About Me

My photo
I am an IT professional, Nowadays our Lifestyle is changed a lot and of course we are chasing money. In India More than 7 crore people affected by Diabetes, High Cholesterol and infertility due to their Poor Food Habits &amp Lifestyle. This Blog is very useful for youngsters to lead good Lifestyle and be healthy and students to choose career courses.Work hard, but make time for your love, family and friends. Nobody remembers Powerpoint presentations on your Final Day.I believe Life is ours and we only Live our Life.... Thanks for visiting and welcome you to visit again. WHO LOVES GOD ARE SEARCHING GOD, WHO LOVES PEOPLE ARE LIVING AS GOD - SK ( Reach me @ +91 9791139942 to lead Healthy Family Life )

Wednesday 28 March 2012

Improve your sex life with YOGA

யோகாசனம் மூலம் உடலும் மனமும் ஆரோக்கியமாகும் என்பதோடு தாம்பத்ய உறவுக்கு உற்சாகமூட்டுவதாக உளவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். யோகாசனப் பயிற்சியின் மூலம் மன அழுத்தம் குறைவதோடு தாம்பத்ய வாழ்க்கையில் சிறந்த முறையில் செயல்பட செய்வதும் தெரியவந்துள்ளது.

பத்மாசனம், தனுராசனம், புஜங்காசனம், சர்வாங்கசனம் ஆகிய ஆசனங்களை தவறாது செய்வதன் மூலம் உடலும், மனமும் உற்சாக மடைவதோடு தாம்பத்தியத்திலும் உற்சாகமுடன் ஈடுபடலாம். இது செலவில்லாத ஆரோக்கியமான மருத்துவம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பத்மாசனம்

பத்மாசனத்தில் உடல் ஒரு கட்டுக்குள் வந்து நிற்பதால் உடல் அசைவு அற்று ஒரே நிலையில் இருக்கும் போது சுவாசத்தினுடைய ஓட்டம் சமன்படுகிறது. சுவாசத்தினுடைய ஒட்டம் சமன்படுவதால் எண்ணங்களின் சிந்தனைகளின் ஓட்டமும் சமன்படுகிறது. இதனால் மனம் சலனமற்று அமைதி அடைகிறது. தியானப் பயிற்சிக்குரிய ஆசனம் பத்மாசனமாகும்.

புஜங்காசனம்

புஜங்காசனம் செய்தவன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகள் நீங்குகிறது. இப்பயிற்சியை செய்து வந்தால் வெள்ளைப்படுதல், மாதவிடாய் தள்ளி போதல் போன்ற நோய்கள் மறையும்.அதற்கு இந்த ஆசனம் செய்து முடித்ததும் உடன் சலபாசனம், தனுராசனம் ஆகிய ஆசனங்களை சேர்த்து செய்து வர வேண்டும்.

இதனால் முதுகுத்தண்டு தொடர் நழுவுதல், முதுகு தசை வலி மற்றும் அடிமுதுகு வலி ஆகியவற்றைப் போக்கி முதுகுத்தண்டை ஆரோக்கியமாக வைக்கிறது. சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும். வயிற்று பொறுமல், மலச்சிக்கல், இருதய பலவீனம் ஆகியவற்றை போக்குகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது.

தனுராசனம்

வில்போல வளைந்து செய்வதால் தனுராசனம் எனப்படுகிறது. இதை செய்வதன் மூலம் இது பெண்களுக்கு நல்ல பலன் தரும் ஆசனம். மாதவிடாய், கர்ப்பக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். பெண்களுடைய ஓவரி ஆண்களுடைய டெஸ்டீஸ் மற்றும் சிறுநீரகங்களைச் சுறுசுறுப்படையச் செய்து அதனால் பலம் பெற்று இளமை உண்டாகும். வயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமாகி வயிற்று ஊளைச் சதையை குறையும்.

உற்சாகம் கூடும்

யோகா பயிற்சியின் உடலானது கட்டுக்கோப்பாக மாறுகிறது எந்த அளவுக்கு, எத்தனை நிமிடத்திற்கு யோகாசனம் செய்கிறீர்களோ… அதைப் பொறுத்து உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரைந்து, உடல் பருமன் குறையும். அதே நேரத்தில் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சியால் உடல் எடை குறையும் போது ஏற்படும் சோர்வு, யோகாவில் இருக்காது என்பது உறுதி. இதனால் தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு இல்லற வாழ்க்கையிலும் ஈடுபாடு அதிகரிக்க உதவுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

Health benefits of Sex

தம்பதியரிடையே உணர்வு பூர்வமான தொடர்பை ஏற்படுத்த உதவும் தாம்பத்ய உறவானது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் எண்ணற்ற நன்மைகளை ஏற்படுத்துவதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.

பிரகாசமான முகம்

உறவானது தம்பதியர்களின் உடலிற்கு பொலிவூட்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உடலுறவினால் மனஉளைச்சல் நீங்குவதால் உங்கள் முகம் எப்பொழுதும் பிரகாசமாக இருக்குமாம்.

உடலுறவின்போது சுவாசம் அதிகரிப்பதனால் இதயம் மற்றும் மூளைக்கு ஆக்சிஜன் அளவு சீராக கிடைக்கிறதாம். இதனால் உடல் பொலிவாகுமாம். உதட்டில் அடிக்கடி முத்தமிடுவதால் எனாமலுக்கு சக்தி கிடைக்கிறதாம். இதனால் பற்கள் பளபளப்பாகுமாம்.

அழகாய் பூக்குதே

உறவின் போதும் வெளியேறும் வியர்வையினால் மேனி பளபளப்பாக இருக்குமாம். பெண்களுக்கு தலைமுடி பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்குமாம்.

கட்டான உடல்

அதிகமாக காதலுணர்வு ஏற்படுவதனால் அதிகமாக உள்ள கெட்ட கொழுப்பு கரைக்கப்படுகிறதாம். இதனால் உடலில் தேவையற்ற இடங்களில் உள்ள சதைகள் கரைந்து கட்டான உடலமைப்பு ஏற்படுகிறதாம். நீச்சல் மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கிடைக்கின்ற உடல் கட்டமைப்பினை விட தாம்பத்ய உறவின் போது கிடைக்கும் உடல் அழகு 20 சதவிகிதம் அதிகமாக இருக்குமாம்.

ரத்த அணுக்கள் எண்ணிக்கை

தினமும் உறவு கொள்ளும் தம்பதியருக்கு ஹீமோகுளோபினின் செயற்பாடு 30 சதவிகிதமாக அதிகரிக்கும் என பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. உடலுறவினால் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறதாம்.

வயதான தம்பதியர் உறவு கொள்வதன் மூலம் மூட்டு வலி, மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் போன்றவை நீங்குமாம்.

மூச்சடைப்பு ஏற்படாது

அடிக்கடி உறவில் ஈடுபடும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதில்லையாம். உறவின் போது அதிகமாக மூச்சு வாங்குவதால் நாசித்துவாரம் சுத்திகரிக்கப்படுகிறது. இதனால் மூச்சடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதில்லையாம். ஆண்களுக்கு ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற நோய்கள் தாக்குவதில்லையாம்.

சிறந்த எக்ஸர்சைஸ்

தாம்பத்ய உறவினால் உடல் சமநிலை பெறுகிறதாம் இதனால் ஹார்மோன் சுரப்பு சீராக இருக்கிறதாம். இதனால்தான் செக்ஸ் ஒரு சுகமான உடற்பயிற்சி என்று கூறுகின்றனர்.

இதயநோய் தீரும்

வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது உறவு கொள்ளும் தம்பதியருக்கு இதயக் கோளாறுகள் 50 வீதமாகக் குறைக்கப்படுகிறதாம். உறவின் போது இதயமானது 80 முதல் 150 தடவைவரை துடிக்கிறதாம். இதனால் இதயத்தை சுற்றி உள்ள கொழுப்புகள் கரைக்கப்பட்டு மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைகிறதாம்.

முக்கியமான விசயம் குறித்த முடிவு எடுக்கும் முன்பு உறவு வைத்துக்கொள்வது நல்லது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் திடமும், மன உறுதியும் ஏற்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
 

Do you know Bedroom manners

இல்லறத்தில் தாம்பத்யம் சொர்க்கமாக திகழ படுக்கையறை இனிமையாக இருக்க வேண்டும். ஏனெனில் படுக்கையறையில் தான் ஒரு தம்பதியரின் அடுத்த நாளுக்குத் தேவையான சக்தி சேமிக்கப்படுகிறது. கணவனும் மனைவியும் தங்களின் உடலை ரீ சார்ஜ் செய்து கொள்ளும் இடமே படுக்கையறையாகும். இனிமையான செக்ஸ் லைஃபுக்கு படுக்கையறையின் பங்கு கணிசமானதாகவே இருக்கிறது. படுக்கையறையானது அனைத்து அம்சங்களுடன் அமைந்து விட்டால் அந்த குடும்பத்தில் ஏற்படுகின்ற அனைத்து பிரச்சனைக்கும் படுக்கையறையிலேயே சுமூகமாக தீர்த்துக் கொள்ளலாம்

பெட்ரூம் மேனர்ஸ்

படுக்கையறையில் கணவன் மனைவி இருவரும் அன்பு வழியும் பாசப் பிணைப்புடன் இருப்பார்கள். ஆனால் சமயங்களில் அவர்களையும் அறியாமல்… பலவீனமாக நடந்து கொண்டு விடுவார்கள். இது அந்த நேரத்து இனிமையை தகர்த்து விடக்கூடும். எனவே தான் எந்த நேரத்தில் எப்படி எல்லாம் தம்பதிகள் நடந்து கொள்ள வேண்டும்? என்று ஆங்கிலேயர்கள் வரையறுத்தார்கள். அவர்கள் கூறிய முக்கியமான விஷயம் தான் பெட்ரூம் மேனர்ஸ். படுக்கையறையில் கணவனும், மனைவியும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்வது தான் பெட்ரூம் மேனர்ஸ் ஆகும்.

நாகரீகமான தாம்பத்யம்

படுக்கையறையில் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் மதிப்பது தான் இதன் அடிப்படை அம்சம். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் படுக்கையறையில் தம்பதிகள் நாகரிகமாக நடந்து கொள்வது என்று சொல்லலாம். கணவன் மனைவி என்கிற உன்னதமான உறவு முறையில் அடிப்படையில் உடலுறவை மேற்கொள்ளும் போது, அவர்களிடையே பூரணமான, நிம்மதியான சுகம் கிடைக்க இந்த பெட்ரூம் மேனர்ஸ் வழி வகுக்கிறது. அருமையான, அழகான பெட்ரூம் மேனர்ஸ் தம்பதியரின் தாம்பத்திய வாழ்க்கையை திருப்திகரமானதாக உயர்த்தி, மெருகூட்டும்.

சுகாதாரமான நடவடிக்கை

கணவன் மனைவி இரண்டு பேரும் நன்றாக பல் துலக்கி விட்டு, முடிந்தால் ஒரு குளியலைப் போட்டு விட்டு படுக்கை அறைக்குள் நுழையாலாம்.

இல்லற சுகம் காண முயல்கிற தம்பதிகள் உறவில் ஈடுபடுவதற்கு முன்பாக மிதமான சுடுநீரில் குளித்தால் உடல் புத்துணர்ச்சியுடன் திகழும்.

தம்பதிகள் இரண்டு பேரும் உறவுக்கு நுழையும் முன்பாக, தங்களின் பிறப்புறுப்புகளை சுத்தம் செய்து கொள்வது நல்லது. கணவன் தனது பிறப்புறுப்பின் முன் தோலைப் பின்னுக்கு தள்ளி சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். மனைவியும் சுய சுத்தம் கடைபிடிப்பது அவசியமாகும்.

பிரச்சினையை பேசாதீர்கள்

வீட்டுக்குள் நுழையும் போதே வீட்டுக்கு வெளியே செருப்பை கழற்றி விடுவது மாதிரி… படுக்கையறைக்குள் நுழைகின்ற தம்பதிகள் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதனை உள்ளே கொண்டு போகாமல் இருப்பது நல்லது. படுக்கையறைக்குள் வந்தவுடன் தான் பல பேர் அடுத்த மாசம் வரப் போகிற ஒரு விழாவிற்கு என்ன மாதிரியான டிரெஸ் எடுப்பது என்பதை பேசுவார்கள். அல்லது கணவன் மனைவியிடமோ, அல்லது மனைவி கணவனிடமோ கோர்ட்டில் வழக்கு தொடுப்பது மாதிரி யார் மீதாவது குற்றப் பத்திரிகை வாசித்துக் கொண்டு இருப்பார்கள்.

புத்துணர்ச்சியுடன் இருங்கள்

பல கணவன் மனைவி திருமணம் முடிந்த பிறகு இன்னமே நமக்கு என்ன இதெல்லாம் வேண்டிக்கிடக்கு என்கிற தொனியில் தான் ஆடை உடுத்துவார்கள், தங்கள் தோற்றம் குறித்து அலட்டிக் கொள்ளாதவர்கள் எதிலும் ஒழுங்கானவர்களாக இருக்க மாட்டார்கள் என்கிறது உளவியல் குறிப்பு ஒன்று.

படுக்கை அறையில் மனைவி ஜடமாக இருக்கக் காரணம் படுக்கை அறையின் வெளியிலே அவள் எவ்வாறு நடத்தப்படுகிறாள் என்பதை பொருத்து அமையும். எனவே பெண் எதிர்பார்ப்பது போல படுக்கை அறையில் மட்டுமல்லாமல் வெளியேயும் அன்பாக, ஆதரவாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். அப்புறம் என்ன உங்கள் இல்லறம் இனிய சங்கீதம் ஒலிக்கும் நல்லறமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

7 ways to boost your confidence in Bed room

எந்த ஒரு விசயத்திற்கும் தன்னம்பிக்கை வேண்டும். நம்பிக்கையில்லாமல் தொடங்கும் விசயம் வெற்றியடையாது என்கின்றனர் நிபுணர்கள். அதுபோலத்தான் தாம்பத்யத்தையும் தன்னம்பிக்கையோடு அணுகவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள். வெற்றிகரமான இல்லற வாழ்க்கைக்கு அவர்கள் கூறும் ஆலோசனைகளை கேளுங்களேன்.

பயத்தை விட்டொழியுங்கள்

படுக்கையறையில் பயத்துக்கு எந்த வேலையும் இருக்கக் கூடாது. ஒரு கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ படுக்கையறை என்பது பயங்களின் கூடாரமாக இருந்தால் தாம்பத்ய சுகம் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.தேவையில்லாத பயத்தை விட்டொழியுங்கள். உங்கள் தன்னம்பிக்கைதான் தாம்பத்யத்தில் உங்களை வெற்றிகரமானவராக செயல்பட வைக்கும். எனவே படுக்கையறைக்கு பாம்பு, பூதம், எதுவும் இல்லை. எனவே தேவையற்ற பயத்தை விட்டுவிட்டு தன்னம்பிக்கையுடன் தொடங்குங்கள் வெற்றிகரமான வாழ்க்கை கிடைக்கும்.

சந்தோசமான சிரிப்பு

படுக்கையறையில் நுழையும் போதே புன்னகையுடன் இருங்கள். முடிந்த அளவு மகிழ்ச்சியோடு சிரியுங்கள். தாம்பத்யம் என்பது மகிழ்ச்சிகரமானதுதானே. அங்கே எதற்கு சோகமும், கவலையும். எனவே சந்தோசமாக சிரியுங்கள். சிரிப்பே உங்கள் இருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

சின்ன சின்ன விளையாட்டு

படுக்கையறையில் நீங்கள் விளையாடும் சின்ன சின்ன விளையாட்டுக்கள் உங்களின் உற்சாகத்தை அதிகரிக்கும். விளையாட்டுக்களின் மூலம் உங்கள் உணர்வுகள் கிளர்ச்சியடையும் என்கின்றனர் நிபுணர்கள். இதன் மூலம் தன்னம்பிக்கையோடு தாம்பத்ய வாழ்க்கையை தொடரலாம்.

அமைதி அவசியம்

படுக்கையறையில் எப்போதும் பூரண அமைதி நிலவ வேண்டும். படுக்கையறை தூய்மையின் இருப்பிடமாக தாம்பத்திய உறவும், ஆரோக்கியம் ததும்புவதாகவும், மிகுந்த பாதுகாப்பு கொண்டதாகவும் அமைந்திருக்க வேண்டும். புழுக்கமும் வியர்வையும் நங்கூரம் போடும் இடமாக இருக்கக் கூடாது. காற்றுக்கு எந்த பஞ்சமும் இருக்கக் கூடாது.

உற்சாகமாக தொடங்குங்கள்

கணவன் மனைவி இருவரும் இன்பம் பொங்க இணைவதற்கு இரண்டு பேரும் ஒருவரையருவர் தாம்பத்திய உறவில் விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு கணவன் மனைவி இருவரும் ஒருவரையருவர் விரும்பி ஏற்றுக் கொள்வதில் எந்த சிக்கல்களும். இருக்கக் கூடாது. சுத்தமின்மை, வழியும் வியர்வை, உடல் துர்நாற்றம், எரிச்சலூட்டும் வியர்க்குரு, நெருங்கவே முடியாமல் செய்யும் வாய் துர்நாற்றம் ஆகியவை இல்லற சுகத்தை பாதிக்கும். பெண்கள் கஸ்தூரி மஞ்சள், கடலை மாவு, வால்மிளகு சேர்த்து அரைத்த குளியல் பொடியை பயன்படுத்தி தங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ளலாம்.

