி செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிருக்க வேண்டும். இன்றுள்ள சிக்கலான சூழ்நிலையில், உடல் ஆரோக்கியம், சொத்து மற்றும் சொந்த பந்தங்களுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணிகளை ஆராயக் கூட நமக்கு நேரம் கிடைப்பதில்லை. பெரும்பாலான இந்த பிரச்சனைக்கு வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஃபெங் சூயிக்கும் (Feng Shui) சம்மந்தம் உள்ளது. ஆகவே சில கட்டளைகளை பின்பற்றினால், வீட்டிலுள்ள நேர்மறை சக்தி கூடும். மேலும் வாஸ்து மற்றும் ஃபெங் சூயி வல்லுநர்களிடம் இருந்து பெறப்பட்ட சில டிப்ஸ்களை பயன்படுத்தினால், வாழ்க்கை இனிமையாக அமையும். அத்தகைய டிப்ஸ்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றி பாருங்கள்...

திசைக்காட்டி எப்போதும் வீட்டின் நடுவே நின்று திசைக்காட்டியின் உதவியோடு திசைகளை அறிந்துக் கொள்ளுங்கள். வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நேர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையும். ஆகவே வாங்கும் புது மனையின் வாசற்கதவு, தென்மேற்கு திசையை நோக்கி இருக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த திசை தான் தீயசக்திகளின் நுழைவாயில். அது நமக்கு கஷ்டங்களையும் துரதிஷ்டத்தையும் தரும். ஏற்கனவே வீட்டின் கதவு இந்த திசையில் இருந்தால், இரண்டு அனுமான் கடவுளின் படம் இருக்கும் டைல் கல்லை வாசலுக்கு வெளியில் பதித்து விடுங்கள். அப்புறம் பாருங்கள் மாற்றத்தை.

பூஜை அறை கோவில் அல்லது பீடம் தான் அனைத்து வாஸ்து சாஸ்திரங்களுக்கும் சக்கரவர்த்தி. அதனால் பூஜை அறையை வட கிழக்கு திசையில் அமைத்திடுங்கள்; அனைத்து நன்மைகளும் வந்து சேரும். மேலும் வணங்கும் போது கிழக்கு திசையை நோக்கி வணங்க வேண்டும்

சமையலறை சமையலறை என்பது வளமையை குறிக்கும் இடமாகும். அதனால் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். வடகிழக்கு திசையில் சமையலறை அமைந்தால், வீட்டில் பணம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஒரு வேளை வடகிழக்கு திசையில் இது இருந்தால், மூன்று வெண்கல பாத்திரத்தை தலைகீழாக உட்கூரையில் தொங்க விடுங்கள்; ஆனால் அது அடுப்பை நோக்கி தொங்கக் கூடாது.

படுக்கை அறை முதன்மை படுக்கை அறை தான் உறுதிப்பாடு என்ற கதவுக்கு சாவி. அது தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும். மேலும் தூங்கும் போது தலை தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் கண்டிப்பாக வட கிழக்கு திசையில் தூங்கக் கூடாது.

குளியலறை மற்றும் கழிப்பறை குளியலறை மற்றும் கழிப்பறையில் நரகத்தின் சக்தி இருப்பதால், இந்த அறை மேற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும். கண்டிப்பாக வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் வீட்டில் பணம், உடல்நிலை மற்றும் கல்வியில் பிரச்சனைகள் இருக்கும்.

ஹால் வீட்டின் மையப் பகுதி வீட்டின் மூக்கைப் போன்றது. இங்கே தான் நம் வீடு மூச்சு விடுகிறது. அது திறந்த வெளியாகவும், குப்பையாகவும் இருக்கக் கூடாது. இங்கே சுவரிருந்தால் வயிற்று பிரச்சனை மற்றும் பணப்பிரச்சனை வரக்கூடும். அதனால் ஒரு ஜீரோ வாட்ஸ் நீல பல்பை 24 மணி நேரமும் எரிய விடுவது நல்லது.

வீட்டு வளைவுகள் வீட்டில் எந்த திசையிலாவது வெட்டு அல்லது வளைவுகள் இருந்தால், அது வீட்டை பாதிக்கும். முக்கியமாக தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு திசைகளில் இருந்தால், பெரிய பிரச்சனைகள் ஏற்படும். இதன் பின்னணியில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கிறது.