கணவனோ மனைவியோ தங்களுக்கு தோல் நோய்கள் இருந்தால் அதற்கு அம்மான் பச்சரிசி, மஞ்சள், வேப்பிலை, துளசி இலை போன்றவற்றை மைய அரைத்து உடம்பு பூராவும் பூசி வைத்து அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம்.

சிகரெட் புகைப்பவர்கள். மதுப் பழக்கம் உள்ளவர்கள் மேல் எப்போதும் ஒரு வித வாசனை வீசும். இது போன்ற பழக்கம் உள்ளவர்கள் படுக்கையறைக்குள் நுழையும் போது தங்கள் மேல் நாற்றம் அடிக்காமல் இருக்க ஒரு குளியலைப் போட்டு விட்டு நுழைவது நல்லது.

மணக்கும் மலர்கள்

நமது படுக்கையறையை தங்கமும் வைரமும் வைத்து இழைத்து வைத்திருக்க வாய்ப்பில்லை. நம்மால் எளிதில் வாங்கி சூடிக் கொள்ள முடிகிற பூக்களைக் கொண்டே நமது படுக்கையறையை கமகமக்க வைக்கலாமே. பூக்களின் நறுமணமே உற்சாகத்தையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

பகிர்ந்து கொள்ளுங்கள்

கணவனோ மனைவியோ தாம்பத்தியத்தில் தங்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். இது உங்கள் மீதான தேவையற்ற அச்சத்தை விலக்க உதவும். இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்ளுங்கள். தாம்பத்யம் குறித்த பயம் விலகும்.

Healing power of Ginger

இந்திய சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை, கொத்தமல்லி, இவை அனைத்தும் மருத்துவ குணம் கொண்ட பொருட்கள். இஞ்சியே இல்லை என்றால் நமக்கு சாப்பாடு ருசிக்காது; பசி ஏற்படாது. இஞ்சி எரிக்கும் குணத்தை உடையது. பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது. கடினமான உணவுகளைக் கூட எளிதில் ஜீரணமாக்கும் தன்மை கொண்டது.

இஞ்சியில் உள்ள சத்துக்கள்

சமையலில் பயன்படுத்தப்படும் இஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இஞ்சியில் கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாது உப்புகள் உள்ளன. எ, பி, சி போன்ற வைட்டமின்களும் காணப்படுகின்றன.

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை கரைந்து விடும். இஞ்சி சாறில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

இஞ்சி காயகல்பம்

இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் சீவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். இதனை தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டுவிடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். நெஞ்சு உரம் பெறும்.

வாய்வுத் தொல்லை நீங்கும்

இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும். இஞ்சியை வதக்கி தேன் விட்டு கிளறி நீர் விட்டு கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்த பின் நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

வலி நீக்கும் நிவாரணி

உடலில் எந்தக் கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது இஞ்சி. இயற்கை வழங்கிய கொடையான இஞ்சி, மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும் தன்மை உடையது.

இதயத்தை காக்கும்

இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சளி இருமல் போக்கும்

ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு கோப்பை பாலில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல், சளி தொல்லைகள் நீங்கும்.

இஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 5, மிளகு 10 இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டு சுண்ட காய்ச்சி வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாசகாசம், இரைப்பு நீங்கும்.

சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்தக் கஷாயத்தை காலை மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம். இனி இருமல், சளி வந்தால் இந்த முறையை பின்பற்றி பாருங்கள் உடனடி பலன் கிடைக்கும்.

Fatty Foods bad for Sperm

அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்களின் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே இளம் தலைமுறை ஆண்கள் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இன்றைய இளம் தலைமுறையினரின் முன்பு உள்ள முக்கியமான பிரச்சினை குழந்தையின்மைதான். இதற்கு உணவுப் பழக்கமும் முக்கிய காரணமாக இருக்கிறது.

கொழுப்பு சத்து உணவு

உடல் ஆரோக்கியம், உணவு பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் துரித உணவகங்களில் கிடைக்கும் உணவுகளும், ருசிக்காக அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உண்பதன் மூலமும் இளைஞர்களின் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 35 சதவிகித ஆண்கள் இதுபோன்ற குறைபாடினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அதேபோல் அதிக புகைப்பழக்கம் மதுப்பழக்கம், மன அழுத்தம், போன்றவையும் ஆண்களின் விந்தணு குறைபாட்டில் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதேசமயம் ஒமேகா 3 கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியில் குறைபாடு எதுவும் ஏற்படவில்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.ஆண்களின் குறைபாட்டினை போக்க சித்த மருத்துவத்தின் மூலம் நம் முன்னோர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். அவற்றை பின்பற்றினால் விந்தணு குறைபாடு நீங்கி நல்ல பலன் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

பாதம், கல்கண்டு

தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும். இரவு படுக்கைக்கு செல்ல மூன்று மணி நேரத்திற்கு முன்பே முழு மாதுளம்பழம் சாப்பிட வேண்டும்.

வால் முளகு, பாதம்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்.

அரசம்பழம்

அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும். அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடவேண்டும். பின்னர் ஒரு டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும்.

அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும். கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.

முருங்கைப் பூ கசாயம்

முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து ஒரு அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும். மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை ஒருடம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்.

நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

How Dancing is God for Health

நடனம் என்பது உடலுக்கு உற்சாகம் தரக்கூடிய சிறந்த உடற்பயிற்சி என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். வயதானலும், நோய் பாதிப்புகள் இருந்தாலும் உற்சாகமான நடனமாடுவது மனதையும், உடலையும் உற்சாகப் படுத்தி இளமையை மீட்டுத்தரும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

மன உளைச்சல் நீங்கும்

நடனமாடுவதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைக்கிறது. இசையோடு கூடிய நடனம் மன அழுத்தத்தை போக்குவதாகவும் உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். இதயநோய் ஏற்படும் வாய்ப்பு குறைகிறாதாம். நடனமாடுவதன் மூலம் உருவாகும் உற்சாக அலைகள் டென்சனை நீக்கி மன உளைச்சலை போக்குகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

வயதானவர்களுக்கு நடனம்

வயதானவர்கள் நடனமாடுவது அவர்களை இளமையாக நினைக்கத் தூண்டுகிறதாம். எனவே உற்சாகமாக நடனமாடுங்கள் இளமை திரும்பும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். நடனமானது ஸ்டாமினாவை அதிகரிக்கிறது.

அல்சீமர் குணமாகும்

நடனமாடுவதால் உடல் இளைக்கிறது. ரத்த அழுத்தம் குறைக்கிறது. மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராகிறது என்கின்றனர் நிபுணர்கள். அல்லீமர் நோய்க்கு ஆளானவர்களை நடனமாடச் செய்வதன் மூலம் அவர்களின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நடனமாடுவதன் மூலம் பாதங்கள், கால் தசைகள் உறுதியாகிறது.

சர்க்கரை நோய் குணமாகும்

நடனம் ஆடினால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். முதல்கட்ட ஆய்வில் வாரத்துக்கு 4 மணி முதல் 6 மணி நேரம் வரை நடனம் ஆட அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். ஒரு மாதம் வரை அவர்கள் இவ்வாறு நடனம் ஆடினர். இதில் அவர்களது நீரிழிவு நோய் பாதிப்பு ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தது தெரிய வந்தது. அதோடு, அவர்களது உடல் எடையும் கணிசமாக குறைந்திருந்தது.

மன அழுத்தம், உணவு கட்டுப்பாடு இல்லாமை, முறையான உடற்பயிற்சிகள் இல்லாதது ஆகியவையே நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணம். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி நடனமாடினால், உடலுக்கு போதிய பயிற்சி கிடைக்கிறது. இதனால் மன அழுத்தம் நீங்கி மனம் லேசாகிறது. உடலும் மனமும் சுறுசுறுப்பாக இருக்கிறது. இதனால் நீரிழிவு நோய் பாதிப்பு கட்டுப்படுகிறது. பருமன் ஆகாமல் உடலை மெல்லியதாக வைத்திருக்கவும் நடனம் உதவுகிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

How to Increase Estrogen for Ladies

மனிதர்களின் வாழ்க்கை சுழற்சியில் ஹார்மோன்களின் பங்கு முக்கியமானது. ஹார்மோன்கள் சரியாக சுரந்தால் மட்டுமே பாதிப்புகள் ஏற்படாது. ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் பெண்களின் கருவுறுதலுக்கும், மெனோபாஸ் காலத்தில் மனம் தளர்வடையாமல் இருப்பதற்கு உதவுகிறது. நல்ல கொலஸ்ட்ராலையும், தீய கொலஸ்ட்ராலையும் ஒருகட்டுப்பாட்டில் வைப்பது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன். இது நிரந்தரமாக மாதவிடாய் நிற்கும் பருவத்தில் இதன் சுரப்பு குறைந்துவிடும். இதனால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த முடியாமல் போகும். தீய கொலஸ்ட்ரால் அதிகரித்து இதய நோய்கள் உண்டாகும்.

ஆஸ்டியோ போரோசிஸ்

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் கால்சியம் உடலில் படிவதற்கு உதவுகிறது. ஈஸ்ட்ரோஜன் குறைந்தால் எலும்பிலிருந்த கால்ஷியம் குறையும். நாளடைவில் எலும்புகள் வலுவிழந்து எலும்புகள் அடிக்கடி முறிய நேரிடும். மெனோபாஸ்க்கு பிறகு வரும் முதல் அல்லது இரண்டாவது ஆண்டுகளில் அதிகமான எலும்பு இழப்பு நேருகிறது. ஆசிய பெண்கள் தான் அதிக அளவு ஆஸ்டியோபொராசிஸ் நோய்க்கு உள்ளாகுகிறார்கள். அதேசமயம் ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரப்பதால் மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம், சினைப்பை கட்டிகள் ஆகியவை ஏற்படுகின்றன. எனவே, சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு, ஹார் மோன்களை எவ்வாறு சமநிலையில் வைத்துக் கொள்வது என்பதற்காக சில ஆலோசனைகளை கூறியுள்ளனர் உணவியல் நிபுணர்கள்.

பைட்டோ ஈஸ்ட்ரோஜன்

உணவுகளில் இயற்கையாக காணப்படும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன், பெண்களுக்கான ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. அனைத்து வகை பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றிலும், ஈஸ்ட்ரோஜன் காணப்படுகிறது. ஆனால், அவை “ஐசோஃப்ளாவின்’ என்ற வடிவிலேயே அதிக பலன் தருகிறது. இவை, சோயா மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது.

சென்ஈஸ்ட்ரோஜன் உணவுகள்

ஈஸ்ட்ரோஜன் போன்ற ரசாயனமான "சென்ஈஸ்ட்ரோஜன்கள்' பூச்சி மருந்துகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் காணப்படுகின்றன. இவை, பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை தோற்றுவிக்கின்றன. உடல் எடை அதிகம் உடையவர்களுக்கு, இந்த ரசாயனம் அதிகளவு காணப்படும்.

கொழுப்பு நிறைந்த உணவுகளான வெண்ணெய் மற்றும் இறைச்சி ஆகியவற்றை பிளாஸ்டிக் உறையில் சேமிப்பது, பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் உணவுகளை வைத்து, அவற்றை மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதிகளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது, உடலில் அதிகளவு, "சென்ஈஸ்ட்ரோஜன்கள்' சேருகின்றன என்பதால் அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.

பழங்கள் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் காணப்படுகிறது. எனவே தினமும், இரண்டு அல்லது மூன்று பழங்கள் சாப்பிடுவதோடு, சாலட்கள் மற்றும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ், சோயா மற்றும் பருப்பு வகைகளை அதிகளவு சாப்பிட வேண்டும். இவை உடலில் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை வெளியேற்ற உதவுகிறது. ரசாயன கலப்பின்றி இயற்கை முறையில் உருவாக்கப்படும் உணவுகள், உடலுக்கு சிறந்தது. இவற்றால், கல்லீரல் நன்கு செயல்பட்டு, அதிகப்படியான ஹார்மோன்களை வெளியேற்ற உதவுகிறது.

ஓமேகா 3 உணவுகள்

ஒமேகா – 3 கொழுப்பு நிறைந்த உணவுகளை முறையாக சாப்பிட வேண்டும். இவை, எண்ணெய் சத்து நிறைந்த மீன்கள், பாதாம், அக்ரூட் போன்ற பருப்பு வகைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணிக்காய் ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது. மாதவிடாயின் போது ஏற்படும் வலியை தடுக்கும் தன்மை இந்த உணவுகளில் காணப்படுகிறது. தினமும் 2.5 லி., முதல் 3 லி., வரை தண்ணீர் குடிக்க வேண்டும். மூலிகை டீ மற்றும் இளநீர் ஆகியவையும் குடிக்கலாம். டீ, காபி போன்ற காபின் நிறைந்த பானங்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. காபின், உடலில் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கும் ஊட்டச்சத்தின் ஆற்றலை குறைக்கும் வாய்ப்பு உள்ளது.

நார்ச்சத்து உணவுகள்

பெண்களுக்கான ஹார்மோன் களை சமநிலைப்படுத்துவதில், நார்ச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களில் காணப்படும் நார்ச்சத்து, ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது. உடலில் காணப்படும் பழைய ஈஸ்ட்ரோஜனை வெளியேற்றும் நிகழ்வு, மற்ற பெண்ளோடு ஒப்பிடும் போது, அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடும் பெண்களின் உடலில் மூன்று மடங்கு அதிகமாக செயல்படுகிறது. வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உணவுகளை அதிகம் உண்ணவேண்டும் இதனால் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு சரிவிகிதமாக இருக்கும்.

ஈஸ்ட்ரோஜனை சமப்படுத்தும் யோகா

தினசரி அரை மணிநேரம் தியானம் மற்றும் யோகா செய்வதன் மூலம் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு சரிவிகிதமாக இருக்கும். அட்ரீனலினை ஊக்குவிக்கும். மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றினால் ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

Home Remedies for Dental Care

ஆரோக்கியமான பற்களே ஆரோக்கியமான வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன என்கின்றது மருத்துவ உலகம். பண்டைய காலத்தில் பல் போனால் சொல் போச்சு என்ற பழமொழி உண்டு. இன்றைக்கு பற்கள் பாதிக்கப்பட்டால் இதயம், பக்கவாதம் போன்ற நோய்களும் எட்டிப்பார்க்கும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே பற்களை ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டியது அவசியம்.

பற்களை பாதுகாக்க வீட்டில் உள்ள பொருட்களே உதவுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள் அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

சிறு வயதில் இருந்தே பல்லை ஆரோக்யமாக வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பிரச்னை வந்து, வலிக்க ஆரம்பித்த பின்னர் தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே பலருக்கும் உள்ளது. குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததில் இருந்தே தினமும் இருமுறை பல்துலக்க வேண்டும். பல்லின் இடுக்குகளில் உணவுப் பொருள்கள் படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சிக்கிக் கொண்டால் வாய் கொப்பளித்து உடனடியாக பல்லை சுத்தம் செய்ய வேண்டும்.

கீரைகளை நன்றாக மென்று துப்பலாம். இதனால் பல் இடுக்குகளில் உள்ள உணவுப்பொருட்கள் வெளியேறிவிடும், பற்கள் ஆரோக்கியமடையும். பச்சை வெங்காயத்தை மூன்று நிமிடம் நன்றாக மென்று துப்ப வாய், பற்களில் உள்ள தேவையற்ற கிருமிகள் இறந்துவிடும். உணவு உண்டவுடன் வெதுவெதுப்பான நீரில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு சேர்த்து நன்றாக கொப்பளிக்க வேண்டும்.

சத்தான உணவுகள்

சத்துக் குறைபாடான உணவுகள் மற்றும் உடலில் ஏற்படும் சர்க்கரை உள்ளிட்ட மற்ற நோய்களின் காரணமாகவும் பல் ஆரோக்யம் விரைவில் கெட்டுவிட வாய்ப்புள்ளது. எச்சிலில் உள்ள அமிலம் மற்றும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டும் சேர்ந்து பல்லில் சொத்தையை உருவாக்குகிறது.

தினசரி உணவில் கால்சியம், வைட்டமின் சி போன்றவைகளை அதிகம் சேர்த்துக்கொள்வது பற்களின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். தினசரி அரை எலுமிச்சையை சாறு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கொப்பளிக்கலாம்.

பல் சொத்தை பெரிதாக வளர்ந்து பல்லின் வேரை தாக்கும் போது தான் வலி ஏற்படுகிறது. இந்த வலியை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் பல்லின் வேர்ப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு பல்லை முழுமையாக இழக்கும் நிலை ஏற்படும்.

பல்வலியை போக்க

பல்வலி ஏற்பட்டால் அந்த இடத்தில் சிறிதளவு வெள்ளைப் பூண்டை எடுத்து பல் வலிக்கும் இடத்தில் வைக்க நிவாரணம் கிடைக்கும். அதேபோல் கிராம்பு பொடி செய்து பல்வலி உள்ள இடத்தில் வைக்கலாம். வெள்ளைப் பூண்டு, கல் உப்பு சேர்த்து நன்றாக பல் தேய்க்க பல்வலி குணமாகும்.

வாய் துர்நாற்றம் போக

தினசரி நன்றாக பல்துலக்க வேண்டும். வாய், நாக்கு உள்ளிட்ட இடங்களில் அழுக்குகளை நீக்க வேண்டும். கொத்தமல்லி இலைகளை நன்றாக மென்று சாறுகளை விழுங்கலாம்.

வெதுப்பான நீரில் ஒரு டீ ஸ்பூன் இஞ்சி, ஒரு டீ ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து நன்றாக கொப்பளிக்க வேண்டும். தினசரி மூன்று முறை இவ்வாறு செய்யலாம். சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும்.

வெதுவெதுப்பான வெந்நீரில் சிறிதளவு பேகிங் சோடா, சிறிதளவு தூள் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்கலாம்.

ஆரோக்கியம் அவசியம்

இதேபோல் பல்லில் ஏற்படும் பல் கூச்சம், ஈறு வீக்கம், பல் சொத்தை, வாய் நாற்றம் உள்ளிட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக பல் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் பல்லின் ஆரோக்யத்தையும், உடல் ஆரோக்கியத்தையும், அழகையும் பாதுகாக்க முடியும்.

Cure Infertility using YOGA

பெண்களை முழுமையடையச் செய்வது தாய்மை. இது பெண்களுக்கு இறைவன் அளிக்கும் மிகப்பெரிய வரம். தாய்மையடைவது பெண்மைக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகவும் போற்றப்படுகிறது. எனவேதான் குழந்தையின்மை என்னும் குறை பெண்களை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. குழந்தையின்மை குறைபாட்டினை யோகா மூலம் நிவர்த்தி செய்யலாம் என மருத்துவர்களே தெரிவித்துள்ளனர்.

குழந்தையின்மை குறை ஆணிடமும் இருக்கலாம் இல்லை பெண்ணிடமும் இருக்கலாம். குழந்தையின்மை குறைபாடும் ஆண்மை, பெண்மை குறைபாடும் வேறு வேறு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தாம்பத்ய உறவே மேற்கொள்ள முடியாத நிலைதான் ஆண்மை, பெண்மை குறை எனப்படும்.

குழந்தையின்மையின் காரணங்கள்

விபத்தினால் பிறப்புறுப்பில் அடிபடுவது, பிறப்புறுப்புகளின் பிறவி குறைபாடுகள், பிறப்புறுக்களின் வளர்ச்சியின்மை போன்றவையும் உயிரணு குறைபாடு உயிரணு செல்லும் பாதை அடைப்பு, விந்து அசாதாரணமாக, இயற்கைக்கு மாறாக இருப்பது, குறைந்த அளவே உற்பத்தியாவது அல்லது விந்துக்களே இல்லாமல் போவது அல்லது விந்து நகர முடியாமல், ஆணுறுப்பை அடையமுடியாமல் போவது போன்ற காரணங்கள் ஆண்களுக்கு உரிய குறைபாடுகளாக கூறப்படுகின்றன.

உயிரணு பின்னோக்கி செல்லுதல்

ஸ்டீராய்ட் மருந்துகள் ஹார்மோன் அளவுகளை குறைத்து விந்து உற்பத்தியில் தலையிட்டு, பாதிப்பை ஏற்படுத்தும். அபூர்வமாக விந்து முன்னே செல்லாமல், பின்னால், ரிவர்ஸில் சென்று விடும். நீரிழிவு நோயாளிகளுக்கும், இடுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் இது ஏற்படலாம்.

கருமுட்டை பாதிப்பு

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள். மாதம் ஒரு முறை சினைமுட்டை வெளியாகாமல் போவது குழந்தையின்மைக்கு காரணமாகும். அதேபோல் புரோஜிஸ்டெரோன் ஹார்மோன் சுரக்காமல் போவது முக்கிய குறைபாடாகும். இந்த ப்ரோஜிஸ்டெரோன் ஹார்மோன், மாதா மாதம் கருப்பை பையின் உட்படையை, கெட்டியாக்கும். முட்டையின் வரவை எதிர்நோக்கி இந்த வேலையை அது செய்கிறது. மூளை, பிட்யூட்டரிக்கு தேவையான கோனாடோட்ரேபின் என்ற ஊக்குவிக்கும் ஹார்மோனை அளிக்க முடியாமல் போனால், முட்டை உற்பத்தியாகாது. தைராய்டு, அட்ரீனலின் சுரப்பிகளின் கோளாறுகள், நீரிழிவு நோய், அதிக உடல் பருமன் போன்றவையும் குழந்தையின்மையை ஏற்படுத்தும்.

குறைபாடுகளை நிவர்த்தி செய்ய

பெண்களின் பிறப்பு உறுப்புகளின் பிறவிக்கோளாறுகள், கருப்பப்பை பாதைகளில் கட்டி ஏற்படுதல் போன்ற குறைபாடுகளை கண்டறிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் உடல் கோளாறுகளை சரி செய்தபின், குழந்தை உண்டாகும் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. புரதம் அதிகமுள்ள மீன், வெண்மாமிசம், முட்டைகள் போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும். வெங்காய சாற்றுடன், தேன் நெய், நெல்லிக்காய் பொடி, பால், வெண்ணை இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோகாசனம்

குழந்தையின்மை பிரச்சினையை யோகாசனம் மூலம் நிவர்த்தி செய்ய முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆசிரியர் மூலம் முறையாக கற்றுக்கொண்ட பின்னர் யோகாசனம் செய்தால் மட்டுமே முழுமையான பலன் கிடைக்கும். தினசரி சூர்ய நமஸ்காரம், பத்த கோனாசனம், கூர்மாசனம்,அர்த்த மத்ஸ்யேந்திர ஆசனம், மூலபந்தாசனம்,சர்வாங்காசனம் உள்ளிட்ட ஆசனங்களை செய்வதன் மூலம் உடலில் உள்ள குழந்தையின்மை குறைபாடு நீங்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Sunday 11 March 2012

5 ways to keep your wife Happy

இல்லற வாழ்க்கையில் தம்பதியரிடையே விட்டுக்கொடுத்தல் இருந்தால் சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை என்கின்றனர் உளவியலாளர்கள். வீட்டில் மனைவியை அதிகாரம் செய்யும் ஆண்கள் ஒரு சில விசயங்களில் விட்டுக்கொடுத்து மனைவியின் சொல் பேச்சு கேட்பது அவசியம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருக்க உளவியலாளர்கள் கூறும் சின்னச் சின்ன டிப்ஸ்.

அதிகாரம் வேண்டாம்

எந்த விசயம் என்றாலும் தனக்கேற்றார் போல நடந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கும் ஆண்கள், பெண்ணுக்கும் மனது உண்டு என்பதை அறிந்துகொள்ளவேண்டும். புதியதாக முயற்சிக்கிறேன் என்ற நினைப்பில் எதையாவது செய்யப்போய் பெண்களின் வலிகளையும், துன்பங்களையும் உணராமல் இருந்துவிடுகின்றனர். இதனால் உறவில் விரிசல் ஏற்படுகிறது. எனவே தன்னைப் போல தனது துணைக்கும் விருப்பம் இருக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவது சிக்கல் ஏற்படாமல் தவிர்க்கலாம் என்கின்றனர் உளவியலாளர்கள்.

மனதை அறிந்து கொள்ளுங்கள்
பெண்களின் மனதை அறிவது கடினம் என்பார்கள். இது தம்பதியரிடையே சரியான கருத்து அல்ல. பெண்களைப் பொருத்தவரை கணவர்தான் அவர்களின் கதாநாயகன். எனவே இருவரும் தங்களின் விருப்பங்களை மனம் விட்டுப் பேசி தேவையானதைப் பெற்றுக்கொள்ளலாம். இதனால் இருவரின் விருப்பு, வெருப்புகளை அறிந்து கொள்ளமுடியும். இருவரும் நட்பாய் இருந்தால் குடும்ப உறவில் விரிசல் எழ வாய்ப்பில்லை. மதிக்கப்படுகிறோம் என்று மனைவியும் மகிழ்ச்சியடைவார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

இருநாடுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படுகிறது. அதேபோல் தம்பதியர் இடையேயும், மனதளவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இருப்பது குடும்பத்திற்கு நன்மை ஏற்படும். இது இருமனங்களுக்கு இடையேயான இருக்கத்தை நீக்கும். தன்னை தன் கணவர் புரிந்து கொள்கிறார் என்பதே மனைவியை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும்.

சுதந்திர உணர்வு

திருமணத்திற்கு முன்பு இருந்த குடும்ப சூழ்நிலை வேறு. திருமணத்திற்குப் பின்னர் பிறந்த குடும்பத்தில் இருந்து தனது உறவுகளையும், விருப்பங்களையும் முழுவதுமாக விட்டு விட்டு கணவரின் குடும்பத்திற்குள் வருகின்றனர். அவர்களை அடிமைப் படுத்தாமல் சுதந்திர உணர்வோடு செயல்பட விடுவது பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும்.

கடவுள் தந்த வரம்

ஒரு சிலர் பெண்களை தாம்பத்ய உறவிற்காகவும், குழந்தை பெற்றுக் கொடுக்கும் இயந்திரம் போலவும் நினைத்து நடத்துவார்கள். இது தவறான நடைமுறை. இதனால் கணவன், மனைவி இருவருமே சந்தோசமாக இருக்க முடியாது. வாழ்க்கைத் துணைவியை கடவுள் தந்த வரம் என நினைத்து அவரை போற்றினால் உங்களின் வாழ்க்கையை வசந்தமாக்குவது நிச்சயம். மனைவியை உங்கள் மனதின் வடிவமாக நினைத்து கொண்டாடுங்கள். அப்புறம் என்ன உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அலை வீசும்.

Home remedies for Hair Fall

இன்றைய இளைய தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சினை கூந்தல் உதிர்வது. உடல்சூடு, மாசடைந்த சூழல் காரணமாக தலையில் படியும் அழுக்கு, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவைகளினால் கூந்தல் உதிர்கிறது. எனவே கூந்தல் உதிர்வை தடுக்க அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள் உங்களுக்காக.

தலையில் உண்டாகும் அதிக சூடு காரணமாகவும் சிலருக்கு கூந்தல் உதிரும். எனவே சூடு உடம்பு கொண்டவர்கள் வாரத்தில் ஒரு நாள் மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம் அல்லது மருதாணிக்கு பதிலாக, வெந்தயக்கீரை அல்லது வெந்தயத்தை ஊற வைத்து அரைத்தும் தலையில் தேய்த்து குளிக்கலாம். வெந்தயத்துடன் கடலைப்பருப்பை சேர்த்து அரைத்து குளிப்பதும் நல்ல பலன் தரும்.

கூந்தலுக்கு ஈரம் எதிரி

தலைக்கு குளித்த பின் ஈரம் காயும் முன்பே சீப்பால் சீவுவதாலும் அதிகளவில் கூந்தல் உதிரும் வாய்ப்பு உள்ளது. எனவே அதை தவிர்க்க வேண்டும். நன்றாக காயவைத்த பின்பே பெரிய பல் உள்ள சீப் வைத்து சீவி பின்னவேண்டும்.

வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால், உடல் உஷ்ணம் மற்றும் தலையில் அழுக்கு சேர்வது ஆகியவை கட்டுப்படும். இதனால், கூந்தல் உதிருவது குறையும்.

செம்பருத்திப் பூ

செம்பருத்தி பூ இதழ்களை வெயிலில் நன்கு காயவைத்து, அவற்றை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து, முடியில் தடவினால் முடி கொட்டுவது குறையும். கறிவேப்பிலையை நைசாக அரைத்து, அதை வெயி லில் காயவைத்து, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தலையில் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.

சிக்கலுக்கு பை

தலையில் அதிகமாக சிக்கல் சேர்ந்து விட்டால், பெரிய பற்கள் உள்ள சீப்பை பயன்படுத்தி சிக்கல் எடுக்க வேண்டும். சிறிய பற்களை பயன்படுத்தினால், முடி அதிகளவில் உதிரும்.

ப்ரீ ஹேர் விட்டு சென்றால், சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வாகனங்களில் செல்லும் போதோ அல்லது நெடுந்தூரம் பயணம் செய்யும் போதோ, ப்ரீ ஹேர் விடாமல் தலையை பின்னி செல்லலாம்.

ஊட்டச் சத்துக்குறைவு

ஊட்டச்சத்து குறைவு காரணமாகவும் முடி உதிர்தல் பிரச்னை ஏற்படலாம். எனவே பழங்கள், காய்கறிகள், கீரைகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை அதிகளவில் உணவில் சேர்க்க வேண்டும். கசகசாவைப் பாலில் ஊறவைத்து அரைத்து பாசிப்பருப்பு மாவைக் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால், முடி உதிருதல் நிற்கும். முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து தலையில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து சீயக்காய் போட்டு குளித்தால், கூந்தல் உதிர்வது குறையும்.

கூந்தலின் மிக முக்கிய எதிரி பொடுகு. தலையில் அரிப்பையும், செதில் செதிலாக உதிர்ந்து ஒரு வித தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும். குளிர் காலத்தில் பொடுகுத் தொல்லை அதிகம் ஏற்படும். இதற்குக் காரணம் கண்ணுக்குத் தெரியாத ஒருவித நுண்ணுயிர்களே. மேலும் மன அழுத்தம், ஊட்டச் சத்துக் குறைபாடும் பொடுகு ஏற்பட காரணமாகும். எனவே ஆரோக்கியமான உணவு உட்கொண்டால் பொடுகை தவிர்க்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். மன அழுத்தம் இன்றி அமைதியை கடைபிடித்தால் பொடுகு வராமல் தவிர்க்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக அரிப்பு ஏற்படும். அரிப்பு நீங்கவும், பொடுகை போக்கவும் இயற்கையான வழிமுறைகளை தெரிவிக்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

உஷ்ணம் நீக்கும் வெந்தயம்
வெந்தயத்தை தலைக்குதேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும். மிளகுதூளுடன் பால் சேர்த்து தலையில்தேய்த்து சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், "பொடுகு தொல்லை நீங்கும்". தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகுபிரச்னை நீங்கும்.

பாசிப்பயறு, தயிர்

பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் உறவைத்து பின்னர் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில்தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.

வேப்பிலை, துளசி
பூச்சித்தாக்குதலினால் பொடுகு ஏற்படுவது இயற்கை. எனவே அந்த மாதிரி நேரங்களில் ரசாயன ஷாம்புகளை பயன்படுத்துவதை தவிர்த்து வேப்பிலை கொழுந்து துளசி ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளித்தால் பொடுகுதொல்லை நீங்கும். துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்து கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.

வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறையும். எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய்எண்ணெய் கலந்து தலையில்தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம்பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சைபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்புபோட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

தலைக்கு குளிக்கும்போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு வினிகர் சேர்த்து குளிக்கலாம்.

மருதாணி இலை தூள்
வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகுதொல்லை நீங்கும். நெல்லிக்காய் தூள், வெந்தயப்பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம் கழித்து குளிக்கவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர பொடுகு நீங்கும்.

தேங்காய் பால்

தேங்காயை அரைத்து பால் எடுத்து அதை தலையில் நன்றாக தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தல் பள பளக்கும்.

முதல்நாள் சாதம்வடித்த தண்ணீரை எடுத்துவைத்து, மறுநாள் அதை எடுத்து வைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். முட்டை வெள்ளைக் கரு, தயிர், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகுமறையும்.

Natural Home Remedies fo Pimples

பருவ வயது ஆண், பெண்களின் மிகப் பெரிய பயம் பருக்கள். முகத்தில் பரு தோன்றினாலே தேவையற்ற மன உளைச்சலும், பதற்றமும் இளயதலைமுறையினருக்கு ஏற்படுகின்றன. எண்ணைத் தன்மை உடைய சருமத்தை உடையவர்களில் 90 சதவீதம் பேருக்கு முகப்பரு வந்துவிடுகிறது. இதர சருமம் கொண்டவர்களில் 50 சதவீதம் பேருக்கு முகப்பரு பாதிப்பு ஏற்படுகிறது. பருக்களின் பல வடிவங்களில், கரும்புள்ளி, வெண்புள்ளிகள் ஆகும். பருவமாற்றத்தினால் ஏற்படும் ஹார்மோன் சுரப்பு, எண்ணெய் பசை அதிகரிப்பு, இவற்றை விட பாக்டீரியா தொற்று போன்றவையே பருக்கள் ஏற்பட காரணமாகின்றன. இதனால் சருமத்தில் சிறு கட்டிகளும், வீக்கங்களும் ஏற்படுகின்றன. முகம், கழுத்து, மார்பு, முதுகு இவற்றில், சீழ் போன்ற திரவம் நிறைந்த பருக்களாக கரும்புள்ளி, வெண்புள்ளிகளாக தோன்றுகின்றன.