வீட்டின் சுவர் வண்ணங்கள் மிகவும் அடர்த்தியான வண்ணங்களை கொண்டு சுவற்றில் வர்ணங்களை பூச கூடாது. முக்கியமாக சிவப்பு மற்றும் செந்நீலம் நிறங்கள். இது நோயை உண்டாகும் சக்தியை தூண்டும்.

படங்கள் தண்ணீர் அல்லது நீரூற்றின் படங்களை படுக்கையறையில் மாட்டக்கூடாது. இது உங்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கும்.

பூஜை பொருட்கள் பூஜை பொருட்களை அல்லது கடவுள் படங்களை ஏதாவது உத்திரம் அல்லது நிலை அடுக்கின் கீழ் வைக்க கூடாது. அப்படி வைத்தால் அது மன அழுத்தத்தை தரும்.

கனமான பொருட்கள் வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் கனமான பொருட்களான பீரோவை வைக்கக் கூடாது. அது நம் பண விரயத்துக்கு தடை போதும்.

போன்சாய் மரங்கள் போன்சாய் மரங்களை வீட்டினுள் வளர்க்காதீர்கள். அது நீங்கள் இருக்கும் துறையில், வளர்ச்சிக்கு தடை போடும்.

வீட்டை துடைக்கவும் வீட்டு தரையை வாரம் இரண்டு முறை, உப்புள்ள கடல் தண்ணீரால் துடைத்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகள் ஓடியே போகும்.

நல்ல பாடல்கள் வாக்குவாதங்கள் வீட்டை ஆக்கிரமித்து இருக்கிறதா? அப்படியானால் நல்ல பாடல்களை, தினமும் நான்கு அல்லது ஐந்து முறை ஒலிக்க விட்டால், வீட்டில் அமைதி நிலவும்

Tuesday 14 May 2013

AMLA & other Indian wonderful Medicines


பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தில் சிகிச்சை இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. முதலாவது நோய் அணுகாமல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது. இரண்டாவது நோய் ஏற்பட்ட நேரத்தில் சிகிச்சையளித்து நோயை குணப்படுத்துவது.

இதில் முதலாவதான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிகிச்சை காயகற்பம் என அழைக்கப்படுகிறது. காயம் என்றால் உடல். கற்பம் என்றால் அழிவில்லாதது. நரை, திரை, மூப்பு அணுகாமல் என்றும் நோயணுகாமல் இளமையாக வைத்திருக்க உதவும் மூலிகைகளை காயகற்ப மூலிகை என்கிறோம். காயகற்ப மூலிகைகளில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது நெல்லிக்காய். மன்னன் அதியமான் அவ்வைப் பாட்டிக்கு நீண்ட ஆயுள் அமையும் பொருட்டு நெல்லிக்கனி கொடுத்ததாக சங்க இலக்கியங்களில் சொல்லப்படுகிறது.

நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது.

நெல்லிக்காயில் வைட்டமின் "சி" வேறு எந்த வகை காய்கறி பழங்களிலும் இல்லாத அளவுக்கு 600 மில்லிகிராம் உள்ளது. கால்சியம் 50 மில்லிகிராம், பாஸ்பரஸ் - 20 மில்லிகிராம், இரும்புச் சத்து 1.2 மில்லிகிராம் உள்ளது. ஆப்பிள் பழத்தை விட இது அதிக சக்தி வாய்ந்தது.

நெல்லிக்காய் ஈரலை தூண்டி, நன்கு செயல்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, தாதுக்களை நம் உடல் ஏற்றுக் கொள்ள துணை புரிகிறது. கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது.

நரம்பு மண்டலத்தை தூண்டி வேலை செய்கிறது. மூளை செல்களுக்கு புத்துணர்ச்சியளிப்பதால், மனத்தெளிவு, புத்திக்கூர்மை மற்றும் ஞாபசக்தி உண்டாகிறது. நுரையீரலை பலப்படுத்தி சுவாச நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. உடல் எடையை கூட்டாமல் தசைகளுக்கு பலம் அளிக்கக் கூடிய தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு. நீரிழிவை கட்டுப்படுத்தும் சக்தியுள்ளது. மேலும் இதில் வைட்டமின் "சி" சத்து அதிகம் உள்ளதால் நோய்க்கு எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது.