எலுமிச்சைச் சாறு

எலுமிச்சைச் சாறு, ரோஜா பன்னீர் சம அளவு எடுத்து அதனை கலந்து முகத்தில் பூசி அரைமணிநேரம் ஊறவைத்து பின்னர் வெது வெதுப்பான நீரில் கழுவவும். வாரம் மூன்று நாட்களுக்கு இதனை அப்ளை செய்தால் முகப்பரு மறைந்துவிடும். எந்த காரணம் கொண்டும் எலுமிச்சைச் சாற்றினை தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது.

சந்தனம் பன்னீர்

சந்தன பவுடர், பன்னீரில் குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். மூன்று மாதங்கள் இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் பருத் தொல்லையே இருக்காது. சந்தனக் கட்டையை பன்னீர் விட்டு அரைத்து முகத்தில் தடவினால், பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.

பன்னீர் ரோஜா மொட்டுக்களை எடுத்து, அது நனையும் அளவு சூடான தண்ணீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அந்த நீரை வடிகட்டி முகத்தில் பூசி அரைமணி நேரம் ஊறிய பின் துடைத்து எடுக்கவும்.

கொழுந்து வேப்பிலை

வேப்பிலை சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. கொழுந்து வேப்பிலையை தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும். முகத்திற்கு மஞ்சள் பூசுவதை முடிந்த வரை தவிர்த்து விடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிக அளவு இரசாயனத் தன்மை இருக்கிறது. அது பலரது முகத்திற்கும் ஒத்துக் கொள்ளாததாக இருக்கிறது. சோற்றுக் கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. அவற்றின் நடுவில் இருக்கும் பசையை எடுத்து, அதில் சம அளவு நீரைக் கலந்து முகத்தில் தடவிவர பருவுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

ஒரு ஸ்பூன் அருகம்புல் பொடியும், குப்பமேனி இலைப் பொடியும் குளிர்ந்த நீரில் கலந்து பருக்களில் போடலாம். இது சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. இது பருவை குணமாக்கும்.

வெள்ளைப்பூண்டு

வெள்ளைப் பூண்டினை எடுத்து அதன் தோலை உரித்தபின்னர் முகப்பரு உள்ள இடத்தில் வைத்து தேய்க்கவும். தினசரி பத்து நிமிடம் தேய்க்க முகப்பரு மறையும்.

ஆப்பிள் பப்பாளி

பப்பாளிச் சாற்றினை முகத்தில் பூசி வர பருவுக்கு இயற்கையான சிகிச்சை கிடைக்கும். ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து அதில் ஒரு டீஸ் பூன் தேன் கலந்து முகத்தில் பூசி வர பரு மறையும். வாரம் இருமுறை முகத்தில் அப்ளை செய்யவேண்டும்.

உணவுக்கட்டுப்பாடு

பெண்களின் அழகான கன்னங்களுக்கு அவ்வப்போது அச்சுறுத்தலாகத் தோன்றுவது முகப்பருக்கள். பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும். பொடுகுத் தொல்லை,​ ஹார்மோன் பிரச்னை,​ நகத்தினை வளர்த்தல்,​ முறையற்ற உணவுப் பழக்கம்,​ உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள்,​ காய்கறிகள்,​ கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

தலையணை உறை,​ சோப்,​ டவல் போன்றவைகளை தனித்தனியாக ஒவ்வொருவரும் வைத்து தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் ஒருவர் பயன்படுத்தும் இத்தகைய பொருட்களை இன்னொருவர் பயன்படுத்தும் போது அவருக்கும் இது பரவக்கூடும். குளிப்பதற்கும் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். ​இப்படியெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு வரலாம்.

உடற்பயிற்சி அவசியம்

தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெளியேறும் வியர்வையினால், துவாரங்களில் உள்ள அழுக்கு நீக்கி பருக்கள் வராமல் தடுக்கலாம். அதுபோல முகத்தில் பருக்கள் பெருமளவு உருவாகி விட்டால் அதற்கு வெளியே கொடுக்கும் சிகிச்சை மட்டுமின்றி உள்ளேயும் சிகிச்சை அவசியமாகும்.
உடலிற்கு தேவையான வைட்டமின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களை பழங்கள் அளிக்கின்றன. அவற்றை உண்ணும் போது அதன் சத்துக்கள் நேரடியாக நமக்குக் கிடைக்கின்றன. அதேசமயம் பழங்களை இயற்கையான அழகுசாதன பொருளாக உபயோகிக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். வீட்டிலேயே எளிய முறையில் தயார் செய்து உபயோகிக்கலாம். அழகு நிலையம் செல்லாமலேயே குறைந்த செலவில் டல்லான முகத்தை ப்ரெஷ்சாக்கலாம்.

கிளன்சிங் பால்

மாசடைந்த சூழல் காரணமாக வெளியே சென்று வந்தாலே முகம் கறுத்துவிடும். முகத்தின் தோல் அறைகளில் அழுக்குகள் புகுந்து பரு, கொப்புளங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தும். எனவே பழக்கூழ் மாஸ் போடும் முன்பு முகத்தை நன்றாக சுத்தம் செய்யவேண்டும். அதற்கு முதலில் கிளன்சிங் செய்யவேண்டும். அதற்கு பால் அவசியமானது.

ஒரு கிண்ணத்தில் சிறிதளவு பாலை எடுத்து முகம் முழுவதும் பூச வேண்டும். பின்னர் மெதுவாக தேய்க்கவேண்டும். 5 நிமிடம் கழித்து சிறிதளவு பஞ்சைக் கொண்டு துடைக்கவேண்டும். இதனால் முகத்தினுள் படிந்திருக்கும் அழுக்கு நீங்கிவிடும்.

புத்துணர்ச்சி தரும் மசாஜ்

தயிரானது இயற்கை அழகு சாதனங்களில் முதன்மையானதாக உள்ளது. இது சூரியக்கதிர் தாக்குதலினால் ஏற்படும் கருமையை போக்குகிறது. சருமத்திற்குத் தேவையான அனைத்து வித சத்துக்களும் கிடைக்கிறது. தேன் பயன்படுத்தியும் மசாஜ் செய்யலாம்.

வறண்ட சருமம் கொண்டவர்கள் தேனுடன் பப்பாளிக்கூழ் சேர்த்து மசாஜ் செய்யலாம். தக்காளி, ஆரஞ்ச், கொய்யாப்பழம், வாழைப்பழம் போன்றவைகளையும் கூழ் போல மசித்து மசாஜ் செய்யலாம் முகத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

வெந்நீர் ஒத்தடம்

மசாஜ் முடிந்தவுடன் ஸ்கிரப் செய்ய வேண்டும். வால்நெட், பாதாம் இவற்றைப் பொடியாக அரைத்து ஸ்கிரப்பாக பயன்படுத்தலாம். சருமத்தில் அதிக கருப்பு வெள்ளை இருந்தால் சர்க்கரையைப் பொடித்து அத்துடன் சிறிது பப்பாளி விழுதை சேர்த்து முகத்தில் அழுத்தி தடவ வேண்டும். இதனால் இறந்த செல்கள் உதிர்ந்து விடும். பின்னர் சிறிய டவலைக் கொண்டு வெந்நீரில் நனைத்து பொறுக்குமளவு சூட்டுடன் முகத்தின் மேல் போட்டு மூன்று நிமிடங்கள் கழித்து எடுக்க வேண்டும். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று முறை செய்ய வேண்டும். இந்த முறையை பின்னபற்ற முடியாதவர்கள் சிறிய பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும் அதனுள் வேப்பிலைகள் சிறிது போட்டு அதோடு சேர்த்து ஆவி பிடித்தால் மிகவும் நல்லது.

பழக் கூழ் பேசியல்

இதற்கு அடுத்தபடியாக பேசியல் போடலாம். முகத்திற்கு பேக் போட நமக்கு தேவையான பழங்களை தேர்ந்தெடுக்கவேண்டும். கேரட், ஆப்பிள், ஆரஞ்சு, உருளைக்கிழங்கு, தேன், வெள்ளரி, ஸ்ட்ராபெரி, பேரீச்சம் பழம், எலுமிச்சைச்சாறு சிறிதளவு இவற்றில் ஏதாவது ஒன்றை நன்றாக அரைத்து பேக் போட்டு அரைமணி நேரம் ரிலாக்ஸ் ஆக இருக்கவேண்டும். பின்னர் முகம் கழுவினால் உங்கள் முகத்தைப் பார்த்து நீங்களே அசந்துபோவீர்கள். அந்த அளவிற்கு முகம் பொலிவாய் மாறும். பழங்களை தனியாகவும் அரைத்து பேசியல் போடலாம் அல்லது இரண்டு, மூன்று பழங்களைச் சேர்த்து அரைத்தும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

Skin care tips for Summer

வெளியில் தலைகாட்ட முடியாத அளவிற்கு தகிக்கிறது வெப்பம். கோடை தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சருமத்தை பாதுகாக்க சீரகத்தை காய்ச்சி குடிக்கலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் அழகியல் நிபுணர்கள். இதனால் சருமம் மங்காமல் செழுமையடையும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சருமப் பளபளப்பு

கோடை காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சருமம்தான். எனவே சருமத்தை பாதுகாக்க பழச்சாறு, காய்கறிச் சாறு, சூப் மற்றும் தண்ணீர் அதிகம் பருகவேண்டும். இதனால் தோல் வறட்சி தடுக்கப்படுவதோடு
உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் சருமம் பளபளப்பாக மாறும். கோடை காலத்தில் வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்வது சரும நலனை பாதுகாக்கும். தயிர் சாப்பிடுவதை விட மோராக சாப்பிடுவது நல்லது.

கரும்புள்ளிகள் மறைய

கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளி பழச்சாறை முகத்தில் தடவவும்.எண்ணை பசை சருமத்தினரை முகப் பருக்கள் பாடாய் படுத்தும். எனவே எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும். மேலும் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.

அடிக்கடி முகம் கழுவுங்க

ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கபடுவதோடு சருமத்தில் படியும் அழுக்குகள் அகற்றபடும். குறிப்பாக இரவு படுக்க போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.

காரமா சாப்பிட வேண்டாம்

வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும். உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகமாக குடிக்கலாம்.

பெண்களை வாட்டும் வெயில்

கோடை காலத்தில் பெண்களுக்கு அதிகமான பாதிப்பு ஏற்படும். பெரும்பாலும் உடம்பில் வெயில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தலைக்கு குடையும், கண்ணுக்கு கண்ணாடியும், காலுக்கு செருப்பும் அவசியமாகும்.

கழுத்தின் முன்பாகம், அக்குள், தொடை இடுக்கு பகுதிகள், இடுப்பு, மார்பின் அடிப்பாகம், முதுகுபகுதி போன்ற இடங்களில் பெண்களுக்கு அதிகம் வியர்த்து, வேர்க்குரு தோன்றும். இதற்கு சாதம் வடித்த தண்ணீரை அந்த இடங்களில் தடவினால் கொஞ்சம் கொஞ்சமாக மறையும். பாத வெடிப்பு அதிகமாக ஏற்படுவதை தடுக்க வெங்காயத்தை வதக்கி, பின்னர் அதை விழுதுவாக அரைத்து பாதங்களில் தடவி வந்தால் பாத வெடிப்பு படிபடியாக மறையும்.

அதிகமான அளவு வியர்வை வெளியேறுவதைத் தடுத்தால் வேர்க்குருவைக் கட்டுபடுத்தலாம். அதிகமாக வியர்க்கும்போது குளித்தால் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. வியர்வை நின்ற பிறகே குளிக்க வேண்டும். அதிகமாக வியர்க்கும்போது பவுடர் பூச வேண்டாம். நன்றாக கழுவி துடைத்த பிறகே பவுடரை பூச வேண்டும்.

வறண்ட சருமத்தினருக்கு

வறண்ட சருமத்தினர் கோடை காலத்தை எண்ணி அதிகம் கவலை கொள்ள வேண்டாம். ஏனென்றால் கோடை காலத்தில் அதிகம் வியர்க்கும். இதனால் வறண்ட சருமத்தைக் கொண்டவர்களுக்கு நன்மையே தவிர, தீமை இல்லை. ஆனால் வியர்க்கும்போது உடலில் அசுத்தமான துகள்கள் ஒட்டினால் தோல் அலர்ஜி ஏற்படும். அடிக்கடி உடம்பை அடிக்கடி கழுவவேண்டும். பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்பை உடலில் தேய்த்துக் குளிக்க வேண்டும். அதிகமாக உணர்ச்சி வசப்பட வேண்டாம். எக்காரணம் கொண்டும் சிறுநீரை அடக்க வேண்டாம்.

வாழைத்தண்டு உணவு

கோடை காலத்தில் எல்லோருக்குமே உடலில் வியர்வை நாற்றம் ஏற்படும். அதற்கு நிறைய தண்ணீர் குடிக்கலாம். கீரைகள், ஆரஞ்சு பழம், அன்னாசி பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். இவற்றிலுள்ள நார்ச்சத்து திரவ உற்பத்தியைக் குறைக்கும். எரிச்சல் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத்தண்டு, கீரை போன்றவற்றை உண்ணுவது உடம்புக்கு நல்லது

கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. வெயிலுக்கு பயந்து கொண்டு வெளியில் செல்லாமல் இருக்கமுடியாது. சிறிது தூரம் சென்று வந்தாலே முகம் வாடிப்போய்விடும் எனவே கருமையை மாற்றவும், சருமத்தை பாதுகாக்கவும் அழகியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகள் உங்களுக்காக.

தயிர் கலவை

வெளியில் கிளம்பும் முன்பாக சிறிதளவு தயிரை முகம், கைகளில் தேய்த்து மிதமான சுடுநீரில் அலம்புங்கள். பிறகு, துடைத்துவிட்டு, டால்கம் பவுடரை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் வெயிலின் உக்கிரம் சருமத்தை பாதிக்காது.

கருமை மறையும்

வெயிலில் அலைந்துவிட்டு வந்தவுடன், சோப்பு போட்டு அலம்புவதால், அந்த சில விநாடிகள் மட்டுமே முகம் பளபளப்பாக இருக்கும். ஆனால் நிறம் அப்படியே தான் இருக்கும். சோப்புக்கு பதிலாக

பாசிப் பருப்பு, கடலைப்பருப்பு, பூலான்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள்,வெள்ளரி விதை, வெட்டிவேர் ஆகியவற்றை கலந்து அரைத்த பொடியை பூசி முகம் கழுவலாம். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும், இந்த குளியல் பவுடருடன் ஒரு சிட்டிகை முல்தானிமட்டி, எலுமிச்சைசாறு , தேங்காய்ப் பால் சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை மறைந்து நிறம் கூடும்.

உருளைக் கிழங்கு பவுடர்

தோல் சீவிய உருளைக் கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி வெயிலில் நன்றாக உலர்த்தி காய்ந்த உடன் நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து தினமும் முகத்தில் பூசி வர முகத்தில் உள்ள கருமை, திட்டுக்கள், புள்ளிகள் மறையும் முகம் பளிங்குபோல மாற்றிவிடும்.

பச்சைக் காய்கறிகள்

உடம்பில் சூடு அதிகமாகும்போது, தோலின் கருமையும் அதிகமாகிவிடும். அதனால் கீரை, பச்சைகாய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மோர், இளநீர், பழச்சாறு இவற்றை அருந்தி உடம்பை எப்போதும் குளுமையாக வைத்துக் கொண்டால், சிகப்பழகு ஓடிவந்து ஒட்டிக் கொள்ளும்.

இரவில் படுக்கப் போகும் முன் தரமான மாய்ஸ்ட்டுரைஸிங் க்ரீம், கோல்டு க்ரீம் ஆகியவற்றை முகத்தில் தடவவேண்டும். காலையில் வெளியே செல்லும் முன் சூரிய வெப்பம் தாக்காதிருக்க சன் டேன்லோஷன் தடவிக் கொள்ளவேண்டும்.

இயற்கை சிகைக்காய் பவுடர்

தலையில் அழுக்கும், பிசுக்கும் சேர்ந்து இருந்தால் முகம் கருப்பாகிவிடும். தலை சுத்தமாக இருந்தால் தான் சருமத்தில் கருமை படராது. அதோடு, சருமத்தில் ஓரளவு எண்ணெய்ப் பசை இருப்பதுபோல பார்த்துக் கொள்வதும் அவசியம். இதற்கு சிகைக்காய், பாசிப்பயறு, வெந்தயம், பூலாங்கிழங்கு, புங்கங்கொட்டை ஆகியவற்றை சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். வாரம் இருமுறை உச்சி முதல் உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்த்து, இந்த ஸ்பெஷல் பொடியை போட்டு அலசுங்கள். தலை சூப்பர் சுத்தமாகிவிடும். தோலின் எண்ணெய்ப் பசை தக்கவைப்ப தோடு, கருமையும் மறைய தொடங்கும்.

வாரம் ஒரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். புருவங்களை சீர்படுத்தி, மினி பேஷியல் செய்து முடியை சீராக வெட்டி வைத்துக் கொள்ள அதிகம் செலவாகாது. மாதமொரு முறை இவற்றைச் செய்து கொள்வது முகத்தின் அழகைப் பாதுகாக்க விரும்பும் வசதி படைத்தவர்கள் கோல்ட் பேஷியல் கினாட் பேஸியல் செய்து கொள்ளலாம்.

மேக் அப் கவனம்

வெயிலும், நெரிசலும் அதிகமாக இருப்பதால் கிரீம் மேக்-அப்பை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. மேக்-அப் செய்வதற்கு முன் வியர்வை அதிகமாக உள்ளவர்கள் ஐஸ் கியூப்-ஐ முகத்தில் தேய்த்து அல்லது செய்த பிறகே மேக்-அப் செய்ய ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஐஸ் கியூப் கொடுக்காமல் மேக்கப் செய்து விட்டால் அவை சிறிது நேரத்துக்குப் பிறகு வியர்த்து விட்டால் சிவப்பு நிற புள்ளிகளாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம். இதை தவிர்க்க பவுடர் மேக்-அப் அதிகமாக உபயோகிக்க வேண்டும். அவரவர் நிறத்துக் கேற்றாற் போல் பவுடரை தேர்ந்து எடுக்க வேண்டும். இது மிக முக்கியமானதாகும். இதில் லிப்ஸ்டிக்கும் அடங்கும்.

Tips to make your face shiny

பண்டைய காலத்தில் வண்ண உணவுகள் மூலம் எளிதில் நோய்களை குணப்படுத்திக் கொண்டார்கள். காலையில் சிவப்பு நிறமுள்ள பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டார்கள். காரணம் வளர்சிதை மாற்றத்தில் சிவப்பு நிற உணவுகள் அதிகம் உதவுகின்றன. வளர்சிதை மாற்றம் வேகமாக நடக்க உதவுகிறது. சருமத்தை பொலிவாக்குவதில் இந்த சிவப்பு நிற பழங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

சிவப்பு நிறமுள்ள தக்காளி, பீட்ரூட், சிவப்பு மிளகாய், சிவப்பு ஆப்பிள், சிவப்பு திராட்சை, வெங்காயம், தர்பூசனி ஆகியவை உடல் நலத்திற்கும், சரும அழகிற்கும் மிகவும் துணை செய்கின்றன. தக்காளி மற்றும் தக்காளியில் செய்யப்பட்ட சாஸ் போன்றவற்றை அதிக அளவில் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

தங்கம் போல் ஜொலிக்கும்

எப்படிப்பட்ட பெண்ணின் முகத்தையும் தங்கம் போல ஜொலிக்க வைக்க வேண்டும் என்றால் பல்வேறு பொருட்களுடன் தக்காளியை பயன்படுத்தினால் போதும். கோடை காலத்தில் வெளியில் சென்று வந்தாலே முகம் பொலிவிழந்து விடும். நீண்ட நாட்களாக கவனிக்காமல் விடுவதாலும் இறந்த செல்கள் அதிகம் தேங்கி முகம் கருமையாகிவிடும். இதனை போக்க ஒரு தக்காளி கூழ் போல ஆக்கி அதில் கால் டீ ஸ்பூன் ரவையை கலந்து முகத்தில் தேய்க்க வேண்டும். இதனால் இறந்த செல்கள் உதிர்ந்து விடும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்து நீரில் நன்றாக தேய்த்து கழுவினால் முகம் பிரகாசமடையும்.

மென்மையான முகம்

ஒரு சிலரது முகம் மென்மையாக இல்லாது முரட்டுத்தனமாக காணப்படும். இவர்கள் ஒரு தக்காளியை அரைத்து கூழாக்கி அதனுடன் அரை டீ ஸ்பூன் தயிரை கலந்து அதனை முகத்தில் பேக் போடவேண்டும். 10 நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் பொலிவடைவதோடு மிருதுவாகும். தினசரி வெறும் தக்காளி சாறு மட்டும் தடவி வந்தால் சருமத்தை மிருதுவாக்கி ஒளிரச் செய்யும். வெள்ளரித் துண்டு, தக்காளி இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து கண்களைச் சுற்றி பூசி சிறிது நேரம் ஊறவைத்து கழுவ கருவளையம் போகும்.

சரும பளபளப்புக்கு

கோடை காலத்தில் புற ஊதாக் கதிர்களின் தாக்கம் அதிகம் இருப்பதால் சரும புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். சிவப்பு நிற காய்கறிகள், பழங்கள் போன்றவைகளில் உள்ள அமிலங்கள் சூரிய ஒளியின் தாக்குதலில் இருந்து சருமத்தை பாதுகாக்கின்றன.

ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ்

ஆப்பிள், பிளம்ஸ், செவ்வாழை, மாதுளம்பழம், இலந்தை, செர்ரி, போன்ற சிவப்பு நிறப் பழங்களில் வைட்டமின் ஏ சத்து அதிகம் காணப்படுகின்றன. இவை இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ஸ் சருமத்தை பாதுகாக்கிறது சருமம் பளபளப்படைய செய்கிறது. ப்ளு பெரீஸ், ஸ்ட்ரா பெரீஸ், மாதுளை போன்ற பழங்கள் சூரிய ஒளியின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கின்றன.

கோடை சீசன் வந்தாலே மாம்பழ வரத்து அதிகரித்துவிடும். மாம்பழம் சாப்பிட மட்டுமல்ல கோடையில் சருமத்தைப் பாதுகாக்கும் அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. மாம்பழக்கூழில் பேசியல் செய்வதன் மூலம் எழிலான தோற்றத்தைப் பெறமுடியும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

மாப்பழக்கூழ்

மாம்பழத்தை தோல் உரித்து அதன் சதையை எடுத்து முகம், கழுத்து பகுதிகளில் தேய்க்கவும். இதன் மூலம் மாம்பழத்தின் சாறு குளிர்ச்சியை ஏற்படுத்தி சோர்வடைந்த சருமத்தை புத்துணர்ச்சியடையச் செய்கிறது. மாம்பழக்கூழ் தேய்த்த முகத்தில் 6 முதல் 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். பின்னர் குளிர்ந்த பாலை ஒரு பஞ்சில் தொட்டு முகத்தில் உள்ள பழக்கலவையை துடைத்து எடுத்து விடவேண்டும். பின்னர் குளிர்ந்த தண்ணீர் ஊற்றி முகத்தை கழுவ வேண்டும்.

தயிர், மாம்பழ பேஷியல்

மாம்பழத்தை தோலுரித்து அதன் சதையை எடுத்து வைக்கவும். அதனுடன் ஒரு டீ ஸ்பூன் தயிர், மற்றும் எலுமிச்சைச் சாறு ஊற்றி நன்றாக கலக்கவும். இந்த கலவையை முகம் மற்றும் கைகளில் பேஷயல் போடவும். 15 நிமிடம் நன்றாக ஊறவைத்த பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். கோடை காலத்தில் இந்த பேஷியலை வாரத்திற்கு மூன்று நாட்கள் செய்யவேண்டும். சருமம் ஜொலி ஜொலிக்கும்.

முட்டை, மாம்பழக்கூழ் பேஷியல்

அதிக பணம் செலவில்லாமல் முகத்தை ஜொலிக்கச் செய்வதில் இது எளிமையான பேஷியல் முறையாகும். மாம்பழத்தை தோல் உரித்து சதையை எடுத்து நன்றாக அடித்து கூழாக்கவும். அதோடு முட்டையின் வெள்ளைக் கருவை ஊற்றி நன்றாக கலக்கவும் அதோடு ஒரு டீ ஸ்பூன் தேனை ஊற்றி நன்றாக அடித்து கலக்கி முகத்திற்கும், கழுத்துப் பகுதியிலும் அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து மென்மையாக கழுவி ஒத்தடம் கொடுப்பதுபோல துடைக்கவும். சருமம் பொலிவுறும்.

ஓட்ஸ், மாம்பழக்கூழ்

கோடை வெப்பத்தினால் கருமையடைந்துள்ள சருமத்தை புத்துணர்ச்சியாக்க இந்த பேஷியல் மிகச்சிறப்பானது. ஒரு கிண்ணத்தில் மாம்பழக்கூழினை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் 3 டீ ஸ்பூன் ஓட்ஸ் பவுடர், 3 டீ ஸ்பூன் பாதம் பவுடர், 3 டீ ஸ்பூன் பாலாடை சேர்த்து நன்றாக கலக்கவும். அதனை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். 20 நிமிடங்கள் ஊறவைத்து நன்றாக குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ முகம் பளிச் தோற்றத்தை தரும் இது வெயிலில் ஏற்பட்ட கருமையை போக்குவதோடு முகத்தை புத்துணர்ச்சியாக்கும்.

மாம்பழக்கூழ் கொண்டு செய்யப்படும் பேஷியலை முயற்சி செய்து பாருங்கள் கோடை வெப்பத்தில் வெளியே சென்று வந்தாலும் உங்கள் முகம் ஜொலி ஜொலிக்கும்.

Home Remedies for Memory Improvement

நினைவாற்றல் என்பது மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானது. ஞாபக மறதி ஏற்பட்டால் பல விசயங்களில் பின்தங்கிவிட நேரிடும். அதுவும் பள்ளி மாணவர்களுக்கு பரிட்சை நேரத்தில் அவர்களின் நினைவாற்றல் திறன்தான் கை கொடுக்கும். ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் மறந்து போனாலே டென்சன் ஆகிவிடுவார்கள். அதன் பிறகு அவர்களுக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது. எனவே சத்தான உணவுகளை கொடுப்பதன் மூலம் அனைவருக்கும் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

மூளைச் சோர்வை தடுக்கும்

அன்றாடம் வீட்டு சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும். இவை குழந்தைகளின் மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன. பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிடக் கொடுக்கவேண்டும்.

ஊறவைத்த பாதாம் பருப்பு

பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.

அக்ரூட், திராட்சை

அக்ரூட் பருப்புகளுடன் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். அதேபோல் வேர்க்கடலை சாப்பிட்டாலும் நினைவாற்றல் அதிகரிக்கும்.

மூளைக்கு சுறு சுறுப்பு

நினைவாற்றல் அதிகரிக்க வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் குழந்தைகளும், பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். திப்பிலியை வல்லாரை சாறில் ஊற வைத்து காய வைத்து பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். பப்பாளிப் பழம் தினமும் சாப்பிட்டால் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம்.

நடத்தை மாற்றம்

பெரும்பாலான மாணவர்கள் தேர்வு பயத்தால் ஹார்மோன் சுரப்பில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு நடத்தை மாற்றம் மற்றும் மனச்சிக்கல் உண்டாகிறது. கவலை ஏற்பட்டு எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதால் சத்தான உணவையும் மாணவர்கள் தவிர்க்கின்றனர். இதனால் இரத்த ஓட்டக் குறைவும் மூளைக்குச் சரியானபடி இரத்தம் கிடைக்காமல் போகிறது. எனவே மாணவர்களின் மூளை சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்வதோடு தேர்வு காலம் முழுவதும் அவர்களுக்கு சத்தான உணவுகளை கொடுத்து கவனித்தால் அவர்களின் நினைவாற்றல் நன்றாக இருக்கும். இதனை வீட்டில் உள்ள பெரியவர்களும் பின்பற்றலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

Head lice home treatment & Podugu treatment

கூந்தலின் அழகைக் கெடுப்பதில் பொடுகு மற்றும் பேன்களுக்கு பெரும்பங்கு உண்டு. பேன் ஒருவகையான புற ஒட்டுண்ணி. நமது ரத்தத்தை உறிஞ்சி உணவாக உட்கொள்ளும் இந்த பேன்கள் மிகவேகமாக இனப்பெருக்கம் செய்து கூந்தலியே முட்டையிடுகின்றன. இதனால் அரிப்பும், கூந்தலுக்கு அழகின்மையும் ஏற்படுகின்றன. பேன்களை அழிக்க இயற்கை முறையிலேயே சில மருந்துகளை உள்ளன.

வேப்பிலை வைத்தியம்

வேப்ப எண்ணையுடன் தேங்காய் எண்ணைய் கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லை குறையும்.

பேன் தொல்லைக்கு வேப்பிலையை அரைத்து தலையில் தடவிவிட்டு சிரிது நேரம் கழித்து அலசி விடுங்கள். பேன் ஒழிந்து விடும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இப்படி செய்யலாம். தூங்கும் போது தலையனை மீது வேப்பிலை மற்றும் துளசி இலைகள் பரப்பி அதன் மேல் ஒரு துணி போட்டு தூங்க வைக்கலாம். இதனால் பேன் தொல்லைகள் ஒழியும்.

வெந்தையப் பொடி

இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை ஊற வைத்து அரை கப் தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு மையாக அரைத்து அதனுடன் மூன்று தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து அதன் பின்பு குளித்து வந்தால் விரைவில் பொடுகு தொல்லை நீங்கும்.

குப்பைமேனிச் சாறு

சீதாப்பழத்தின் கொட்டைகளை இரண்டு நாட்கள் நன்கு சூரிய வெப்பத்தில் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணையில் கலந்து வைத்து இரவில் தலைக்குத் தடவி காலையில் வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தால் பேன்கள் தொல்லை ஒழியும்.

குப்பை மேனிக் கீரையானது பேன் தொல்லையை போக்குவதில் முக்கியபங்கு வகிக்கிறது. குப்பை மேனி இலையை அரைத்து சாறு எடுத்து தலையில் அரைமணி நேரம் ஊறவைத்து பின்னர் குளிக்க பொடுகுத் தொல்லை நீங்கும்.

Frequent outing will make couples closer

'ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்' என்பது பழமொழி மட்டுமல்ல இன்றைக்கு பலரது வாழ்க்கையில் அது உண்மையாகி வருகிறது. திருமணமான புதிதில் உற்சாகமாக வாழ்க்கையை தொடங்குபவர்கள் நாளடைவில் குழந்தை, பணிச்சுமை என பல்வேறுவகையான அழுத்தங்களில் சிக்கி சந்தோசமான இல்லற வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர்.

எனவே தம்பதியரின் வாழ்க்கையில் தடங்கல் இல்லாத சந்தோசம் நீடிக்க அடிக்கடி அவுட்டிங் போக வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றும் இதை உறுதிபடுத்தியுள்ளது. திருமணமாகி நீண்ட நாட்கள் ஆன பின்னரும் தம்பதியரிடையே அன்பு நீடிக்க வேண்டுமா? அடிக்கடி சினிமா, பீச், பார்க் என்று அவுட்டிங் போங்க உங்க தாம்பத்ய வாழ்க்கை உற்சாகமாகும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுரையாகும்.

தம்பதியரிடையே உள்ள உறவு பரிமாற்றம், குடும்ப வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து சமீபத்தில் அமெரிக்காவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உற்சாக காதல் உணர்வு

திருமணமாகி 25 ஆண்டுகள் கடந்த பின்னும் உற்சாகத்துடன் உறவில் ஈடுபடுவதாக பெரும்பாலான தம்பதியர் தெரிவித்துள்ளனர். தங்கள் குழந்தைகள் பெரியவர்கள் ஆன பின்னரும் கணவருடன் சினிமா, பார்க் என அவுட்டிங் செல்வது தங்களுக்கு உற்சாகத்தையும், இளமையையும், காதல் உணர்வுகளையும் புதுப்பிக்கின்றது என்றும் அவர்கள் பதிலளித்துள்ளனர்.

திருமண வாழ்க்கையில் போரடிக்காமல் இருக்கவும் சுவாரஸ்யத்தை தக்கவைக்கவும் வாரம் ஒருமுறையாவது தம்பதியர் தனியாக ஹோட்டலுக்குச் சாப்பிடச் செல்ல வேண்டும். அதேபோல் சுற்றுலா, பார்ட்டி என எங்காவது தனியாக செல்லலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அப்படி செல்வதன் மூலம் அன்னியோன்யம் அதிகரிப்பதோடு தாம்பத்ய உறவில் ஈடுபாடு குறையாமல் இருக்கும் என்று அனுபவப் பூர்வமாக உணர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.

மகிழ்ச்சி பரிமாற்றம்

தாம்பத்ய உறவு மட்டுமல்லாது சிறு, சிறு அன்பு மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதால் பரஸ்பர அன்பு விலகாமல் நீடிக்கும் என்பதும் பல தம்பதிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

வளர்ந்த குழந்தைகள் இருந்த போதிலும், தம்பதியர் தங்களின் மகிழ்ச்சி பாதிக்காதவாறு வாழ்க்கையை வாழலாம். அதேபோல் குழந்தைகளுக்கும் தேவையான சுதந்திரத்தை அளிப்பதன் மூலம் அவர்களும் பெற்றோர்களை புரிந்து நடந்து கொள்வார்கள்.

மணமுறிவை தவிர்க்கலாம்

தாம்பத்ய உறவு தொடர்பாக பல குடும்பங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை தாம்பத்யம் தொடர்பான கருத்து வேறுபாட்டால் மட்டுமே மணமுறிவு ஏற்பட்டு விடுவதில்லை. ஆனால் அமெரிக்க போன்ற மேலை நாடுகளில் திருப்தியில்லாத உறவின் மூலம் விவாகரத்துக்கள் ஏற்படுகின்றன.