நெல்லிக்காய் கிடைக்காத காலங்களில் காய்ந்த நெல்லிக்காயை (நெல்லிமுள்ளி) பயன்படுத்தலாம். இதற்குரிய சக்தி காய்ந்த பின்னும் குறைவதில்லை.

எல்லா வயதினரும் இதை சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினம் கொடுக்க சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதுடன், மூளை வளர்ச்சியும், புத்திக் கூர்மையும் ஏற்படும். ஆயுர்வேத சக்தி மருந்து நெல்லிக்காயால் தான் தயார் செய்யப்படுகிறது.

-----------------------------------------------------------------------------------------------------------


...அருகம்புல் : மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்

ஓரிதழ் தாமரை : வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்

ஆடா தோடை : இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு

தூதுவளை : சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு

நில ஆவாரை : மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்

நில வேம்பு : சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்

முடக்கத்தான் : மூட்டுப்பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்

வல்லாரை : ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை, மலச்சிக்கல்

அஸ்வகந்தி : கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்

வில்வம் : பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்

நெல்லிக்காய் : பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்

நாவல் கொட்டை : சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்

சுக்கு : வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்

திப்பிலி : சளி, காசம், பீனிசம், வாயு

அதிமதுரம் : இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்

சித்தரத்தை : இருமல், சனி, பீனிசம், கோழைக்கட்டு

ஜாதிக்காய் : விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்

வெந்தயம் : பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்

வசம்பு : வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்

ஆவாரம்பூ : அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்

செம்பரத்தம்பூ : தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்

ரோஜாப்பூ : இருதயம், ஈரல், நுரையீரல், கிட்னி நோய்கள் நீங்கும்

முல்தானி மிட்டி : முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்)

திருபலாசூரணம் : வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்

திரி கடுகு சூரணம் : பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்

வசம்பு : வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்

கரிசலாங்கண்ணி : மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்

கண்டங்கத்திரி : சளி, இருமல், ஆஸ்துமா, ஈசிலோபீலியா, பீனிசம்

கருந்துளசி : இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்

கறிவேப்பிலை : பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்

காசினி கீரை : ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்

கீழாநெல்லி : மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்

Thulasi - an Indian best medicine

துளசி

எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.

Weekend Healthy Activities - வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!


வாரம் முழுவதும் வேலை, சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளில் தூக்கம் என்று இயந்திரமயமாகிவிட்டது வாழ்க்கை. வாழ்க்கையை சற்று திரும்பி பார்த்தால், தூக்கம், உழைப்பு என்கிற இரண்டே காரியங்கள் தான் இருப்பதாகத் தோன்றும். உபயோகமாக ஏதாவது செய்யலாம் என்று நினைத்தால், அதற்கு வார நாட்கள் பொருத்தமாக இருக்காது. வேலை செய்து களைத்துப் போய் வீடு திரும்பியதும் படுத்து உறங்குவதற்கே நேரம் சரியாக இருக்கும். அதிலும் வார இறுதி என்றதுமே குதூகலம் அடைந்துவிடுகிறோம். மகிழ்ச்சியாக களிக்கவும், ஓய்வெடுக்கவும் இரண்டு நாட்கள் கிடைத்துவிட்டது என்கிற எண்ணம் ஏற்படுகிறது. ஆனால், வாரம் முழுவதும் கடினமாக உழைத்த பிறகு உறங்குவதையும், நண்பர்களோடு ஊர் சுற்றுவதையும் தவிற உபயோகமாக என்ன செய்ய முடியும்? எத்தனை ஆண்டுகள் இப்படியே வார இறுதிகளை வீணாக்குவது. வீட்டில் ஒரு அட்டவணை போட்டு, அதில் வாரம் முழுவதும், வார இறுதியிலும் செய்யும் வேலைகளை பட்டியலிட்டால், நம் மீதே நமக்கு கோபம் வரும். இரண்டு நாட்கள் எப்போது வரும் என்று காத்திருந்த பின்பு, வார இறுதியின் முடிவில் எதையும் சாதிக்காத ஒரு குற்ற உணர்வே காணப்படுகின்றது. ஆனால், இதற்கு ஒரு மாற்று வழி இருக்கிறது. படுக்கையிலே புரண்டு, தொலைக்காட்சி பார்ப்பதற்கு, பதிலாக கீழே குறிப்பிட்டுள்ள ஆரோக்கியமான விஷயங்களை முயற்சி செய்து பாருங்கள்.

அதிகாலையில் விழித்திடுங்கள் அதிகாலையில் எழுவது நாள் முழுவதும் உற்சாகத்துடன் செயல்பட உதவியாக இருக்கும். அதற்கு வீட்டிற்கு வெளியே சென்று நடைபயில்வது, ஓடுவது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.

படுக்கையில் ஆசனங்கள் கடிகாரத்தை நிறுத்தியவுடன், உடனடியாக எழுந்துவிடாமல், உடலை நீட்டி சில பயிற்சிகளை செய்யவும். அதுவும் முதுகெலும்பை வளைத்து செய்யும் பயிற்சிகள் அல்லது நாள் முழுவதும் உடலுக்கு ஆற்றல் அளிக்கும் ஏதாவது ஒரு பயிற்சியை செய்யுங்கள்.

பாதத்தை உயர்த்துதல் குறுகிய கால அளவிற்கு பாதத்தை உயர்த்துதல், இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் பயனுள்ள வழி ஆகும். படுக்கையில் படுத்துக் கொண்டு காலடியில் ஒரு தலையணை வைப்பதன் மூலம் இதை செயல்படுத்தலாம். இது இரத்தம், தலையை நோக்கி பாய்வதற்கு வழி வகுக்கும். இந்த செயல்முறையில், தரையில் படுத்துக் கொண்டு, ஒரு நாற்காலி அல்லது சோபா மீது கால்களை மாற்றி மாற்றி வைக்க வேண்டும். அவ்வாறு செய்வது, இரத்தம் கால்களை விட்டு நீங்குவதற்கு உதவும்.


மூச்சு பயிற்சி பெரும்பாலான மக்கள், மோசமான சுவாச பழக்கங்களை கொண்டிருக்கின்றனர். நம்முடைய நுரையீரலில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இரத்த ஓட்டத்தை மேம்படுத்த, நுரையீரலின் முழு திறனையும் பயன்படுத்த வேண்டும். அதற்கு, ஆழ்ந்து சுவாசிக்க வேண்டும். இது இரத்தம் அதிக அளவு பிராணவாயுவை பெற வழி வகை செய்யும். அத்துடன், கழிவு பொருட்களை நீக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும்.


புதிய முயற்சி செய்யுங்கள் வார நாட்களில் செய்ய தவறிய செயல்களை செய்வதற்கு சிறந்த நேரம் தான் வார இறுதிகள். இவ்வாறு செயல்படுவதை பழக்கப்படுத்திக் கொண்டால், அது அழுத்தத்தையும், மன உளைச்சலையும் விடுவிக்க உதவியாக இருக்கும்.

அமைதியான குளியல் அவசரம் காரணமாக, வார நாட்களில் குளியலுக்கு என்று அதிக நேரம் செலவு செய்வது இல்லை. ஆனால் வார இறுதியில் உடலுக்கு புத்துணர்வு அளிக்க வீட்டிலேயே செய்த சில உடல் துப்புறவு சாதனங்களைப் பயன்படுத்தி அமைதியாக குளிக்கவும்.

ஆரோக்கியமான காலை உணவு ஆரோக்கியமான காலை உணவை தயாரித்து சாப்பிடவும். ஆரோக்கியமாண வாழ்வுக்கு ஆரோக்கியமான காலை உணவு அவசியம். காலை உணவு சாப்பிடும் பழக்கம் இல்லை என்றால், இந்த வார இறுதியில் இருந்து அதை பழக்கப்படுத்துங்கள், பிறகு அதை தொடர்ந்து செய்யுங்கள்.

உடற்பயிற்சி வகுப்புகளை முயற்சி செய்யுங்கள் உடலுக்கும் மனதிற்கும் பயனளிக்கக்கூடிய புதுமையான காரியம் எதையாவது முயற்சி செய்ய வார இறுதிகளே சிறந்த காலம். இந்த வார இறுதியில் யோகா, சாம்பா, நடனம் போன்ற ஏதாகிலும் ஒரு உடற்பயிற்சி வகுப்பில் சேருங்கள்.