மணவாழ்க்கை என்பது மணம் வீச வேண்டுமே தவிர, மனதை காயப்படுத்திவிடக்கூடாது. எனவே தம்பதியர் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி புரிந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை தொடரலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Tips to Impress your Girl friend

காதலில் முதல் சந்திப்பு, முதல் முத்தம், முதல் ஸ்பரிசம் என்பது வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாதது. காதலர்கள் இருவரும் முதன் முதலாய் தனியாக சந்திக்க வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் காதலியை கவரும் வகையில் காதலன் நடந்து கொள்ளவேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். இல்லையெனில் முதல் சந்திப்பே இறுதி சந்திப்பாகிவிடும். எனவே காதலியை சந்திக்கச் செல்பவர்கள் கவனமா படிங்க...

பதற்றம் வேண்டாம்

முதன் முதலாக தனியாக பார்க்கப்போகிறோம் என்ற உடனே என்ன பேசுவது? எப்படி பேசுவது என்ற பதற்றம் எழத்தான் செய்யும் எனவே தனியாக ஹோம் ஒர்க் செய்யுங்கள். சொதப்பாலாக பேசக்கூடாது. காதலி என்பவள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் வரவேண்டும் என்ற எண்ணத்தோடு தனித்தன்மையான பதில்களை ரெடி செய்து கொண்டு சந்திக்கச் செல்லுங்கள்.

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

காதலியை சந்திக்க காத்திருக்கும் தருணங்களில் பாராட்டி ஒரு குட்டிக் கவிதை எழுதி விடலாம். அவரை சந்தித்த உடன் அதை கூறலாம். காதலியின் உடை அலங்காரம், பேச்சு, சிரிப்பு என சின்ன சின்ன விசயங்களில் பாராட்டு மழை பொழியுங்கள். உங்கள் பேச்சு அவர்களை மெதுவாக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை உணரும் போது காதலியின் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!!

காதலியை சுற்றி வரட்டும்

இருவரும் பேசிக்கொள்ளும் போது எதைப் பற்றி ஆரம்பித்தாலும் காதலியை சுற்றியே இருக்கட்டும். ஏனெனில் அதைத்தான் எல்லா பெண்களும் விரும்புவார்கள். பேசும்போதே விருப்பங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். காதலியை நிறைய பேசவிடுங்கள். நீங்கள் அவர்கள் பேசுவதை ரசியுங்கள். அதுவே வெற்றிக்கு வழி வகுக்கும்.

நெருக்கம் ஏற்படும்

காதலியை உற்சாகப்படுத்தும் விசயங்களை பேசுங்கள். அதையும் முக பாவங்களுடன் பேசினீர்கள் என்றால் உங்கள் உற்சாகம் அவர்களையும் தொற்றிக்கொள்ளும். உங்களை ஒரு உற்சாகமான மனிதராக நினைப்பார்கள்.நீங்கள் விரும்புவது கேள்விகளுக்கான பதில்கள் அல்ல. நெருக்கம்தான். ஆகையினால் கேள்விகள் உங்களுக்குள் நெருக்கம் ஏற்படுத்துவது போல் அமையட்டும்.

கண்களின் பாஷைகள்

காதலியின் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். உங்கள் பார்வை அவருடைய முகத்திலேயே இருக்கட்டும். அவரின் உடலின் வேறு பாகங்களில் பார்வை செல்வது அவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். அதே போல் அவர் முகத்தைப் பார்க்காமல் விட்டத்தையோ, சுற்று முற்றும் பார்ப்பதையோ பெண்கள் விரும்பமாட்டார்கள். அதேபோல் தன்னம்பிக்கையுடன் பேசுங்கள். தயக்கம், பயம் ஆகியவை இருக்கக் கூடாது. நீங்கள் பேசும் உறுதியான பேச்சு அவர்களை நிச்சயம் கவரும்.

சுவாரஸ்யம் முக்கியம்

முதலில் பேசும்போது பேச ஒன்றுமில்லாத நேரம் ஒன்று ஏற்படுமாயின் நீங்களே சில சுவாரசியமான விசயங்களைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாம். உங்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவையான நிகழ்ச்சிகளை முன்கூட்டியே தயார்செய்து கொண்டு செல்லுங்கள். உற்சாகமாக நீங்கள் பேசும் நகைச்சுவைப் பேச்சு பெண்களை எளிதில் கவரும். அவளைச் சிரிக்க வைக்கும் கலையைக் கற்று விட்டீர்கள் என்றால் மேட்டர் ஈசிதான்!. கொஞ்சம் பொது அறிவும் அவசியம் எனவே அப்டேட்ஆக இருங்கள்.

உங்களை ரொம்ப பிடிக்கும்

இருவருக்கும் பொதுவான விசயங்கள் என்ன என்று துப்பறியுங்கள். அவளுடன் பேசும்போது அந்தப் பொதுவான விசயத்தை வெளிக்கொணருங்கள். எனக்கும் அது பிடிக்கும் என்று ஆரம்பிங்க!!. எல்லாப் பெண்களும் கட்டாயம் ஏதாவதொரு பொழுதுபோக்கு ஹாபி வைத்திருப்பார்கள். காதலியின் பொழுது போக்கு அம்சங்கள் பற்றிக் கேட்கவும். அதில் அதிக ஆர்வம் காட்டிப் பேசினால் உங்களை அவளுக்குப் பிடிக்கும்

அவளின் குடும்பத்தில் உள்ள நபர் களைப் பற்றி, அண்ணன்கள், தம்பிகள் பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் உள்ள சிறப்பு அம்சங்களைப் பாராட்டிப்பேசுங்கள். இப்படி நாலைந்து பொதுவான விசயங்களைப் பிடித்துக் கொண்டுபேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. உங்கள் காதலும் வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிடும்.

The importance of Protin for children growth

குழந்தைகளின் வளர்ச்சிக்கு போதிய அளவு புரதச் சத்து தேவை. புரதச் சத்தானது ஜீரணநீர்கள், நொதிகள், ஹார்மோன் சுரப்பிகளின் நீர்கள், வைட்டமின்கள், ஹீமோகுளோபின் போன்றவற்றை தயார் செய்வதற்கும் இன்றியமையாததாகும். புரதமானது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நகம், முடி, போன்றவைகளின் ஆரோக்கியத்திற்கும் அவசியம் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்

குழந்தைகளுக்குத் தேவையானவை

புரதச் சத்து குறைவினால் குழந்தைகளுக்கு சவலைநோய் ஏற்படும். சுறுசுறுப்பின்மை, வயிறு வீக்கம் மற்றும் உடல் வீக்கம் ஏற்படும். புரதச் சத்து குறைவினால் குழந்தையின் உடல் வளர்ச்சியும், மன வளர்ச்சியும் குன்றிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இரண்டு மாதத்தில் இருந்து ஆறு மாத குழந்தைகளுக்கு 2.5 லிருந்து 3.5 கிராம் புரதம் குழந்தையின் ஒரு கிலோ எடைக்கு ஒரு நாளைக்கு தேவையாகும். 100 மில்லி தாய்பாலில் 1.25 கிராம் புரதம் உள்ளது. நீண்ட நாட்கள் தாய்பால் மட்டுமே கொடுக்கும் குழந்தைகளுக்கு சவலைநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று குழந்தை நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சவலை நோயின் அறிகுறிகள்

சவலைநோயின் அறிகுறிகள் மெதுவாகத்தான் தோன்றும். பள்ளி பருவத்தில் குழந்தைகள் எதிலும் ஆர்வமின்றி காணப்படும். தோல் வறண்டு உதிர ஆரம்பிக்கும். வாய் ஓரத்தில் புண்கள் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். சவலைநோயினால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். இதனால் கற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

புரதச் சத்து உணவுகள்

புரதச்சத்து அசைவ உணவுகளில் இருந்தும், சைவ உணவுகளில் இருந்தும் கிடைக்கிறது. அசைவ புரதம் நல்ல தரமான புரதமாகும். அதேபோல சைவ உணவில் இருந்து கிடைக்கும் புரதம் சமன்பட்ட புரதம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

முழுமையான புரதச்சத்து உணவுகள்

பால், முட்டை, இறைச்சி, மீன், பால் பொருட்களில் அனைத்தும் முழுமையான புரதச்சத்து அதிகமாக இருக்கும். முழுமையான புரத உணவு கிடைக்காத போது முழுமையடையாத புரத உணவுகளையாவது கொடுக்க வேண்டும்.

சவலை நோயுள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு கிலோ உடை எடைக்கு நான்கில் இருந்து ஐந்து கிராம் புரதச் சத்தினை அளிக்கவேண்டும். பசும்பாலை தண்ணீர் கலக்காமல் காய்ச்சி கொடுக்கவேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். கொழுப்பு நீக்கிய பாலுக்கு பதிலாக வறுத்த பொட்டுக்கடலை, வெண்ணெய் போன்றவைகளை கொடுக்கலாம்.

விலை அதிகமான இறைச்சி, மீன், முட்டை போன்றவைகளை கொடுக்க இயலாதவர்கள் வேர்க்கடலை, பொட்டுக்கடலை தானியவகைகள், பருப்பு வகைகளை கொடுக்கலாம். அதேசமயம் சிறுநீரக கோளாறு உள்ள குழந்தைகள், குறைபிரசவ குழந்தைகள் அதிக அளவு புரதம் சாப்பிட்டால் புரதக் காய்ச்சல் ஏற்படும். அது அவர்களின் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

புரதச்சத்து குழந்தையின் உடல் வளர்ச்சியிலும், மன வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால், குழந்தைகளுக்கு போதிய அளவு புரதச் சத்தினை அளிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை என்கின்றனர் மருத்துவர்கள்.

Home made conditioner to get a shiny Hair

ஆரோக்கியமான, பளபளப்பான கூந்தல் வேண்டும் என்பது பெண்களின் கனவு. கூந்தலின் பளபளப்பிற்காக ரசாயனங்கள் கலந்த செயற்கை கண்டிசனர்களை தலைக்கு உபயோகிப்பது கூந்தலோடு, சருமத்தையும் பாதிக்கும். எனவே வீட்டில் கிடைக்கக் கூடிய பொருட்களே சிறந்த கண்டிசனராக செயல்பட்டு கூந்தலை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றுகிறது. எனவே அழகியல் நிபுணர்கள் கூறிய ஆலோசனைகளை பின்பற்றுங்கள்.

முட்டை வெள்ளைக் கரு

முட்டையை உடைத்து வெள்ளைக் கருவை மட்டும் தனியாக பிரித்தெடுக்கவும். அதனை தலையில் நன்றாக தடவி அரைமணிநேரம் ஊறவைத்து குளிர்ந்த நீரில் அலசவும். இதனால் கூந்தல் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும். முட்டையின் வாசனை பிடிக்காதவர்கள் ஷாம்பு போட்டு குளிக்கலாம் பளபளப்பு மாறாது.

தயிர் மசாஜ்

கெட்டித் தயிரை ஒரு கிண்ணத்தில் எடுத்து தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். மென்மையான ஷாம்பு

போட்டு குளிர்ந்த நீரில் தலையை அலசவும். கூந்தல் பளபளப்பாகும். தலையில் பொடுகு இருந்தால் அதை நீக்க சிறிதளவு எலுமிச்சை சாறு அப்ளை செய்து தலைக்கு குளிக்கலாம். பொடுகு நீங்குவதோடு கூந்தல் பளபளப்பாகும்.

வெள்ளை வினிகர்

வெள்ளை விநிகர் சிறந்த கண்டிசனராக செயல்படுகிறது. பளபளப்பான கூந்தலை பெற அரை பக்கெட் தண்ணீரில் சில துணிகள் வெள்ளை விநிகரை விட்டு கூந்தலை மூழ்க வைத்து நன்கு அலசவும். கூந்தல் பளபளப்பாகும்.

தேன், வாழைப் பழம்

நன்கு கனிந்த இரண்டு வாழைப்பழத்தை எடுத்து அதில் ஒரு டீ ஸ்பூன் தேன் ஊற்றி பேஸ்ட் போல நன்கு மசிக்க வேண்டும். அதனை அப்படியே கூந்தலில் தடவி அரைமணிநேரம் ஊறவிடவும். பின்னர் குளிர்ந்த தண்ணீரில் நன்றாக அலசி துடைக்க வேண்டும். கூந்தல் மென்மையாக மாறுவதோடு பளபளக்கும்.

வீட்டிலேயே உள்ள இந்த பொருட்களை பயன்படுத்தினால் பளபளப்பான, ஆரோக்கியமான கூந்தலை பெறலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

4 Foods for Healthy & Active mind

ஆரோக்கியமான மனநிலையும், உடல்நிலையும் இருந்தால்தான் வருடம் முழுவதும் உற்சாகத்துடன் வேலை செய்ய முடியும். அந்த வகையில் உடலையும், மனதையும், புத்துணர்ச்சியாக்கும் சில உணவுகளை பரிந்துரைத்துள்ளனர் உணவியல் நிபுணர்கள். இந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் மூளை சுறுசுறுப்படைவதோடு கவனிக்கும் திறனையும், விழிப்புணர்வையும் அதிகரிக்கச் செய்யும்.

வைட்டமின் பி காம்ளக்ஸ்

உடல் சோர்வு என்று மருத்துவரிடம் சென்றாலே அவர்கள் பரிந்துரைப்பது வைட்டமின் பி காம்பளக்ஸ் மாத்திரைகளைத்தான். இது உடலோடு மூளையும் செயலையும் உற்சாகப்படுத்தும். எனவே வைட்டமின் பி காம்ளக்ஸ் சத்து நிறைந்த உருளைக் கிழங்கு, பீன்ஸ், புருக்கோலி, காளான், சோயா, பீட்ரூட், வாழைப்பழம், பாதம் மற்றும் முட்டை ஆகிய உணவுகளை அடிக்கடி உண்ணவேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

தானியங்கள்

தானியங்கள் உடலை, மூளையையும் சுறுசுறுப்பாக்கும். கோதுமை, ராகி, செந்நிற அரிசி, கம்பு, சோளம் போன்ற உணவுகள் ஆரோக்கியத்திற்கு

ஏற்றவை. அதோடு மூளையை சுறுசுறுப்பாக்கி, கவனிக்கும் திறனை மேம்படுத்துகிறது. மூளையை விழிப்புணர்வோடு வைத்திருக்கும்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நினைவுத்திறனை அதிகரிக்கும். இந்த அமிலம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை கட்டுப்படும். எனவே ஒமேகா 3 அமிலம் அதிகமுள்ள ஆலிவ் எண்ணெய், வெள்ளைப் பூண்டு, மீன், முட்டை, அரிசி, பாஸ்தா போன்றவைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. அவற்றை உட்கொள்வதன் மூலம் மூளை சுறுசுறுப்படையும், புத்திக்கூர்மையாகும் என்று உணவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மாவுச்சத்து உணவுகள்

பாலீஸ் செய்யப்படாத அரிசி, ஆப்பிள், வாழைப்பழம், தானியங்கள் போன்றவற்றில் உயர்தர கார்போஹைட்ரேட் உள்ளது. இது ஆரோக்கியத்திற்கும் மூளை வளர்ச்சிக்கும் ஏற்றது. இந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலையும், உள்ளத்தையும் சுறுசுறுப்போடு வைத்திருக்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். நினைவாற்றலும், விழிப்புணர்வு சக்தியும் அதிகரிக்கும். எனவே மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க நினைப்பவர்கள் இந்த உணவுகளை கண்டிப்பாக எடுத்துக்கொள்ளலாம் என்பது உணவியல் நிபுணர்களின் அறிவுரை.

Diet for Diabets and obesity

உலகம் முழுவதும் பெரும்பாலானவர்களை அதிகம் பாதிப்பது உடல் பருமன். உடல் உழைப்பு குறைவினாலும், மாறிவரும் உணவுப் பழக்கத்தினாலும் ஆண், பெண் இருவருக்கும் உடல் பருமன் ஏற்படுகிறது. இதனால் டைப் 2 நீரிழிவு, இதயநோய் போன்றவை ஏற்படுகின்றன. இங்கிலாந்தில் மட்டும் 2.5 மில்லியன் மக்கள் டைப் 2 நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது. இந்தியாவிலும் உடல் பருமன் நோய் பாதிப்பினால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு நீரிழிவு, இதயநோய்க்கு ஆளாகியுள்ளனர். இதற்கு காரணம் ஊட்டச் சத்துணவு பற்றிய விழிப்புணர்வு இல்லாததே என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

நேரம் தவறிய உணவுமுறை

ஆண்களுக்கு உடல் பருமன் ஏற்பட முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, நேரந்தவறிய உணவுப் பழக்கம் தவிர, கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரித்து உடல் பருமன் ஏற்படுகிறது. அதேபோல் பெண்களுக்கும் உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான ஊட்டச் சத்துணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது.

எனவே உடல் பருமனால் நீரிழிவு, இதயநோய்கள் போன்றவைகளுக்கும் ஆளாகி எண்ணற்ற சிக்கல்களை சந்திக்கின்றனர். எனவே உடல் பருமனை குறைக்க எளிய உணவு முறையை அறிவுறுத்தியுள்ளனர் உணவியல் நிபுணர்கள்.

பூண்டு வெங்காயம்

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைக்கும். இதனால் உடல் கட்டமைப்பு பெருவதோடு புத்துணர்ச்சி ஏற்படும்.

பப்பாளிக்காய்

உடல் குண்டானவர்கள் பப்பாளிக்காயைச் சமைத்து சாப்பிடலாம். இதனால் உடல் மெலியும். சுரைக்காயை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும்

மந்தாரை வேர் கசாயம்

அமுக்கிராவேருடன், பெருஞ்சீரகம் சேர்த்து பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும். மேலும் மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் உடல் பருமன் குறையும்.