சூரியன் உங்களை முத்தமிடட்டும் தொடர்ச்சியான 8 மணிநேர அலுவலகம் காரணமாக, இயற்கை காற்றையும், சூரிய வெளிச்சத்தையும் பெறுவது இல்லை. நாள் முழுவதையும் குளிர்சாதனத்தின் கீழ் செலவிடுவதால், கூந்தல் உலர்ந்து பொலிவிழந்து போகிறது. இந்த வார இறுதியில் அதிகாலையில் எழுந்து, சற்று நேரம் இயற்கை காற்றையும், சூரிய ஒளியையும் பெற்றிடுங்கள். இதன் மூலம் உடலுக்கு வேண்டிய வைட்டமின் டி கிடைக்கும்.

அதிகமாக குடிப்பதை தவிர்க்கவும் நண்பரோடு ஊர் சுற்றுவதாக இருந்தால், இயன்றவரை மதுபானத்தை தவிர்க்கவும். குறைந்த அளவில் மது அருந்துவது ஓய்வெடுக்க உதவும். ஆனால் அடுத்த நாள் வரை மயக்கத்தில் இருக்கும் அளவுக்கு குடிக்காதீர்கள்.

உங்களுக்கென்று சற்று நேரம் செலவிடுங்கள் களைப்பு அடையாமல் தடுப்பதற்காக, சில பொழுதுபோக்கு செயல்களை செய்யுங்கள்.

ஓடி விளையாடுங்கள் வீட்டிற்கு வெளியே விளையாடக்கூடிய கால்பந்து, ரக்பி, கூடைப்பந்து அல்லது கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களை விளையாடுங்கள். வார இறுதியை செலவிடுவதற்கு இது ஒரு சிறந்த ஆரோக்கியமான வழி.

சில வீட்டு வேலைகளை செய்யுங்கள் வீட்டு வேலைகளை செய்வது, வார இறுதியை செலவிட மற்றொரு வழி ஆகும். துடைப்பத்தை எடுத்து வீடு முழுவதையும் சுத்தம் செய்யுங்கள். இச்செயல் உடல் முழுவதற்கும் பயிற்சி அளிப்பதோடு, வீட்டையும் பளிச்சிட செய்யும்.

வாரயிறுதியில் உடலுறவு கொள்ளுங்கள் இன்பமும், இனப்பெருக்கமுமே உடலுறவு கொள்வதற்கு முக்கிய காரணங்கள். ஆனால் மேன்மையான ஆரோக்கியம் மற்றும் நல்ல மனநிலை ஆகியவையும் குறிப்பிடத்தக்க காரணங்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. வாரத்தில் இரண்டு முறையாவது உடலுறவு கொள்ளுதல் குறிப்பிடத்தக்க பலன்களை கொடுக்கும்.

அதிகமாக தண்ணீர் அருந்துங்கள் தொடர்ந்து கழிவறைக்கு செல்ல பயந்து, நம்மில் பலர் வார நாட்களில் அதிகமாக தண்ணீர் குடிக்க தவறுகிறோம். கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுவதும் உடலில் நீரை அதிகரிக்கும்படி தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை, இந்த வார இறுதியில் இருந்து தொடங்குங்கள். வாழ்நாள் முழுவதும் அந்த பழக்கத்தை கைவிடாதீர்கள்.

சூடான எண்ணெய் மசாஜ் தலைக்கு நல்ல எண்ணெய் மசாஜ் செய்யவும். அதிலும் சிறந்த பலனை பெற, வெள்ளிக்கிழமை இரவு இந்த எண்ணெய் மசாஜ் செய்துவிட்டு, பிறகு காலையில் எலுமிச்சை மற்றும் வினிகர் கலவையை தேய்த்துவிட்டு, பிறகு அலசினால் பளிச்சிடும் பட்டுப்போன்ற கூந்தல் கிடைக்கும்

தொழில்நுட்பத்திற்கு சற்று இடைவெளி கொடுங்கள் வாரயிறுதிகளில் தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். மற்றவர்களோடு தொடர்பு கொள்ள இந்த கருவிகள் உதவினாலும், எப்போதும் அவை அலுவலாகவே வைத்திருக்கின்றன. அமைதியான வாரயிறுதி வேண்டும் என்றால், தொலைப்பேசி, கணிப்பொறி மற்றும் சமூக வளைதளங்களில் இருந்து விடுபட்டு இருக்க வேண்டும்.

சரும பாதுகாப்பு செய்திடுங்கள் குளிர்சாதனம் நிறைந்த அலுவலகம் சருமத்தை உலர்வாகவும், பொலிவில்லாமலும் மாற்றிவிடும். இந்த பொலிவற்ற சருமத்தில் இருந்து விடுதலை பெற அவற்றை உதிர்த்துவிட வேண்டும். அதற்கு உப்பு மற்றும் சர்க்கரை ஸ்க்ரப் சிறந்த தோல் உதிர்வுக்கான தீர்வு ஆகும். 1/4 கப் உப்பு அல்லது சர்க்கரையை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு ஆலிவ் எண்ணெயை ஊற்றவும். இந்த கலவையை கடைந்து, சருமம் முழுவதுமாக தேய்த்து, இறந்த தோல்களை நீக்கிவிடுங்கள். முடிந்த பிறகு நன்றாக சருமத்தை கழுவுங்கள்.

சிறந்த பொலிவை பெற்றிடுங்கள் சிறந்த பொலிவுக்கு ஆரஞ்சு அல்லது தக்காளி சாற்றை எடுத்து, அதோடு இரண்டு டீஸ்பூன் தயிரை சேர்க்கவும். இந்த கலவையை தேய்த்து, மேல்நோக்கி சருமத்தில் மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் அது உலர்ந்த பிறகு, குளிர்ந்த தண்ணீரில் அதை கழுவி விட்டு, பின்பு அதை நன்றாக துடைத்து விடுங்கள்

கருவட்டங்களை நீக்கிடுங்கள் தேனீர் பைகளை தேய்ப்பதன் மூலம் கருவட்டங்களை நீக்குங்கள். சமோமைல் அல்லது பச்சை தேனீர் பைகளில் இருக்கும் உயர்ந்த ஊட்டச்சத்து, அதிகபட்ச பலனை கொடுக்கின்றன.

கோவைப்பழ உதடுகளுக்கு ரோஜா இதழ்கள், மலாய் மற்றும் தேனை உதட்டில் தேய்த்து 15 நிமிடங்கள் விட்டுவிடுங்கள். இந்த சிகிச்சை உதடுகளில் இருக்கும் இறந்த தோல்களை நீக்கி, உதடுகள் முழுவதும் சிவப்பாக மாற உதவுகின்றது.

Healthy Blood circulation tips - உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குவதற்கான சில எளிய வழிகள்!!!


உடலில் இருக்கும் இரத்தத்தின் ஓட்டமானது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் சீர்குலைவு பல்வேறு நோய்களுக்கு வித்திடும். இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பல்வேறு நோய்கள் இரத்த ஓட்ட குறைபாடுகளால் ஏற்படுகின்றன. தலைவலி, கைகள் மற்றும் கால்கள் குளிர்ந்து போவது, அடிக்கடி ஏற்படும் தசை பிடிப்புகள், கடினமான தசைகள், பலவீனமாக உணர்வது, சலசலக்கும் காதுகள், ஆறாமல் இருக்கும் காயங்கள், நினைவிழப்பு ஆகியன இரத்த ஓட்ட குறைபாடுகளுக்கு அறிகுறிகளாக கருதப்படுகின்றன. இந்த அறிகுறிகளை லேசாக உணரும் போது, நாம் சந்தேகிக்க தொடங்க வேண்டும். இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யும் போது, உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, நீரிழிவு சிக்கல்கள், ஆண்மையின்மை, மாரடைப்பு மற்றும் இறப்பு போன்ற மிகவும் தீவிரமான மற்றும் ஆபத்தான விளைவுகள் உண்டாகலாம். நம் உடலில் ஒரே சீராக இரத்த ஓட்டத்தை நிலை நிறுத்துவதற்கு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்க வேண்டும். கொழுப்பு மிகுந்த உணவை குறைத்தல், நார் பொருட்களை அதிக அளவில் உட்கொள்ளுதல், வழக்கமான உடற்பயிற்சி, மன அழுத்தத்தை குறைத்தல் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் இயற்கையான கூடுதல் பொருட்களை எடுத்துக் கொள்வது ஆகியன மிகவும் முக்கியமானவை. இப்போது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் சில டிப்ஸ்களைப் பார்ப்போமா!!!