வாழைத்தண்டு சாறு

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த த‌ண்‌ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். மேலும் உடம்பில் ஊளைச்சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும்.

இது எ‌ல்லாவ‌ற்‌றையும் விட தினமும் காலை‌யி‌ல் அரை ம‌ணி நேர‌ம் மாலையில் அரைமணி நடைப‌யி‌ற்‌சி மே‌ற்கொ‌ண்டா‌ல் உடலில் உள்ள கொழு‌ப்பு‌ம் கரையு‌ம், உட‌‌ல் எடையு‌ம் குறையு‌ம், பு‌த்துண‌ர்வாகவு‌ம் இரு‌க்கு‌ம் என்பது நிபுணர்களின் அறிவுரை.

How to enjoy the Honey moon month

ஆணுக்கும், பெண்ணிற்கும் திருமணம் என்பது அழகான, அம்சம். காதலிக்கும் போது எத்தனையோ விசயங்களை பேசியிருக்கலாம். பொய் கூட காதலின்போது ரசிக்கப்படும். அதே பொய் திருமணத்திற்குப் பின்னர் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. எனவே நிச்சயிக்கப்பட்ட திருமணமோ, காதல் திருமணமோ எதுவென்றாலும் திருமணமான புதிதில் தம்பதியர் கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகளை கூறியுள்ளனர் உளவியல் வல்லுநர்கள்.

திருமணமான முதல்நாள் இரவில் புதுமணத் தம்பதியரின் உடல்கள் மட்டும் சங்கமிப்பதில்லை உள்ளங்களும் சங்கமிக்கின்றன. அங்கே சந்திக்கும் இரு உள்ளங்களும் தங்களை முழுமையாக புரிந்திருக்க வேண்டும். அவர்களது மனமும் "உறவு"க்கு தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கே சந்தோச சாம்ராஜ்யம் நடைபெறும்.

பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்

தம்பதியரியரிடையே சரியான பேச்சுவார்த்தை இருப்பது அவசியம். எதையும் கூறும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேசவேண்டும். எதையும் தெரிவிப்பதில் நேர்மையை கடைபிடிப்பது அவசியம்.

ஒருவர் மட்டுமே பேசக்கூடாது மற்றவரையும் பேச அனுமதிக்கவேண்டும். நீங்கள் பேசுவதை விட துணைவரை பேசவிட்டு கேட்டுக்கொண்டிருப்பது மிகச்சிறந்த நன்மதிப்பினை ஏற்படுத்தும். எதிர்காலத்தைப் பற்றி பேசுங்கள். பேச்சானது எப்பவுமே நேர்மறை எண்ணத்துடன் இருக்கவேண்டும்.

வார விடுமுறை வசந்தம்

வாரவிடுமுறை நாட்களில் வீட்டைவிட்டு கண்டிப்பாக வெளியே செல்லுங்கள். சினிமா, பார்க், ஹோட்டல் எங்கு வேண்டுமானலும் இருக்கலாம். தனியாக இருவரும் கிளம்புங்கள். அமைதியான சூழலில் அமர்ந்து இருவரும் பேசி மகிழுங்கள். வாரம் ஒருமுறையாவது இரவு நேரத்தில் டின்னருக்கு ஏற்பாடு செய்யலாம். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் புதுமணத் தம்பதியர் அமர்ந்து பேசுவது அன்பை அதிகப்படுத்தும்.

புகழ்ச்சி அவசியம்

காதலிக்கும் போது எத்தனையோ புகழ்ச்சி வார்த்தைகளை கூறியிருக்கலாம். திருமணத்திற்குப்பின்னல் அதை பின்பற்றுவதில் தவறேதும் இல்லை. ஏனெனில் புதுமணப் பெண்கள் முதலில் எதிர்பார்ப்பது கணவரின் புகழுரையைத்தான்.

தவறுக்கு மன்னிப்பு

புதுமண வாழ்க்கையில் தவறு நிகழ வாய்ப்பு ஏற்படுவது குறைவு. அதே சமயத்தில் எங்காவது செல்ல திட்டமிட்டு விட்டு அழைத்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் தவறாமல் மன்னிப்பு கேட்கலாம். அது உங்கள் மீதான மதிப்பினை அதிகரிக்கும்.

சந்தோச சாம்ராஜ்யம்

குழந்தை பற்றிய விஷயத்தை முதலிரவிலேயோ அல்லது அதற்கு முன்போ முடிவெடுத்து விடுங்கள். குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என்றால் பாதுகாப்பான கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தி உறவில் ஈடுபடுங்கள். குழந்தை உடனே வேண்டும் என்பவர்கள், குழந்தை உடனே பிறக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் உறவு கொள்ள வேண்டாம். காரணம், அந்த எண்ணமே உங்களுக்கு மன நெருக்கடியை ஏற்படுத்தி விடலாம்.

உங்கள் மகிழ்ச்சிக்காகவும், துணையின் மகிழ்ச்சிக்காகவும் மட்டுமே உறவை வைத்திடுங்கள். செக்ஸ் என்பது அற்புதமான, அருமையான மருந்து என்பதை புதுமணத் தம்பதியர் உணரவேண்டும். இந்த மருந்து மட்டும், உடலுக்கும், மனதுக்கும் சரியாக கிடைத்து வந்தால் மனநெருக்கடி ஏற்பட வாய்ப்பில்லை. அப்புறம் என்ன தம்பதியரிடையே சந்தோச சாம்ராஜ்யம்தான் ஜமாயுங்கள்

Avoid fighting will make your relationship strong

எதற்கெடுத்தாலும் சண்டையா, சாதாரண விசயத்தில் கூட வாக்குவாதம் முற்றி பிரச்சினை ஏற்படுகிறதா? தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பது குடும்ப ஒற்றுமையை பாதுகாக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

கலந்து ஆலோசியுங்கள்

தவறாக செய்துவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுவதை விட முன்னதாகவே தம்பதியர் இருவரும் கலந்து ஆலோசித்து செய்வது பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்கும்.

வார்த்தைகளில் கவனம்

ஒவ்வொரு வார்தைகளிலும் கவனம் அவசியம். சின்ன வார்த்தைகள் கூட பூதாகரமான பிரச்சினையை உருவாக்கும். எனவே தெரியாமல் வார்த்தைகள் விழுந்து விட்டால் கூட உடனே மன்னிப்பு கேட்க தயங்கவேண்டாம்.

நாம் பேசும் விசயம் எதற்காக என்பதை இருவருமே உணர்ந்து கொண்டால் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கலாம். ஏனெனில் பைசா பெறாத விசயங்களுக்குதான் தம்பதியரிடையே அதிக அளவில் வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன.

உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள்

சின்ன சின்ன விசயங்களுக்கு கூட உணர்ச்சி வசப்பட்டு பேசுவது தேவையற்றது. எனவே உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது தம்பதியரிடையே பிரச்சினைகள் ஏற்படுதை தவிர்க்கும்.

மன்னியுங்கள் மறந்து விடுங்கள்

எந்த ஒரு தவறென்றாலும், தவறு யார் மீது என்றாலும் மன்னிக்கும் மனப்பக்குவம் வேண்டும். தவறுகளை மறந்துவிடுவது அனைத்தையும் விட சிறந்தது என்கின்றனர் உளவியலாளர்கள்.

எதற்கும் ஒரு முடிவு உண்டு

எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு உண்டு. எனவே பிரச்சினை சிறியதாக இருக்கும் போதே அவற்றை தீர்க்க முயலவேண்டும். வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் முகத்தை திருப்பிக்கொண்டாலும் அன்றைய இரவுக்கும் அதனை தீர்க்க முயலவேண்டும். அதுவே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆதாரம்.

காலில் விழலாம் தப்பில்லை

குழந்தைகள் முன் சண்டை போடக்கூடாது. ஏனெனில் அவர்களை மன ரீதியாக பாதிக்கும். குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் முன்னிலையில் வாக்குவாதம் போடுவதை தவிர்க்கவும். அப்படியே சண்டை போடவேண்டும் என்று நினைத்தால் தனிமையில் சண்டை போடுங்கள். தவறு உங்களுடையது எனில் தயங்காமல் காலில் விழுங்கள். முக்கியமாக எதையுமே நேர்மறையாக நினைக்க கற்றுக்கொள்ளுங்கள் அதுவே தம்பாத்ய வாழ்க்கையில் சந்தோச பூ மலரும்.

5 Things to avoid in Bed Room

இல்லற வாழ்க்கையில் தம்பதியர் இருவரும் தனியாக சந்திக்கும் ஒரே இடம் படுக்கையறைதான். அங்கேயும் அவசர கதியில் இயங்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இதனால் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் மனைவி ஏமாற்றமடைய நேரிடுகிறது. எனவே மனைவியை கவரும் வகையில் நடந்துகொள்ள ஆண்களுக்கு சில சங்கதிகளை தெரிவித்துள்ளனர் உளவியல் வல்லுநர்கள்.

சுத்தமா இருக்கணுங்க

படுக்கையறையில் சுத்தமும், சுகாதாரமும் கடைபிடிக்கவேண்டியது அவசியம், சிகரெட் வாசமோ, மது வாடையோ மூடை மாற்றிவிடும். அனைத்து பெண்களுமே சுத்தமான சுகந்தமான வாசனையையே படுக்கையறையில் எதிர்பார்க்கின்றனர். எனவே ஆண்களே உங்களின் சுத்தமும், சுகந்தமும்தான் பெண்களை கவரும்.

ரொமான்ஸ் அவசியம்

தாம்பத்ய உறவு என்பது இயந்திரத்தனமானது அல்ல. அது உணர்வுப் பூர்வமானது. ஏதோ கடமைக்கு செயல்படும் கணவர்களை பெண்கள் விரும்புவதில்லை. கொஞ்சம் காதல், கொஞ்சம் காமம் கலந்த கணவர்களையே மனைவிகள் விரும்புகின்றனர். படுக்கையறையில் உடல் ரீதியான தொடுகைகளை விட உள்ளரீதியான தொடுகை முதலில் அவசியம். அதைத்தான் பெண்களும் எதிர்பார்க்கின்றனர்.

வேலையிருக்கு

வேலை யாருக்குதான் இல்லை. படுக்கையறையில் ஆசையாய் உங்கள் துணை உங்களின் அருகில் வரும்போது வேலை பார்த்துக்கொண்டு இருக்காதீர்கள். அப்புறம் அலுவலகத்திற்கும், படுக்கையறைக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். அப்புறம் அன்றைய அப்செட் ஒருமாதம் வரையும் நீடிக்கலாம்.

மென்மையான அணுகுமுறை

படுக்கையறையில் கடுமையான அணுகுமுறையை பின்பற்றுவதை எந்த பெண்ணுமே விரும்புவதில்லை. அநேகம் பெண்கள் புகார் தெரிவிப்பது இதைத்தான். நீங்கள் வேட்டைக்காரர் போல செயல்பட படுக்கையறை ஒன்றும் கானகம் அல்ல. அங்கே மென்மையான அணுகுமுறையை கடைபிடித்தால் இனிய கனவுகள் உற்பத்தியாகும். இல்லையெனில் வேட்டைகாரன் கையில் அகப்பட்ட மானைப் போலத்தான் பெண்கள் உணர்வார்கள்.

அப்பாடா முடிஞ்சது

உறவு முடிந்த உடனே எதோ கடமை முடிந்தது என்ற கணக்காக தம் அடிக்கவோ, தூங்கவோ போய்விடும் ஆண்களை பெண்கள் விரும்புவதில்லையாம். அழகாய் ஒத்துழைத்த துணைவியின் நெற்றியில் மென்மையாய் ஒரு முத்தம். மார்பில் சாய்ந்து செல்லமாய் ஒரு உறக்கம். தலைகோதுவது போன்ற சின்ன சின்ன ஐட்டங்களை ரொமான்ஸ் நடவடிக்கைகளை கணவர் செய்யவேண்டும் என்று பெண்கள் விரும்புகின்றனராம். இதெல்லாம் படுக்கையறையில் நிகழ்ந்தால் உங்கள் மனைவி உங்களின் மகுடிக்கு மயங்கிய துணைவியாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை

The power of Loving Touch

தம்பதியர், காதலர்கள் இடையே அடிக்கடி தொட்டுப்பேசுவது அவர்களுக்கு இடையேயான அன்பை அதிகரிக்கும் என்று உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அன்பாய் பேசுவதோடு அவ்வப்போடு தொட்டுக்கொள்வது அவசியமான ஒன்று என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கல்லூரியில் படிப்பவர்களோ அல்லது பணியில் இருப்பவர்களோ காதலிக்கும் போது தனியாக சந்தித்துப்பேசும் தருணம் கிடைத்தால் அதற்காகவே காத்திருந்தது போல அநியாயத்திற்கு பேசித் தீர்ப்பார்கள். அப்படி என்னதான் பேசுகிறார்கள் என்றால் ஸ்வீட் நத்திங்ஸ் என்பார்கள்.

இன்றைக்கு செல்போனின் வருகைக்குப் பின்னர் நேரில் சந்திப்பது அவசியமற்றது என்பதைப்போல மணிக்கணக்கில் பேசுகின்றனர். அதுபோலத்தான் திருமணம் நிச்சயம் செய்தவர்களும் திருமணத்திற்கு முதல்நாள்வரை அனைத்தையும் பேசி தீர்த்து விடுவார்கள். இதனால் சின்ன சின்ன ஸ்பரிசங்களுக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

சின்ன சின்ன ஸ்பரிசம்

காதலிக்கும் பருவத்தில், பேச்சிலிருந்து ஆரம்பிக்கும் உறவு, இன்பம் தரும் ஸ்பரிசங்களாக மெள்ள அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது. அறிந்தும் அறியாமலும் உரசிக்கொள்ளும் விரல்கள், உடலின் அங்கங்கள் ஒன்றை ஒன்று உரசிக் கொள்வதெல்லாம் அந்தப் பருவத்தின் கிக்கான விஷயங்கள். அதிலும் முதல் முத்தம் என்பது ஆண், பெண்ணை பரவச நிலைக்கே கொண்டு செல்லும்

முத்தமிடுங்கள்

திருமணத்திற்குப் பின்னர் கணவனும் மனைவியும் முதல் இரண்டு வருடங்களிலேயே பேசி முடித்துவிடுகிறார்கள். அதற்குப் பிறகு பேசுவதற்கு ஏதும் இல்லாமல், அல்லது பேசப் பிடிக்காமல் மௌனமே அவர்களின் உறவை ஆக்கிரமித்துவிடும்.

தினமும் மூன்று முறையாவது உதட்டோடு முத்தமிட்டுக் கொள்ளும் ஜோடிகளால் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடிகிறது என்கிறது அறிவியல் உண்மை. நம்மூரில் இந்தத் ‘தொடுதல்’ எனும் அற்புதமான விஷயம், வெகு சீக்கிரம் ஜோடிகளிடமிருந்து விடுபட்டு விடுகிறது. ‘தொடுதல்’ என்றால் உடலுறவு மட்டுமே அல்ல; அது சில நிமிடங்களில் முடிந்து போகிற ‘பேஸிக் இன்ஸ்டிங்க்ட்’. ஆனால், தொடுதல் எப்போதும் நிகழக் கூடியது. முத்தமிடுவது, அணைப்பது, விரல்களைப் பின்னிக் கொள்வது, உச்சி முகர்வது, கிள்ளுவது, வருடுவது, இடுப்பை அணைத்துக் கொள்வது என்று எல்லாமே அந்தத் தொடுதலில் வருகிறது.

சமூக கடமைகள்

நம்மூர் ஆண்களுக்கு பெண்ணிடம் பேசவேண்டிய இந்த மென்மையான மொழி தெரியாமல் போகிறது. பகிரங்க ரொமான்ஸ் ரகசியங்களான இந்தப் பேச்சும், சின்ன சின்ன ஸ்பரிசங்களும் பல கணவர் ஜாதிகளுக்குப் புரியாமல் போகிறது. பெண்களும் இந்தத் தொடுதல், கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் போன்ற நல்ல உறவுக்கான அடிப்படை விஷயங்களில் தொட்டாற்சிணுங்கியாகவும் இருக்கிறார்கள் என்பது மற்றொரு பிரச்சனை.

இன்றைக்கு பல தம்பதிகளைக் கவனித்துப் பார்த்தால் இதில் இருக்கும் உண்மை விளங்கும். வாழ்க்கையின் சம்பிரதாயக் கடமைகளை செய்து முடிப்பதில்தான் பெரும்பாலும் கவனமாக இருப்பார்கள். அதாவது குழந்தைகளை பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்குவதுதான் தலையாய கடமைபோல செயல்பட்டு அவர்களுக்கு இடையே கண்ணுக்குத் தெரியாத சுவர் ஒன்றை எழுப்பிக்கொள்வார்கள்.