குளியல் சுடுநீர் அல்லது குளிர்ந்த நீர் குளியல், இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் ஒரு சிறந்த வழியாகும். பாதிக்கப்பட்ட பகுதியை வெந்நீரில் கழுவும் போதும் அல்லது ஒத்தடம் கொடுக்கும் போதும், உடலில் ரத்த ஒட்டம் அதிகரிக்கும். ஒரு உடனடி குளிர் குளியல், உள்ளுறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். குளியலின் போது, உடலில் ஏற்படும் நடுக்கம், இரத்தம் சருமம் வழியே பாய்ந்து பிராண வாயுவை விட்டுச் செல்கிறது, என்பதற்கு அறிகுறியாகும். இந்த வெப்ப மற்றும் குளிர் நீர் சிகிச்சை முறைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால், நல்ல பலன்கள் கிடைக்கும். வெந்நீர் குளியலின் போது, நீரானது கொதிக்கும் நிலையில் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில், அது தீக்காயங்கள் ஏற்பட காரணமாகலாம்.

மூச்சு பயிற்சி பெரும்பாலான மக்கள், மோசமான சுவாச பழக்கங்களை கொண்டிருக்கின்றனர். நம்முடைய நுரையீரலில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இரத்த ஓட்டத்தை மேம்படுத்த, நுரையீரலின் முழு திறனையும் பயன்படுத்த வேண்டும். அதற்கு, ஆழ்ந்து சுவாசிக்க வேண்டும். இது இரத்தம் அதிக அளவு பிராணவாயுவை பெற வழி வகை செய்யும். அத்துடன், கழிவு பொருட்களை நீக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும்.

மன அழுத்தத்தை தவிர்த்தல் மன அழுத்தம், இரத்த ஓட்டத்தில் சீர்குலைவை ஏற்படுத்தும் மிக முக்கியமான மற்றும் முன்னணி காரணங்களில் ஒன்றாகும். ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆட்படும் போது, முக்கிய உறுப்புகளுக்கு மட்டுமே ,ரத்த செல்லும். மற்ற உறுப்புகளுக்கு செல்லாது. இது மோசமான பின் விளைவுகளை உருவாக்கும். கைகள் மற்றும் கால்கள் இதனால் மோசமாக பாதிக்கப்படும். எனவே, இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்கு, மன அழுத்தத்தைத் தவிர்ப்பது மட்டுமே ஒரே சிறந்த வழியாகும். தினமும் உடற்பயிற்சி செய்வது, ஆழ்ந்து சுவாசிப்பது மற்றும் தியானம் செய்வது போன்ற எளிய நடைமுறைகள், மன அழுத்தத்தை குறைத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

உடற்பயிற்சி உடல் உழைப்பு மட்டுமே இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் மிக நிச்சயமான வழியாகும். பெரும்பாலான மக்கள், இன்று எந்த ஒரு உடல் உழைப்புமின்றி உட்கார்ந்த நிலையிலேயே பணியாற்றுகின்றனர். வழக்கமான, உடற்பயிற்சி, நடைபயிற்சி, நீச்சல் மற்றும் ஓட்டப்பயிற்சி ஆகியன இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எனினும், நடை பயிற்சியின் போது, நிலையான வேகத்தில் ஆரம்பித்து படிப்படியாக வேகத்தை அதிகரிக்க வேண்டும்.

பாதத்தை உயர்த்துதல் குறுகிய கால அளவிற்கு பாதத்தை உயர்த்துதல், இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் பயனுள்ள வழி ஆகும். படுக்கையில் படுத்துக் கொண்டு காலடியில் ஒரு தலையணை வைப்பதன் மூலம் இதை செயல்படுத்தலாம். இது இரத்தம், தலையை நோக்கி பாய்வதற்கு வழி வகுக்கும். இந்த செயல்முறையில், தரையில் படுத்துக் கொண்டு, ஒரு நாற்காலி அல்லது சோபா மீது கால்களை மாற்றி மாற்றி வைக்க வேண்டும். அவ்வாறு செய்வது, இரத்தம் கால்களை விட்டு நீங்குவதற்கு உதவும்.

சமச்சீர் உணவு உட்கொள்ளும் உணவு, இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு ஆரோக்கியமான உணவு பழக்கம் என்பது கொழுப்பு மிகுந்த உணவை குறைத்துக் கொள்வது தான். இதனால் இரத்த ஓட்டம் உடலில் அதிகரிக்கும். குறைந்த கொழுப்பானது, இரத்தம், சிறிய நாளங்கள் வழியாக எளிதாக செல்ல உதவுகிறது. உணவில் நார்ச்சத்து மிகுந்த உணவை உட்கொள்வது, கொழுப்பை குறைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்.