அற்புதமான மருத்துவம்

தொடுதல் என்கிற இந்த ‘ஹீலிங் டச்’ மிக அற்புதமான பல சிக்கல்களைத் தீர்க்கக் கூடிய மருத்துவம். அது ஒருவகையான மசாஜ்தான். நவீன மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் கிரேக்க நாட்டைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஹிப்போகிரேட்ஸ்… ‘மசாஜ் மற்றும் தொடுதல் ஆகியவை பெரும்பாலான நோய்களைத் தீர்க்கின்றன’ என்று பிரசாரமே செய்தவர். ‘ஹீலிங் டச்’ எனப்படும் தொடுதல் மருத்துவம் உலகமெங்கும் மிகவும் பிரபலமானது. மனிதர்கள் ஒருவரை ஒருவர் உணர்வுப்பூர்வமாகத் தொடும்போது… மூளையில் ‘எண்டோர்ஃபின்’ எனும் ரசாயனம் சுரந்து உற்சாகமூட்டுவதாகக் கண்டறிந்திருக்கிறார்கள்.

ரொமான்ஸ் வளரும்

‘தொடுதல் எனும் காதலுணர்வால், மனிதர்கள் கவிஞர்கள் ஆகிறார்கள்’ என்றார் தத்துவ அறிஞர் பிளாட்டோ. கவிஞர்களாக மட்டுமல்ல, அவர்கள் நல்ல காதலர்களாகவும் ஆகிறார்கள்.

ஆகவே தம்பதியர்களே நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடுங்கள். தழுவுங்கள், முத்தமிடுங்கள், கரங்களைக் கோர்த்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு ரகசியங்களையும் கடைப்பிடித்தால் உங்கள் ரொமான்ஸ் நாளுக்கு நாள் வளரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Wedding-Night Secrets

திருமண நாளன்று புதுமணத் தம்பதிகள் இருவருக்குமே ஒருவித படபடப்பும், எதிர் பார்ப்பும் இருக்கும். அன்றைய இரவில் எப்படி நடந்து கொள்வது என்ற கேள்வி இருவருக்குமே இருக்கும். ஆணை விட பெண்ணுக்குத்தான் பயம் அதிகம் இருக்கும். உளவியல் ரீதியான சிக்கல்களும் எழும். எனவே திருமண நாளன்று இரவில் மணப்பெண் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை கூறியுள்ளனர் உளவியல் நிபுணர்கள்.

இடத்தை தீர்மானியுங்கள்

திருமண நாளன்று முதலிரவு நடக்கப்போகும் இடம் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். திருமண சத்திரமா? ஹோட்டலா, வீட்டிலா என்று கேளுங்கள். புதிய இடம் படபடப்பை ஏற்படுத்தும் என்றால் உங்களுக்கு சவுகரியமான இடத்தை தேர்ந்தெடுங்கள்.

மருத்துவரிடம் ஆலோசனை

அன்றைய தினத்தில் மாதவிடாய் வராமலிருக்க மருத்துவரை ஆலோசனை கேளுங்கள். நீங்களாக மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
மனித உடலைப் பற்றியும், தாம்பத்ய உறவு பற்றியும் சந்தேகங்கள் இருந்தால் அதற்கேற்ப நல்ல புத்தகங்களைப் படியுங்கள். தேவைப்பட்டால், பெண் மருத்துவரிடம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கலாம்.

அதிகம் சாப்பிடவேண்டாம்

இரவு நேரத்தில் அதிகம் சாப்பிட வேண்டாம். முடிந்தவரை அதிக மணமும், மசாலாவும் சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்த்து விடவும். அறைக்கு செல்லும் முன் நன்றாக குளித்து விட்டு மிதமான மேக் அப் போட்டு கொள்ளவும்.

மெல்லிய நகைகள்

குறைவான நகைகளை அணியவும், கூரிய முனைகள் கொண்டதும், கனமான கற்கள் கொண்ட நகைகளை அணிய வேண்டாம். உடலை உறுத்தாத ஆடைகளை அணியுங்கள். கனமான, ஆடம்பரமான கூந்தல் அலங்காரத்தைத் தவிர்க்கவும்.

வாசனை திரவியம்

உடல் முழுவதும் மாயிச்சரைசிங் லோஷன் தடவிக் கொள்ளுங்கள்.
காதுகளுக்குப் பின்புறம், மணிக்கட்டு போன்ற இடங்களில் மிதமான வாசனை திரவியம் தடவிக் கொள்ளுங்கள்.

பேசி புரிந்து கொள்ளுங்கள்

முதல் ஸ்பரிசம் என்பது படபடப்பாகத்தான் இருக்கும். உங்கள் கணவரது செய்கைகள் உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினால் அதை அவரிடம் தெரிவியுங்கள். முதல் முறை உறவில் ஈடுபடும் பெண்களுக்கு வலி ஏற்படலாம். அதைப்பற்றி அச்சம் கொள்ளாமல் வலியையும், வறட்சியையும் குறைக்க பெட்ரோலியம் ஜெல்லி அல்லது தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம்.

முதல் நாளே உறவில் ஈடுபட வேண்டும் என்று அவசியமில்லை. இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் எனில், முதலில் உங்கள் விருப்பு, வெறுப்புகளைப் பற்றிப் பேச அந்த இரவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் .

மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றினால் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சிகரமான இரவுகளை எதிர்கொள்ளலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

Monday 5 March 2012

Simple cure for Excessive Burping

பால் ஹன் பற்றி உங்களுக்குத் தெரியுமா?. அவர் கின்னஸ் சாதனை படைத்த சாதனையாளர். எதில் தெரியுமா?... சத்தமாக ஏப்பம் விட்டதில். அதாவது 109 டெசிபல் அளவுக்கு அவர் ஏப்பம் விட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளாராம். இது அவருக்கு சாதனையாக இருக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு எவ்வளவு டென்ஷனாக இருந்திருக்கும்.

பலருக்கும் இந்த ஏப்பப் பிரச்சினை பெரும் மண்டை இடியாக இருக்கிறது. அடிக்கடி ஏப்பம் விடுவது, சத்தமாக விடுவது, அதிக நாற்றம் ஏற்படுவது என பல வகையான சிக்கல்கள் இதில் உள்ளன.

பத்தில் ஒருவருக்கு இந்த ஏப்பப் பிரச்சினை இருக்கிறதாம். மேலும் பெரும்பாலானோருக்கு ஏப்பம் விடும்போது அதிக துர்நாற்றம் ஏற்படுமாம். இதற்காக அத்தனை பேரும் எத்தனையோ உபாயங்களைக் கடைப்பிடித்துக் கொண்டுதான் உள்ளனர். ஆனாலும் பயன் இல்லை.

இருப்பினும் சில இயற்கையான வழிமுறைகளை கையாண்டு இதை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். அதுகுறித்த ஒரு பார்வை...

உணவுப் பாதையில் காற்றுக் குமிழ்கள் அதிகம் நிரம்புவதே ஏப்பம் உருவாக காரணம். பேசும்போது, சிரிக்கும்போது, சரியாக உட்காராமல் தாறுமாறான கோணத்தில் உட்காருவது போன்றவற்றால் இந்த காற்றுக் குமிழ்கள் ஏற்படுகிறாம். இந்தக் காற்றுக் குமிழ்கள் வெளியேறும்போதுதான் ஏப்பமாக வெளிப்படுகிறது.

பலருக்கும் செரிமானப் பிரச்சினையால்தான் இந்த ஏப்பம் ஏற்படுகிறது. இதற்கு புளிச்ச ஏப்பம் அல்லது புளியேப்பம் என்று பெயர். ஏப்பத்தைத் தடுக்க சில உபாயங்களைக் கடைப்படிக்கலாம். அதாவது சாப்பிடும்போது மகா நிதானமாக சாப்பிட வேண்டும். படு வேகமாக வாயில் திணித்து தண்ணீரை ஊற்றி எழுந்து விடக் கூடாது. மிக மிக மெதுவாக, நன்கு அரைத்து உள்ளே தள்ள வேண்டும். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே செரிமானம் ஆகும் அளவுக்கு நன்கு நொறுங்கத் திண்பது அவசியம்.

அதேபோல காற்று நிரம்பிய குளிர்பானங்களை குடிப்பது, வெங்காயம், நறுமணப் பொருட்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

வீட்டில் ஏலக்காயம் இருக்கும். இதை இதை டீயில் போட்டு சாப்பிடுவது உகந்தது. அதேபோல ஏலக்காய் இலை கலந்த டீத்துளைப் பயன்படுத்துவது இன்னும் உத்தமம். மூலிகை டீ, பாசில் டீ, பேக்கிங் சோடா, செம்பருத்தி டீ ஆகியவை ஏப்பத்தை சரி செய்யுமாம். ஏலக்காய், சாப்பிடுவது ஏப்பத்தைக் கட்டுப்படுத்துவதோடு, வாய் நாற்றதையும் விரட்டும் குணம் கொண்டதாகும்.

அடுத்து பெருங்காயம். இது வாய்வுப் பிரச்சினை உள்ளவர்களுக்கும் அருமருந்தாகும். வயிற்றில் வாய்வு சேருவதை இது தடுக்கிறது. இதை எலுமிச்சம் சாறு அல்லது மோருடன் சேர்த்து பருகுவது நல்லது.

எலுமிச்சை, வினிகர் போன்றவையும் ஏப்பத்தை சரி செய்யும் மருந்தாகும். சாப்பிடுவதற்கு முன்பு எலுமிச்சம் சாறுடன், கொஞ்சம் வினிகரை சேர்த்து பருக வேண்டும். இதன் மூலம் புளிச்ச ஏப்பம், வயிற்றில் அமிலம் சேருவது, வயிற்றுப் பொறுமல், வாய்வு போன்றவை கட்டுப்படும்.

இஞ்சி, பூண்டு போன்றவையும் அபாரமான மருந்துதான். பசை போல அரைத்து மோர் அல்லது சூடான தண்ணீரில் இவற்றைக் கலந்து குடித்து வருவது பெரும் நிவாரணம் தருமாம். செரிமானப் பிரச்சினையைத் தீர்ப்பதோடு, வாய்வுப் பிரச்சினைக்கும் இது நல்ல மருந்தாகும்.

இப்படி வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து நிரந்தரமாக இல்லாவிட்டாலும் கூட ஓரளவு நல்ல நிவாரணத்தை அடைய முடியும்.

அடுத்தவர்களை அடுத்த முறை 'டிஸ்டர்ப்' செய்வதற்கு முன்பு இதை 'டிரை' செய்து பாருங்களேன்.

Healthy snacks for Diabetic women

பெரும்பாலான பெண்களுக்கு திருமணத்திற்கு பின்னர் அதுவும் குழந்தை பேற்றுக்குப் பின்னரே நீரிழிவு நோய் தாக்குகிறது. இதற்கு காரணம் கருத்தரித்த பின் பெண்களின் உடல் எடை அதிகரிப்பதாலும், கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி காரணமாகவும், பெண்களுக்கு கூடுதலாக இன்சுலின் தேவைப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு இந்த கூடுதல் இன்சுலின் இயற்கையாகவே சுரந்தாலும், சில பெண்களுக்கு இது சுரப்பதில்லை. அதனால் அவர்களின் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது. ஒருசிலருக்கு குழந்தை பிறந்த பின்னர் நீரிழிவு நோய் பாதிப்பு இல்லாமல் போக வாய்ப்புள்ளது.

ஒரு சில பெண்மணிகள், கணவர், குழந்தைகள் என அவர்கள் மேல் அதீத கவனம் செலுத்தி தங்களின் உடல்மேல் கவனம் செலுத்தாமல் விடுகின்றனர். இதனால் உடல் பருமன் ஏற்படுவதோடு போனஸாக நீரிழிவு, இதயநோய் போன்றவை தோன்றுகின்றன. எனவே நம்முடைய நலனின் அக்கறை கொள்ளும் இல்லத்தரசியின் மேல் அக்கறை எடுத்துக்கொள்வதோடு, அவர்களுக்குத் தேவையான சத்தான ஆகாரங்களை உண்ண அறிவுறுத்தவேண்டும்.

பழ சாலட்கள்

பழங்கள் இயற்கையிலேயே குறைந்த அளவு சர்க்கரையை கொண்டவை. குறிப்பாக ஆப்பிள், பெர்ரீ பழங்கள் அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம். அதேபோல் சீஸ் சேர்க்கப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் அதில் உள்ள கால்சியம் சத்து பெண்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மான நோய்களில் இருந்து பாதுகாக்கும். இதன் மூலம் பற்களும், எலும்புகளும் பலமடையும்.

பாப்கார்ன்

வீடுகளில் தொலைக்காட்சி பார்க்கும் போது கண்ட நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதால் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது. இதனால் உடல் பருமன் அதிகரிப்பதோடு, ரத்தத்தில் சர்க்கரை அளவும் அதிகரிக்கிறது. இதை தவிர்க்க வீட்டிலேயே கொழுப்புச் சத்து குறைந்த பாப்கார்ன் தயாரித்து கொடுக்கலாம். இது சத்தானதாக இருப்பதோடு உடலில் தேவையற்ற கொழுப்புச் சத்து ஏற்படுவதை தடுக்கும்.

தானிய ரொட்டிகள்
பேக்கரிகளில் தயாரிக்கப்பட்ட ரொட்டிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். எனவே ராகி, கம்பு, சோளம் ஆகிய தானியங்களால் ஆன மாவுகளில் ரொட்டிகளை தயார் செய்து கொடுக்கலாம். இது சுவையானதோடு, சத்தான ஆகாரமாகும்.

காய்கறி சாலட்

தினசரி உணவுகளில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தவேண்டும். காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைவெளி உள்ள நேரத்தில் காரட், செலரி, புருக்கோலி, போன்ற காய்கறி கட் செய்து அவர்களுக்கு சாப்பிட சொல்லி அறிவுறுத்தலாம். கொழுப்பு நீக்கப்பட்ட தயிர், சிறிதளவு எலுமிச்சை சாறு அதன் மீது மிளகு பொடி தூவி அவர்களுக்கு சாப்பிடுவதற்கு ஏற்ப ப்ரிட்ஜில் வைக்கலாம்.

மேலும் நீரிழிவு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகளையும், அதற்கேற்ப உடற்பயிற்சியையும், மேற்கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும். இதன் மூலம் அவர்களின் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டிற்குள் வைக்கலாம். அலுவலகம் சென்றாலும் அவ்வப்போது தொலைபேசி வழியாக விசாரித்து குறிப்பிட்ட உணவுகளை உண்ணுமாறு அறிவுறுத்தலாம். இதனால் வீட்டில் கணவரையும், குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளும் பெண்கள் மனதளவில் மகிழ்ச்சிப்படுத்துவதோடு, அவர்களின் உடலும் விரைவில் குணமடையும்.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மருத்துவ பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் சர்க்கரை நோயை குணப்படுத்தும் உணவுப் பொருட்கள் பற்றிய ஆய்வு மேற்கொண்டனர். அதில் பாதம் பருப்பானது நீரிழிவினை ஏற்படுத்தும் காரணிகளை கட்டுப்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.

இன்சுலின் சுரப்பு

நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுகோஸை சக்தியாக மாற்றும் ஹார்மோனை பயன்படுத்தும் திறன் குறையலாம்.

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திராவிட்டால் குளுகோஸும், கொழுப்பும் உடலில் அதிக நேரத்திற்கு தங்கியிருந்து உடலின் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்திவிடும். தற்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வில், பாதம் பருப்பை சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பு அதிகமாவதோடு, நீரிழிவு நோய் வருவதற்கான முந்தைய நிலையில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவும் குறைவதாக தெரியவந்துள்ளது.

நீரிழிவு நோயாளிகள்

நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருந்த 65 பேரிடம் பாதம் பருப்பை கொடுத்து சாப்பிட சொல்லி அவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் நீரிழிவுக்கு முந்தைய நிலை என்பது ரத்தத்தில் இருக்கும் குளுகோஸின் அளவு வழக்கமாக இருப்பதைவிட அதிகமாக இருப்பது ஆகும். அதே சமயம் அதனை நீரிழிவு நோயாகவும் கருதிவிட முடியாது.

பாதாம் பருப்பை சாப்பிட கொடுக்காத, அதே சமயம் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருந்த மற்றொரு குழுவினரைக் காட்டிலும், பாதாம் பருப்பை சாப்பிட்டவர்களிடம் இன்சுலின் சுரப்பில் வியக்கத்தகு முன்னேற்றம் இருந்ததோடு, கெட்ட கொழுப்பின் அளவும் குறைந்தது தெரியவந்தது.

உடல்பருமன்

பாதாம் மட்டுமல்லாது இதர கொட்டை பருப்புகளும் கூட டைப் 2 நீரிழிவு நோயை குணப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் பாதாம் மற்றும் இதர கொட்டை பருப்புகள் உடல் பருமனை எதிர்த்து போராடுவதில் முக்கிய பங்காற்றுகிறதாம். மேலும் உடற் பயிற்சி இல்லால் இருப்பவர்களுக்கு இருதய நோய் ஏற்படுவதற்கு காரணமான மூல காரணிகளையும் அது தடுக்கிறதாம். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவ விஞ்ஞானிகளில் ஒருவரான டாக்டர் மிக்கேல் வியேன் பாதாம் பருப்பை பக்கத்தில் வைத்துக்கொண்டால் நீரிழிவு, இருதய நோய்கள் அருகில் அண்டாது என்று அடித்துக்கூறுகிறார்.